search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளிர்சாதன பெட்டி"

    • மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடல்களை வைக்க குளிர்சாதன பெட்டி இல்லாத நிலை நிலவி வந்தது.
    • செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு குளிர்சாதன பெட்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைக்கு இணையாக பல்வேறு வசதிகளோடு அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்த வர்களின் உடல்களை வைக்க பயன்படும் குளிர்சாதன பெட்டி இல்லாத நிலை நிலவி வந்தது. இதனையடுத்து தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் வேண்டு கோளுக்கிணங்க தொழிலதிபர் காந்தி செல்வின் என்பவர் ரூ. 1 லட்சம் மதிப்பில் குளிர்சாதன பெட்டியை வாங்கி தென்காசி மாவட்ட சுகாதார நல பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதாவிடம், செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கினார்.

    பின்னர் சுகாதார நல பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா கூறும்போது, செங்கோட்டை அரசு மருத்துவமனையில் ரத்த குளிர்சாதன வைப்பறை விரைவில் அமைக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் செங்கோட்டை அரசு தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன், மாவட்ட சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் அறிவுடை நம்பி, மருத்துவமனை ஆலோசனைக் குழு உறுப்பினர் ஞானராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • குளிர்சாதன பெட்டி கடந்த சில மாதங்களாக அடிக்கடி பழுதடைந்து வந்தது
    • இந்த குளிர்சாதன பெட்டி இனி பயன்படுத்த முடியாது

    பல்லடம் : 

    பல்லடத்தில்கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சா லையில் அமைந்துள்ளது அரசு மருத்துவமனை. தினமும் சுமார் ஆயிரத்தி ற்கும் மேற்ப ட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில், விபத்து, மற்றும் தற்கொலை போன்ற வற்றால் இறப்பவர்களின் உடல்கள் பிரேத பரிசோ தனை செய்வதற்காக இருப்பு வைக்க குளிர் சாதன பெட்டி வசதி உள்ளது. இதற்கிடையே சுமார் 18 வருடங்களுக்கு மேல் பழமையான அந்தக் குளிர்சாதன பெட்டி கடந்த சில மாதங்களாக அடிக்கடி பழுதடைந்து வந்தது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு குளிர்சாதனப் பெட்டியை பழுது பார்க்க வந்த பொறியாளர் குழு, இந்த குளிர்சாதன பெட்டி இனி பயன்படுத்த முடியாது புதிய குளிர்சாதன பெட்டி வாங்கி பயன்ப டுத்துங்கள் என கூறிவிட்டு சென்றுள்ளனர். குளிர்சாதனப் பெட்டி பழுதானதால், இறந்து போன வர்களின் உடல்க ளை பல்லடம் அரசு மருத்துவமனையில் வைக்க முடியாத நிலை உருவானது.இதனால் அந்த உடல்களை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் அந்த உட ல்கள் சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கு பெரும் அலைச்சல் ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அரசு மருத்துவமனை அமைந்துள்ளதால் பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமன்றி சுல்தான்பேட்டை, பொங்கலூர், மங்கலம் போன்ற பகுதிகளில் இருந்தும் விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக பல்லடம்அரசு மருத்துவ மனைக்குதான் கொண்டு வருகின்றனர். ஆனால் பல்லடம் அரசு மருத்துவ மனையில் ரத்த வங்கி, ஸ்கேன் போன்ற போதிய வசதிகள் இல்லை. இந்த வசதிகளை செய்து தர வேண்டிய 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தவும் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ள நிலையில், தற்போது பிரேத பரிசோதனைக் கூட குளிர்சாதன பெட்டி பழுதடைந்து 20 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதனால் இறந்தவர்கள் உடலை வைக்க முடியாமல்,திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.இதனால் கிராமங்களில் இருந்து வரும் உறவினர்கள் உடலுடன் திருப்பூருக்கு செல்ல வேண்டி இருப்பதால் காலவிரயம் ,பணம், மற்றும் அலைச்சல் ஏற்படுகிறது. பிரேத பரிசோதனை செய்ய கால தாமதமும் ஏற்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பல்லடம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறையில் குளிர்சாதன பெட்டி புதிதாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் வீண் அலைச்சலை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள குளிர் சாதன பெட்டியை இலவசமாக வழங்கினர்.
    • பிரண்ட்ஸ் அரிமா சங்க தலைவர் பிரண்ட்ஸ் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் சக்தி அறக்கட்டளை நிறுவனர் மிருதுளா நடராஜன் ஏற்பாட்டின் பேரில் அண்மையில் திருமணம் நடைபெற்ற புதுமண தம்பதியினர் பிரவீன் - ஐஸ்வர்யா ஆகியோர் பல்லடம் அரசு மருத்துவமனையில் ரத்த சேகரிப்பு மையத்திற்கு ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள குளிர் சாதன பெட்டியை இலவசமாக வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சுபா,ஜமுனாராணி, தலைமை செவிலியர் கலைச்செல்வி, பல்லடம் பிரண்ட்ஸ் அரிமா சங்க தலைவர் பிரண்ட்ஸ் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • வேளாங்கண்ணி கடற்கரை ஓரங்களில் தரமற்ற அழுகிய மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • நீண்ட நாட்களான பழைய மீன்கள் மற்றும் கலர் அதிகம் சேர்த்து பார்வைக்கு மற்றும் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற புனித ஆரோ க்கிய மாதா பேராலயத்திற்கு தினம்தோறும் ஆயிரக்க ணக்கான மக்கள்வந்து செல்கின்றனர். வேளா ங்கண்ணி பேருந்து நிலையம் மற்றும் வேளாங்கண்ணி கடற்கரை ஓரங்களில் ஏராளமான வறுவல் மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு தரமற்ற அழுகிய உபயோகத்திற்கு பயன்படுத்த முடியாத மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு வந்த ரகசிய புகாரைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் வேளாங்கண்ணி பஸ் நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணி கடற்கரை வரை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வில் கடைகளில் விற்பனை செய்யப்படும் மீன்கள் அழுகி நீண்ட நாட்கள் ஆன பழைய மீன்கள் மற்றும் கலர் அதிகம் சேர்த்து பார்வைக்கு மற்றும் குளிர்சாதன பெட்டியில் 10க்கும் மேற்பட்ட கடைகளில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தரமற்ற சுமார் 100 கிலோ மீன்கள் மற்றும் இறைச்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த கடைகளுக்கு சீர் வைத்தனர். மேலும் கடை ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் ஒரு லட்சம் அபராதம் விதித்து உரிமையாளர்களை எச்சரி த்தனர். வேளாங்கண்ணியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் திடீர் ஆய்வால் பரபரப்பு ஏற்பட்டது.

    ×