என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருச்செங்கோட்டில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்ற போது எடுத்த படம்.
கர்ப்பிணி தாய்மார்கள் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும்:கலெக்டர்அறிவுரை
- முதல்-அமைச்சர் எண்ணற்ற திட்டங்களை பெண்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தி வருகிறார்.
- 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
திருச்செங்கோடு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி யில் உள்ள திருமண மண்ட பத்தில் சமூக நலத்துறையின் சார்பில் கலெக்டர் உமா தலைமையில் நாமக்கல் சின்ராஜ் எம்.பி., திருச்செங்கோடு ஈஸ்வரன் எம்.எல்.ஏ., நகரமைப்பு மண்டல திட்ட குழு உறுப்பினர் மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவில் கலெக்டர் உமா பேசியதாவது:-
மகப்பேறு திட்டங்கள்:தமிழ்நாடு முதல்-அமைச்சர் எண்ணற்ற திட்டங்களை பெண்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தி வருகிறார். அதன்படி கர்ப்பிணி தாய்மார்களுக்கு பாது காப்பான தாய்மையை உறுதிசெய்தல் மற்றும் மகப்பேறு உதவித்திட் டங்கள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு சமுதாய வளைகாப்பு விழாவினை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றது.அதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கொடு நகராட்சி யில் 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் 15 வட்டாரங்களிலும் சுழற்சி முறை யில் நடைபெறவுள்ளது.
சீர்வரிசை:இதில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர் வரிசை பொருட்கள், மதிய உணவு உள்ளிட்டவைகள் வழங்கப் பட்டது. சுகாதாரத்துறையின் சார்பில் கர்ப்பிணி தாய்மார்கள் ஊட்டச்சத்து பரிசோதனைகள் மேற் கொள்ள மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணி தாய்மார்கள் கருவுற்ற காலங்களில் 12 கிலோ எடை கூடினால் மட்டுமே 3 கிலோ எடை யுள்ள குழந்தைகள் பெற்றெடுக்க முடியும்.எனவே இந்த காலக்கட் டத்தில் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலை யத்தில் தொடர்ந்து பரிசோ தனை மேற்கொண்டு, மருத்துவரின் ஆலோசனை களை பெற வேண்டும். கர்ப்பிணி தாய்மார்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கி யமாகவும் இருக்க வேண்டும். தொடர்ந்து ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.கர்ப்பிணி தாய்மார்கள் தங்களது கர்ப்ப காலத்தில் அரசு மருத்துவமனையில் பிரிசோதனை மேற் கொண்டு நல்ல முறையில் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டுமென வாழ்த்து கிறேன்.நாமக்கல் மாவட்டத்தில் மீதமுள்ள 14 வட்டாரங்க ளிலும் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு செப்டம்பர் 29-ந் தேதிக்குள் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், திருச்செங்கோடு நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ் பாபு, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சுஜாதா தங்கவேல், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் (பொறுப்பு) மோகனா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






