search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை கண்காட்சியில் அரங்கு அமைக்கமகளிர் குழுவினர் பதிவு செய்து கொள்ளலாம்
    X

    சென்னை கண்காட்சியில் அரங்கு அமைக்கமகளிர் குழுவினர் பதிவு செய்து கொள்ளலாம்

    • மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை, விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
    • சுய உதவிக் குழுக்கள் மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்று அரங்கு அமைக்க விரும்பினால், வருகிற 20-ந் தேதிக்குள் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர்.உமா வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியுள்ளதாவது:-

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை, விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் 3 கண்காட்சிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடத்தப்படுகிறது.

    தற்போது நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டி கையை முன்னிட்டு வரு கின்ற வருகிற 7-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மாநில அளவிலான கண்காட்சி நடைபெற வுள்ளது.

    இக்கண்காட்சியில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்கள், கைத்தறி பொருட்கள், உணவுப் பொருட்கள், பாரம்ப ரிய அரிசிகள், சிறுதானிய மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள், பனை ஓலைப் பொருட்கள் போன்ற பொருட்களும், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பயன்பாட்டிற்கு கொலு பொம்மைகள், மண் பொம்மைகள், காகித கூழ் பொம்மைகள், விருந்தின ருக்கு வழங்கக் கூடிய நினைவு பரிசு பொருட்க ளான சிறிய சணல் பைகள், பனையோலை பெட்டிகள், சிறிய அளவிலான வண்ண காகித பைகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், காட்டன் வேட்டி கள் போன்ற துணி வகைகள், சிவகங்கை மாவட்ட காரைக்குடி பலகாரங்கள் போன்ற தீபாவளி பலகாரங்கள் காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது

    எனவே நாமக்கல் மாவட்டத்தில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்று அரங்கு அமைக்க விரும்பினால், வருகிற 20-ந் தேதிக்குள் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×