என் மலர்
நாகப்பட்டினம்
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தெற்காலத்தூரை சேர்ந்த சாரதா, தேவூர் ராதாமங்கலம் பூங்கொடி, சங்கமங்கலத்தை சேர்ந்த கந்தன், சிக்கல் பனைமேட்டை சேர்ந்த ரஞ்சித் இவர்கள் 4 பேரும் நீண்ட நாட்களாக இப்பகுதிகளில் சாராயம் விற்பனை செய்து வந்தனர்.
இவர்கள் மீது சாராயம் விற்பனை தொடர்பாக கீழ்வேளூர் போலீஸ் நிலையம் மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவிலும் பல வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் சாரதா, பூங்கொடி மீது சாராயம் விற்றது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு திரூவாரூர் மகளிர் சிறையிலும், கந்தன், ரஞ்சித் சாராயம் விற்றது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கைது செய்யபட்டு நாகை மாவட்ட சிறையில் இருந்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹருக்கு பரிந்துரை செய்தனர்.
இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜிக்கு பரிந்துரை செய்தார். அதனைத் தொடர்ந்து 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கருப்பம்புலத்தில் 13 குளங்கள் ரூ.3 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா, கருப்பம்புலம் ஊராட்சியில்
குளம், குட்டைகள் ஏலம் விடப்பட்டன.
இந்த ஊராட்சியில் உள்ள கருப்பம்புலம் வடகாடு பகுதியில் உள்ள வெள்ளோடை, பெரிய காஞ்சி, வெப்போடை, வெள்ளோடை, நெல்லியோடை உள்ளிட்ட 6 குளங்களும், நடுகாட்டில் ஜயனார்குளம், மருதம்புலம், ராஜம்புலம், பைங்கால்குளம் வண்ணான் விச்சலடிகுளம், மேலக்காடு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் குளம், குடைக்காரன்குளம் உள்ளிட்ட 17 குளங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் கவிதா முன்னிலையில் ஏலம் விடப்பட்டது.
இந்த ஊராட்சியில் உள்ள 17 குளங்கள் 3 லட்சத்து 34 ஆயிரத்து 290 ரூபாய் ஏலம் விடப்பட்டது. இதுகுறித்து கருப்பம்புலம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் கூறியதாவது, கருப்பம்புலம் ஊராட்சிக்கு புதிதாக பதவி ஏற்ற பிறகு 2-வது முறையாக குளம், குட்டைகள் ஏலம் விடப்படுகின்றன.
தற்போது 3 லட்சத்து 34 ஆயிரத்து 290 ரூபாய்க்கு
17 குளங்களும் ஏலம் போனது.
இதுவரை இந்த ஊராட்சியில் இவ்வளவு தொகைக்கு குளங்கள் ஏலம் போனது இல்லை. தற்போது கூடுதலான தொகைக்கு ஏலம் போனதால் ஊராட்சியின் வருமானம் அதிகரித்துள்ளது என்றார்.
பொங்கல் பண்டிகையையொட்டி கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமமும், இடையூறும் இன்றி, பயணம் செய்ய ஏதுவாக சென்னையில் இருந்து
கீழ்கண்ட ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.
கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு வரும் 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை
சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதேபோல் திருச்சியில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கு 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை, மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படுகிறது.
கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட
அனைத்து முக்கிய நகரங்களுக்கும் 11-ந் தேதி முதல் 13-ந்தேதி வரை
அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பஸ்களும்
பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இயக்க
விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 11 முதல் 13-ந்தேதி வரை சென்னையிலிருந்து பொதுமக்கள்
எளிதாக பயணம் செய்யும் வகையில், தற்காலிக
பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு தட பேருந்துகள், தாம்பரம் சானிடோரியம்
அறிஞர் அண்ணா பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது.
கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப் பட்டினம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப் பூண்டி, வேதாரண்யம் தட பேருந்துகள்
கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர்.
பஸ் நிலையத்திலிருந்தும் இயக்கப்பட உள்ளது.
மேலும், பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல வரும்
16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாகூர் சந்தனக்கூடு ஊர்வலத்தில் பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் அறிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
மேலும் அங்கு நடைபெறும் தடுப்பூசி போடும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், நாகை மாவட்டத்தில் பூஸ்டர் டோஸ் போடும் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இன்று முன் களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், 60 வயது தாண்டியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் என 1451 பேருக்கு போடப்படுகிறது. வரும் 31-ந்தேதிக்குள் 11,000 பேர் பூஸ்டர் டோஸ்தடுப்பூசி போட தகுதி உடையவர் ஆகிறார்கள்.
நாகை மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 82.18 சதவீதமும்,
இரண்டாம் தவணை 70 சதவீதமும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வெளியூர் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டில் பலர் வேலை செய்வதால் மாவட்டத்தில் சராசரியாக தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 90 சதவீதம் ஆகும்.
கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவலை தடுக்க கூட்டம் கூடுவதை தவிர்த்து கட்டாயமாக கவசம் அணிய வேண்டும். கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகூர் ஆண்டவர் தர்கா சந்தனக்கூடு விழாவில் பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வேதாரண்யத்தில் மீன்பிடிக்க மீனவர்கள் மீண்டும் கடலுக்கு சென்றனர்
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப் பள்ளம், வணவன்மகாதேவி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் முழு ஊரடங்கை முன்னிட்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க
கடலுக்கு செல்லவில்லை.
இதனால் ஆயிரக் கணக்கான பைபர் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்திருந்தனர். இன்று காலை 6 மணியுடன் முழு ஊரடங்கு முடிவடைந்ததால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இதேபோல் வேதாரண்யத்தில் இருந்து வெளி ஊர்களுக்கு உப்பு ஏற்றி செல்லும் பணிகளும் பாதிப்படைந்தது. இன்று லாரிகள் மூலம் வெளி ஊர்களுக்கு
உப்பு லோடு கொண்டு செல்லப்பட்டது.
நாகூர் தர்காவின் 465-வது சந்தனக்கூடு நிகழ்ச்சிக்காக சந்தனக் கட்டைகளை கல்லில் வைத்து தேய்த்து சந்தனம் எடுக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
உலகப் புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் ஷாஹல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா, 465-வது ஆண்டு கந்தூரி விழா கடந்த 4-ந்தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் விழா வருகிற 13-ந்தேதி இரவு நாகை யாஹசைன் பள்ளி வாசலில் இருந்து கொடி ஊர்வலமும், 14-ந்தேதி அதிகாலை ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு நாகூர் ஆண்டவர் சன்னதி பின்புறம் பாரம்பரிய முறைப்படி விரதம் இருந்து சந்தன கட்டைகளை அரைத்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த யாத்திரீகர்கள் 10 நாட்கள் தர்காவில் தங்கி சந்தன கட்டைகளை சிறுசிறு துண்டுகளாக்கி அரைக்கும் பணி துவங்கியது.
சந்தன கட்டைகளை ஜவ்வாது கலந்த பன்னீரில் ஊறவைத்து கருங்கற்களில் அரைத்து எடுக்கப்படும். பின்னர் அரைக்கப்பட்ட சந்தனம், குடங்களில் நிரப்பப்பட்டு, நாகை முஸ்லிம் ஜமாத்தார்களிடம் ஒப்படைக்கப்படும். பின் நாகை யாஹசைன் பள்ளி வாசலில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு அதிகாலை நாகூர் வந்தடையும்.
பின்னர் தர்கா தலைமாட்டு வாசலில் சந்தனக் குடங்கள் இறக்கப்பட்டு, தர்கா சன்னதிக்குள் கொண்டு செல்லப்பட்டு சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும். இதையடுத்து சந்தனம் யாத்ரீகர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
இதனை முன்னிட்டு நாகூர் ஆண்டவர் சன்னதி பின்புறம் பாரம்பரிய முறைப்படி விரதம் இருந்து சந்தன கட்டைகளை அரைத்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த யாத்திரீகர்கள் 10 நாட்கள் தர்காவில் தங்கி சந்தன கட்டைகளை சிறுசிறு துண்டுகளாக்கி அரைக்கும் பணி துவங்கியது.
சந்தன கட்டைகளை ஜவ்வாது கலந்த பன்னீரில் ஊறவைத்து கருங்கற்களில் அரைத்து எடுக்கப்படும். பின்னர் அரைக்கப்பட்ட சந்தனம், குடங்களில் நிரப்பப்பட்டு, நாகை முஸ்லிம் ஜமாத்தார்களிடம் ஒப்படைக்கப்படும். பின் நாகை யாஹசைன் பள்ளி வாசலில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு அதிகாலை நாகூர் வந்தடையும்.
பின்னர் தர்கா தலைமாட்டு வாசலில் சந்தனக் குடங்கள் இறக்கப்பட்டு, தர்கா சன்னதிக்குள் கொண்டு செல்லப்பட்டு சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும். இதையடுத்து சந்தனம் யாத்ரீகர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
அமிர்தராஜ் என்பவரின் வலையில் 4 கிலோ எடை கொண்ட சிங்கி இறால் என்ற லாஸ்டர் இறால் சிக்கியது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி தளத்திலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தினம்தோறும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர்.
அதன்படி மீன்பிடித்து விட்டு மீண்டும் கரைக்கு திரும்பிய பொழுது அமிர்தராஜ் என்பவரின் விசைப்படகு வலையில் 4 கிலோ எடை கொண்ட சிங்கி இறால் என்ற லாஸ்டர் இறால் சிக்கியது.
கைட்டின் மற்றும் கைட்டோசன் போன்ற வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட சிங்கி இறாலின் விலை சர்வதேச அளவில் ஏறுமுகமாகவே உள்ளது.
வளரும் நாடுகளில் சிங்கி இறாலுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் இதன் விலையும் அதிகமாகவே உள்ளது.
1 கிலோ 3000 முதல் 5000 வரை விலை போகும் என மீனவர்கள்
தெரிவித்தனர். இந்த இறாலை சக மீனவர்கள் ஆர்வத்துடன்
பார்த்து சென்றனர்.
வேதாரண்யம் அருகே தொகுப்பு வீடுகள் புதிதாக கட்டித்தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் தொகுப்பு வீடுகள் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன. இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம் தாலுக்கா பஞ்சநதிக்குளம் மேற்கில் வேம்பதேவன்காடு பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்திராகாந்தி நினைவு தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு அதில் குடியிருந்து வருகின்றனர்.
இதில் 17 வீடுகள் தற்போது முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. கடந்த மழைக்காலத்தின் போது வீட்டின் மேற்கூரையில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியில் தெரிகின்றன.
இந்த 17 வீடுகள் எப்போது இடிந்து விடும் என்ற அச்சத்திலேயே அந்த வீட்டில் மக்கள் வசித்து வருகின்றனர். வீடுகள் சேதம் அடைந்து அபாய நிலையில் உள்ளதால் ஒவ்வொரு நாளும் இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் இரவு நேரத்தில் குழந்தையுடன் தூங்காமல் தவிர்த்து வருவதாக வீட்டில்
வசிப்போர் தெரிவித்தனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து ஆபத்தான விளைவுகளை எதிர்கொள்ள அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றி விட்டு வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை அருகே நடுக்கடை கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு ஒன்றிய செயலாளர் தங்கையன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு
கோஷங்கள் எழுப்பினர்.
அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.
இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருமருகல் அருகே சூரியஒளி மின் தகடுகள் அமைத்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை சார்பில் சூரிய ஒளி மின் தகடுகள் அமைத்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.உதவி வேளாண்மை அலுவலர் சிவானந்தம் முன்னிலை வகித்தார்.
திருமருகல் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாசர் வரவேற்றார்.
இதில் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை நாகை மாவட்ட உதவி பொறியாளர் ராஜராஜன் கலந்துகொண்டு இலவச மின் இணைப்பு உள்ள விவசாயிகளுக்கு 60 சதவீத மானியத்தில் சூரிய மின்சக்தி தகடுகள் அமைக்கும் திட்டம் குறித்தும்,வீடுகளுக்கு 40 சதவீத மானியத்தில் சூரிய ஒளி மின் தகடுகள் அமைப்பது பற்றி கூறினார்.
இதில் விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி அறுவடை செய்யும் பணி தொடங்கியது நாகப்பட்டினம் மாவட்டத்தில் 65,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர் பயிரிடப்பட்டு இருந்த நிலையில் பல இடங்களில் மழை வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்து பாதிப்பை ஏற்படுத்தியது.
எஞ்சிய சம்பா பயிர்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர் நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல், ஒரத்தூர், ஆவராணி, புதுச்சேரி. கரையிருப்பு உள்ளிட்ட பகுதிகளில்
எந்திரம் மூலமாக அறுவடை செய்யும் பணியினை
தொடங்கியுள்ளனர்.
இம்மாதம் 10 மட்டும் 12-ந்தேதிகளில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அவசர அவசரமாக அறுவடை செய்யும் பணியினை நாகை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.
அதேசமயம் தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் மூட்டை ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யவேண்டிய சம்பா நெல்லை தனியார் வியாபாரிகள்
900 ரூபாய்க்கும், சிலர் 950 ரூபாய்க்கும் கொள்முதல் செய்கின்றனர்.
இதனால் மூட்டை ஒன்றுக்கு 200 ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுவதாக வேதனை தெரிவித்து விவசாயிகள் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யத்தில் பாம்பு கடித்து பெண் பரிதாபமாக இறந்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா, ஆயக்காரன்புலம் ஒன்றாம்சேத்தி முதலியார் குத்தகை பகுதியை சேர்ந்தவர் வீரசேகரன். இவருடைய மகள் பிரதீபா
(வயது 20). நர்சிங் படித்துவிட்டு திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் கடையில் வேலைபார்த்து வந்தார்.
நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பாம்பு பிரதீபாவை கடித்தது.
இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம்
அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரதீபா இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






