என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • பழுதடைந்த நிலையில் உள்ள பழைய ஆரம்ப சுகாதார கட்டிடத்தினை புதிதாக கட்டுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
    • சுமார் 10 கிலோ மீட்டர் வரை கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் 15-வது நிதிகுழு சுகாதார மானியத்தின் கீழ் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜையினை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.

    அப்போது கலெக்டர் அருண்தம்புராஜ் கூறும்போது:-

    திட்டச்சேரி பேரூராட்சியில் பழுதடைந்த நிலையில் உள்ள பழைய ஆரம்ப சுகாதார கட்டிடத்தினை புதிதாக கட்டுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 15-வது நிதிகுழு மானியம் (சுகாதார மானியம்) கீழ் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை தொடங்கி வைக்கப்பட்டு கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெறும். இந்த புதிய சுகாதார கட்டிடத்தின் மூலம் திட்டச்சேரியை சுற்றி சுமார் 10 கிலோ மீட்டர் வரை உள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு பயன்பெறுவார்கள் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் சுகாதார பணிகள் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் ஆயிஷா சித்திகா, பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், திட்டச்சேரி திமுக நகர செயலாளர் முகமது சுல்தான், பேரூராட்சி துணைத் தலைவர், பேரூராட்சி உறுப்பினர்கள், சுகாதாரத் துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 100-க்கும் மேற்பட்டோர் கடற்கரை பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளை சேகரித்தனர்.
    • குப்பைகளை வேதாரண்யம் நகராட்சி பணியாளர்கள் குப்பை சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்து சென்றனர்.

    வேதாரண்யம்:

    உலக கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் மற்றும் நகராட்சி சார்பில் வேதாரண்யம் கடற்கரையில் தூய்மை பணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேதாரண்யம் கடலோர காவல் குழும டி.எஸ்.பி. சுரேஷ், இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், ஏட்டு சசிகுமார், அரசு கல்லூரி நாட்டு நல திட்ட அலுவலர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமையில் குப்பையில்லா நகரத்தை உருவாக்குவோம் என நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    பின்பு, மாணவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்பினர், கடலோர காவல்படைபோலீசார் என 100-க்கும் மேற்பட்டோர் கடற்கரை பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளை சேகரித்தனர்.

    சேகரிக்கப்பட்ட குப்பைகளை வேதாரண்யம் நகராட்சி பணியாளர்கள் குப்பை சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்துச் சென்றனர். இதன் மூலம் வேதாரண்யம் கடற்கரை மிக தூய்மையாக காட்சியளித்தது.

    நகராட்சி நிர்வாகம் கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பதால் மாணவர்கள் குறைந்த அளவே மண்ணில் புதைந்து கிடந்த குப்பைகளை மட்டுமே சேகரிக்க முடிந்தது. கடற்கரையை மிக தூய்மையாக வைத்திருந்த வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதாவை பள்ளி மாணவ- மாணவிகள் காவல்துறை அதிகாரிகள் பாராட்டினர்.

    • விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வைத்து தோற்கடித்துள்ளனர்.
    • இது போன்ற கருத்து தெரிவித்தால் நாட்டை பிரிவினைவாதத்திற்கு கொண்டு சேர்க்கும் என்றார்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 30 -வது மாநில மாநாடு நேற்று தொடங்கப்பட்டது. நாளை வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாடு தொடக்க நிகழ்ச்சியாக நாகப்பட்டினம் புத்தூரில் இருந்து நாகை அவுரிதிடல் வரை பேரணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொது செயலாளர் ஹன்னன் முல்லா மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரம் கணக்கான விவசாயிகள் கலந்துக் கொண்டனர்.கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசும்போது:-

    பொதுக் கூட்டங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசும் மோடி, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்விக்கு பதிலும் அளிப்பதில்லை. நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற தேர்தலில் தோற்கடிக்க முடியாத மோடியை விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வைத்து தோற்கடித்துள்ளனர். இந்தியாவின் ஆட்சி மொழி இந்தியாக இருக்க வேண்டுமென அமித்ஷா தெரிவிக்கிறார். பல கலாச்சாரம் உள்ள நாட்டில் இது போன்ற கருத்து தெரிவித்தால் நாட்டை பிரிவினைவாதத்திற்கு கொண்டு சேர்க்கும் என்றார்.

    • முதல் பரிசாக 11-ம், இரண்டாம் பரிசாக 15-ம், மூன்றாம் பரிசாக 16-ம் என மொத்தம் 42 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
    • பள்ளி மேலாண்மை குழு பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மாணவ- மாணவிகளை பாராட்டினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா தேத்தாக்குடி தெற்கு கைலாச கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசாக 11-ம், இரண்டாம் பரிசாக 15-ம், மூன்றாம் பரிசாக 16-ம் என மொத்தம் 42 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

    இப்பள்ளியின் மாணவர்கள் அதிக அளவில் பதக்கங்களை பெற்றதை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமசாமி, துணைத்தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வேகரத்தினம், பொருளாளர் சண்முகம், பள்ளி தலைமை ஆசிரியர் தொல்காப்பியன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மாணவ- மாணவிகளை பாராட்டினர்.

    • போதை பொருட்கள் போன்ற தீய பழக்கங்கள் மூலம் இளைஞர்கள், மாணவர்கள் எவ்வாறு சீரழிகிறார்கள் என்று பேசினார்.
    • பாலியல் சீண்டல் குற்றங்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் குறித்து பேசினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமை வகித்து கஞ்சா , அபின் போன்ற போதைப் பொருட்கள் போன்ற தீய பழக்கங்கள் மூலம் இளைஞர்கள் , மாணவர்கள் எவ்வாறு சீரழிகிறார்கள் என்பது குறித்து அதன் பயன்பாடுகளை தவிர்ப்பது" குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

    நிகழ்ச்சியில் கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் மலர்கொடி கலந்துகொண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் குற்றங்கள் குறித்து அதற்கு தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் குறித்து பேசினார். சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மணி , பள்ளி தலைமை ஆசிரியர் செல்வன் ஆசிரியர்கள் , மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 

    • கஜா புயலுக்கு பிறகு பல்வேறு இடங்களில் சரியானபடி தெரு விளக்குகள் எரிவதில்லை.
    • பொதுமக்கள் கட்டும் சிறு வீடுகளுக்கு அருகில் உள்ள மணலை எடுத்து பயன்படுத்துவதை அரசு அனுமதிக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா நாலுவேதபதி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்து அனைத்து துறைஅதிகாரிகளின் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .

    கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஞான சுந்தரி சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் வேதாரண்யம் தாசில்தார் ரவிச்சந்திரன், தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, ஒன்றிய கவுன்சிலர் உதயகுமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தங்கராசு, ஊராட்சி செயலாளர் கண்ணன், வேளாண்மை உதவி இயக்குனர் வேதாரத்தனம் ,வட்டார கல்வி அலுவலர் பாலசுப்ரமணியன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் .

    கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதிகளில் நிலவி வரும் பிரச்சினை குறித்து அதிகாரிகளிடம் நேரில் எடுத்துரைத்தும் மனுக்களும் அளித்தனர்.

    ஊராட்சி மன்ற தலைவர் ஞானசுந்தர பாண்டியன், ஊராட்சியில் கஜா புயலுக்கு பிறகு பல்வேறு இடங்களில் சரியானபடி தெரு விளக்குகள் எரிவதில்லை .இதற்கு பலமுறை மின்சார அலுவலர்களிடம் தொடர்பு கொண்டு புகார் அளித்தும்இதுவரை சரி செய்யப்படவில்லை. இதனை உடன் சரி செய்யப்பட வேண்டும்.

    இல்லையென்றால் 15 நாட்களில் மின்சார துறையை கண்டித்து போராட்டம் நடத்தப்படும். மேலும் நாலுவேதபதி பகுதியில் அரசு கட்டிடங்கள் மற்றும் அரசு நிதி உதவி பெற்று கட்டப்படும் வீடுகள் மற்றும் பொதுமக்கள் கட்டும் சிறு வீடுகளுக்கு அருகில் உள்ள மணல் எடுத்து பயன்படுத்துவதை அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார்.

    இந்த கோரிக்கையை ஊராட்சியில் உள்ள பல்வேறு தரப்பு மக்களும் எடுத்துரைத்தனர் .இதற்குதாசில்தார் ரவிச்சந்திரன் அரசு கட்டிங்களுக்கும் அரசு உதவி பெற்று கட்டப்படும் வீடுகளுக்கும் மற்றும் தனிநபர் விடுகட்டுவதற்கும் அருகில் உள்ள மணலை எடுத்து பயன்படுத்தமுறையான அனுமதிக்கு விண்ணப்பித்தால் பரிசீலித்து அரசு விதிகளுக்கு உட்பட்டுஅனுமதி அளிக்கப்படும் என தெரிவித்தார்.

    • தமிழகத்தில் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு முதல்- அமைச்சரின் காலை உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    • இத்திட்டத்தின் மூலம் 1545 பள்ளிகளில் மொத்தம் 14,095 மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

    நாகப்பட்டினம்:

    நாகை நகராட்சி தொடக்க ப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்து மாணவர்களோடு சேர்ந்து உணவு சாப்பிட்டார் தமிழகத்தில் 5 ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் அறிமுக ப்படு த்தப்பட்டுள்ளது.நேற்று முதல் அமைச்சர் தொடங்கி வைத்த நிலையில் இன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

    அதன் ஒரு பகுதியாக நாகை அக்கரைப்பேட்டை டாடா சுனாமி குடியிருப்பு நகராட்சி தொடக்கப் பள்ளியில் முதலைமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் கலெக்டர் அருண்தம்புராஜ், எம்.எல்.ஏக்கள் நாகை மாலி, ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறி தொடங்கி வைத்தனர். பின்பு மாணவர்களோடு சேர்ந்து சாப்பிட்டனர். இத்திட்டத்தின் மூலம் 1545 பள்ளிகளில் மொத்தம் 14,095 மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அண்ணா படத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • அண்ணா பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் அண்ணா பிறந்தநாள் விழா தி.மு.க கொண்டாடப்பட்டது. முன்ன தாக சந்தைப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ.செங்குட்டுவன் தலைமையில் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    அதேபோல் திருமருகல் தெற்கு ஒன்றியம் பூதங்குடியில் அண்ணாவின் படத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் உத்தமசோழபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜனனி பாலாஜி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திட்டச்சேரியில் நகர செயலாளர் முகமது சுல்தான் தலைமையில் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காரையூரில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அதேபோல் 39 ஊராட்சிகளிலும் அண்ணாவின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    • உபகரணங்கள் பாதுகாப்பு மற்றும் பயன்படுத்தும் முறை போன்றவற்றின் முக்கியத்துவம் தொடர்பாக விவசாய களை பயிற்சி அளிக்கப்பட்டது.
    • அனைத்து ஆராய்ச்சியாளர்கள், முன்னவர்கள், அலுவலர்கள், 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் காரையூர் ஊராட்சியில் கோர்டேவா அக்ரி சைன்ஸ் -ன் விவசாய களை பயிற்சி நடைப்பெற்றது.விவசாய புரட்சியில் பல ஆண்டுகளாக சேவை செய்து வரும் கோர்டேவா அக்ரி சைன்ஸ் நிறுவனம் சார்பில் காரையூர் கிராமத்தில், நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய களை மேலாண்மை பற்றியும், நோவ்லக்ட் களைகொல்லி பற்றியும், உபகரணங்கள் பாதுகாப்பு மற்றும் பயன்படுத்தும் முறை போன்றவற்றின் முக்கியத்துவம் தொடர்பாக விவசாய களை பயிற்சி விழா நடைப்பெற்றது.

    இதில் கோர்டேவாவின், அனைத்து ஆராய்ச்சியாளர்கள், முன்னவர்கள், அலுவலர்கள், 400 -க்கும் மேற்ற விவசாயிகள் பங்கேற்றனர். இதில் திருவாரூர் சந்தை தொடர்பாளர், வேளாண்மை அலுவலர், துணை வேளண்மை அலுவலர், ஆத்மா திட்ட மேலாளர், விவசாய சங்க தலைவர்கள், கொர்டெவா அமைப்பினர் பங்கேற்றனர். அனைவருக்கும் தென்னை மர கன்றுகள் வழங்கப்பட்டது. விவசாயிகள் மற்றும் கோர்டேவா வின் திருவாரூர் அதிகாரிகள் ஶ்ரீதர், வெங்கடேஷ், கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.

    • வீட்டின் எதிரில் தனது மனைவியுடன் குடும்ப பிரச்சினை காரணமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
    • மணிவாசகத்தை, மருமகன் சுசீந்திரன் கம்பியால் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம், தலைஞாயிறு அழகு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிவாசகம் (வயது 65). கோவில்அர்ச்சகர். இவர் நேற்றிரவு கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மணிவாசகத்தின் மகள் தமிழ்மாலா, மருமகன் சுசீந்தரன் இருவரும் வீட்டின் எதிரில் தனது மனைவியுடன் குடும்ப பிரச்சினை காரணமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்பொழுது திடீரென நடந்து சென்று கொண்டிருந்த மணிவாசகத்தை, மருமகன் சுசீந்திரன் கம்பியால் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மணிவாசகத்தை அருகில் இருந்தவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து தலைஞாயிறு போலீசார் வழக்குபதிவு செய்து சுசீந்தரனை கைது செய்தனர்.

    • 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • அறுவடைக்கு தயாரான மற்றும் அறுவடை செய்த நெல்மணிகள் மழையில் நனைந்து சேதமாகும் அபாய நிலை உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளான திருமருகல், மேலப்பூதனூர், திருப்புகலூர், அம்பல், பொறக்குடி, திருப் பயத்தங்குடி, விற்குடி, வாழ்குடி, போலகம், ஆலத்தூர் உள்ளிட்ட பகுதி களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகவும், ஒரு சில பகுதிகளில்அறுவடை பணிகள் தொடங்கி தீவிரமா கவும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அடிக்கடி திடீரென கனமழை பெய்வ தால் அறுவடைக்கு தயாரான மற்றும் அறுவடை செய்த நெல்மணிகள் மழையில் நனைந்து சேதமாகும் அபாய நிலை உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு திருமருகல் ஒன்றியத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மீனம்பநல்லூர் என்ற இடத்தில் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அருகிலுள்ள மின்கம்பத்தில் மோதியது.
    • பலத்த காயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சை பெற்று பலனின்றி உயிரிழந்தார்.

    நாகப்பட்டினம்,:

    நாகை மாவட்டம் கீழையூர் பகுதி மேலப்பிடாகை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 37) பெயிண்டர்.இவர் கடந்த 10ந்தேதி வாழக்க ரையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியு ள்ளார். அப்போதுதிருக்கு வளையிலிருந்து மேலப்பி டாகை செல்லக்கூ டிய சாலையில் மீனம்பநல்லூர் என்ற இடத்தில் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அருகிலுள்ள மின்கம்பத்தில் மோதியது.இதல் பலத்த காயமடைந்த அவரை மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மரு த்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி மணிமாறன் உயிரிழந்தார். இதுகுறித்து திருக்குவளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை செய்து வருகின்றனர். இறந்த மணிமாறனுக்கு மாதவி என்ற மனைவியும், 3 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

    ×