என் மலர்
உள்ளூர் செய்திகள்

மிலாடி நபி மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு விடுமுறை
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் மிலாடி நபி மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 28-ந்தேதி மற்றும் அக்டோபர் மாதம் 2-ந் தேதிஆகிய 2 நாட்கள் மது பானக்கடைக ளுக்கு விடு முறை அறிவிக்கப் பட்டுள்ளது.இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
மிலாடி நபி விழா வருகிற 28-ந் தேதி நடைபெறுகிறது. காந்தி ஜெயந்தி விழா வரு கிற அக்டோபர் மாதம் 2-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி 2 நாட்களும் மதுபானக்கடை களை மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதைத்தொடர்ந்து இந்த 2 நாட்களும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகள், பார்கள் மற்றும் லைசென்ஸ் பெற்றுள்ள பார்கள் உள்ளிட்ட அனைத் தையும் மூடிவைக்க வேண்டும். இந்த நாட்களில், மதுக்கடைகள் மற்றும் பார்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ, சம்மந்தப்பட்ட வர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.






