என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திட்டச்சேரி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி கைது
Byமாலை மலர்12 April 2021 4:01 PM GMT (Updated: 12 April 2021 4:01 PM GMT)
திட்டச்சேரி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே வாழ்மங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாரதிமோகன். இவருடைய மகன் பிரபாகரன் (வயது 21). தொழிலாளி. இவருக்கும் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரபாகரன் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி கர்ப்பமடைந்தார்.
இந்த நிலையில் சிறுமியின் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அறிந்த பெற்றோர் இது குறித்து அவளிடம் கேட்டனர். அப்போது பிரபாகரன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததை பெற்றோரிடம் சிறுமி கூறினார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X