என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆஞ்சநேயர், நரசிம்மசாமி கோவில் உண்டியல்கள் திறப்பு
    X

    ஆஞ்சநேயர், நரசிம்மசாமி கோவில் உண்டியல்கள் திறப்பு

    • தங்கம் 53 கிராம், வெள்ளி 131 கிராமும் பக்தர்களால் காணிக்கை
    • ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் உள்ள 6 உண்டியல்கள் மற்றும் நர சிம்மசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள 4 உண்டியல்கள்

    நாமக்கல்

    நாமக்கல் ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்ம சுவாமி கோவில் உண்டியல் கள் திறந்து எண்ணப் பட்டது. இதில் பக்தர்கள் ரூ.45 லட்சம் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

    நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் உள்ள 6 உண்டியல்கள் மற்றும் நர சிம்மசுவாமி கோயில் வளா கத்தில் உள்ள 4 உண்டியல்கள் என மொத்தம் 10 உண்டியல்கள், கோவில் அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது. மகளிர் சுய உதவி குழுவினர், அய்யப்பா சேவா சங்கத்தின் உண்டியலில் உள்ள காணிக்கைகள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.இதில் மொத்தம் ரூ 45, 24,833 ஆயிரம் காணிக்கை யாக இருந்தது. மேலும், தங்கம் 53 கிராம், வெள்ளி 131 கிராமும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப் பட்டிருந்தது. இந்த உண்டியல் திறப்பில், கோவில் செயல் அலுவலர் இளையராஜா, அறங்கா வலர் குழு உறுப்பினர் சீராளன் மற்றும் ரமேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×