என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் கடிதம் எழுதி வைத்து விட்டு பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை உக்கடம் பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மகுடீஸ்வரன். சமையல் தொழிலாளி. இவரது மகள் பொன்தாரணி (வயது 17).

    இவர் கோவையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த பொன்தாரணி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உக்கடம் போலீசார் மாணவியின் பிணத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாணவி கைப்பட எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் சில மாணவிகளின் உறவினர்களின் பெயர்களையும், ஒரு ஆசிரியரையும் குறிப்பிட்டு அவர்களை சும்மா விடக்கூடாது என மாணவி எழுதி இருந்தார்.

    மாணவி பொன்தாரணிக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதனால் மனம் உடைந்தே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாயார் நிறைமதி புகார் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    எனது மகள் பொன்தாரணி முதலில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தாள். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்தது. அப்போது இயற்பியல் பாடம் நடத்தும் ஆசிரியர், பொன்தாரணியிடம் வீடியோவில் தவறாக பேசி உள்ளார். அந்த விவரத்தை பொன்தாரணி எங்களிடம் தெரிவிக்கவில்லை.

    நேரடி வகுப்பு தொடங்கிய பிறகு ஒருநாள் மாலை வீடு திரும்புவதற்காக பள்ளிக்கு வெளியே பொன்தாரணி காத்திருந் திருக்கிறாள். அப்போதும் அந்த ஆசிரியர் வந்து உன்னை வீட்டில் கொண்டு போய் விட்டு விடுகிறேன் என்று அழைத்து வந்திருக்கிறார்.

    மற்றொரு நாள் சிறப்பு வகுப்பு இருப்பதாக கூறி அவர் அழைத்து இருக்கிறார். அதனை நம்பி பள்ளிக்கு சென்ற எனது மகளை அந்த ஆசிரியர் தனியாக அழைத்து கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த எனது மகள் அவரிடம் இருந்து தப்பி வந்து விட்டாள்.

    அதன்பிறகு ஆண்களை பார்த்தாலே ஒருவித அச்ச உணர்வுடன் இருந்தாள். ஆசிரியர் செய்த இழிசெயலை நினைத்து மன வேதனையுடன் காணப்பட்டாள். இந்த விவரங்களை எனது மகள், தன்னுடன் படித்த எங்கள் பகுதியைச் சேர்ந்த சக மாணவரிடம் தெரிவித்து அழுது இருக்கிறாள். அந்த மாணவர் மூலமே எங்களுக்கு இந்த விவரங்கள் தெரியவந்தது.

    பின்னர் நாங்கள் பொன் தாரணியை, அந்த பள்ளியில் இருந்து மாற்றி மாநகராட்சி பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தோம். ஆனால் ஆசிரியர் செய்த அத்துமீறலை மறக்க முடியாமல் அவள் வேதனையுடன் காணப்பட்டாள். நேற்று கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டாள். எனவே மாணவியை இந்த நிலைக்கு ஆளாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் புகாரில் கூறி உள்ளார்.

    இந்த புகார் தொடர்பாக ஆசிரியரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதேசமயம் தன்னுடன் படித்த மாணவிகளின் உறவினர்கள் பெயரையும் கடிதத்தில் மாணவி குறிப்பிட்டு இருந்தார். அவர்களாலும் மாணவி பாதிக்கப்பட்டாரா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

    நாகையில் வெளுத்து வாங்கும் மழையால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின.
    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, வெளுத்து வாங்கி வருகிறது. நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விடிய, விடிய சாரல் மழை பெய்தது. நாகை சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று காலை சாரல் மழையாக பெய்தது. மழை காரணமாக மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது.

    தொடர்ந்து மதியம் 2 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. இதனால் நாகை புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், வ.உ.சி. சாலை, பப்ளிக் ஆபீஸ் ரோடு, சிவசக்தி நகர், நாகை நம்பியார் நகர், அக்கரைப்பேட்டை மெயின் ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகள் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தன.

    நகரின் முக்கிய சாலைகளில் ஆறாக ஓடிய மழைநீரில் வாகன ஓட்டிகள் தத்தளித்தபடி சென்றனர். குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை பொதுமக்கள் வாளியை கொண்டு இறைத்து வெளியே ஊற்றினர்.

    மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. தண்ணீர் வடிய வழியின்றி உள்ளதால் நெற்பயிர்கள் அழுகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

    மழை காரணமாக நாகை மாவட்டத்தில் 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    வேதாரண்யம், கோடிக்கரை அகஸ்தியன்பள்ளி, தோப்புத்துறை, செம்போடை, கரியாப்பட்டினம், மருதூர், வாய்மேடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வேதாரண்யம் தாலுகாவில் 10 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அகஸ்தியன்பள்ளியில் உப்பு ஏற்றுமதி முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் பெரும்பாலான கடைகள் திறக்கவில்லை.

    தொடர்ந்து 10 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக வேதாரண்யம் பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. கடந்த 2 நாட்களாக கடல் சீற்றமாக காணப்பட்டது.

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சேஷமூலை ஊராட்சி மானாம்பேட்டையில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் திருமலைராஜன் ஆற்றில் அதிக அளவில் தண்ணீரில் செல்கிறது. இதனால் ஆற்றின் கரையில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கரையில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகும் அபாயம் இருந்தது.

    உடனடியாக அதனை சரிசெய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.

    இதை தொடர்ந்து திருமருகல் உதவி பொறியாளர் செல்வகுமார், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரகலா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் பொதுப்பணித்துறையினர் கரை அரிப்பை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    வாய்மேடு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்தது. பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் மஞ்சள் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டது. அதனை உடனடியாக ஊராட்சி மன்றம் சார்பில் சரி செய்யப்பட்டது. கொண்டாங்காடு பகுதியில் மின் கம்பங்கள் சாய்ந்தன. உடனே மின்சாரத் துறை பணியாளர்கள், ஊராட்சி மன்ற ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் மின்கம்பங்களை சீரமைத்தனர். இதேபோல மருதூர் ஊராட்சி, பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் சாய்ந்த மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டன. வாய்மேடு சுற்றுவட்டார பகுதிகளில் 15 அடிக்கும் ஆழமாக உள்ள தரை மட்ட கிணறுகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.மேலும் ஏரி, குளங்கள் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.

    நாகை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி முதல் மதியம் 3 மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு :-

    வேதாரண்யம் 149, தலைஞாயிறு 112, திருப்பூண்டி 91, நாகை 14.4,
    டெங்குவை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    கோவை:

    கோவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

    இந்த மழையால் தற்போது பருவநிலை மாற்றம் ஏற்பட்டு, காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

    இந்த மாத தொடக்கமான 1-ந் தேதியில் இருந்து கடந்த 8-ந் தேதி வரை மட்டும் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கோவை ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    டெங்குவை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதற்காக சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு அவர்கள் வீடுகள், தனியார் நிறுவனங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வீடுகளில் உள்ள பாழடைந்த தொட்டி மற்றும் தேங்காய் சிரட்டைகளில் தண்ணீர் தேங்கி இருக்கிறதா? என ஆய்வு செய்து, டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே டெங்குவை கட்டுப்படுத்த கோவை மாவட்டத்தில் ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர அதிகாரிகளும் தடுப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்,

    டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்டத்தில் வட்டாரம் வாரியாக குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சலை கண்டறிய அதிகாரிகளும் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை டெங்குவால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை. இருப்பினும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை, சுற்றுப்புறத்தை, நீர் தேங்குவதை தடுப்பதன் வாயிலாக டெங்குவை தடுக்கலாம் என்றனர்.
    நாகூரில் லாட்டரி சீட்டு விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகூர்:

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாராய கடத்தலை தடுக்கும் வகையில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாகூர் அலங்கார வாசல் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், நாகூர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த உதுமான் மகன் யூசுப் (வயது 34) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து யூசுப்பை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டை பறிமுதல் செய்தனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் 76 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 76 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 72 ஆயிரத்து 358-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 979 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 2,513 பேர் உயிரிழந்துள்ளனர். 866 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 24 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்து 168-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 73 ஆயிரத்து 592 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1,258 பேர் உயிரிழந்துள்ளனர். 318 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    கொரோனாவால் கணவர் இறந்ததால் 4 மகள்களுடன் வாழ்வாதாரம் இன்றி பெண் பரிதவித்து வருகிறார். எங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா செட்டிபுலம் இடையார் காட்டை சேர்ந்தவர் சுந்தரம் (வயது59). விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ராஜராஜேஸ்வரி (46). இவர்களுக்கு அபிராமி (17), பிரபா (14), நிதியரசி (12), அகல்யா (10) ஆகிய 4 மகள்கள். சுந்தரத்தின் தாய் வடுவம்மாள் (92). கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுந்தரம் கடந்த மாதம் 28-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கணவரை இழந்த ராஜராஜேஸ்வரி தனது மகள்கள் மற்றும் மாமியார் வடுவம்மாளுடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

    இவர்கள் வசித்து வரும் வீட்டிற்கு கீற்று கூட போட முடியாத நிலையில் பிளாஸ்டிக் பாய் போட்டு வாழ்ந்து வருகின்றனர். ராஜராஜேஸ்வரி 4 மகள்கள் மற்றும் கண் பார்வையில்லாத மாமியருடன் வாழ்வாதாரம் இன்றி பரிதவித்து வருகிறார். பள்ளி படிப்பு படித்து வரும் மகள்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

    எனவே வாழ்வாதாரம் இன்றி பரிதவித்து வரும் எங்களுக்கு வீடு கட்டித்தரவும், மகள்களின் படிப்புக்கு அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் ராஜராஜேஸ்வரி கோரிக்கை விடுத்துள்ளார்.

    இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    மேட்டூர்:

    கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜாசாகர் அணைகளில் இருந்து 9 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து ஒகேனக்கல்லுக்கு வருகிறது.

    ஒகேனக்கல்லில் நேற்று மாலை விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 11 ஆயிரத்து 772 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 15 ஆயிரத்து 740 கன அடியானது. அணையில் இருந்து காவிரியில் 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கால்வாயில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 400 கன அடியாக குறைக்கப்பட்டது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 113.59 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 114.46 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    வேதாரண்யம் அருகே அரசு பஸ் டயர் வெடித்து வாலிபர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி சென்ற அரசு பேருந்து கரியாப்பட்டினம் பள்ளிவாசல் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்பக்க டயர் வெடித்து பேருந்தில் பயணம் செய்த கட்டிமேடு சேர்ந்த கார்த்திக் வயது 34 என்பவர் காலில் பலத்த காயம் அடைந்தார். காயமடைந்த அவரை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த கரியாப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எந்த மார்க்கெட்டுகளை பார்த்தாலும் மனிதத் தலையாக தெரிந்த நிலையில், வர்த்தகம் ஜோராக நடந்துள்ளதாக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
    இந்தியாவில் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். வட இந்தியாவில் தீபாவளி பண்டிகையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டன.

    தீபாவளி என்றாலே புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, இனிப்பு உண்டு கொண்டாடுவதுதான். தீபாவளி பண்டிகை தொடங்குவதற்கு முன்னதாகவே, இனிப்பு பலகாரங்கள் செய்வதற்கான பொருட்களை வாங்க பொதுமக்கள் தயாராகி விடுவார்கள்.

    தீபாவளியை முன்னிட்டு ஊழியர்களுக்கு போனஸ் கொடுக்கப்படுவதால், விலை குறித்து கவலைப்படாமல் புத்தாடை, பட்டாசுகள் வாங்கிச் செல்வார்கள். இதனால் தீபாவளிக்கு முன்னதாக ஒரு வாரம் எந்த மார்கெட்டை எடுத்துக் கொண்டாலும் கூட்டமாகவே காணப்படும்.

    கோப்புப்படம்

    குறிப்பாக ஜவுளிக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழியும். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தீபாவளி பண்டிகை மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. இந்த வருடம் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் உள்ளதால், தீபாவளி பண்டிகை கொண்டாட மாநில அரசுகள் அனுமதி அளித்தன.

    இதனால் வியாபாரம் ஜோராக நடைபெற்றது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி இந்தியா முழுவதும் 1.25 லட்சம் கோடிக்கு வியாபாரம் நடைபெற்றுள்ளதாக அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 10 ஆண்டுகளை விட இந்த வருட விற்பனை அதிகம் எனவும் தெரிவித்துள்ளது.
    வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்பு கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கடற்கரையில் இலங்கைக்கு கடல்வழியாக கடத்துவதற்காக படகில் கஞ்சா பதிக்கி வைத்து இருப்பதாக கடலோர காவல் குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன் பேரில் புஷ்பவனம் விரைந்து சென்று போலீசார் கடற்கரையில் நின்றிருந்த பைபர் படகுகளை சோதனை செய்தனர்.

    இதில் மணிகண்டன் (வயது 33) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் 3 சாக்கில் அடைக்கப்பட்ட 92 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ.50 லட்சம் மதிப்புடைய கஞ்சா மூட்டைகள், படகையும் பறிமுதல் செய்தனர். மேலும் மணிகண்டனை கைது செய்து கடலோர காவல் குழும போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து எங்கிருந்து கஞ்சா கொண்டு வரப்பட்டு இலங்கைக்கு கடத்தப்படுகிறது. இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா? என தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    இதுவரை பிடிபட்ட கஞ்சா வழக்குகளில் எந்தவிதமான முடிவும் எட்டப்படாமலும், அதனை கடத்துபவர்களுக்கு எந்த தண்டனையும் இதுவரை வழங்கப்படவில்லை. வழக்குகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் வெளிவந்து தொடர்ந்து கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தனிக்கவனம் எடுத்து போதைப் பொருள் கடத்துபவர்கள் மீதான வழக்கை விரைவில் விசாரித்த அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே கடத்தலை ஒழிக்க முடியும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    ஆப்பிள் நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புதிய ஐபேட் மினி விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் 8.3 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட புது ஐபேட் மினி மாடலை சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. வெளியீட்டை தொடர்ந்து ஐபேட் மினி மாடலில் ஜெல்லி ஸ்கிராலிங் எனும் பிரச்சினை ஏற்பட்டது.

    எல்.சி.டி. டிஸ்ப்ளேவில் இதுபோன்ற பிரச்சினை சாதாரண ஒன்று தான் என ஆப்பிள் விளக்கம் அளித்து இருந்தது. இந்த நிலையில், ஜெல்லி ஸ்கிராலிங் பிரச்சினையை தீர்க்கும் வகையில் ஆப்பிள் ஐபேட் மினி 6 மாடலின் புது வேரியண்ட் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

     ஐபேட் மினி

    அதன்படி புதிய ஐபேட் மினி 120 ஹெர்ட்ஸ் ப்ரோமோஷன் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதே டிஸ்ப்ளேவினை ஆப்பிள் 2017 முதல் வெளியாகி வரும் ஐபேட் ப்ரோ மாடல்களில் வழங்கி வருகிறது. சமீபத்திய ஐபோன் 13 ப்ரோ மாடலிலும் இதே டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
    நாகையில் பாதுகாப்பு கேட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் தம்பதி தஞ்சம் அடைந்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை அருகே மஞ்சக்கொல்லையை சேர்ந்த ஞானமூர்த்தி மகன் ஹரிஹரசுதன் (வயது 22). நாகையில் உள்ள மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரும் சிக்கல் பகுதியை சேர்ந்த சந்தியா (19) என்பவரும் காதலித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தினர் என்பதால், இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து இவர்கள் 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினர்.

    இதனிடையே சந்தியாவின் குடும்பத்தினர், அவரை காணவில்லை என கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இந்த நிலையில் நேற்று ஹரிஹரசுதன், சந்தியா ஆகிய 2 பேரும் நாகை அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து அவர்கள், நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாகையில் பாதுகாப்பு கேட்டு காதல் தம்பதி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×