என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    சீர்காழி சாலையில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 1200 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வாலிபர் கைதானார்.
    தரங்கம்பாடி:

    புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்தி விற்பனை செய்யப்படுவதாக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் மதுவிலக்கு தனிப்படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மதுவிலக்கு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சீர்காழி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசாரை கண்டதும் காரைக்காலில் இருந்து சீர்காழி நோக்கி சென்ற ஒரு கார் நிற்காமல் வேகமாக சென்றது. உடனே போலீசார் அந்த காரை துரத்தி சென்று செம்பனார்கோவில் அருகே அன்னப்பன்பேட்டை பகுதியில் மடக்கி பிடித்தனர். அப்போது காரில் இருந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஆனால் கார் டிரைவர் போலீசாரிடம் சிக்கினார். பின்னர் காரை சோதனையிட்டபோது அதில் 1,200-க்கும் மேற்பட்ட புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.48 ஆயிரம் என கூறப்படுகிறது.

    இதனையடுத்து மதுவிலக்கு போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள், கார் மற்றும் பிடிபட்ட கார் டிரைவரை செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் கார் டிரைவர் காரைக்காலை சேர்ந்த வினோத்குமார் (வயது 29), காரில் இருந்தவர்கள் காரைக்காலை சேர்ந்த கார்த்திக்ராஜ், சீர்காழியை சேர்ந்த சரவணன் என்பதும், காரின் உரிமையாளர் கார்த்திக்ராஜ் என்பதும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் வினோத்குமாரை கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
    சீர்காழி அருகே குளத்தில் வாலிபர் பிணம் ஒன்று மிதப்பதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த ஓதவந்தான்குடி கிராமத்தில் உள்ள அரசு பள்ளி அருகில் ஒரு குளம் உள்ளது. இந்த குளத்தில் ஒரு வாலிபர் பிணம் மிதப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் இதுபற்றி புதுப்பட்டினம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து குளத்தில் மிதந்த வாலிபர் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் குளத்தில் பிணமாக மிதந்த வாலிபர் , சீர்காழி அடுத்த திருநீலகண்டம் கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரது மகன் ராஜசேகர் (வயது 20). என தெரியவந்தது. இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து ராஜசேகர் உடலை பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். வாலிபர் ராஜசேகர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறெதும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ஓதவந்தான்குடி கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் சாராயம் குடித்து விட்டு குளத்தில் குளிக்கும் போது அவர் இறந்து இருக்கலாமோ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இருப்பினும் உடல் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே ராஜசேகரின் சாவுக்கான உண்மை காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் நடைபெற்று வருகிறது என்று கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் நடைபெற்று வருகிறது. டெங்கு காய்ச்சல் உள்ளதா என கண்டுபிடிக்கும் மையங்கள் நாகப்பட்டினம், வேதாரண்யம், சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய அரசு மருத்துவமனைகளில் உள்ளது.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகள் மற்றும் அரசு மருத்துமனைகளில் காய்ச்சல் கண்டோருக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்கப்படுகிறது. மொத்தம் 455 நபர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். கொசு புழு ஒழிப்பு மருந்து டெமி பாஸ்-1700 லிட்டர், புகை அடிக்கும் மருந்து-1100 லிட்டர், புகை அடிக்கும் கருவி -199 இருப்பு உள்ளது. மேற்பார்வை பணிக்காக 75 சுகாதார ஆய்வாளர்கள், 11 வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் பணியில் உள்ளனர்.

    பொதுமக்கள் தங்கள் வீடுகளைச் சுற்றி தேங்காய் மட்டைகள், பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் மற்றும் உடைந்த மண்பாண்டங்கள் ஆகியவற்றில் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதுடன், வீட்டு உபயோத்திற்காக சேமித்து வைத்திருக்கும் குடிநீர் பானைகளை நன்கு மூடி வைத்து பயன்படுத்த வேண்டும் என்று கலெக்டர் சுரேஷ்குமார் கேட்டு கொண்டுள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-

    டெங்கு காய்ச்சல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்களுக்கு சுகாதாரக் கல்வி அளிக்கப்படுகிறது. மேலும் விளம்பர பதாகைகள், துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகின்றன. அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாய்கடி மருந்து, பாம்புகடி மருந்து போன்றவை போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழைக் காலங்களில் தொற்று நோய் ஏற்படாமல் இருப்பதற்கு குடிநீரை காய்ச்சி குடீப்பதன் மூலமாகவும், நம்மையும் நம்மை சார்ந்துள்ளவர்களையும் சுத்தமாகவம் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வதன் அவசியத்தை பிறருக்கும் எடுத்துக்கூறுவதன் மூலம் நோய்களை தடுக்க முடியும்” என தெரிவித்தார்.

    வேதாரண்யம் அருகே வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கரியாப்பட்டிணம் காவல் சரகத்திற்குட்பட்ட அண்டகதுறை பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 27). இவர் நேற்று அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    அப்போது அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த ஒரு சிறுமி மகேந்திரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் முன்பு ஓடி வந்து விட்டார். இதை சுதாரித்து கொண்ட அவர் உடனே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டார். பின்னர் ஆத்திரமடைந்த மகேந்திரன் அந்த சிறுமியை அழைத்து இப்படி சாலையில் வந்து விளையாடலாமா? என்று அடித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது தந்தை பாரதி (45). ஏன் அழுகிறாய் என்று கேட்டதற்கு சிறுமி நடந்ததை கூறியுள்ளார். இதனால் தனது மகளை மகேந்திரன் எப்படி அடிக்கலாம் என்று ஆவேசம் அடைந்த பாரதி, அவரது உறவினரான தமிழ்ச்செல்வம் (26). என்பவருடன் மகேந்திரன் வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இதில் பலத்த காயமடைந்த மகேந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் இது குறித்து கரியாப்பட்டிணம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பரசி வழக்கு பதிவு செய்து பாரதி மற்றும் தமிழ்ச்செல்வனை கைது செய்து விசாரனை நடத்தி வருகிறார்.

    மயிலாடுதுறை அருகே தர்ணா போராட்டம் நடத்திய இளம்பெண் மீது தாக்குதல் நடத்திய காதலன் குடும்பத்தினர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கீழையூரை சேர்ந்த ஜெயசுதா(வயது26).ஐடிஐ டிப்ள மோ படித்துள்ளார். சென்னையில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் மயிலாடுதுறை அருகே செம்பதனிருப்பு ராமர்கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக்(30). இவரும் சென்னையில் பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் ஜெயசுதாவுக்கும், கார்த்திக்குக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 2012-ம் ஆண்டு முதலே இருவரும் காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 10-ந் தேதி கடலூரில் காதலர்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கீழையூரில் தனியாக குடும்பம் நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் 10 நாட்களுக்கு முன்பு உறவினருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. நான் சென்று வருகிறேன் என்று கூறிச்சென்ற கார்த்திக் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் ஜெயசுதா அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து கடந்த 18-ந் தேதி கணவரை தேடி ஜெயசுதா செம்பதனிருப்பு கிராமத்திற்கு சென்றார். அங்கு கணவர் வீட்டுக்கு சென்று விவரம் கேட்டார்.

    அப்போது இங்கு வரக்கூடாது என்று கார்த்திக்கின் தந்தை, தாயார் மற்றும் அவரது தம்பி ஆகியோர் ஜெயசுதாவை அடித்து தாக்கியதாத கூறப்படுகிறது.

    இதனால் ஆவேசம் அடைந்த ஜெயசுதா என் கணவர் வரும் வரை வீட்டை விட்டு போக மாட்டேன் என தர்ணா போராட்டம் நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ஜெயசுதாவின் திடீர் போராட்டத்தால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு சென்றனர். இதையடுத்து ஜெயசுதா எங்கும் செல்லாமல் வீட்டின் முன்பு தொடர்ந்து தர்ணா இருந்து வந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கணவரின் குடும்பத்தினர் நேற்று ஜெயசுதாவை அடித்து உதைத்துள்ளனர். இதில் அவர் மயக்கம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் ஜெயசுதாவை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்த சம்பவம் பற்றி பாக சாலை போலீசில் அவர் புகார் செய்தார். இதுகுறித்து பாகசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நானும் கார்த்திக்கும் காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டோம். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கார்த்திக் பெற்றோர் எங்களை வாழ விடாமல் தடுத்து வருகின்றனர்.

    காதல் திருமணம் செய்த நாங்கள் கடந்த 3 மாதமாக மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினோம். தற்போது மாமாவை பார்க்க போகிறேன் என்று சென்ற என் கணவரை காணவில்லை. அவரை கண்டு பிடித்தும் என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    நாகை அருகே டாக்டர் தம்பதி வீட்டில் 10 பவுன் நகை திருடிய 6 சிறுவர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை ராமநாயக்கன் குளத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இவர்கள் இருவரும் டாக்டர்கள்.

    ராமசாமி வீடு பழுது ஏற்பட்டுள்ளதால் அதனை பூட்டிவிட்டு சுப்பையா முதலியார் தெருவில் வாடகை வீட்டில் கடந்த 4 மாதங்களாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ராமநாயக்கன் குளத்தெருவில் உள்ள தனது வீட்டிற்கு தமிழ்ச்செல்வி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பீரோவை பார்த்த போது அதில் இருந்த 10 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் தமிழ்ச்செல்வி வீடு பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது. மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து திருட்டு நடந்த வீட்டில் இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

    இதுதொடர்பாக தமிழ்ச்செல்வி வெளிப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் நகைகளை

    திருடியவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

    தொடர்ந்து திருட்டு நடந்த வீட்டில் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் தமிழ்ச்செல்வின் வீட்டின் கதவை உடைத்து 7 பேர் உள்ளே புகுந்தது கேமராவில் பதிவாகி இருந்தது. இதை தொடர்ந்து நகைகளை திருடியது தொடர்பாக வெளிப்பாளையம் காடம்பாடி சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த லூர்துசாமி மகன் எடிசன் (வயது22) மற்றும் 6 சிறுவர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் தமிழ்ச்செல்வி வீட்டில் நகைகளை திருடியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும், அவர்களிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்தனர்.

    கடைகளில் அயோடின் கலக்காத உப்பை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    நாகூர்:

    சர்வதேச அயோடின் குறைபாடு நீக்கல் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந்தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.இதையொட்டி நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செல்வராஜ் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் நாகூர் மெயின் ரோட்டில் உள்ள மளிகை கடைகளில் அயோடின் கலக்காத உப்பு விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். அப்போது மளிகை கடைக்காரர்களிடம் பரிசோதனை செய்வதற்காக அயோடின் கண்டறியும் வேதிப்பொருள் குப்பியை வழங்கினார். மேலும் ஆய்வுக்கு அனுப்ப விற்பனைக்காக வைத்திருந்த உப்பை மாதிரி எடுத்து கொண்டனர்.

    இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் கூறியதாவது:-

    உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன் படி அயோடின் கலக்காத உப்பு விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறி அயோடின் கலக்காத உப்பை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே சரியான அளவு அயோடின் கலந்த உப்பை மளிகைகடை மற்றும் பெட்டிகடைகளில் விற்பனை செய்ய வேண்டும்.

    இதில் முழுமையான விவரமுள்ள பாக்கெட்டுகளில் மட்டுமே உப்பு விற்பனை செய்ய வேண்டும். ஒவ்வொரு பாக்கெட்டிலும் தயாரிப்பு உரிம எண் அச்சடிக்கப்பட்டுள்ளதா? என கவனித்து பொதுமக்களுக்கு உப்பை வழங்க வேண்டும்.

    நாகூர் மற்றும் நாகை பகுதிகளில் அயோடின் கலக்காத உப்பு விற்பனை செய்யப்பட்டால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
    நாகை அருகே மதுபாட்டில்களை கடத்திய கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். மேலும் இதற்கு பயன்படுத்திய கார் மற்றும் 576 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் மதுவிற்பனையை தடுக்கும் வகையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி நாகை மாவட்டத்தில் போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் திட்டச்சேரி போலீஸ் சரகம் அண்ணா மண்டபம் அருகே தனிப்படை போலீசார் நேற்றுமுன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். இதில் அருண்மொழித்தேவன் மெயின்ரோட்டை சேர்ந்த காளிமுத்து மகன் வடிவேல் (வயது 35), அவரது மனைவி சித்ரா (34) ஆகியோர் புதுச்சேரி மதுபாட்டில்களை காரில் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்கள் கடத்திய வடிவேல், சித்ரா ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கார் மற்றும் 576 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    திருமணம் செய்து கொள்ளுமாறு டார்ச்சர் செய்ததால் மயிலாடுதுறை கல்லூரி மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வாலிபர் - உறவுப்பெண்ணை போலீசா கைது செய்தனர்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த திரு விழந்தூர் மொட்டவெளி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் இளம்பெண் தேவி (வயது 19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் செம்பனார்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வருகிறார்.

    இந்த நிலையில் தேவியிடம் மணலூர் தெற்கு வீதியை சேர்ந்த வாலிபர் அருள்தாஸ் (வயது 28) என்பவர் அடிக்கடி சந்தித்து திருமணம் செய்து கொள்ளுமாறு டார்ச்சர் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அருள்தாசுக்கு ஆதரவாக அவரது அண்ணி ஜமுனா (35), மற்றும் உறவுப்பெண் சங்கீதா (33) ஆகியோரும் தேவியிடம் அருள்தாசை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    இதனால் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்ததால் மனமுடைந்த தேவி, கடந்த 16-ந் தேதி வீட்டில் வைத்து தூக்குப்போட்டார். அப்போது இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து தேவியை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து இந்த சம்பவம் பற்றி மயிலாடுதுறை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பாபுராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இதுதொடர்பாக அருள்தாஸ், உறவுப்பெண் சங்கீதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஜமுனாவை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    நாகையில் அடுத்தடுத்து ஒரே பள்ளியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர் இறந்த சம்பவம் அப்பள்ளி மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை சிக்கலை அடுத்துள்ள ஆவராணி புதுச்சேரி ஊரை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். கீழ்வேளூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ளார். இவரது மகன் ஆகாஷ் (வயது 18). நாகையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ்- 2 படித்து வந்தார்.

    நேற்று இரவு தனது நண்பனை சந்தித்து விட்டு வீடு திரும்புவதற்காக நாகை - திருவாரூர் ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து வந்தபோது பின்னால் வந்த ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து இன்று காலை நாகப்பட்டினம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆகாஷ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதையடுத்து தந்தை ஹரிகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது போல நாகை அரியபத்திரப் பிள்ளை தெருவைச் சேர்ந்த நாகேந்திரன் என்பவரது மகன் முகேசும் (17) ஆகாஷ் படித்த அதே பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வந்தார்.

    இவர் இன்று காலை தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த அவரது பெற்றோர்கள், அவரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து டாக்டரிடம் காட்டினர். மாணவனை பரிசோதித்த டாக்டர், முகேஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். முகேசின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனை க்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக நாகை வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகையில் அடுத்தடுத்து ஒரே பள்ளியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர் இறந்த சம்பவம் அப்பள்ளி மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே ஒரே பள்ளியை சேர்ந்த 2 மாணவர்கள் சாவில் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்று நாகை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சீர்காழி அருகே ஈவ்- டீசிங் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். #eveteasing
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள காரைமேடு பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகள் ராகவி (வயது 20). இவர் பூம்புகார் அரசு கல்லூரியில் பி.காம். படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காரைமேடு அரசு பள்ளியில் வாக்காளர் பெயர் சேர்க்கை முகாம் நடந்தது. இதனால் பெயரை சேர்ப்பதற்காக மாணவி ராகவி அங்கு சென்றார்.

    பிறது பெயரை விண்ணப்பிக்க மனு செய்து விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்க அப்துல் என்கிற காளிமுத்து (30), பஞ்சு என்கிற வினோத் ஆகியோர் திடீரென மாணவி ராகவியை வழிமறித்து கிண்டல் செய்தனர். ராகவிடம் திருமணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்டனர்.

    இதை கேட்டு ஆவேசமடைந்த ராகவி, அவர்கள் 2 பேரையும் திட்டியுள்ளார். பிறகு அவர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

    பிறகு தனக்கு நடந்த ஈவ் டீசிங் சம்பவத்தை நினைத்து அவர் மனமுடைந்து காணப்பட்டார். சிறிது நேரம் கழித்து வினோத்தின் தாயை சந்தித்து பேசினார்.

    அப்போது உங்களது மகன் என்னை கிண்டல் செய்து வருகிறான். தொடர்ந்து பலமுறை இதேபோல் நடந்து வருவதால் நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கோபத்துடன் கூறி விட்டு சென்றார்.

    பிறகு வீட்டுக்கு சென்ற அவர் பின்புறத்தில் இருந்த மரத்தில் ராகவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈவ்- டீசிங் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து ராகவியின் தந்தை முனியப்பன், வைத்தீஸ்வரன் கோவில் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவியை ஈவ் டீசிங் செய்த காளிமுத்து, வினோத் ஆகியோரை நேற்று இரவு கைது செய்தனர். கைதான 2 பேரும் சிற்ப சுதை தொழிலாளிகளாக இருந்து வருகின்றனர். #eveteasing
    சீர்காழி அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கோவில் உண்டியலில் பணம் திருடிய 2 வாலிபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 1 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் திருவெண்காடு அடுத்த சிறுவாலி பகுதியில் இன்ஸ் பெக்டர் வேலுதேவி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசார் சந்தேகமடைந்து தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் 2 பேரும் சிறுவாலி பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் மற்றும் பாம்புளியம்மன் கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடியது தெரியவந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் அதே பகுதியை சேர்ந்த முரளி (வயது 32), மற்றும் அன்புத்தம்பி (23) என தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், மற்றும் 2500 ரொக்க பணம் ஆகியவை பறிமுதல் செய்தனர்.

    ×