என் மலர்
செய்திகள்

கைது
நாகூரில் லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது
நாகூரில் லாட்டரி சீட்டு விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகூர்:
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாராய கடத்தலை தடுக்கும் வகையில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாகூர் அலங்கார வாசல் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், நாகூர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த உதுமான் மகன் யூசுப் (வயது 34) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து யூசுப்பை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டை பறிமுதல் செய்தனர்.
Next Story






