என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம் மணக்காடு கிராமம் பிடாரி கட்டளை தெருவை சேர்ந்தவர் ராமு. இவரது மகன் காளிதாஸ் (வயது 29). இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து தானே ஓட்டி தொழில் செய்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. மனைவி தேன்மொழி. இவருக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தையும், 11 மாத ஆண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் காளிதாஸ் குடிப்பழக்கம் உள்ளவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டு உள்ளார். அவர் மறுத்ததால் பீரோவைத் திறந்து பணத்தை எடுத்துக்கொண்டு போய் மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
இந்த நிலையில் மனைவி தேன்மொழி பக்கத்து வீட்டிற்கு சென்றபோது காளிதாஸ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
புகாரின் பேரில் கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மலர்கொடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாகை வெளிப்பாளையம் தியேட்டருக்கு முன்பு உள்ள ஓட்டலுக்கு அதே ஊரை சேர்ந்த அருண்குமார் (வயது24), சிவா(23) ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வந்து ஓட்டலில் 2 தோசை ஆர்டர் செய்தார்கள்.
சப்ளையர்கள் வேறு ஒரு நபருக்கு தோசை வைத்ததால் ஆத்திரமடைந்த அருண்குமார், சிவா ஆகியோர் வாக்குவாதம் செய்து சப்ளையர்கள் மோகன், பாஸ்கர் ஆகியோரை கத்தியால் குத்தினர். படுகாயமடைந்த 2 பேரும் வெளிப்பாளையம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் அருண்குமார், சிவா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த ஜெயராமன் மகன் பிரேம்குமார்(வயது41).இவர் கொள்ளிடம் ரெயில்வே ரோட்டில் பழக்கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த இவர் நேற்று இரவு வீட்டிற்குள்ளேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பிரேம்குமார் மனைவி மனோரஞ்சனி (35) கொள்ளிடம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பிரேம்குமார் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர், இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம் புல்வெளி கிராம பகுதியில் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கட்டுப்பாட்டிலுள்ள தனிப்படையினர் ஆகியோர் அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அந்த பகுதியில் வேகமாக வந்த ஒரு டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ததில் கலவை மண் இருந்ததும் அந்த கலவை மண்ணை ஏற்றி வருவதற்கு எவ்வித அனுமதியும் ஆவணம் இல்லாததால் போலீசார் டிராக்டர் பறிமுதல் செய்து கரியாப்பட்டினம் போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்தனர்.
டிராக்டரை ஓட்டி வந்த கத்திரிபுலம் பகுதியை சேர்ந்த கார்த்தி வயது 20 என்பவரையும் டிராக்டருக்கு சொந்தக் காரரான தேத்தாகுடி வடக்கு மதன்மோகன் (43) என்பவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.






