search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "darna protest"

    15 சதவீதம் உயர்வுடன் கூடிய ஊதிய மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். #BSNLemployees
    தஞ்சாவூர்:

    தஞ்சையில் பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் இன்று நடைபெற்றது. தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். உதயன் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    15 சதவீதம் உயர்வுடன் கூடிய ஊதிய மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    இதேபோல் ஊதிய உயர்வு தாமதப்படுத்துவதை கண்டித்து கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பாக தஞ்சை மண்டல கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகம் முன்பு இன்று தர்ணா போராட்டம் நடந்தது.

    இதற்கு மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். நகர கூட்டுறவு வங்கி பொது செயலாளர் கோவிந்தன் முன்னிலை வகித்தார். தஞ்சை மண்டல மத்திய கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்றோர் சங்க தலைவர் முத்துவேல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். #BSNLemployees
    மயிலாடுதுறை அருகே தர்ணா போராட்டம் நடத்திய இளம்பெண் மீது தாக்குதல் நடத்திய காதலன் குடும்பத்தினர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கீழையூரை சேர்ந்த ஜெயசுதா(வயது26).ஐடிஐ டிப்ள மோ படித்துள்ளார். சென்னையில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் மயிலாடுதுறை அருகே செம்பதனிருப்பு ராமர்கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக்(30). இவரும் சென்னையில் பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் ஜெயசுதாவுக்கும், கார்த்திக்குக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 2012-ம் ஆண்டு முதலே இருவரும் காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 10-ந் தேதி கடலூரில் காதலர்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கீழையூரில் தனியாக குடும்பம் நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் 10 நாட்களுக்கு முன்பு உறவினருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. நான் சென்று வருகிறேன் என்று கூறிச்சென்ற கார்த்திக் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் ஜெயசுதா அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து கடந்த 18-ந் தேதி கணவரை தேடி ஜெயசுதா செம்பதனிருப்பு கிராமத்திற்கு சென்றார். அங்கு கணவர் வீட்டுக்கு சென்று விவரம் கேட்டார்.

    அப்போது இங்கு வரக்கூடாது என்று கார்த்திக்கின் தந்தை, தாயார் மற்றும் அவரது தம்பி ஆகியோர் ஜெயசுதாவை அடித்து தாக்கியதாத கூறப்படுகிறது.

    இதனால் ஆவேசம் அடைந்த ஜெயசுதா என் கணவர் வரும் வரை வீட்டை விட்டு போக மாட்டேன் என தர்ணா போராட்டம் நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ஜெயசுதாவின் திடீர் போராட்டத்தால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு சென்றனர். இதையடுத்து ஜெயசுதா எங்கும் செல்லாமல் வீட்டின் முன்பு தொடர்ந்து தர்ணா இருந்து வந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கணவரின் குடும்பத்தினர் நேற்று ஜெயசுதாவை அடித்து உதைத்துள்ளனர். இதில் அவர் மயக்கம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் ஜெயசுதாவை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்த சம்பவம் பற்றி பாக சாலை போலீசில் அவர் புகார் செய்தார். இதுகுறித்து பாகசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நானும் கார்த்திக்கும் காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டோம். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கார்த்திக் பெற்றோர் எங்களை வாழ விடாமல் தடுத்து வருகின்றனர்.

    காதல் திருமணம் செய்த நாங்கள் கடந்த 3 மாதமாக மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினோம். தற்போது மாமாவை பார்க்க போகிறேன் என்று சென்ற என் கணவரை காணவில்லை. அவரை கண்டு பிடித்தும் என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ஜீவனாம்சம் பணத்தை கணவர் வழங்காததால் திருவள்ளூர் கோர்ட்டு முன்பு மகனுடன் 2-வது மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருவள்ளூர்:

    வேப்பம்பட்டை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் முதல் திருமணத்தை மறைத்து வேலூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியை சேர்ந்த மணிமேகலையை காதலித்து 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வேல்முருகன் என்ற மகன் உள்ளான்.

    இந்த நிலையில் மகேந்திரனின் 2-வது திருமணம் பற்றி அறிந்ததும் அவரது முதல் மனைவி எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதையடுத்து மணிமேகலை தனது மகனுடன் நெமிலிச்சேரியில் தனியாக வசித்து வருகிறார். மேலும் ஏமாற்றி திருமணம் செய்ததாக கணவர் மகேந்திரன் மீது போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பான வழக்கு திருவள்ளூர் கோர்ட்டில் நடந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி ரூ.3 லட்சம் ஜீவனாம்சம் தொகையை மணிமேகலைக்கு, மகேந்திரன் வழங்க வேண்டும் என்று கடந்த 2016-ம் ஆண்டு உத்தரவிட்டார். ஆனால் இதுவரை மணிமேகலைக்கு ஜீவனாம்சம் தொகை வழங்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த மணிமேகலை இன்று காலை மகன் வேல்முருகனுடன் திருவள்ளூர் கோர்ட்டுக்கு வந்தார். திடீரென இருவரும் கோர்ட்டு வாசல் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அழைத்து சென்றனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். #TiruvallurCourt
    ×