என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சாமிக்கு கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது
    • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்கா ரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சி யளித்தார்.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதேபோல் பரமத்தி வேலூர் பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆலயத்தில் வைகாசி மாத வளர்பிறை பிரதோ ஷத்தினை முன்னிட்டும், அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியினை முன்னிட்டும் ஏகாம்பரநாதருக்கு தாரா பாத்திரம் (சல்லடையின்) மூலம் தொடந்து நீர் சொரியும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வ நாதர், பிலிக்கல்பாளையம், கரட்டூர் விஜயகிரி வட பழனியாண்டவர் கோவிலில் எழுந்தருளியுள்ள பர்வ தீஸ்வரர் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்க ளில் உள்ள சிவபெரு மானுக்கு வளர்பிறை பிரதோ ஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதி களைச் சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் பிரதோஷ விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    • முட்டை கோழியின் தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
    • முட்டை கோழி விலை கிலோ 11 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 96 ரூபாயாக இருந்த முட்டை கோழி விலை 107 ரூபாயாக அதிகரித்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி நாமக்கலில் நேற்று முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் முட்டையின் தேவை மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டையின் விலையை 5 காசுகள் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

    அதன்படி 500 காசுகளாக இருந்த முட்டை விலை, 505 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த மாதம் 1-ந் தேதி 405 காசுகளாக இருந்த முட்டை விலை, படிப்படியாக அதிகரித்து இன்று 505 காசுகளாக இருப்பதால் ஒரே மாதத்தில் முட்டை விலை 1 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், கோடை வெயிலால் முட்டை உற்பத்தி 15 முதல் 20 சதவீதம் வரை குறைந்து இருப்பது முட்டை விலை உயர்வுக்கு காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதே போல முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. இதில் முட்டை கோழியின் தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் முட்டை கோழி விலை கிலோ 11 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 96 ரூபாயாக இருந்த முட்டை கோழி விலை 107 ரூபாயாக அதிகரித்துள்ளது.

    கறிக்கோழி விலை 127-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அதன் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் அதே விலையில் நீடிக்கும் என பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தாயார் மணி தனது குழந்தைகளை பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வளர்த்து உள்ளார்.
    • உயிருடன் இருக்கும் எனது தாயாருக்கு சிலை வைத்து அவரை கவுரவப்படுத்த வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு.

    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள ரெட்டிப்பட்டி சக்திநகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 30). வெல்டிங் பட்டறை உரிமையாளர். இவரது தந்தை வாசு. தாயார் மணி (54). ஜீவா என்கிற தங்கை உள்ளார். பிரபு மற்றும் அவரது தங்கை ஜீவா ஆகியோர் சிறுவயதில் இருந்தபோதே தந்தை வாசு இறந்து விட்டார்.

    தாயார் மணி தனது குழந்தைகளை பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வளர்த்து உள்ளார். இதனால் பிரபுவுக்கு உயிருடன் உள்ள தனது தாயாருக்கு சிலை வடித்து கோவில் கட்ட வேண்டும் என்பது சிறுவயது முதலே ஆசையாக இருந்து உள்ளது.

    தற்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ள தாயாரை பெருமைபடுத்தும் வகையிலும், நன்றி கடன் செலுத்தும் வகையிலும் தனது வீட்டிற்கு அருகே 1,200 சதுர அடி நிலம் வாங்கி, கோவில் போன்று கட்டி அதில் 3 அடி உயரத்தில் தனது தாயாருக்கு சிலை வைத்து உள்ளார்.

    இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

    இது குறித்து பிரபு கூறியதாவது:-

    நான் சிறுவயதாக இருக்கும்போதே எனது தந்தை இறந்து விட்டார். பல்வேறு கஷ்டங்களை சந்தித்து என்னை வளர்த்த தாயாரை கவுரவப்படுத்த நான் எண்ணினேன். இறந்த பின்னர் பிண்டம் வைத்து திதி கொடுப்பதை விட, உயிருடன் இருக்கும் எனது தாயாருக்கு சிலை வைத்து அவரை கவுரவப்படுத்த வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு. அது தற்போது நிறைவேறியுள்ளது.

    இத்தாலியன் மார்பிள்ஸ் கல் மூலம் ரூ.1.50 லட்சம் மதிப்பில் வெள்ளை நிறத்தில் செதுக்கப்பட்டு உள்ள இந்த சிலை ராஜஸ்தான் மாநிலத்தில் வடிவமைக்கப்பட்டது ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுவாக இறந்தவர்களுக்கு தான் சிலை வைப்பார்கள். ஆனால் உயிருள்ள ஒருவருக்கு சிலை வைத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாயின் சிலையை அப்பகுதியை சேர்ந்த பலர் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

    உயிருடன் இருக்கும் எனக்கு மகன் சிலை வைத்து இருப்பது பெருமையாகவும், நெகிழ்வாகவும் இருப்பதாக பிரபுவின் தாயார் மணி கூறினார்.

    • கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மதுபானம் விற்பனையில் ஈடுபடுவர் களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.
    • தணிக்கையின்போது அனுமதியற்ற பார்கள் நடைபெறுகிறதா? மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் கண்டறிய வேண்டும்.

    நாமக்கல்:

    கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் தடுப்பு சம்பந்தமாக, காவல் துறை, வருவாய்த் துறை, டாஸ்மாக், கலால்துறை, சுகாதாரத்துறை அலுவலர் களைக் கொண்ட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலு வலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் உமா தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மதுபானம் விற்பனையில் ஈடுபடுவர் களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தணிக்கையின்போது அனுமதியற்ற பார்கள் நடைபெறுகிறதா? மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் கண்டறிய வேண்டும்.

    கள்ளசாராயம் மற்றும் வெளிமாநில மதுவகைகள் எதுவும் விற்பனை செய்யப்படுகிறதா எனவும், சாலையோர கடைகள் மற்றும் தாபாக்களில் மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்வதை கண்டறிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    சில்லரை விற்பனைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களில் எக்சைஸ் லேபிள் மற்றும் பில்கள் உடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும்.

    மேலும், மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்ட கொக்கராயன்பேட்டை, கரிச்சிப்பாளையம், நாமக்கல் (2 கடைகள்), பவுத்திரம், நாமகிரிப் பேட்டை, மொளசி மற்றும் நெ.3. குமாரபாளையம் ஆகிய கடை பணியாளர் களிடம் டாஸ்மாக் நிறுவன விதிகளின்படி ரூ.70,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    அதிக விலை வைத்து விற்பனை செய்த டாஸ்மாக் கடை பணியாளர்கள் ஆனந்தன், சுரேஷ்குமார் ஆகியோர் வேறு கடைகளுக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து மொளசி டாஸ்மாக் கடையில் பணி புரிந்து வரும் மாணிக்கம் என்பவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    பாரில் காலை நேரங்களில் கள்ளத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்ததை கண்டறிந்து, அதனை கண்காணிக்கத் தவறிய மேற்பார்வையாளர் வெங்கடாசலம் என்பவர் இடமாறுதல் செய்யப்பட் டுள்ளார்.

    கடையின் வேலை நேரமான பகல் 12 முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மதுபான கடைகள் மற்றும் பார்கள் இயங்குகிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். மதுபான கடைக்கு அருகில் செயல்பட்ட 36 அனுமதியற்ற பார்கள், 18 பெட்டிக்கடைகள் மற்றும் தள்ளு வண்டிகள் போன்றவை கண்டறிப் பட்டு, பூட்டி சீலிடப்பட்டுள் ளது. கள்ளத்தனமாக மதுவகைகள் விற்பனை செய்த 17 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில், சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது புகார்கள் அளிக்க மாவட்ட மது விலக்கு அமலாக்கப்பிரிவு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் 88383 52334 என்ற செல்போன் எண்ணிற்கு நேரடியாகவும், வாட்சப் மூலமாகவும் பொதமக்கள் புகார்களை தெரிவிக்கலாம். இதன் அடிப்படையில் இதுவரை 11 புகார்கள் பெற்றப்பட்டு 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கூடுதல் காவல் உதவி ஆய்வாளர் ராஜூ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அக்ரஹாரம் குன்னத்தூரில் உள்ள விநாயகர், மகா மாரியம்மன், கருப்பண்ணசாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • இரவு முதல் கால யாக பூஜையும், இரவு 8 மணிக்கு மேல் பட்டு வஸ்தர சமர்ப்பணமும் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா அக்ரஹாரம் குன்னத்தூரில் உள்ள விநாயகர், மகா மாரியம்மன், கருப்பண்ணசாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த மாதம் 29-ந் தேதி இரவு கிராம சாந்தி பூஜை நடைபெற்றது.

    கடந்த செவ்வாய்க்கிழமை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்த குடங்களுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    இதையடுத்து மகா மாரியம்மன் ஆலயத்தில் மங்கள இசையுடன் விநாயகர் வழிபாடு, நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. மதியம் சூரிய ஒளியிலிருந்து நேரடியாக அக்னி எடுத்தல் நிகழ்ச்சியும், மாலை விநாயகர் வழிபாடு நடைபெற்றது. இரவு முதல் கால யாக பூஜையும், இரவு 8 மணிக்கு மேல் பட்டு வஸ்தர சமர்ப்பணமும் நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று காலை 2-ம் கால யாகபூஜை நடைபெற்றது. மதியம் அஷ்டபந்தனம் செய்தல், மாலை 3-ம் கால யாக பூஜை நடைபெற்றது. இரவு மகா மாரியம்மன் விமான கலசம் ஸ்தாபிதம் செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மகா மாரியம்மன் சிலை பீடத்தில் நிலை நிறுத்தல், எந்திர ஸ்தாபனம் அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும், இரவு 3-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது.

    இன்று (வியாழக்கிழமை) காலை 4-ம் காலை யாக பூஜையும், தொடர்ந்து யாத்ரா தானம் நடைபெற்றது. இதையடுத்து புனித தீர்த்த கலசங்கள் யாக சாலையில் இருந்து புறப்பாடு நிகழ்ச்சி யும், அதனை தொடர்ந்து விநாயகர், மகா மாரியம்மன், கருப்பண்ண சாமி ஆகிய தெய்வங்களின் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரி யார்கள் வேத மந்திரங்கள் ஓதி புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    இதையடுத்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப் பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏரா ளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகுதியில் நேற்று திடீரென சூறாவளி காற்று வீசியது.
    • குடியிருப்பில் மின் இணைப்பில் இருந்த யு.பி.எஸ்., டிவி உள்ளிட்ட பல்வேறு மின் சாதனங்கள் பழுதாயின. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகுதியில் நேற்று திடீரென சூறாவளி காற்று வீசியது. பலத்த காற்றினால் அப்பகு தியில் உள்ள மரக்கிளையில் மின் கம்பி உரசியது. இத னால் அப்பகுதி குடியி ருப்பில் மின் இணைப்பில் இருந்த யு.பி.எஸ்., டிவி உள்ளிட்ட பல்வேறு மின் சாதனங்கள் பழுதாயின. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து, அங்கு வந்த மின்வாரிய ஊழி யர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் மின் கம்பியில் உரசிய மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். பேட்டை, நல்லியாம்பா ளையம் மற்றும் சக்ரா நகர் பகுதிகளில் மின் கம்பிகளில் மரக்கிளை உரசி வருவதால் அப்பகுதியில் உள்ள மரக்கி ளைகளை மின்வாரியத்தி னர் அகற்ற வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    • அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை காய் ரூ.6.91 லட்சத்துக்கு ஏலம் போனது.
    • இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை காய் ரூ.6.91 லட்சத்துக்கு ஏலம் போனது.

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில்:-

    நிலக்கடலை காய் 96.23 குவிண்டால் எடை கொண்ட 297 மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.78.30-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.71.50-க்கும், சராசரி விலையாக ரூ.76.50-க்கும் என ரூ.6 லட்சத்து 91ஆயி ரத்து 310-க்கு விற்பனை யானது.

    • நல்லா கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 70). இவர் மீன்பிடித்தொழில் செய்து வந்தார்.
    • மோட்டார் சைக்கிளுடன் சாலையில் கீழே விழுந்த கணேசனுக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே உள்ள நல்லா கவுண்டம்பா ளையத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 70). இவர் மீன்பிடித்தொழில் செய்து வந்தார். கணேசன் நேற்று பிலிக்கல்பாளையத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் ஜேடர்பாளை யம்-பரமத்தி வேலூர் செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது சாணார்பாளையம் அருகே வேட்டு வங்காடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கணேசன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளுடன் சாலையில் கீழே விழுந்த கணேசனுக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ஆம்புலன்ஸ் மூலம் படு காயம் அடைந்த கணேசனை யும் பின்னால் வந்து மோதி விபத்தை ஏற்படுத்திய வரையும் காப்பாற்றி பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் கணேசன் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கணேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் மீது மோதி படுகாயம் அடைந்த சாணார்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் என்பவ ரது மகன் அபிமன்யு (23) வேலூர் அரசு மருத்துவ மனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மார்க்கேயன் கோட்டை பகுதியை சேர்ந்த வர் வெங்கடேஷ் (வயது 40). இவர் தையல் தொழில் செய்து வருகிறார்.
    • பாபு, நடந்து சென்று கொண்டிருந்த வெங்கடேஷ் மீது மோதியதில் வெங்கடேஷ் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்தார்.

    பரமத்தி வேலூர்:

    தேனி மாவட்டம் சின்ன மனூர் அருகே மார்க்கேயன் கோட்டை பகுதியை சேர்ந்த வர் வெங்கடேஷ் (வயது 40). இவர் தையல் தொழில் செய்து வருகிறார். இவர் தற்பொழுது நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மணியனூர் பகுதி யில் தங்கி தையல் தொழில் செய்து வருகிறார்.

    இந்நிலை யில் இரவு வெங்கடேஷ் மணியனூர் பிரிவில் உள்ள டீக்கடைக்குச் சென்று அங்கு டீ குடித்துவிட்டு தான் தங்கி உள்ள அறைக்கு செல்வ தற்காக பரமத்தி வேலூர்-திருச்செங்கோடு சாலை, மணியனூர் செய்யாம்பா ளையம் பிரிவு சாலை அருகே ரோட்டின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அச்சாலையில் மோட்டார் சைக்கிள்ளில் அதிவேகமாக வந்த திருச்செங்கோடு பன்னீர் குத்தி பாளையம் பகுதியை சேர்ந்த தங்கமணி என்ப வரது மகன் பாபு, நடந்து சென்று கொண்டிருந்த வெங்கடேஷ் மீது மோதியதில் வெங்கடேஷ் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்தார். இதில் வெங்கடேசனுக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை திருச்செங்கோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து நல்லூர் போலீஸ் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • 495 காசுகளாக இருந்த முட்டை விலை 500 காசுகளாக உயர்ந்தது.
    • கடந்த மாதம் 1-ந் தேதி 405 காசுகளாக இருந்த முட்டை விலை படிப்படியாக உயர்ந்து தற்போது 500 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் நாமக்கல்லில் நேற்று முட்டை உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முட்டை தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    பின்னர் முட்டை விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 495 காசுகளாக இருந்த முட்டை விலை 500 காசுகளாக உயர்ந்தது. கடந்த மாதம் 1-ந் தேதி 405 காசுகளாக இருந்த முட்டை விலை படிப்படியாக உயர்ந்து தற்போது 500 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒரே மாதத்தில் 95 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முட்டை விலை உயர்வால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

    நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம் வருமாறு:- சென்னை-550, ஐதராபாத்-480, விஜயவாடா-505, பர்வாலா-467, மும்பை-535, மைசூர்-550, பெங்களூரு-545, கொல்கத்தா-565, டெல்லி-489, என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    பல்லடத்தில் நடந்த தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.127 ஆகவும், இதே போல முட்டை கோழி விலை எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.96 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

    • விவசாயிகளுக்கு கபிலர்மலை வேளாண்மை அலுவலகத்தில் சோளம், சாமை மற்றும் பயறு வகைப்பயிர்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
    • மானியவிலையில் வேளாண் விரிவாக்க அலுவலகத்தை நேரில் அணுகி பெற்றுக்கொள்ளு மாறு கபிலர்மலை வட்டார உதவி வேளாண்மை இயக்குனர் ராதாரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு கபிலர்மலை வேளாண்மை அலுவலகத்தில் சோளம், சாமை மற்றும் பயறு வகைப்பயிர்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

    விதைப்புக்கு தேவையான சோளம், சாமை மற்றும் நிலக்கடலை, பயிறு வகைப்பயிர்களான உளுந்து மற்றும் பாசிப்பயிறு விதைகள் கபிலர்மலை வட்டார வேளாண் விரிவாக்க மையம் மற்றும் சோழசிராமணி துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் கையிருப்பு உள்ளன. எனவே மேற்கண்ட விதைகள் தேவைப்படும் கபிலர்மலை வட்டார விவசாயிகள் தங்களின் நில சிட்டா மற்றும் ஆதார் நகல் கொண்டு வந்து தங்கள் சாகுபடிக்கு தேவையான விதையினை மானியவிலை யில் வேளாண் விரிவாக்க அலுவலகத்தை நேரில் அணுகி பெற்றுக்கொள்ளு மாறு கபிலர்மலை வட்டார உதவி வேளாண்மை இயக்குனர் ராதாரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    • நுண்ணீர் பாசனம் மூலம் குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி செய்யலாம்.
    • களை எடுத்தல், நீர் பாய்ச்சுதல், உரமிடுவதற்கான செலவு குறைவதுடன் அதிக மகசூலும் கிடைக்கிறது.

    பரமத்திவேலூர்:

    நுண்ணீர் பாசனம் மூலம் குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி செய்யலாம். நீரில் கரையும் உரங்களை நேரடியாக பயிரின் வேர் பகுதிக்கு வழங்குவதால் உர பயன்பாடு குறைகிறது. களைகளை கட்டுப்படுத்தபடுகிறது. எனவே களை எடுத்தல், நீர் பாய்ச்சுதல், உரமிடுவதற்கான செலவு குறைவதுடன் அதிக மகசூலும் கிடைக்கிறது.

    பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீர்ப் பாசன நிறுவனத்தின் மூலம் சொட்டுநீர் பாசன கருவி, தெளிப்பு நீர் பாசனக்கருவி, மழைதூவான் அமைத்து தரப்படுகிறது,

    நாமக்கல் வட்டாரத்தில் இந்த ஆண்டு 100 ஏக்கர் பரப்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், நில வரைப்படம், சிறு,குறு விவசாயிகள் சான்று, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம்-2 எண்கள் ஆகிய ஆவணங்களுடன் நாமக்கல் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தையோ அல்லது அந்தந்த பகுதி வேளாண்மை அலுவலர்களையோ அல்லது உழவன் செயலியின் வாயிலாக தங்களது பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று நாமக்கல் வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா தெரிவித்து உள்ளார்.

    ×