search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நாகூரில் சரக்கு ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி

    நாகூரில் சரக்கு ரெயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்தார். இதனால் ரெயில் முன்பு அமர்ந்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    நாகூர்:

    நாகூர் வெட்டாறு அருகே ரெயில்வே தண்டவாளத்தில் சரக்கு ரெயிலில் அடிபட்டு ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று முன்தினம் இரவு நாகூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் ரெயிலில் அடிபட்டு இறந்தவர் நாகூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த ரவி மகன் கமல்ராஜ்(வயது32) என்றும் இவர் ஒரு காய்கறி கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

    கமல்ராஜ் சரக்கு ரெயிலில் அடிபட்டு இறந்ததை அறிந்த அம்பேத்கர் நகரை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் சம்பவ இடத்துக்கு வந்து சரக்குரெயில் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் அங்கு சென்று மறிலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இது குறித்து நாகை ரயில்வே போலீசாருக்கு நாகூர் போலீசார் தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த நாகை ரெயில்வே போலீசார் கமல்ராஜ் உடலை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து நாகூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×