என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த வாலிபர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம் மருதூர் வடக்கு கிராமம், ராசாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வீரபாண்டியன் (வயது 23). இவர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது தவறி விழுந்து படுகாயமடைந்தார்.

    அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையிலும் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீரபாண்டியன் இறந்தார். 

    புகாரின் பேரில் கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் முனியான்டி வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    வேதாரண்யம் அருகே மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பள்ளி மாணவனை போலீசார் கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரனிருப்பு காவல் சரகம், கோவில்பத்து மேலக்காடுபகுதியைச் சேர்ந்தவர் முத்துலெட்சுமி (வயது 62). இவர் தனியேஒரு கூரைவீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் முத்துலெட்சுமியை அதே பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படித்து வரும் ஒரு சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

    தகவலறிந்த முத்து லெட்சுமியின் பாதுகாவலர் சரபோஜிராஜன் வேட்டைக் காரனிருப்பு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுபாஷ்சந்திரபோஸ் வழக்குப்பதிவு செய்து மாணவனை கைது செய்தார்.

    வேதாரண்யத்தில் லாரிகள் கிடைக்காததால் உப்பு ஏற்றுமதி அடியோடு பாதிக்கப்பட்டது. இதனால் உப்பள பகுதியில் மலை போல் உப்பு குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசின் 144 தடை உத்தரவால் வேதாரண்யத்தில் 75 ஆயிரம் டன் உப்பு மூட்டைகள் சென்ற மாதம் தேக்கம் ஏற்பட்டது. லாரிகள் செல்லாத நிலையில் இந்த தேக்கம் ஏற்பட்டது. இதனால் அதிகாரிகள் வருவாய் கோட்டாட்சியர் பழனிகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி அத்தியாவசிய பொருளான உப்பை எத்தனை லாரிகள் வேண்டுமானாலும் ஏற்றிச் செல்லலாம் என முடிவு செய்யப்பட்டது.

    இதனையொட்டி நூற்றுக்கணக்கான வேதாரண்யத்திலிருந்து உப்பை ஏற்றிச் சென்றன. இதனால் கொரோனா பரவும் என பொதுமக்கள் அச்சமடைந்ததால் மாவட்ட எல்லையான தாணிக்கோட்டகத்தில் நிறுத்தப்பட்டு கிரிமிநாசினி தெளிக்கப்பட்டது. பின்பு வெளியூர் லாரி ஓட்டுநர்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டனர். உள்ளுர் ஓட்டுநர்களை கொண்டு உப்பு ஏற்றி தாணிக்கோட்டகத்தில் கொண்டு சென்று அங்கிருந்து வெளியூர்களுக்கு உப்பு லோடை எடுத்துச் சென்றனர்.

    தாணிக்கோட்டகத்தில் லாரிகள் நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் பி நாயர் லாரி நிறுத்து மிடத்தை பார்வையிட்டு வேதாரண்யத்தில் லாரி உரிமையாளர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையொட்டி அகஸ்தியன் பள்ளியிலிரந்து சிறு குறு உற்பத்தியாளர்களின் உப்பை 10 லாரிகளில் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

    தொடர்ந்து உப்பு ஏற்ற அனுமதி அளித்தும் 10 லாரிகளில் உப்பு ஏற்றுவது போதுமானதாக இல்லை என்றும் வெளியூர் லாரி டிரைவர்களுக்கு உணவு, தங்குமிடம் பிரச்சினைகள் ஏற்படுவதால் லாரி உரிமையாளர்கள் முற்றிலுமாக உப்பு ஏற்றுவதற்கு லாரி அனுப்புவதை கடந்த 4 நாட்களாக நிறுத்திவிட்டனர்.

    இதனால் உப்பு ஏற்றுமதி அடியோடு பாதிக்கப்பட்டது. கடந்த மாதத்தில் 75 ஆயிரம் டன் உப்பு தேக்கம் ஏற்பட்ட நிலையில் குறைந்த அளவில் உப்பு விற்பனை நடைபெற்றதாலும் தேக்க நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் உப்பு ஏற்றுமதி அடியோடு நிறுத்தப்பட்ட நிலையில் உப்பு உற்பத்தி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் உப்பள பகுதியில் மலை போல் உப்பு குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தடைக்காலம் முடிந்த பின்புதான் உப்பு தேக்க நிலையிலிருந்து விடுபட்டு உப்பு ஏற்றுமதி நடைபெறும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    சீர்காழியில் பறவைகளை வேட்டையாடிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், கார் பறிமுதல் செய்யப்பட்டன.
    சீர்காழி:

    சீர்காழி புறவழிச்சாலையையொட்டி உள்ள வனபகுதியில் சிலர் தொடர்ந்து பறவைகளை வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் வனச்சரகர் குமரேசன் தலைமையிலான வனக்காவலர்கள் மேற்கண்ட இடத்திற்கு விரைந்து சென்று கண்காணித்தனர். அங்கு பறவைகளை வேட்டையாடிய 4 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்தனர்.

    அதில் அவர்கள் சீர்காழி பிடாரி தெற்கு வீதியை சேர்ந்த ஜார்ஜ் பிரபாகரன் (வயது 53), திருத்தலமுடையார் கோவில் தெருவை சேர்ந்த தென்னரசு மகன் வெற்றிச்செல்வம் (28), ஜெகநாதபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஹரிஹரன் (23), தென்பாதியை சேர்ந்த ரமேஷ் (40) என்பதும், அவர்கள் உரிமம் இல்லாமல் துப்பாக்கியை வைத்து பறவைகளை வேட்டையாடியதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள், சீர்காழி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் வனத்துறையினர், அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், கார், வேட்டையாடிய பறவைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    நாகையில் காணொலி காட்சி மூலம் விவசாயிகளிடம் கலெக்டர் பிரவீன் நாயர் குறைகள் கேட்டார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆகியவை ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக எந்த ஒரு குறைதீர்க்கும் கூட்டமும் நடைபெறவில்லை. இந்தநிலையில் நாகை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கிலிருந்து காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் கலந்துகொண்டு விவசாயிகளிடம் காணொலி காட்சி மூலம் குறைகள் கேட்டார். அப்போது விவசாயிகள் கூறுகையில்,

    நடப்பு குறுவை சாகுபடி பணிக்கு மேட்டூர் அணையிலிருந்து அடுத்தமாதம்(ஜூன்) தொடக்கத்தில் தண்ணீர் திறந்து விட அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். குறுவை பாசனத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க உரிய வகையில் குடிமராமத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குறுவை சாகுபடிக்கு தேவையான விதை நெல், உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் ஆகியவற்றை தடையின்றி கிடைக்க அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்க வேளாண்மை துறைக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். விவசாயிகள் தெரிவித்த அனைத்து கோரிக்கைகளும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கலெக்டர் காணொலி காட்சி மூலம் தெரிவித்தார்.

    இதேபோல் தலைஞாயிறு பகுதி விவசாயிகளிடம் காணொலி காட்சி மூலம் கலெக்டர் பிரவீன்நாயர் குறைகள் கேட்டார். அப்போது விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சம்பந்தம் பேசுகையில், காவிரி மேலாண்மை ஆணையத்தை தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு புதிய தலைவரை நியமனம் செய்ய வேண்டும். விவசாய தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் குடும்ப கார்டுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். கூட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா, உதவி வேளாண்மை அலுவலர் ரவிசந்திரன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
    சீர்காழி அருகே கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சுகாதாரத்துறையினர் அப்பெண்ணை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
    சீர்காழி:

    சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடியம்பாளையம் கிராமத்தில் வசிக்கும் 45 வயது பெண் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.

    இவர் கர்ப்பிணியான தனது மகள் பிரசவத்துக்காக சிதம்பரத்தில் ஓர் மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு கர்ப்பிணியை கொரோனா சோதனைக்கு உட்படுத்தினர். ஆனால் அவருக்கு தொற்று இல்லை. மகளுக்கு உறுதுணையாக இருப்பதால் தானாக முன்வந்து தாயும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள கடந்த 6-ந்தேதி சென்றுள்ளார்.

    பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று சுகாதாரத்துறையால் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அப்பெண்ணை பாதுகாப்பாக ஆம்புலன்சு மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    மேலும் அக்கிராமத்தில் தடுப்புகள் அமைத்து சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்தப்பட்டது. தொடர்பில் இருந்தவர்கள் குறித்து சுகாதாரத் துறையினர் விவரங்களை சேகரித்து வருகின்றனர்

    நாகை அருகே அரசு மருத்துவர் பிரியதர்ஷினி வீடுகள் தேடி பலருக்கும் மருத்துவ உதவி செய்துவரும் இச்செயலை பலரும் பாராட்டினர்.

    நாகப்பட்டினம்:

    உலகை அச்சுறுத்தி வரும் கெரோனா நோய் பரவுதலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.

    இதனால் மருத்துவ தேவைக்காக நோயாளிகள் மருத்துவமனைக்கு கூட்டமாக செல்வதால் நோய் தொற்று ஏற்படும் அபாயத்தை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் மருத்துவ மனையில் பணிபுரியும் மருத்துவர் பிரியதர்ஷினி மற்றும் செவிலியர்கள் மருத்துவமனைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள முதியவர்கள், காசநோயாளி, நீரிழிவு, ரத்தக்கொதிப்பு உள்ளவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களுக்கு சளி, இருமல், மூச்சு திணறல் உள்ளதா என்றும் மேலும் சில பரிசோதனைகளை செய்து அவர்களுக்கு தேவையான மருந்துவ அறிவுரைகளை கூறி தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.

    அதனைத்தொடர்ந்து கீழ்வேளூரில் செயல்பட்டு வரும் அவ்வை முதியோர் இல்லத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்தனர்.

    அரசு மருத்துவர் பிரியதர்ஷினி வீடுகள் தேடி பலருக்கும் மருத்துவ உதவி செய்துவரும் இச்செயலை பலரும் பாராட்டினர்.

    வேளாங்கண்ணியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    நாகப்பட்டினம், மே.9-

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்து உள்ள அகலங்கண் கிராமத்தை சேர்ந்த கம்பி பிட்டரான கேசவன் என்பவரும், அதே ஊரைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவியும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

    இவர்களின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வரவே இவர்களை கண்டித்துள்ளனர். இதையடுத்து கேசவன், 17 வயது நிரம்பிய மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவரை வீட்டிலிருந்து அழைத்து சென்றுள்ளார். இதுகுறித்த மாணவியின் தாயார் அளித்த புகாரின்பேரில், வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து கேசவனை தேடி வந்தனர். இந்நிலையில் அகலங்கண் கிராமத்தில் உறவினர் ஒருவரின் வீட்டில் மாணவியும், கேசவனும் பதுங்கியிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து மாணவியை மீட்டு அழைத்துச் சென்றனர். மாணவியை திருமண ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக, கேசவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    பின்னர் கேசவனை நாகை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் டாஸ்மாக்கில் வாங்கிய மது பாட்டிலில் மிதந்த தவளையால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடையில் தென்பாதியை சேர்ந்த ஒருவர் ரம் வகை மதுபாட்டில் ஒன்று வாங்கியுள்ளார்.

    பின்னர் அவர் அங்குள்ள வயல் பகுதிக்கு சென்று அந்த பாட்டிலை திறந்து பாதி மதுவை கப்பில் ஊற்றி விட்டு மீண்டும் பாட்டிலை மூடும் போது உள்ளே ஏதோ கிடப்பதை கண்டுள்ளார். என்ன என்று பார்த்தபோது, அந்த மது பாட்டிலில் தவளை ஒன்று மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

    இதையடுத்து குடிக்க ஊற்றிய மதுவை கீழே ஊற்றிவிட்டு தவளை கிடந்த மதுபாட்டிலுடன் அந்த டாஸ்மாக் கடைக்கு சென்று தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து தகவல் வெளியே தெரியாமல் மறைக்க தவளையுடன் இருந்த மது பாட்டிலை பெற்றுக்கொண்டு உடனே புது மதுபாட்டிலை கடை ஊழியர்கள் வழங்கியதாக கூறப்படுகிறது.

    மதுவை குடித்து ஏற்படும் பாதிப்புகள் மட்டுமின்றி இது போன்ற ஆபத்துகளும் இருப்பது மது பிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    மயிலாடுதுறையில் குடிபோதையில் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவில் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் மாரிசெல்வம்(வயது 36). இவர், ஒரு இரும்புக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(24), தட்சிணாமூர்த்தி என்பவரிடம் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தார். மேலும் அந்த தெருவில் சென்றவர்களையும் அநாகரீகமாக திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனை மாரிச்செல்வம் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியது. அப்போது மாரிசெல்வத்தை அவரது மனைவி உமா மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    இதையடுத்து தகராறில் ஈடுபட்ட ராஜேந்திரன் தனது நண்பர்கள் சேது(24), சூர்யா(21) ஆகிய 2 பேருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் மாரிசெல்வத்தின் வீட்டுக்கு சென்றார். பின்னர் 3 பேரும் சேர்ந்து மீண்டும் மாரிசெல்வத்துடன் தகராறு செய்தனர். தகராறு முற்றியநிலையில் ராஜேந்திரன், சூர்யா ஆகிய 2 பேரும் சேர்ந்து மாரிசெல்வத்தை பிடித்துக்கொள்ள, சேது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது வயிறு, கை, தொடை ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தினார்.

    அதை தடுக்க வந்த மாரிசெல்வத்தின் தந்தை எட்டப்பராஜனை தாக்கி விட்டு 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கத்தியால் குத்தப்பட்டதில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாரிசெல்வத்தை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன், சேது, சூர்யா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட மாரிசெல்வத்திற்கு உமா(27) என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே குடிபோதையில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் குறித்து அந்தபகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதியில் அதிகமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதால் அடிக்கடி குற்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது மதுக்கடையும் திறக்கப்பட்டுள்ளதால் மது மற்றும் கஞ்சா போதை காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. எனவே இந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதை போலீசார் தடுக்க வேண்டும் என்றனர்.
    சென்னையிலிருந்து மயிலாடுதுறை, திருக்கடையூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு 3 கார்களில் சென்ற 15 பேரை கொள்ளிடம் சோதனைச்சாவடியில் போலீசார் மற்றும் மருத்துவக் குழுவினர் தடுத்து நிறுத்தி அங்கேயே மருத்துவ பரிசோதனை செய்துதனர்.

    சீர்காழி:

    சென்னையிலிருந்து பலர் கொள்ளிடம் வழியே தினந்தோறும் வந்து கொண்டிருக்கின்றனர். சென்னையிலிருந்து மயிலாடுதுறை, திருக்கடையூர், காரைக்கால், மணிக்கிராமம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 3 கார்களில் சென்ற 15 பேரை கொள்ளிடம் சோதனைச்சாவடியில் போலீசார் மற்றும் மருத்துவக் குழுவினர் தடுத்து நிறுத்தி அங்கேயே மருத்துவ பரிசோதனை செய்துதனர்.

    அனைவரின் கைகளிலும் கொரோனா சோதனை செய்ததற்கான முத்திரை குத்தி அவர்கள் செல்லும் ஊரில் உள்ள அவரவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அதனை அந்தந்த பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர்கள் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து மருத்துவக் குழுவினர் பரிசோதனையில் ஈடுபட்டனர்.

    சீர்காழி அருகே 3 ஐம்பொன் சிலைகள் கொள்ளை போன முருகன் கோவில் அர்ச்சகர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தில் குமார சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் அர்ச்சகராக நடராஜ் (50).இவர் கோவில் வாசலில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கீழ் பழனி என்றழைக்கப்படும் இந்த கோவிலின் கர்ப்ப கிரகத்தில் இருந்த ஐம்பொன்னாலான குமார சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை ஆகிய சுவாமிகளின் விக்ரகங்கள் கடந்த பிப்ரவரி 17-ந் தேதி மர்ம நபர்களால் திருடிச் செல்லப்பட்டது.

    இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் பூஜைகளை தொடர்ந்து செய்து வந்த நடராஜன் 5 கி.மீ தொலைவில் குன்னம் கிராம சிவன் கோவிலிலும் பூஜை செய்து வந்தார். 

    இந்நிலையில் நடராஜன் குன்னம் கோவிலில் பூஜை செய்ய சென்றார். நேரம் கடந்தும் அவர் வராததால் அவரை தேடியபோது கீழமாத்தூர் கிராமத்தில் வீரன் கோவில் பின்புறம் நடராஜன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. 

    இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×