search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிப்பு
    X

    அண்ணா பிறந்தநாள் கூட்டம்.

    தி.மு.க. ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிப்பு

    • வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கிரிதரன் தலைமை வகித்தார்.
    • தி.மு.க ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கபட்டுள்ளனர்.

    வேதாரண்யம்:

    அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கிரிதரன் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சண்முகராஜ், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கமலா அன்பழகன், மாவட்ட கவுன்சிலர்கள் இளவரசி, திலீபன், மாவட்ட எ.ம்ஜி.ஆர் மன்ற பொருளாளர் அம்பிகாதாஸ், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்பி ரமணியன், சவுரிரா ஜன்,நகர செயலாளர் நமச்சிவாயம், பேருராட்சி தலைவர் செந்தமிழ்செல்வி பிச்சையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட காரணமாக இருந்தவர் அண்ணா.

    அவர் காட்டிய வழியில் அ.தி.மு.க. தொட ர்ந்து மக்கள் பணி செய்து வருகிறது.

    அண்ணா வழியி ல்நடப்போம் என கூறும் தி.மு.க.வினர் மக்களுக்காக எதையுமே செய்வதில்லை.தேர்தல் வாக்குறுதிகள் என்பது சதவீதத்திற்குமேல் நிறைவேற்றி உள்ளோம் என்று முதல்வர் ஸ்டாலின் பொய் கூறுகிறார்.

    தி.மு.க ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கபட்டுள்ளனர் .மின்கட்டணம், வீட்டு வரி உயர்த்தபட்டுள்ளது

    .இவ்வாறு அவர் பேசினார்.முடிவில் மகளிர் அணி கலைச்செல்வி நன்றி கூறினார்.

    Next Story
    ×