என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேதாரண்யம் அருகே வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கரியாப்பட்டிணம் காவல் சரகத்திற்குட்பட்ட அண்டகதுறை பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 27). இவர் நேற்று அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
அப்போது அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த ஒரு சிறுமி மகேந்திரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் முன்பு ஓடி வந்து விட்டார். இதை சுதாரித்து கொண்ட அவர் உடனே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டார். பின்னர் ஆத்திரமடைந்த மகேந்திரன் அந்த சிறுமியை அழைத்து இப்படி சாலையில் வந்து விளையாடலாமா? என்று அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது தந்தை பாரதி (45). ஏன் அழுகிறாய் என்று கேட்டதற்கு சிறுமி நடந்ததை கூறியுள்ளார். இதனால் தனது மகளை மகேந்திரன் எப்படி அடிக்கலாம் என்று ஆவேசம் அடைந்த பாரதி, அவரது உறவினரான தமிழ்ச்செல்வம் (26). என்பவருடன் மகேந்திரன் வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த மகேந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் இது குறித்து கரியாப்பட்டிணம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பரசி வழக்கு பதிவு செய்து பாரதி மற்றும் தமிழ்ச்செல்வனை கைது செய்து விசாரனை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்