search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் ேமாதி பெயிண்டர் பலி
    X

    மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் ேமாதி பெயிண்டர் பலி

    • மீனம்பநல்லூர் என்ற இடத்தில் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அருகிலுள்ள மின்கம்பத்தில் மோதியது.
    • பலத்த காயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சை பெற்று பலனின்றி உயிரிழந்தார்.

    நாகப்பட்டினம்,:

    நாகை மாவட்டம் கீழையூர் பகுதி மேலப்பிடாகை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 37) பெயிண்டர்.இவர் கடந்த 10ந்தேதி வாழக்க ரையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியு ள்ளார். அப்போதுதிருக்கு வளையிலிருந்து மேலப்பி டாகை செல்லக்கூ டிய சாலையில் மீனம்பநல்லூர் என்ற இடத்தில் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அருகிலுள்ள மின்கம்பத்தில் மோதியது.இதல் பலத்த காயமடைந்த அவரை மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மரு த்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி மணிமாறன் உயிரிழந்தார். இதுகுறித்து திருக்குவளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை செய்து வருகின்றனர். இறந்த மணிமாறனுக்கு மாதவி என்ற மனைவியும், 3 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

    Next Story
    ×