என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "temporary bridge"
- அம்மன் நகர் சாலையில் சுமார் 20 ஆண்டுகளாக சிலரின் ஆக்கிரமிப்பால் புதிய தார் சாலை அமைக்க முடியாமல் இருந்து வந்தது.
- தார் சாலை அமைக்கும் பணிக்கு ரூ.1 கோடியே 83 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அம்மன் நகர் சாலையில் சுமார் 20 ஆண்டுகளாக சிலரின் ஆக்கிரமிப்பால் புதிய தார் சாலை அமைக்க முடியாமல் இருந்து வந்தது. அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி தலைவரிடம் அம்மன் நகர் பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து அம்மன் நகர் பகுதியில் மழை நீர் வடிகால் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிக்கு ரூ.1 கோடியே 83 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் சாலையில் கழிவுநீர் செல்ல பெரிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதில் பலரும் விழுந்து காயமடைய நேரிடு அபாயம் உள்ளது.
எனவே இந்த வடிகால் பகுதியில் தற்காலிக பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்காலிக பாலம் அமைக்கப்பட்டால் தார்ச்சாலை போடும்வரை அப்பகுதி மக்கள், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் சிரமம் இல்லாமல் செல்வதற்கு ஏதுவாக அமையும். அதனால் நகராட்சி நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு தற்காலிக பாலம் அமைத்து மக்களின் சிரமங்களை தீர்த்து வைக்குமாறு இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஜமீன் சிங்கம்பட்டி பகுதியில் உள்ள கால்வாய் பாலம் மறு சீரமைப்புக்காக சமீபத்தில் டெண்டர் விடப்பட்டது.
- மாற்று பாதைக்காக அந்த பகுதியில் தற்காலிகமாக பாலம் அமைக்கப்பட்டது.
கல்லிடைக்குறிச்சி:
அம்பாச முத்திரம் சுற்றுவட்டார பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் காரணமாக பல்வேறு இடங்களில் பாலம் வேலை நடைபெற்று வருகிறது.
புதிய பாலம்
அதன் ஒருபகுதியாக மணிமுத்தாறு-கல்லிடைக்குறிச்சியை இணைக்கும் ஜமீன் சிங்கம்பட்டி பகுதியில் உள்ள கால்வாய் பாலம் மறு சீரமைப்புக்காக சமீபத்தில் டெண்டர் விடப்பட்டது. அதனை தொடர்ந்து பழைய பாலத்தை உடைக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டது.
இதனால் மாற்று பாதைக்காக அந்த பகுதியில் தற்காலிகமாக பாலம் அமைக்கப்பட்டது. அதில் நீர் செல்வதற்காக குழாய் ஒன்றினை வைத்துவிட்டு அதன் மேல் மணல் மூட்டைகளை வைத்துள்ளதாகவும், தற்போது அந்த பகுதியில் நீர் வரத்து அதிகரித்து மண்ணரிப்பு ஏற்பட்டதால் தற்காலிக பாலம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
விரைந்து முடிக்க வேண்டும்
இதன் காரணமாக மணிமுத்தாறு ஜமீன் சிங்கம்பட்டியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்க ப்பட்டுள்ளனர். இப்பகுதியில் உள்ள சிறப்பு காவல் படையினரும், பள்ளி செல்லும் குழந்தைகளும் பல கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே தற்காலிக பாலத்தை தரமாக அமைத்து, புதிய பாலம் வேலையையும் தாமதமின்றி முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்