என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    கொரோனாவால் கணவர் இறந்ததால் 4 மகள்களுடன் வாழ்வாதாரம் இன்றி பெண் பரிதவித்து வருகிறார். எங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா செட்டிபுலம் இடையார் காட்டை சேர்ந்தவர் சுந்தரம் (வயது59). விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ராஜராஜேஸ்வரி (46). இவர்களுக்கு அபிராமி (17), பிரபா (14), நிதியரசி (12), அகல்யா (10) ஆகிய 4 மகள்கள். சுந்தரத்தின் தாய் வடுவம்மாள் (92). கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுந்தரம் கடந்த மாதம் 28-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கணவரை இழந்த ராஜராஜேஸ்வரி தனது மகள்கள் மற்றும் மாமியார் வடுவம்மாளுடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

    இவர்கள் வசித்து வரும் வீட்டிற்கு கீற்று கூட போட முடியாத நிலையில் பிளாஸ்டிக் பாய் போட்டு வாழ்ந்து வருகின்றனர். ராஜராஜேஸ்வரி 4 மகள்கள் மற்றும் கண் பார்வையில்லாத மாமியருடன் வாழ்வாதாரம் இன்றி பரிதவித்து வருகிறார். பள்ளி படிப்பு படித்து வரும் மகள்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

    எனவே வாழ்வாதாரம் இன்றி பரிதவித்து வரும் எங்களுக்கு வீடு கட்டித்தரவும், மகள்களின் படிப்புக்கு அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் ராஜராஜேஸ்வரி கோரிக்கை விடுத்துள்ளார்.

    இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    மேட்டூர்:

    கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜாசாகர் அணைகளில் இருந்து 9 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து ஒகேனக்கல்லுக்கு வருகிறது.

    ஒகேனக்கல்லில் நேற்று மாலை விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 11 ஆயிரத்து 772 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 15 ஆயிரத்து 740 கன அடியானது. அணையில் இருந்து காவிரியில் 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கால்வாயில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 400 கன அடியாக குறைக்கப்பட்டது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 113.59 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 114.46 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    வேதாரண்யம் அருகே அரசு பஸ் டயர் வெடித்து வாலிபர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி சென்ற அரசு பேருந்து கரியாப்பட்டினம் பள்ளிவாசல் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்பக்க டயர் வெடித்து பேருந்தில் பயணம் செய்த கட்டிமேடு சேர்ந்த கார்த்திக் வயது 34 என்பவர் காலில் பலத்த காயம் அடைந்தார். காயமடைந்த அவரை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த கரியாப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எந்த மார்க்கெட்டுகளை பார்த்தாலும் மனிதத் தலையாக தெரிந்த நிலையில், வர்த்தகம் ஜோராக நடந்துள்ளதாக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
    இந்தியாவில் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். வட இந்தியாவில் தீபாவளி பண்டிகையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டன.

    தீபாவளி என்றாலே புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, இனிப்பு உண்டு கொண்டாடுவதுதான். தீபாவளி பண்டிகை தொடங்குவதற்கு முன்னதாகவே, இனிப்பு பலகாரங்கள் செய்வதற்கான பொருட்களை வாங்க பொதுமக்கள் தயாராகி விடுவார்கள்.

    தீபாவளியை முன்னிட்டு ஊழியர்களுக்கு போனஸ் கொடுக்கப்படுவதால், விலை குறித்து கவலைப்படாமல் புத்தாடை, பட்டாசுகள் வாங்கிச் செல்வார்கள். இதனால் தீபாவளிக்கு முன்னதாக ஒரு வாரம் எந்த மார்கெட்டை எடுத்துக் கொண்டாலும் கூட்டமாகவே காணப்படும்.

    கோப்புப்படம்

    குறிப்பாக ஜவுளிக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழியும். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தீபாவளி பண்டிகை மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. இந்த வருடம் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் உள்ளதால், தீபாவளி பண்டிகை கொண்டாட மாநில அரசுகள் அனுமதி அளித்தன.

    இதனால் வியாபாரம் ஜோராக நடைபெற்றது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி இந்தியா முழுவதும் 1.25 லட்சம் கோடிக்கு வியாபாரம் நடைபெற்றுள்ளதாக அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 10 ஆண்டுகளை விட இந்த வருட விற்பனை அதிகம் எனவும் தெரிவித்துள்ளது.
    வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்பு கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கடற்கரையில் இலங்கைக்கு கடல்வழியாக கடத்துவதற்காக படகில் கஞ்சா பதிக்கி வைத்து இருப்பதாக கடலோர காவல் குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன் பேரில் புஷ்பவனம் விரைந்து சென்று போலீசார் கடற்கரையில் நின்றிருந்த பைபர் படகுகளை சோதனை செய்தனர்.

    இதில் மணிகண்டன் (வயது 33) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் 3 சாக்கில் அடைக்கப்பட்ட 92 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ.50 லட்சம் மதிப்புடைய கஞ்சா மூட்டைகள், படகையும் பறிமுதல் செய்தனர். மேலும் மணிகண்டனை கைது செய்து கடலோர காவல் குழும போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து எங்கிருந்து கஞ்சா கொண்டு வரப்பட்டு இலங்கைக்கு கடத்தப்படுகிறது. இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா? என தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    இதுவரை பிடிபட்ட கஞ்சா வழக்குகளில் எந்தவிதமான முடிவும் எட்டப்படாமலும், அதனை கடத்துபவர்களுக்கு எந்த தண்டனையும் இதுவரை வழங்கப்படவில்லை. வழக்குகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் வெளிவந்து தொடர்ந்து கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தனிக்கவனம் எடுத்து போதைப் பொருள் கடத்துபவர்கள் மீதான வழக்கை விரைவில் விசாரித்த அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே கடத்தலை ஒழிக்க முடியும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    ஆப்பிள் நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புதிய ஐபேட் மினி விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் 8.3 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட புது ஐபேட் மினி மாடலை சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. வெளியீட்டை தொடர்ந்து ஐபேட் மினி மாடலில் ஜெல்லி ஸ்கிராலிங் எனும் பிரச்சினை ஏற்பட்டது.

    எல்.சி.டி. டிஸ்ப்ளேவில் இதுபோன்ற பிரச்சினை சாதாரண ஒன்று தான் என ஆப்பிள் விளக்கம் அளித்து இருந்தது. இந்த நிலையில், ஜெல்லி ஸ்கிராலிங் பிரச்சினையை தீர்க்கும் வகையில் ஆப்பிள் ஐபேட் மினி 6 மாடலின் புது வேரியண்ட் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

     ஐபேட் மினி

    அதன்படி புதிய ஐபேட் மினி 120 ஹெர்ட்ஸ் ப்ரோமோஷன் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதே டிஸ்ப்ளேவினை ஆப்பிள் 2017 முதல் வெளியாகி வரும் ஐபேட் ப்ரோ மாடல்களில் வழங்கி வருகிறது. சமீபத்திய ஐபோன் 13 ப்ரோ மாடலிலும் இதே டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
    நாகையில் பாதுகாப்பு கேட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் தம்பதி தஞ்சம் அடைந்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை அருகே மஞ்சக்கொல்லையை சேர்ந்த ஞானமூர்த்தி மகன் ஹரிஹரசுதன் (வயது 22). நாகையில் உள்ள மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரும் சிக்கல் பகுதியை சேர்ந்த சந்தியா (19) என்பவரும் காதலித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தினர் என்பதால், இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து இவர்கள் 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினர்.

    இதனிடையே சந்தியாவின் குடும்பத்தினர், அவரை காணவில்லை என கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இந்த நிலையில் நேற்று ஹரிஹரசுதன், சந்தியா ஆகிய 2 பேரும் நாகை அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து அவர்கள், நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாகையில் பாதுகாப்பு கேட்டு காதல் தம்பதி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அனுமதியில்லாமல் பட்டாசு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    கரூர்:

    கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்க செல்லும்போது பொதுமக்கள் தங்கள் வீடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். வீட்டிலிருந்து வெளியில் செல்லும்போது வீட்டில் உள்ள உடைமைகளின் பாதுகாப்பிற்கு ஒரு நபரையாவது வீட்டில் விட்டு செல்ல வேண்டும். பெண்கள் வெளியே செல்லும்போது விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிவதை தவிர்க்க வேண்டும்.

    கூட்ட நெரிசலில் செல்லும்போது தாங்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களையும், வைத்திருக்கும் பொருட்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்கும்போது உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி பட்டாசு வெடிக்கும் கால அளவான காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அனுமதித்த கால அளவை மீறி பட்டாசு வெடிக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    அனுமதியில்லாமல் பட்டாசுகள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம் பெற்ற பட்டாசு விற்பனையாளர்கள் சரவெடிகளை தங்களது கடைகளில் பொதுமக்களுக்கு விற்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

    வடகிழக்கு பருவமழை காரணமாக காவிரி ஆறு மற்றும் அமராவதி ஆறுகளில் தற்சமயம் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் தீபாவளி பண்டிகையன்று பொதுமக்கள் நீர்நிலைகளில் சென்று குளிப்பதையும், ஆபத்தான பகுதிகளுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் ஜவகர்பஜாரில் குற்றத்தடுப்பு, பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி 24 மணிநேரமும் செயல்படும் சிறப்பு புறக்காவல் நிலையமும், 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களும், ஜவகர்பஜாரில் குற்றத்தடுப்பு உயர் கோபுரங்களும், ஆட்டோ மூலம் விளம்பரம் செய்யப்படுகிறது.

    மாவட்டத்தில் குற்றம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை நடைபெறாமல் இருக்க 20 இருசக்கர வாகன ரோந்தும், 12 நான்கு சக்கர வாகன ரோந்தும் சுழற்சி முறையில் இயங்கி வருகிறது. மாவட்டம் முழுவதும் முக்கிய சாலை சந்திப்பு, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வேகத்தை குறைக்க பேரிக்கார்டு அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் காவல்துறை கொடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியான முறையில் கடைப்பிடித்து விபத்தில்லா தீபாவளியாக கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    ‘மக்களுக்காக சட்டமே தவிர, சட்டத்திற்காக மக்கள் அல்ல’ என்பதைக் கருத்தில் கொண்டு, காவேரி டெல்டா பகுதியில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் உருவாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவேரி டெல்டா மண்டலத்திற்குட்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை உருவாக்குவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பொருட்டு 50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி அறிக்கை எம்.எஸ்.எம்.இ. வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பணியகம் என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எந்தத் தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோ அந்தத் தொழிலுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து வரும் அரசாக தி.மு.க. அரசு மாறி விட்டது.

    இது குறித்து தொடர்புடைய மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், தடை செய்யப்பட்ட பட்டியலில் பெட்ரோ கெமிக்கல் இல்லை என்று பதிலளித்ததாக பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது.

    2020-ம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம் பிரிவு 22(2)-ல் இரண்டாவது அட்டவணையில் உள்ள தொழிற்சாலைகளை நீக்கவோ அல்லது சேர்க்கவோ வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. சட்டத்தில் இடமில்லை என்றால் அதற்கான விதிகளை சேர்க்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்து காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்க வேண்டும் என்பதும், சட்டத்தில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி வேளாண் தொழிலை சீரழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பதும் தான் விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் நிலைப்பாடும் இது தான்.

    ‘மக்களுக்காக சட்டமே தவிர, சட்டத்திற்காக மக்கள் அல்ல’ என்பதைக் கருத்தில் கொண்டு, காவேரி டெல்டா பகுதியில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் உருவாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இதையும் படியுங்கள்... கோவில்களில் பக்தர்களுக்கும், கடவுளுக்கும் இடையில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

    அருணாசலேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள மாட வீதியில் அருணாசலேஸ்வரர், விநாயகர், முருகர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமி தேர்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழா முக்கிய விழாவாகும்.

    இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 7-ம் நாள் விழாவான 16-ந் தேதியன்று தேரோட்டமும், 10-ம் நாள் விழாவான 19-ந் தேதியன்று பரணிதீபம், மகாதீபம் ஏற்றப்படும்.

    அருணாசலேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள மாட வீதியில் அருணாசலேஸ்வரர், விநாயகர், முருகர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமி தேர்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.

    இந்த தேர்கள் தகர கொட்டகை மற்றும் பைபர் சீட்களால் ஆன கெட்டகையால் மூடப்பட்டு இருக்கும். தீபத்திருவிழாவை முன்னிட்டு தேர்களை புனரமைப்பு செய்வதற்காக கொட்டகைகள் அகற்றப்பட்டு உள்ளது. இந்த ஆண்டும் தீபத்திருவிழா கடந்த ஆண்டை போல கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் கொரோனா தொற்று குறையும் பட்சத்தில் திருவிழா நடத்த முதல்-அமைச்சர் அனுமதி அளிப்பார் என கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அதனால் இந்த ஆண்டு தீபத்திருவிழா எப்படி நடைபெற உள்ளது என்று கேள்விக்குறியாக உள்ளது.

    கடந்த சில நாட்களாக திருவண்ணாமலையில் மழை பெய்து வருகிறது. தேர்களை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த கொட்டகைகள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் மரத் தேர்கள் மழையில் நனைந்தபடி உள்ளது. எனவே, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தேர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நாகை புதிய கடற்கரை ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை ஆய்வு செய்வதற்காக இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று நாகைக்கு வந்தார். பின்னர் நாகை புதிய கடற்கரையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து நாகை 30-ம் ஆண்டு விழாவை யொட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் புனரமைப்பு செய்யப்பட்ட மகாத்மா காந்தி மண்டபத்தை திறந்துவைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் காளான் விதை உற்பத்தி ஆய்வு கூடத்தினை திறந்து வைத்தார்.

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை வளர்ச்சித்திட்டப் பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், செல்வராசு எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்டங்களில் வளர்ச்சித்திட்ட பணிகளை கண்காணித்து துரிதப்படுத்திட அமைச்சர்களை நியமித்துள்ளார்கள். அதன் அடிப்படையில் இன்று (நேற்று) நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் தொடர்பாக துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது.

    நாகை புதிய கடற்கரைக்கான நீலநிறச்சான்று பெறும் வகையில் கடற்கரையை மேம்படுத்துவதற்காக 32 வகையான வளர்ச்சி திட்ட பணிகளுக்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக ரூ.77 லட்சத்து 93 ஆயிரத்து 930 மதிப்பீட்டில் 125 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் முகமது ஷா நவாஸ், நாகை மாலி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, துணை ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    நாகை அருகே அயோடின் இல்லாத உப்பை வைத்திருந்த 8 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறையினர் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் அயோடின் இல்லாத உப்புகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அருண்தம்புராஜ் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து மாவட்டத்தில் உள்ள கடைகளில் ஆய்வு செய்யும் படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் புஷ்பராஜ், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் நாகை அருகே பரவை மார்க்கெட்டில் உள்ள சில கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அயோடின் இல்லாத பதப்படுத்துவதற்காக வைக்கப்பட்ட உப்புகள் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அயோடின் இல்லாத உப்பை வைத்திருந்த 8 கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் கடைகளிலிருந்து 200 கிலோ அயோடின் இல்லாத உப்பையும் பறிமுதல் செய்தனர். அயோடின் இல்லாத உப்பை விற்பனை செய்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    ×