search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூரில் இன்று காலை லாரி மோதி தொழிலாளி பலி
    X

    பரமத்திவேலூரில் இன்று காலை லாரி மோதி தொழிலாளி பலி

    • சேலத்தில் இருந்து கரூர் நோக்கி அதி வேகமாக சென்ற லாரி ஒன்று மணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இதில் மணி மோட்டார் சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலூகா உழவர் பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் மணி( 55). கூலித் தொழிலாளி.

    இவர் இன்று காலை வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு படமுடி பாளையத்தில் உள்ள தாலுகா அலுவலகம் அருகே சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது சேலத்தில் இருந்து கரூர் நோக்கி அதி வேகமாக சென்ற லாரி ஒன்று மணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மணி மோட்டார் சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் ஓடிவந்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை பரமத்திவேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே மணி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர்.

    அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×