search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் விவசாயி பலி
    X

    விபத்தில் விவசாயி பலி

    • போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தன்(42). விவசாயியான இவர் சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் ரெட்டிபட்டியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • அலங்காநத்தம் பிரிவு ரோட்டில் இருந்து சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஆனந்தன் வந்த மோட்டார் சைக்கிள், பழனிவேல் வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தடுமாறி விழுந்து காயமடைந்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தன்(42). விவசாயியான இவர் சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் ரெட்டிபட்டியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சம்பாமேடு அருகே வந்த போது ஈச்சவாரியை சேர்ந்த பழனிவேல் (50) அலங்காநத்தம் பிரிவு ரோட்டில் இருந்து சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஆனந்தன் வந்த மோட்டார் சைக்கிள், பழனிவேல் வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தடுமாறி விழுந்து காயமடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். இதில் ஆனந்தன் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். பழனிவேல் லேசான காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×