என் மலர்
உள்ளூர் செய்திகள்

டிலைட் ஆவின் பால் விற்பனை தொடக்கம்
செறிவூட்டப் பட்ட பால் 500 மி.லி. மற்றும் நிலைப்படுத்தப் பட்ட பால் 200 மி.லி, விற்பனை
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் டிலைட் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:
நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தி யாளர்கள் ஒன்றியத்தின் மூலம் "டிலைட்" என்ற வைட்டமின் சத்துக்கள் நிறைந்த, செறிவூட்டப் பட்ட பால் 500 மி.லி. மற்றும் நிலைப்படுத்தப் பட்ட பால் 200 மி.லி, நேற்று (21-ந் தேதி) முதல் மாவட்டத்தில் விற்பனை செய்யபப்படுகிறது. நாமக்கல் மாவட்ட ஆவின் விற்பனை முகவர்கள் மற்றும் ஆவின் பாலகங்களின், இந்த பால் பாக்கெட் டுகளை பொதுமக்கள் வாங்கி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






