search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cultivator"

    • பரமத்தி வட்டாரம் வீர ணாம்பாளையம் கிராமத்தில் உழவர் பயிற்சி நிலையத்தின் மூலம் “கிராம அடிப்படை பயிற்சி” நடைபெற்றது.
    • பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி தலைமையில் பயிற்சி நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டாரம் வீர ணாம்பாளையம் கிராமத்தில் உழவர் பயிற்சி நிலையத்தின் மூலம் "கிராம அடிப்படை பயிற்சி" நடைபெற்றது. பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி தலைமையில் பயிற்சி நடைபெற்றது.

    இதில் நாமக்கல் வேளாண்மை துணை இயக்குநர் (பொறுப்பு) கவிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயி களை வரவேற்று பயிற்சி அளித்தார்.

    பயிற்சியில் பர மத்தி வட்டார வேளாண்மை அலுவ லர், மோகனபிரியா, துறை சார்ந்த மானிய திட்டங்கள், விவசாயிகளுக்கு உயிர் உரங்கள், உயிரியல் பூஞ்சான கொல்லிகள் மூலம் விதை நேர்த்தி செய்தல், நுண்ணூட்ட கலவைகள் பயிருக்கு இடுவதன் முக்கி யத்துவம் குறித்து கூறினார்.

    இப்பயிற்சியில் வேளாண்மை துணை இயக்குநர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன் கலந்துகொண்டு வேளாண் மானிய திட்டம் குறித்து கூறினார். மேலும் கால்நடை உதவி மருத்துவர் நளினி, வனஅலுவலர் ரமேஷ், தோட்டக்கலை அலுவலர் நிவேதா மற்றும் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் உதவி வேளாண்மை அலுவலர் பாபு ஆகியோர் தங்களது துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விளக்கமளித்தனர்.

    முடிவில் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் தனலட்சுமி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி நன்றி கூறினார்.

    • 47 கிராம பஞ்சாயத்துகளிலும் இத்திட்டம் செயல்படு த்தப்பட்டு வருகிறது
    • திட்டப்பலன்களை உரிய காலத்தில் பெற்று பயனடையவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-

    கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-22- ம் ஆண்டு முதல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு 2023-24-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2,504 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தை பொருத்த மட்டில் 2021-22-ம் ஆண்டில் 37 கிராம பஞ்சாயத்துகளிலும், 2022-23 -ம் ஆண்டில் 60 கிராம பஞ்சாயத்துகளிலும் நடப்பு 2023-24-ம் ஆண்டில் 47 கிராம பஞ்சாயத்துகளிலும் இத்திட்டம் செயல்படு த்தப்பட்டு வருகிறது.

    வேளாண்மை - உழவர் நலத்துறையில் பல்வேறு நல உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களில் பயன்பெறுவதற்காகவும், விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டும், அவர்களது தேவையை முன்கூட்டியே வேளாண்மைத் துறைக்கு தெரிவித்து முன்னுரிமை அடிப்படையில் திட்டப்பலன்களை பெறுவதற்காகவும், உழவன் செயலி என்ற உன்னதமான செயலியினை துறை ஏற்படுத்தியுள்ளது.

    விவசாயிகள் இச்செய லியில் உரிய பதிவுகள் மேற்கொண்டு துறையின் திட்டப்பலன்களை அறிவ தோடு, பயன்பெற்றும் வருகின்றனர். மாநிலத்தில் உள்ள அனைத்து விவசா யிகளும் தங்கள் கைபேசியில் உழவன் செயலியினை பதிவிறக்கம் செய்து திட்டப்ப லன்களை பெற்றிட உரிய முன்பதிவுகள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படு கிறது.

    விவசாயிகள் முன்பதிவு செய்வதனால் துறையில் வழங்கப்படும் இடுபொருட்கள் மற்றும் திட்டப்பலன்களை உரிய காலத்தில் பெற்று பயனடையவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    உழவன் செயலியில் இடுபொருள் தேவையை முன்பதிவு செய்தல் மற்றும் திட்டப்பலன்களை பெறு தலுக்கான வழிமுறை கள் இத்துடன் இணைக்கப்ப ட்டுள்ளது.

    எனவே, இவ்விளக்கத்தினை கடை பிடித்து உழவன் செயலியினை விவசாய பெருங்குடி மக்கள் பதிவிறக்கம் செய்து திட்ட பலன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×