search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல்லில் ஒரு முட்டை விலை ரூ.4.90 காசுகளாக உயர்வு
    X

    நாமக்கல்லில் ஒரு முட்டை விலை ரூ.4.90 காசுகளாக உயர்வு

    • முட்டையின் விலை மீண்டும் 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் ரூ. 4.90 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.
    • பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 104 ஆக பிசிசி அறிவித்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர். கடந்த செப். 15-ந்தேதி ஒரு முட்டை விலை ரூ.4.70-ல் இருந்து 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் விலை ரூ. 4.75 ஆனது. 18-ந்தேதி 10 பைசா உயர்த்தப்பட்டு ரூ. 4.85 ஆனது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில், முட்டையின் விலை மீண்டும் 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் ரூ. 4.90 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.

    இதை அனைத்து பண்ணையாளர்களுக்கு தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும், என்இசிசி விலையை விட முட்டை விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் எனவும், என்இசிசி மற்றும் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 104 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 92 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    Next Story
    ×