என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விபத்தில் விவசாயி பலி
- போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தன்(42). விவசாயியான இவர் சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் ரெட்டிபட்டியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- அலங்காநத்தம் பிரிவு ரோட்டில் இருந்து சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஆனந்தன் வந்த மோட்டார் சைக்கிள், பழனிவேல் வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தடுமாறி விழுந்து காயமடைந்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தன்(42). விவசாயியான இவர் சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் ரெட்டிபட்டியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சம்பாமேடு அருகே வந்த போது ஈச்சவாரியை சேர்ந்த பழனிவேல் (50) அலங்காநத்தம் பிரிவு ரோட்டில் இருந்து சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஆனந்தன் வந்த மோட்டார் சைக்கிள், பழனிவேல் வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தடுமாறி விழுந்து காயமடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். இதில் ஆனந்தன் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். பழனிவேல் லேசான காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்