search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரிடர் மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை பயிற்சி
    X

    பேரிடர் மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை பயிற்சி நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது.

    பேரிடர் மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை பயிற்சி

    • 200 தன்னார்வலர்களுக்கு 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு அதன் ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.
    • இளைஞர்களுக்கு பேரிடர் மீட்பு உபகரண பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    வேளாங்கண்ணியில் பேரிடர் கால பயிற்சி வகுப்பில், மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது:

    மாவட்ட கலெக்டர் பங்கேற்பு மழை வெள்ளம் புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் அதிகம் பாதிக்கும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை, வெள்ளம், புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் குறித்த நாட்கள் பயிற்சி வகுப்பு வேளாங்கண்ணியில் நடைபெற்றது.மீட்பு பணியில் ஈடுபட தேர்வு செய்யப்பட்ட 200 தன்னார்வலர்களுக்கு 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு அதன் ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.

    இதில் இக்கட்டான சூழலில் சிக்கித் தவிப்போருக்கு எவ்வாறு மருத்துவ உதவி செய்ய வேண்டும், உயிருக்கு போராடும் நபருக்கு முதலுதவி செய்வது மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து இதில் பயிற்சி பெற்ற 200 இளைஞர்களுக்கும் தலா 9000 மதிப்பிலான பேரிடர் மீட்பு உபகரண பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பங்கேற்று எதிர்வரும் மழைக்காலத்தில் இளைஞர்கள் தங்களது பணியை சிறப்பாக மேற்கொள்ளவும், சிறப்பாக பணிபுரியருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும் கூறினார்.

    Next Story
    ×