என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • பரமத்தி வட்டாரம் வீர ணாம்பாளையம் கிராமத்தில் உழவர் பயிற்சி நிலையத்தின் மூலம் “கிராம அடிப்படை பயிற்சி” நடைபெற்றது.
    • பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி தலைமையில் பயிற்சி நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டாரம் வீர ணாம்பாளையம் கிராமத்தில் உழவர் பயிற்சி நிலையத்தின் மூலம் "கிராம அடிப்படை பயிற்சி" நடைபெற்றது. பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி தலைமையில் பயிற்சி நடைபெற்றது.

    இதில் நாமக்கல் வேளாண்மை துணை இயக்குநர் (பொறுப்பு) கவிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயி களை வரவேற்று பயிற்சி அளித்தார்.

    பயிற்சியில் பர மத்தி வட்டார வேளாண்மை அலுவ லர், மோகனபிரியா, துறை சார்ந்த மானிய திட்டங்கள், விவசாயிகளுக்கு உயிர் உரங்கள், உயிரியல் பூஞ்சான கொல்லிகள் மூலம் விதை நேர்த்தி செய்தல், நுண்ணூட்ட கலவைகள் பயிருக்கு இடுவதன் முக்கி யத்துவம் குறித்து கூறினார்.

    இப்பயிற்சியில் வேளாண்மை துணை இயக்குநர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன் கலந்துகொண்டு வேளாண் மானிய திட்டம் குறித்து கூறினார். மேலும் கால்நடை உதவி மருத்துவர் நளினி, வனஅலுவலர் ரமேஷ், தோட்டக்கலை அலுவலர் நிவேதா மற்றும் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் உதவி வேளாண்மை அலுவலர் பாபு ஆகியோர் தங்களது துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விளக்கமளித்தனர்.

    முடிவில் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் தனலட்சுமி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி நன்றி கூறினார்.

    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஒத்திகை மற்றும் செயல்விளக் கம் நிகழ்ச்சி

    நாமக்கல்

    நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்புத் துறை சார்பில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஒத்திகை மற்றும் செயல்விளக் கம் நிகழ்ச்சி நடந்தது. இதனை கலெக்டர் உமா தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உதவி மாவட்ட அலுவலர்கள் மற்றும் நிலைய அலுவலர்கள் ரப்பர் படகு, லைப் ஜாக்கெட், கியாஸ் சிலிண்டர் உதவியுடன், தீ அணைப்பு முறைகள் மற்றும் பிற தளவாடங்களை கொண்டு மீட்பு பணி செய்வது குறித்து ஒத்திகை செய்து காண்பித்தனர். இதை கலெக்டர் அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் பார்வையிட்டு பயன் அடைந்தனர்.

    நாமக்கல் கலெக்டர் அலுவலகம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மழை

    நாமக்கல்,

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.இதில் நாமக்கல் கலெக்டர் அலுவலகம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மழை கொட்டியது.மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம் (மில்லி மீட்டரில்) வருமாறு : -

    எருமபட்டி-12, குமாரபாளையம்-3.8, மங்களபுரம்-13, மோகனூர்-19, நாமக்கல்-36, பரமத்திவேலூர்-26, புதுச்சத்திரம்-3.30, ராசிபுரம்-14, சேந்தமங்கலம்-5, திருச்செங்கோடு-27, கலெக்டர் அலுவலகம்-69, கொல்லிமலை செம்மேடு-21 என மொத்தம் மாவட்டம் முழுவதும் 249.1 மில்லி மீட்டர் மழை பதிவானது. 

    • தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று பூக்களை விற்பனை
    • கடந்த வாரம் குண்டு மல்லிகை கிலோ ரூ.600-க்கும், நேற்று குண்டுமல்லிகை ரூ.300-க்கும்

    பரமத்தி வேலூர்

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே தண்ணீர் பந்தல், கபிலர்மலை, சின்ன மருதூர், பெரிய மருதூர், பெரிய சோளிபாளையம், பாகம் பாளையம், நகப்பாளையம், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை, சம்பங்கி, அரளி, ரோஜா, செவ்வந்தி, கனகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.

    விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகாமையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று பூக்களை விற்பனை செய்து வருகின்றனர். பூக்களை வாங்கி செல்வதற்கு வேலாயுதம் பாளையம், தவுட்டுப்பாளையம், தளவாபாளையம் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை வருகின்றனர்.

    கடந்த வாரம் குண்டு மல்லிகை கிலோ ரூ.600-க்கும், சம்பங்கி கிலோ ரூ.100-க்கும், அரளி கிலோ ரூ.150- க்கும், ரோஜா கிலோ ரூ.250- முல்லைப் பூ கிலோ ரூ.600-க்கும், செவ்வந்திப்பூ ரூ.280- க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும் வாங்கிச் சென்றனர்.நேற்று குண்டுமல்லிகை ரூ.300-க்கும்,சம்பங்கி கிலோ ரூ.80-க்கும், அரளி கிலோ ரூ.80- க்கும், ரோஜா கிலோ ரூ.160- க்கும், முல்லைப் பூ ரூ.300-க்கும், செவ்வந்திப்பூ ரூ.200-க்கும், கனகாம்பரம் ரூ.350-க்கும் வாங்கிச் சென்றனர்.புரட்டாசி மாதம் தொடங்கி விட்டதால் திருமணம் மற்றும் கோவில் விசேஷங்கள் இல்லாததால் பூக்கள் விலை சரிவடைந்துள்ளது.

    2 நாட்களும் மதுபானக்கடைகளை மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    நாமக்கல்

    நாமக்கல் மாவட்டத்தில் மிலாடி நபி மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 28-ந்தேதி மற்றும் அக்டோபர் மாதம் 2-ந் தேதிஆகிய 2 நாட்கள் மது பானக்கடைக ளுக்கு விடு முறை அறிவிக்கப் பட்டுள்ளது.இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    மிலாடி நபி விழா வருகிற 28-ந் தேதி நடைபெறுகிறது. காந்தி ஜெயந்தி விழா வரு கிற அக்டோபர் மாதம் 2-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி 2 நாட்களும் மதுபானக்கடை களை மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதைத்தொடர்ந்து இந்த 2 நாட்களும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகள், பார்கள் மற்றும் லைசென்ஸ் பெற்றுள்ள பார்கள் உள்ளிட்ட அனைத் தையும் மூடிவைக்க வேண்டும். இந்த நாட்களில், மதுக்கடைகள் மற்றும் பார்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ, சம்மந்தப்பட்ட வர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • வேளாண்மை துணை இயக்குநர் (பொறுப்பு) கவிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயிகளை வரவேற்று பயிற்சி அளித்தார்.
    • விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விளக்கமளித்தனர்.

    நாமக்கல்

    நாமக்கல் அருகே உள்ள ஆவல்நாய்க்கன்பட்டி கிராமத்தில் உழவர் பயிற்சி நிலையத்தின் மூலம் "கிராம அடிப்படை பயிற்சி" நடை பெற்றது. நாமக்கல் வேளாண்மை உதவி இயக்கு நர் சித்ரா தலைமையில் பயிற்சி நடந்தது. இதில் நாமக்கல் வேளாண்மை துணை இயக்குநர் (பொறுப்பு) கவிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயிகளை வரவேற்று பயிற்சி அளித்தார்.

    வேளாண்மை அலுவலர், மோகன், துறை சார்ந்த மானிய திட்டங்கள், விவசாயிகளுக்கு உயிர் உரங்கள், உயிரியல் பூஞ்சான கொல்லிகள் மூலம் விதை நேர்த்தி செய்தல், நுண்ணூட்ட கலவைகள் பயிருக்கு இடுவதன் முக்கி யத்துவம் குறித்தும் மண்பரி சோதனை நிலைய வேளாண்மை அலுவலர், தரணியா, மண்மாதிரி, நீர் மாதிரி, மண்பரிசோதனை செய்வதன் நன்மைகள், நுண்ணூட்டசத்து, பேரூட்ட சத்து குறைபாடு அதனை நிவர்த்தி செய்யும் முறை குறித்தும் பயிற்சியளித்தனர்.

    பயிற்சியில் நாமக்கல் வட்டார வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர், சாந்தி, கால்நடை உதவி மருத்துவர், கவிதா, வனஅலுவலர் நித்யா, பட்டுவளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் சாந்தி, தோட்டக்கலை உதவி தோட்டக்கலை அலுவலர், கோவிந்தராஜன், மற்றும் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் உதவி வேளாண்மை அலுவலர் மலர்கொடி ஆகியோர் தங்களது துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விளக்கமளித்தனர்.

    மேலும் வேளாண்மை பயிற்சியின் ஒரு பகுதியாக வருகை புரிந்த விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறையின் கருத்து கண்காட்சி, மற்றும் புதிய தொழில்நுட்ப செய்தி துண்டறிக்கைகள் அமைத்தும் வழங்கியும் விளக்கமளித்தனர்.

    அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் மற்றும் உதவி வேளாண்மை அலு வலர் பெரியசாமி ஆகியோர் அட்மா திட்ட பணிகள் குறித்தும் அதன் செயல்பாடுகள், உழவன் செயலின் பதிவிறக்கம் அதன் பயன்கள், பிரதமரின் கவுரவ நிதி தொகை பற்றி யும், அதற்கு புதுப்பித்தல், அங்கக வேளாண்மை மற்றும் நுண்ணீர் பாசனம் பதிவு மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்க மளித்து பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    பயிற்சியின் இறுதியில் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் தனலட்சுமி நன்றி கூறினார்.

    • வேலை நிறுத்த போராட்டத்தால் 3,200 தொழிற்சாலைகள் மூடப்பட்டன.
    • சுமார் 1 லட்சம் பேர் வேலை இழந்தனர்.

    நாமக்கல்,

    தமிழகத்தில் தொழில் நிறு வனங்களுக்கு உயர்த்தப்பட் டுள்ள மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். பீக் ஹவர் மின் கட்டணம் உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, நேற்று நாமக்கல் மாவட்டத்தில், சிறு, குறு தொழிற் சாலைகள், தொழில் நிறுவனங்கள் கடையடைப்பு போராட் டத்தில் ஈடுபட்டது.

    நாமக்கல் லாரி பாடி பில்டர்கள் சங்கம், ஆல் மோட்டார் ஒர்க் ஷாப் ஓனர்ஸ் அசோசி யேசன், கண்ணாடி கடை அசோசி யேசன், சேகோ பேக்டரி உரிமையாளர் கள் சங்கம், தேங்காய் நார் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டன.இதனால் மாவட்டத்தில், சிறு, குறு தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவ னங்கள் உள்ளிட்டவை உற்பத்தியை நிறுத்தி மூடப் பட்டிருந்தது.

    இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்க தலைவர் இளங்கோ கூறியதாவது:-நாமக்கல் மாவடடத்தில் நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில், 2 ஆயிரத் துக்கும் மேற்பட்ட சிறு குறு தொழிற்சாலைகளும் மற் றும் பாடி பில்டிங் பட்ட றைகள், சேகோ பேக்ட ரிகள் உட்பட மொத்தம் 3,200 தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் மாவட்டம் முழுவதுமாக சுமார் 1 லட்சம் பேர் வேலை இழந்தனர். மேலும் 2 கோடி அளவுக்கு தொழில் உற்பத்தி முடங்கியது.

    மின்கட்டணம் அதி கப்படியாக உயர்த்தப்பட்டு உள்ளதால், தொழிற் சாலை களுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின் கட்ட ணத்தை அரசு குறைக்கும் வரை தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப் படும்.இவ்வாறு அவர் கூறினார்.அப்போது நாமக்கல் வட்ட பாடி பில்டர் சங்க தலைவர் தங்கவேல், தேங்காய் நார் உற்பத்தியா ளர்கள் சங்க செயலாளர் தசரதன் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்,

    • பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு திடீரென சாரல் மழை
    • தொடர்ந்து இரவு முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தது.

    பரமத்தி வேலூர்

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, பரமத்தி, நடந்தை, மணி யனூர், கந்தம்பா ளையம், பெருங்கு றிச்சி, குப்பிரிக்கா பாளையம், சுள்ளிப்பா ளையம், சோளசி ராமணி, ஜமீன்இளம்பள்ளி குரும்பல மகாதேவி, கொத்த மங்கலம், சிறுநல்லிகோவில், திடுமல், தி.கவுண்டம்பாளையம், பெரிய சோளிபாளையம், கபிலக்குறிச்சி, இருக்கூர், வடகரையாத்தூர், ஆனங்கூர், குன்னத்தூர், பிலிக்கல்பாளை யம், சேளூர், கொந்தளம், கோப்பணம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

    அதனைத் தொடர்ந்து இடி மின்னலுடன் கூடிய மழை கனமழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து இரவு முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக தார் சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள், பொது மக்கள் நனைந்து கொண்டு அவதிப்பட்டு சென்றனர். அதேபோல் சாலை ஓரங்க ளில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்கடைகள் பழக்க டைகள், பலகார கடைகள், துணிக்கடைகள், மண்பாண் டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் மழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப் பட்டனர்.தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில் பெய்து வரும் மழையின் காரணமாக வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள் ளது. கடும் வெயிலின் காரண மாக பயிர்கள் வாடிய நிலை யில் இருத்தது. பெய்து வரும் மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. 

    • முதல்-அமைச்சர் எண்ணற்ற திட்டங்களை பெண்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தி வருகிறார்.
    • 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    திருச்செங்கோடு

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி யில் உள்ள திருமண மண்ட பத்தில் சமூக நலத்துறையின் சார்பில் கலெக்டர் உமா தலைமையில் நாமக்கல் சின்ராஜ் எம்.பி., திருச்செங்கோடு ஈஸ்வரன் எம்.எல்.ஏ., நகரமைப்பு மண்டல திட்ட குழு உறுப்பினர் மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவில் கலெக்டர் உமா பேசியதாவது:-

    மகப்பேறு திட்டங்கள்:தமிழ்நாடு முதல்-அமைச்சர் எண்ணற்ற திட்டங்களை பெண்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தி வருகிறார். அதன்படி கர்ப்பிணி தாய்மார்களுக்கு பாது காப்பான தாய்மையை உறுதிசெய்தல் மற்றும் மகப்பேறு உதவித்திட் டங்கள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு சமுதாய வளைகாப்பு விழாவினை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றது.அதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கொடு நகராட்சி யில் 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் 15 வட்டாரங்களிலும் சுழற்சி முறை யில் நடைபெறவுள்ளது.

    சீர்வரிசை:இதில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர் வரிசை பொருட்கள், மதிய உணவு உள்ளிட்டவைகள் வழங்கப் பட்டது. சுகாதாரத்துறையின் சார்பில் கர்ப்பிணி தாய்மார்கள் ஊட்டச்சத்து பரிசோதனைகள் மேற் கொள்ள மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

    கர்ப்பிணி தாய்மார்கள் கருவுற்ற காலங்களில் 12 கிலோ எடை கூடினால் மட்டுமே 3 கிலோ எடை யுள்ள குழந்தைகள் பெற்றெடுக்க முடியும்.எனவே இந்த காலக்கட் டத்தில் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலை யத்தில் தொடர்ந்து பரிசோ தனை மேற்கொண்டு, மருத்துவரின் ஆலோசனை களை பெற வேண்டும். கர்ப்பிணி தாய்மார்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கி யமாகவும் இருக்க வேண்டும். தொடர்ந்து ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.கர்ப்பிணி தாய்மார்கள் தங்களது கர்ப்ப காலத்தில் அரசு மருத்துவமனையில் பிரிசோதனை மேற் கொண்டு நல்ல முறையில் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டுமென வாழ்த்து கிறேன்.நாமக்கல் மாவட்டத்தில் மீதமுள்ள 14 வட்டாரங்க ளிலும் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு செப்டம்பர் 29-ந் தேதிக்குள் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், திருச்செங்கோடு நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ் பாபு, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சுஜாதா தங்கவேல், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் (பொறுப்பு) மோகனா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குமாரபாளையம் தனியார் கல்லூரியில் மருந்தியல் படிப்பு (பார்ம்.டி)படித்து வருகிறார்.
    • சேலம்-கோவை புறவழிச்சாலை வட்டமலை பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் கடக்கும்போது சரக்கு வாகனம் மோதியது

    குமாரபாளையம்

    கடலூரை சேர்ந்தவர் காமேஷ் (23). இவர் குமாரபாளையம் தனியார் கல்லூரியில் மருந்தியல் படிப்பு (பார்ம்.டி)படித்து வருகிறார். இவர் சேலம்-கோவை புறவழிச்சாலை வட்டமலை பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் கடக்கும்போது, எதிர் திசையில் உள்ள சர்வீஸ் சாலையில் வேகமாக வந்த சரக்கு வாகனம், இவர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் காமேஷ் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். புகாரின் பேரில் குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரக்கு வாகன ஓட்டுனர் பட்லூரை சேர்ந்த பூபதி, (26), என்பவரை கைது செய்தனர்.

    • பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 541 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்கள்
    • 10 பயனாளிகளுக்கு ரூ. 38.11 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்ட றிந்தார்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கை கள் குறித்து மொத்தம் 541 மனுக்களை மாவட்ட கலெக்ட ரிடம் வழங்கி னார்கள். மனுக்க ளைப் பெற்றுக் கொண்ட கலெக்டர், மனுக்களை பரிசீலனை செய்து, உரிய அலுவலர்க ளிடம் வழங்கி அவற்றின் மீது விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டுமென உத்தர விட்டார்.நிகழ்ச்சியில் தாட்கோ மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.29.72 லட்சம் மதிப்பில் கடனுதவி, பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறை யின் சார்பில் தலா ரூ.6,000 வீதம் மொத்தம் ரூ.12,000 மதிப்பில், 2 பயனாளிகளுக்கு இலவச சலவைப் பெட்டி, கூட்டுறவுத் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2.27 லட்சம் மதிப்பில் வட்டியில்லா பயிர் கடனு தவி, 1 மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ரூ. 6 லட்சம் மதிப்பில் கடனுதவி மற்றும் வருவாய் துறையின் சார்பில் 1 பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா, என மொத்தம் 10 பயனாளி களுக்கு ரூ. 38.11 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • லாரி பாடி கட்டுமானத்தில் ஈடுபடும் நிறுவனங்களும் போராட்டத்தில் பங்கேற்றன.
    • இன்று சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவித்தனர்.

    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கத்தின் சார்பில் முதல்-அமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் இன்று உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் கலந்து கொண்டன.

    அதுபோல் லாரி பாடி கட்டுமானத்தில் ஈடுபடும் நிறுவனங்களும் போராட்டத்தில் பங்கேற்றன.

    இதனால் மாவட்டம் முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்ட சிறு குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக இன்று சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவித்தனர்.

    ×