என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேதாரண்யத்தில் லாரிகள் கிடைக்காததால் உப்பு ஏற்றுமதி நிறுத்தம்
வேதாரண்யம்:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசின் 144 தடை உத்தரவால் வேதாரண்யத்தில் 75 ஆயிரம் டன் உப்பு மூட்டைகள் சென்ற மாதம் தேக்கம் ஏற்பட்டது. லாரிகள் செல்லாத நிலையில் இந்த தேக்கம் ஏற்பட்டது. இதனால் அதிகாரிகள் வருவாய் கோட்டாட்சியர் பழனிகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி அத்தியாவசிய பொருளான உப்பை எத்தனை லாரிகள் வேண்டுமானாலும் ஏற்றிச் செல்லலாம் என முடிவு செய்யப்பட்டது.
இதனையொட்டி நூற்றுக்கணக்கான வேதாரண்யத்திலிருந்து உப்பை ஏற்றிச் சென்றன. இதனால் கொரோனா பரவும் என பொதுமக்கள் அச்சமடைந்ததால் மாவட்ட எல்லையான தாணிக்கோட்டகத்தில் நிறுத்தப்பட்டு கிரிமிநாசினி தெளிக்கப்பட்டது. பின்பு வெளியூர் லாரி ஓட்டுநர்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டனர். உள்ளுர் ஓட்டுநர்களை கொண்டு உப்பு ஏற்றி தாணிக்கோட்டகத்தில் கொண்டு சென்று அங்கிருந்து வெளியூர்களுக்கு உப்பு லோடை எடுத்துச் சென்றனர்.
தாணிக்கோட்டகத்தில் லாரிகள் நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் பி நாயர் லாரி நிறுத்து மிடத்தை பார்வையிட்டு வேதாரண்யத்தில் லாரி உரிமையாளர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையொட்டி அகஸ்தியன் பள்ளியிலிரந்து சிறு குறு உற்பத்தியாளர்களின் உப்பை 10 லாரிகளில் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
தொடர்ந்து உப்பு ஏற்ற அனுமதி அளித்தும் 10 லாரிகளில் உப்பு ஏற்றுவது போதுமானதாக இல்லை என்றும் வெளியூர் லாரி டிரைவர்களுக்கு உணவு, தங்குமிடம் பிரச்சினைகள் ஏற்படுவதால் லாரி உரிமையாளர்கள் முற்றிலுமாக உப்பு ஏற்றுவதற்கு லாரி அனுப்புவதை கடந்த 4 நாட்களாக நிறுத்திவிட்டனர்.
இதனால் உப்பு ஏற்றுமதி அடியோடு பாதிக்கப்பட்டது. கடந்த மாதத்தில் 75 ஆயிரம் டன் உப்பு தேக்கம் ஏற்பட்ட நிலையில் குறைந்த அளவில் உப்பு விற்பனை நடைபெற்றதாலும் தேக்க நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் உப்பு ஏற்றுமதி அடியோடு நிறுத்தப்பட்ட நிலையில் உப்பு உற்பத்தி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் உப்பள பகுதியில் மலை போல் உப்பு குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தடைக்காலம் முடிந்த பின்புதான் உப்பு தேக்க நிலையிலிருந்து விடுபட்டு உப்பு ஏற்றுமதி நடைபெறும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்