search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல்லில் வருகிற 26-ந் தேதிசமையல் கியாஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
    X

    நாமக்கல்லில் வருகிற 26-ந் தேதிசமையல் கியாஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

    • மாதாந்திர சமயைல் கியாஸ் நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் வருகிற 26-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) மாலை 4 மணிக்கு நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
    • மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பாதவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் சமையல் கியாஸ் நுகர்வோர்கள் நலன் கருதி, அனைத்து எண்ணெய் மற்றும் கியாஸ் நிறுவன மேலாளர்கள், கியாஸ் கம்பெனி ஏஜெண்டுகள், விநியோகஸ்தர்கள், சமையல் கியாஸ் நுகர்வோர்கள், தன்னார்வலர்கள் ஆகி யோர்க ளுடன், மாதாந்திர சமயைல் கியாஸ் நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் வருகிற 26-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) மாலை 4 மணிக்கு நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். சமையல் கியாஸ் விநியோகம் தொடர்பான குறை பாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சமையல் கியாஸ் விநியோகம் மற்றும் கோரிக்கைகள் குறித்து மனுக்களை அளித்து தீர்வு பெறலாம் என அதில் கலெக்டர் கூறியுள்ளார்.

    Next Story
    ×