என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • 5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு 108 திவ்ய தேசங்களுள் 17-வது தலமாக போற்றப்படும்.
    • புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு 108 திவ்ய தேசங்களுள் 17-வது தலமாக போற்றப்படும் இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.நூற்றுக்கணக்கான பக்தர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாநிலகளில் இருந்தும் வருகை தந்து தரிசனம் செய்வர்.

    இந்நிலையில் புரட்டாசி மாதம் சனிக்கிழமையான நேற்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடத்தபட்டது. அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்ட உடன் கோவிந்தா கோபாலா என கோஷங்கள் எழுப்பியபடியே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • 200 தன்னார்வலர்களுக்கு 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு அதன் ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.
    • இளைஞர்களுக்கு பேரிடர் மீட்பு உபகரண பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    வேளாங்கண்ணியில் பேரிடர் கால பயிற்சி வகுப்பில், மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது:

    மாவட்ட கலெக்டர் பங்கேற்பு மழை வெள்ளம் புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் அதிகம் பாதிக்கும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை, வெள்ளம், புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் குறித்த நாட்கள் பயிற்சி வகுப்பு வேளாங்கண்ணியில் நடைபெற்றது.மீட்பு பணியில் ஈடுபட தேர்வு செய்யப்பட்ட 200 தன்னார்வலர்களுக்கு 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு அதன் ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.

    இதில் இக்கட்டான சூழலில் சிக்கித் தவிப்போருக்கு எவ்வாறு மருத்துவ உதவி செய்ய வேண்டும், உயிருக்கு போராடும் நபருக்கு முதலுதவி செய்வது மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து இதில் பயிற்சி பெற்ற 200 இளைஞர்களுக்கும் தலா 9000 மதிப்பிலான பேரிடர் மீட்பு உபகரண பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பங்கேற்று எதிர்வரும் மழைக்காலத்தில் இளைஞர்கள் தங்களது பணியை சிறப்பாக மேற்கொள்ளவும், சிறப்பாக பணிபுரியருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும் கூறினார்.

    • ஏழை எளிய, நடுத்தர பெண்கள் பயன்பெறும் வகையில் இலவச தையல் பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டன.
    • அழகுக்கலை, வெள்ளாடு வளர்ப்பு உள்ளிட்ட பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சியில் 50 மகளிருக்கு இலவச தையல் பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டன.

    ஊராட்சியில் உள்ள திருக்கண்ணபுரம், ராமநந்தீஸ்வரம், காக்கமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏழை எளிய நடுத்தர பெண்கள் பயன்பெறும் வகையில் இலவச தையல் பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டன.

    இந்த தையல் பயிற்சி வகுப்பு ஒரு மணி நேரத்துக்கு 5 - பேர் வீதம் தினமும் 50- பேருக்கு தையல் பயிற்சி கற்றுக் கொடுக்கப்படுகிறது.

    இதில் சாம்பிராணி தயாரித்தல், அழகுக்கலை, வெள்ளாடு வளர்ப்பு உள்ளிட்ட பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

    ஊராட்சி மன்றத் தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    இதில் பயிற்சியாளர் ஜெயந்தி, வார்டு உறுப்பினர் ஆல்பர்ட் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஆண்டு சந்தா உட்பட அனைத்து செலவையும் கல்லூரி நிர்வாகமே ஏற்றுக் கொண்டுள்ளது.
    • காப்பீட்டு திட்டத்தின் பயன்பாடுகள் பற்றி பணியாளர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்வி குழுமத்தில் பணிபுரியும் அனைவருக்கும் நிர்வாகம் சார்பாக மருத்துவ காப்பீட்டு திட்டம்.நாகை இ ஜி எஸ் பிள்ளை கல்லூரியில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் பயன்பெறும் வகையில் ஸ்டார் ஹெல்த் காப்பீட்டு நிறுவனத்தில் மருத்துவ காப்பீட்டு பதிவு செய்து, ஆண்டு சந்தா உட்பட அனைத்து செலவையும் கல்லூரி நிர்வாகமே ஏற்றுக் கொண்டுள்ளது.

    அதற்கான காப்பீட்டு பதிவு அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

    இந்நிகழ்வினை இ.ஜி.எஸ் பிள்ளை கல்வி குழுமத்தின் தலைவர் ஜோதிமணி அம்மாள் பணியாளர்களுக்கு காப்பீடு அட்டை வழங்கி துவக்கி வைத்தார்.

    கல்லூரியின் செயலர் திரு செந்தில்குமார், இணைச் செயலர் சங்கர் கணேஷ் மற்றும் ஆலோசகர் பரமேஸ்வரன் ஆகியோரும் பணியாளர்களுக்கு காப்பீட்டு பதிவு அட்டையை வழங்கினர்.

    மாணவர் சேர்க்கை பிரிவின் தலைவர் முனைவர் மணிகண்ட குமரன் அவர்கள் காப்பீட்டு திட்டத்தின் பயன்பாடுகள் பற்றி பணியாளர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

    தேர்வு நெறியாளர் முனைவர் சின்னதுரை அவர்கள் பணியாளர்கள் சார்பாக நிர்வாகத்திற்கு நன்றி கூறினார்.

    முதன்மை செயல் அதிகாரி, கல்விசார் இயக்குனர், அனைத்து கல்லூரி முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்திற்கு திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
    • திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி நன்றி கூறினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் சந்தைப்பேட்டை கடைத்தெருவில் அதிமுக சார்பில் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருட்டிணன் தலைமை தாங்கினார்.

    திட்டச்சேரி பேரூர் செயலாளர் அப்துல் பாசித், மாவட்ட துணை செயலாளர் அபுசாலி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.

    நாகை நகர செயலாளர் தங்க கதிரவன் வரவேற்றார்.

    நாகை மாவட்ட செயலாளரும், அமைப்புச் செயலாளருமான ஓ.எஸ்.மணியன்.எம்எல்ஏ, மாநில கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் ஆசைமணி, மாவட்ட அவை தலைவர் ஜீவானந்தம், தலைமை கழக பேச்சாளர்கள் அன்பழகன், நல்லுசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

    முடிவில் திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி நன்றி கூறினார்.

    • உணவில் வைட்டமின் சி அடங்கிய உணவு சத்துக்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
    • கைகளை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும், கால்களில் காலணி அணிய வேண்டும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஊட்டச்சத்து மாத விழா வாகன பிரச்சார தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    வேதாரண்யம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை ஒன்றிய குழு தலைவர் கமலா அன்பழகன் தலைமையேற்று குத்துவிளக்கேற்றி கொடிய சைத்து தொடக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராஜு, பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிமேகலை, சிவகுரு பாண்டியன், தேவி செந்தில் சரவணன் வீர தங்கம் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சித்ரா, வட்டார ஒருங்கிணைப்பாளர் கனிமொழி, வட்டார திட்ட உதவியாளர் சித்ரா, மேற்பார்வையாளர் சரவணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பின்னர், ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

    வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகளிலும் நேரில் சென்று சுத்தம், சுகாதாரம், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதனை களையும் விதம், உணவில் வைட்டமின் சி அடங்கிய உணவு சத்துக்களை சேர்த்துக் கொள்ள வேண்டும், கைகளை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும், கால்களில் காலணி அணிய வேண்டும் உள்ளிட்டவைளை குறித்து விழிப்புணர்வு வாகனம் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது.

    • தூர்வாரும் பணிக்காக அரசு ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கியது.
    • வாய்கால்கள் தூர்வாரப்படாததால் மழை காலங்களில் தண்ணீர வடிவது சிரமமாக இருந்தது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம்,வேதாரண்யம் நகராட்சியில் ராஜாளி காடு, குமரன்காடு காந்திநகர் மாரியம்மன் கோவில்தெரு, குட்டாச்சிகாடு உள்ளிட்ட 21 வார்டுகளிலும் வாய்கால்கள் தூர்வாரப்படாததால் மழை காலங்களில் தண்ணீர் வடிவது மிகுந்த சிரமாக இருந்தது.

    வாய்க்கால்கள் தூர்வாரும் பணிக்காக அரசு ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கியது.

    நகராட்சி பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணியை வேதாரண்யம் நகரமன்ற தலைவர் புகழேந்தி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹிம், ஓவர்சியர் குமரன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    தூர்வரும் பணி இன்னும் மூன்று வாரத்தில் முடிவடையும் என நகராட்சி ஆணையர் ஹேமலதா தெரிவித்தார்.

    • முள்ளியாறு நீர் நிலைகளில் வளர்ந்துள்ள வெங்காய தாமரை செடிகளை அகற்றப்படாதவை குறித்து பேசினர்.
    • வடகிழக்கு பருவமழை தொடக்க நிலையிலேயே வெள்ள பாதிப்பு வர வாய்ப்புள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் முன்னோடி விவசாயி மணியன், சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன் மற்றும் குழந்தைவேல் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் பகுதி பிரச்சினைகள் குறித்து பேசினர்.

    மாணங்கொண்டான் முள்ளியாறு நீர் நிலைகளில் வளர்ந்துள்ள வெங்காய தாமரை செடிகளை அகற்றப்படாதவை குறித்து பேசினர்.

    வடகிழக்கு பருவமழை தொடக்க நிலையிலேயே வெள்ள பாதிப்பு வர வாய்ப்புள்ளதால் விவசாயம் பாதிப்புக்குள்ளாகும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    எனவே, இதை தவிர்க்க ஆறுகளில் உள்ள வெங்காய தாமரை ெசடிகளை அகற்றி சீர் செய்ய வேண்டும் என விவசாயிகள் கேட்டு கொண்டனர்.

    கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எடுக்கப்பட்ட முதற்கட்ட நடவடிக்கை குறித்து அரசுத்துறை அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

    கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    • மருத்துவ குணம் கொண்ட கலாக்காய் புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு சுவை கொண்டது.
    • பட்டதாரி இளைஞர் கலாக்காயை சோதனை முறையில் சாகுபடி செய்து அதிக விளைச்சல் கண்டுள்ளார்.

    நாகப்பட்டினம்:

    மலைப்பிரதேசங்களில் வளரக்கூடிய கலாக்காயை சோதனை முறையில் விவசாயம் செய்து அதிக லாபம் ஈட்டும் நாகை விவசாயிமலையடிவார பகுதிகளில் வளரக்கூடிய மருத்துவ குணம் கொண்ட கலாக்காய் புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு சுவை கொண்டது.

    இவை ஊறுகாய் தயாரிப்ப தற்கும், பேக்கரி களிலும் அதிகமாக பயன்ப டுத்தப்படுகிறது.

    தற்போது நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்குப்பொய்கை நல்லூரில் சந்திரபோஸ் என்ற பட்டதாரி இளைஞர் கலாக்காயை சோதனை முறையில் சாகுபடி செய்து தற்பொழுது கொத்து கொத்தாக அதிக விளைச்சல் கண்டுள்ளது.

    இதை பறித்து பரவை சந்தை நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், மன்னார்குடி பகுதிகளில் விற்பனை செய்கின்றனர். தற்போது ஒரு கிலோ கலாக்காய் ரூ.100 முதல் 150 வரை விற்கப்படுகிறது.

    இதை பலரும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

    இதனால் அதிக லாபம் தருவதாக விவசாயி சந்திரபோஸ் மகிழ்ச்சி தெரிவிக்கின்றார்.

    • போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை நாகை அவுரித்திடலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
    • நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் தொடர்ந்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை நாகை அவுரித்திடலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

    இப்பேரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வரை சென்று நிறைவு பெற்றது.

    மேலும் இந்த பேரணியில் நடராஜன் தமயந்தி மேல்நிலைப்பள்ளி மற்றும் நகராட்சி நடுநிலை பள்ளியை சேர்ந்த 200 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் போதைப் பொருள்களுக்கு எதிரான கோஷங்கள் மற்றும் கை பதாகைகள் வைத்து மாணவர்கள், மற்றும் காவல் துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மேலும் நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் தொடர்ந்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    அதன்படி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் இருக்கும் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி வெளிப்பாளையம் காவல் ஆய்வாளர் தியாகராஜன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஏ.டி.அன்பழகன், ஆண்டனி பிரபு, மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் கொண்ட குழுவினர் இன்று சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையில் இரண்டு வெவ்வேறு கடைகளில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை கைப்பற்றி அந்த இரண்டு கடைகளுக்கும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் சீல் வைத்து கடையை மூடினர்.

    இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தொடர் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குற்ற வழக்கு பதிவு செய்யப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

    • நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முருகன் தலைமை வகித்தார்.
    • மரக்கன்றுகளை வழங்கி முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கி வைத்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலாண்மை துறை முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கவிழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முருகன் தலைமை வகித்தார்.

    மேலாண்மை துறை தலைவர் பிரபாகரன் வரவேற்றார்.

    சட்ட பஞ்சாயத்து இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் சுந்தரபாண்டியன் சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் கார்த்திகேயன் மாரிமுத்து தாமரைச்செல்வி ராஜா அறிவுசெல்வன்அர்ஜுனன் இளையராஜா உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • 17 வயதுக்குட்பட்ட பிரிவில் இறகு பந்து போட்டியில் இரண்டாம் இடம் பெற்று மாநில அளவில் தேர்வு பெற்றனர்.
    • வெற்றி பெற்ற மாணவிகள் குருகுல நிர்வாகி கயிலைமணி வேதரத்தினம் மற்றும் உடற்கல்வி இயக்குனர் கவிதா தலைமையாசிரியர் செல்வி உட்பட பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் பாராட்டினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் கஸ்தூர்பா காந்திகள்யாகுருகுலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நாகை மாவட்ட அளவில் நடந்த வாலிபால் போட்டியில் 16 வயதுக்குட்பட்ட பிரிவில் 17 வயதுக்குட்பட்ட பிரிவினும் முதலிடம் பெற்று மாநில அளவில் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள விளையாட்டு திடலில் வேதாரண்யம் நாகை கீழையூர் கீவளுர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்ட மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வேதாரணியம் குருகுலம் பள்ளி மாணவிகள் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மேசை பந்து மற்றும் வாலிபால் போட்டிகள் இரண்டாம் இடமும் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் இறகு பந்து போட்டியில் இரண்டாம் இடம் பெற்று மாநில அளவில் தேர்வு பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவிகள் குருகுல நிர்வாகிகயிலைமணி வேதரத்தினம் மற்றும் உடற்கல்வி இயக்குனர் கவிதா தலைமையாசிரியர் செல்வி உட்பட பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் பாராட்டினர்.

    ×