என் மலர்
நாகப்பட்டினம்
- மலைகளை உடைத்து அவைகளை அரைத்து மணல் போல் விற்பனை செய்கின்றனர்.
- கிராமங்களில் கிடைக்கும் மணல்களை எடுத்து வேதாரண்யம் பகுதிகளில் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் வண்டுவாஞ்சேரி, தாணிக்கோட்டகம், மணக்காடு, கரியாப்பட்டினம், செட்டிபுலம், செம்போடை, புஷ்பவனம், பெரியகுத்தகை, நெய்விளக்கு ஆகிய கிராம ங்களில் சிமெண்ட்டுடன் கலக்கும் வகையிலான பெருமணல்கள் உள்ளன.
இவைகளையே, அப்பகுதி மக்கள் காலங்காலமாக பயன்படுத்தி வந்தனர். ஒரு டிராக்டர் ரூ.1500-க்கு கிடைத்து வந்தது.
ஆனால் தற்போது இவைகளை பயன்படுத்தக்கூடாது, எடுத்தால் வழக்கு போடப்படுகிறது என அறிவிப்பு வந்தது.
இதனால் பல கிலோ மீட்டர் தூரம் சென்று மலைகளை உடைத்து அவைகளை அரைத்து மணல் போல் விற்பனை செய்கின்றனர்.
அவைகள் விலையும் அதிகமாகும்.எனவே, கிராமங்களில் கிடைக்கும் மணல்களை எடுத்து வேதாரண்யம் பகுதிகளில் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தால் அப்பகுதி மக்களுக்கு மிகுந்த நன்மை அளிப்பதாக இருக்கும்.
மேலும், மணல் எடுக்கும் இடங்களில் மழைநீர் தேங்கி நிலத்தடி நீர்மட்டம் உயருமே தவிர வேறு எந்த பாதிப்பும் இருக்காது.
எனவே, மணல் எடுக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் இளம்பாரதி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
- இதுவரை 368 பேருக்கு இன்ப்ளுயன்சா காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 69 பேருக்கு இன்ப்ளுயன்சா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் மர்ம காய்ச்சலாலால் அதிகம் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 368 பேருக்கு இன்ப்ளுயன்சா காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில், 5 வயதுக்கு கீழ் 42 குழந்தைகளுக்கும், 5 வயது முதல் 14 வயது வரை உள்ளவர்கள் 65 பேருக்கும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 69 பேருக்கும் இன்ப்ளுயன்சா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குடும்பத்தில் கூட சிறுவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனவே மாணவர்களின் நலனை கருத்தில் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு தொடர் விடுமுறை விட ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாகை மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
- கைது செய்யப்பட்ட மீனவர்களை அந்நாட்டு கடற்படை இலங்கைக்கு கொண்டு சென்றது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 8 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் 8 பேரையும் இலங்கைக்கு கொண்டு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனே மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகை மீனவர்கள் 10 பேர் சொந்த ஊர் திரும்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 431 பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
- 9 வயது முதல் 19 வயதுடையவர்களுக்கு தனித்தனியாக ஆறு சுற்று போட்டிகள் நடைபெற்றது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, தகட்டூர் அரசு மேல்நிலைப்ப ள்ளியில் நாகை மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பில் சோழமண்டல செஸ் போட்டி நடைபெற்றது.
போட்டியில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த 431 பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
9 வயது முதல் 19 வயதுடையவர்களுக்கு தனித்தனியாக ஆறு சுற்று போட்டிகள் நடைபெற்றது. செஸ் போட்டியினை வாய்மேடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன் தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு செஸ் கமிட்டி இணைச் செயலாளர் பாலகுணசேகரன், நாகை மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ், நாகை மாவட்ட இணைச்செயலாளர் மணிமொழி, பள்ளி தலைமையாசிரியர் சுவாமிநாதன், சமூக ஆர்வலர் பிரின்ஸ் கோபால்ராஜா, ஆசிரியர்கள் சுப்ரமணியன், வைத்தியநாதன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சை கதிர்வேல் உள்ளிட்ட 11 நடுவர்களை கொண்டு செஸ் போட்டி நட த்தப்பட்டது. போட்டி யில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், பதக்கம், சான்றிதழ், நூல்கள் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது.
வேதாரண்யத்தில் 7 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட செஸ் போட்டி நடத்தப்படுவது இதுவே முதன்முறை என போட்டியாளர்கள் தெரிவித்தனர்.
- மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்திலும், செஸ் போட்டியை காணவும் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
- காலை உணவு திட்டத்திலும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தவிர்க்கப்பட்டுவிடுமோ.
நாகப்பட்டினம்:
தமிழ்நாட்டில் 54 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளிலும், 29 லட்சம் பேர் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படிக்கின்றனர்.
இரு வகை பள்ளிகளிலும் ஏழை எளிய மாணவர்களே அதிகளவில் படித்து வருகின்றனர்.
இதுவரை, பாட நூல், பாட குறிப்பேடுகள், சீருடை, சைக்கிள், மடிக்கணினி போன்ற அனைத்து சலுகைகளும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் கிடைத்து வந்தன.
ஆனால், அண்மைக்காலமாக பிறப்பிக்கப்படும் உத்தரவுகளில், அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்கள் தவிர்க்க ப்பட்டு வருகின்றனர்.
மருத்துவம், பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை.
ஐ.ஐ.டியில் படிக்க வாய்ப்பு கிடைக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முழுச் செலவை அரசே ஏற்கும் என்ற சலுகை, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.
கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்திலும் மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை காணவும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், தற்போது தொடங்கப்பட்டுள்ள காலை உணவு திட்டத்திலும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தவிர்க்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
எனவே இது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக் கொண்ட ஷாநவாஸ் எம்.எல்.ஏ, இது தொடர்பாக சட்டமன்றத்தில் அரசிடம் மீண்டும் வலியுறுத்தப்படும் என்று உறுதியளித்தார்.
- பைரவருக்கு மஞ்சள், பால், தயிர், தேன், இளநீர், திரவிய பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
- பைரவர் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை மெயின் ரோட்டில் வன்மீகநாதர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் காலபைரவர் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்த கோவிலில் ஒவ்வொரு தேய் பிறை அஷ்டமியன்று பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
முன்னதாக பைரவருக்கு மஞ்சள், பால், தயிர், தேன், இளநீர், திரவியப் பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பின்னர் சாமிக்கு வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பழுதடைந்த நிலையில் உள்ள பழைய ஆரம்ப சுகாதார கட்டிடத்தினை புதிதாக கட்டுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
- சுமார் 10 கிலோ மீட்டர் வரை கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் 15-வது நிதிகுழு சுகாதார மானியத்தின் கீழ் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜையினை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.
அப்போது கலெக்டர் அருண்தம்புராஜ் கூறும்போது:-
திட்டச்சேரி பேரூராட்சியில் பழுதடைந்த நிலையில் உள்ள பழைய ஆரம்ப சுகாதார கட்டிடத்தினை புதிதாக கட்டுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 15-வது நிதிகுழு மானியம் (சுகாதார மானியம்) கீழ் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை தொடங்கி வைக்கப்பட்டு கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெறும். இந்த புதிய சுகாதார கட்டிடத்தின் மூலம் திட்டச்சேரியை சுற்றி சுமார் 10 கிலோ மீட்டர் வரை உள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு பயன்பெறுவார்கள் என்றார்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் சுகாதார பணிகள் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் ஆயிஷா சித்திகா, பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், திட்டச்சேரி திமுக நகர செயலாளர் முகமது சுல்தான், பேரூராட்சி துணைத் தலைவர், பேரூராட்சி உறுப்பினர்கள், சுகாதாரத் துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- 100-க்கும் மேற்பட்டோர் கடற்கரை பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளை சேகரித்தனர்.
- குப்பைகளை வேதாரண்யம் நகராட்சி பணியாளர்கள் குப்பை சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்து சென்றனர்.
வேதாரண்யம்:
உலக கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் மற்றும் நகராட்சி சார்பில் வேதாரண்யம் கடற்கரையில் தூய்மை பணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேதாரண்யம் கடலோர காவல் குழும டி.எஸ்.பி. சுரேஷ், இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், ஏட்டு சசிகுமார், அரசு கல்லூரி நாட்டு நல திட்ட அலுவலர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமையில் குப்பையில்லா நகரத்தை உருவாக்குவோம் என நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பின்பு, மாணவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்பினர், கடலோர காவல்படைபோலீசார் என 100-க்கும் மேற்பட்டோர் கடற்கரை பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளை சேகரித்தனர்.
சேகரிக்கப்பட்ட குப்பைகளை வேதாரண்யம் நகராட்சி பணியாளர்கள் குப்பை சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்துச் சென்றனர். இதன் மூலம் வேதாரண்யம் கடற்கரை மிக தூய்மையாக காட்சியளித்தது.
நகராட்சி நிர்வாகம் கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பதால் மாணவர்கள் குறைந்த அளவே மண்ணில் புதைந்து கிடந்த குப்பைகளை மட்டுமே சேகரிக்க முடிந்தது. கடற்கரையை மிக தூய்மையாக வைத்திருந்த வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதாவை பள்ளி மாணவ- மாணவிகள் காவல்துறை அதிகாரிகள் பாராட்டினர்.
- விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வைத்து தோற்கடித்துள்ளனர்.
- இது போன்ற கருத்து தெரிவித்தால் நாட்டை பிரிவினைவாதத்திற்கு கொண்டு சேர்க்கும் என்றார்.
நாகப்பட்டினம்:
நாகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 30 -வது மாநில மாநாடு நேற்று தொடங்கப்பட்டது. நாளை வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாடு தொடக்க நிகழ்ச்சியாக நாகப்பட்டினம் புத்தூரில் இருந்து நாகை அவுரிதிடல் வரை பேரணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொது செயலாளர் ஹன்னன் முல்லா மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரம் கணக்கான விவசாயிகள் கலந்துக் கொண்டனர்.கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசும்போது:-
பொதுக் கூட்டங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசும் மோடி, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்விக்கு பதிலும் அளிப்பதில்லை. நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற தேர்தலில் தோற்கடிக்க முடியாத மோடியை விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வைத்து தோற்கடித்துள்ளனர். இந்தியாவின் ஆட்சி மொழி இந்தியாக இருக்க வேண்டுமென அமித்ஷா தெரிவிக்கிறார். பல கலாச்சாரம் உள்ள நாட்டில் இது போன்ற கருத்து தெரிவித்தால் நாட்டை பிரிவினைவாதத்திற்கு கொண்டு சேர்க்கும் என்றார்.
- முதல் பரிசாக 11-ம், இரண்டாம் பரிசாக 15-ம், மூன்றாம் பரிசாக 16-ம் என மொத்தம் 42 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
- பள்ளி மேலாண்மை குழு பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மாணவ- மாணவிகளை பாராட்டினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா தேத்தாக்குடி தெற்கு கைலாச கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசாக 11-ம், இரண்டாம் பரிசாக 15-ம், மூன்றாம் பரிசாக 16-ம் என மொத்தம் 42 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளியின் மாணவர்கள் அதிக அளவில் பதக்கங்களை பெற்றதை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமசாமி, துணைத்தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வேகரத்தினம், பொருளாளர் சண்முகம், பள்ளி தலைமை ஆசிரியர் தொல்காப்பியன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மாணவ- மாணவிகளை பாராட்டினர்.
- போதை பொருட்கள் போன்ற தீய பழக்கங்கள் மூலம் இளைஞர்கள், மாணவர்கள் எவ்வாறு சீரழிகிறார்கள் என்று பேசினார்.
- பாலியல் சீண்டல் குற்றங்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் குறித்து பேசினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமை வகித்து கஞ்சா , அபின் போன்ற போதைப் பொருட்கள் போன்ற தீய பழக்கங்கள் மூலம் இளைஞர்கள் , மாணவர்கள் எவ்வாறு சீரழிகிறார்கள் என்பது குறித்து அதன் பயன்பாடுகளை தவிர்ப்பது" குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
நிகழ்ச்சியில் கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் மலர்கொடி கலந்துகொண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் குற்றங்கள் குறித்து அதற்கு தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் குறித்து பேசினார். சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மணி , பள்ளி தலைமை ஆசிரியர் செல்வன் ஆசிரியர்கள் , மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- கஜா புயலுக்கு பிறகு பல்வேறு இடங்களில் சரியானபடி தெரு விளக்குகள் எரிவதில்லை.
- பொதுமக்கள் கட்டும் சிறு வீடுகளுக்கு அருகில் உள்ள மணலை எடுத்து பயன்படுத்துவதை அரசு அனுமதிக்க வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா நாலுவேதபதி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்து அனைத்து துறைஅதிகாரிகளின் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .
கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஞான சுந்தரி சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் வேதாரண்யம் தாசில்தார் ரவிச்சந்திரன், தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, ஒன்றிய கவுன்சிலர் உதயகுமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தங்கராசு, ஊராட்சி செயலாளர் கண்ணன், வேளாண்மை உதவி இயக்குனர் வேதாரத்தனம் ,வட்டார கல்வி அலுவலர் பாலசுப்ரமணியன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் .
கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதிகளில் நிலவி வரும் பிரச்சினை குறித்து அதிகாரிகளிடம் நேரில் எடுத்துரைத்தும் மனுக்களும் அளித்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர் ஞானசுந்தர பாண்டியன், ஊராட்சியில் கஜா புயலுக்கு பிறகு பல்வேறு இடங்களில் சரியானபடி தெரு விளக்குகள் எரிவதில்லை .இதற்கு பலமுறை மின்சார அலுவலர்களிடம் தொடர்பு கொண்டு புகார் அளித்தும்இதுவரை சரி செய்யப்படவில்லை. இதனை உடன் சரி செய்யப்பட வேண்டும்.
இல்லையென்றால் 15 நாட்களில் மின்சார துறையை கண்டித்து போராட்டம் நடத்தப்படும். மேலும் நாலுவேதபதி பகுதியில் அரசு கட்டிடங்கள் மற்றும் அரசு நிதி உதவி பெற்று கட்டப்படும் வீடுகள் மற்றும் பொதுமக்கள் கட்டும் சிறு வீடுகளுக்கு அருகில் உள்ள மணல் எடுத்து பயன்படுத்துவதை அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்த கோரிக்கையை ஊராட்சியில் உள்ள பல்வேறு தரப்பு மக்களும் எடுத்துரைத்தனர் .இதற்குதாசில்தார் ரவிச்சந்திரன் அரசு கட்டிங்களுக்கும் அரசு உதவி பெற்று கட்டப்படும் வீடுகளுக்கும் மற்றும் தனிநபர் விடுகட்டுவதற்கும் அருகில் உள்ள மணலை எடுத்து பயன்படுத்தமுறையான அனுமதிக்கு விண்ணப்பித்தால் பரிசீலித்து அரசு விதிகளுக்கு உட்பட்டுஅனுமதி அளிக்கப்படும் என தெரிவித்தார்.






