என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • கோதண்டராஜபுரத்தில் பெரியநாயகி அம்மன், பெத்தாரண சாமி கோவில் உள்ளது.
    • கோவில் குடமுழுக்கு முடிந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடத்தப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரத்தில் பெரியநாயகி அம்மன், பெத்தாரண சாமி கோவில் உள்ளது.

    இந்த கோவில் குடமுழுக்கு முடிந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடத்தப்பட்டது.

    மண்டல பூஜை நிறைவு நாளை முன்னிட்டு பெரியநாயகி அம்மன், பெத்தாரண சாமி சுவாமிகளுக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

    இதில் கோதண்ட ராஜபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்தனர்.

    • கொலை குற்றவாளிகள் தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • அதன்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் கொலை முயற்சி மற்றும் கொலை குற்றவாளிகள் தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில் அண்டோ (எ) பன்னீர்செல்வம் 25/22, த/பெ. பலராமன், ஜோதி அண்ணாமலை நகர், சென்னை, அர்ஜுன் 26/22, த/பெ. அசோகன் வியாசர்பாடி, சென்னை, நெட்ட சக்தி (எ) சக்திவேல்20/22, த/பெ. ரமேஷ், வியாசர்பாடி, சென்னை, வில்லன் காசி என்கிற காசி28/22, த/பெ. முனுசாமி, சாஸ்திரி நகர், வியாசர்பாடி, சென்னை, ஜில்லா சுசி என்கிற சுசீந்தர் 24/22, ஆகிய இருவரும் தகப்பனார் வெங்கடேசன், சாஸ்திரி நகர், வியாசர்பாடி, சென்னை ஆகியோர் மீது கொலை முயற்சி மற்றும் கொலை வழக்கு உள்ளது.

    இதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவஹர் பரிந்துரையின்படி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் அருண் தம்புராஜ் கைது செய்ய உத்தரவிட்டார்.

    அதன்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தில் அமைக்கப்பட்ட மீட்டா் கேஜ் பாதையில் ரயில் வந்து போனது.
    • வேலைகள் முடிந்து கடந்த 28.9.22 ரயில் இஞ்சினுக்கு மட்டும் 100 கி.மீ வேகத்தில் சோதனை ஓட்டம் நிகழ்ந்தது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தில் அமைக்கப்பட்ட மீட்டா் கேஜ் பாதையில் ரயில் வந்து போனது. போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத போது வேதாரண்யம் மீன், உப்புக்கு இந்த ரயிலே பிரதானம்.

    15 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட இந்த ரயில் தடம் ரூ. 288 கோடி செலவில் 10 ஆண்டுகளுக்கு முன் அகல ரயில் பாதையாக மாற்றும் வேலை தொடங்கியது.

    இப்போது வேலைகள் முடிந்து கடந்த 28.9.22 ரயில் இஞ்சினுக்கு மட்டும் 100 கி.மீ வேகத்தில் சோதனை ஓட்டம் நிகழ்ந்தது.

    நேற்று 22.10.22 திருத்து றைப்பூ ண்டியிலிருந்து மதியம் 1 மணிக்குசோதனை ஓட்டம் தொடங்கி அகஸ்திய ம்பள்ளி வரை மாலை 5 மணி வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது.

    அதனை வரவேற்கும் நிகழ்ச்சியாக அண்டா்காட்டை சோ்ந்த பல்வேறு விருதுகளை பெற்ற நல்லாசிரியர் மு.வசந்தா பள்ளி மாணவ, மாணவி்களையும், பொதுமக்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் ரயில் சேவையை வரவேற்கும் வகையிலங கவிதை பாடி வரவேற்றார்.

    ரயிலே ரயிலே ஓடி வா, நன்றாய் ரயிலே ஓடி வா, ரயிலே ரயிலே ஓடி வா, நன்றாய் ரயிலே ஓடி வா, தடக் தடக் ரயிலே ஓடி வா, தங்க ரதமே ஓடி வா, கூக்கூ ரயிலே ஓடி வா, கூட்ஸ் ரயிலே ஓடி வா, ரயிலே ரயிலே ஓடி வா, நன்றாய் ரயிலே ஓடி வா, ஆதிரெங்கனை வழிபட்டு வா, மேலமருதூரில் மிதந்து வா, கரியாப்பட்டினத்தை கடந்து வா, குரவப்புலத்தில் நின்று வா, ரயிலே ரயிலே ஓடி வா, நன்றாய் ரயிலே ஓடி வா, நெய்விளக்கின் ஒளி கொண்டு வா, தோப்புத்துறையை தொட்டு வா, திருமறைக்காட்டு மான் போல் வா, அகத்தியா் பாதம் தொட்டிட வா, ரயிலே ரயிலே ஓடி வா, நன்றாய் ரயிலே ஓடி வா என கவிதை பாடியுள்ளார்.

    • முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு.சரவணத்தேவர் எஸ்.பி. ஜவகரிடம் மனு அளித்தார்.
    • குருபூஜை விழா பங்கேற்க உரிய பாதுகாப்பு மற்றும் அனுமதி சீட்டு ஆகியவைகள் வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு.சரவணத்தேவர் மற்றும் கட்சியினர் நாகை மாவட்ட எஸ்.பி. ஜவகரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் ஜெயந்தி விழா, அக்டோபர் 24ம் தேதி சுதந்திர போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர் குருபூஜை விழா மற்றும் வாளுக்குவேலி அம்பலம் பெருவிழா நடைபெற உள்ளது.

    முக்குலத்து புலிகள் கட்சியினர் வருடாவருடம் கலந்து கொள்ளும் இவ்விழாவில் பங்கேற்க உரிய பாதுகாப்பு மற்றும் அனுமதி சீட்டு ஆகியவைகள் வழங்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ, மற்றும் எஸ்.பி ஜவகரிடம் மனு அளித்தனர்.

    கட்சியின் தலைவர் ஆறு.சரவணன் தேவர் அக்டோபர் 30 மற்றும் 24ம் தேதிகளில் உரிய பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    • நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்தில் நீத்தார் நினைவு நாள் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
    • பணியின் போது மரணமடைந்த காவல் மற்றும் காவல்படையைச் சேர்ந்தோருக்கு அஞ்சலி.

    நாகப்பட்டினம்:

    நீத்தார் நினைவு நாளை யொட்டி, பணியின்போது உயிர் நீத்தகாவலர்களுக்கு நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

    கடந்த 1959-ம் ஆண்டு லடாக் பகுதியில் நடைபெற்ற சீனப்படை தாக்குதலின் போது, காவல்படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேர் வீரமரணமடைந்தனர்.

    அவர்களின் தியாகத்தை நினைவுக்கூரும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21- ம் தேதி காவலர்கள் வீரவணக்க தினம் (நீத்தார் நினைவு நாள்) அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நாளில் பணியின் போது மரணமடைந்த காவல் மற்றும் காவல்படையைச் சேர்ந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்படும். அதன்படி, நீத்தார் நினைவு நாளான நேற்று நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்திலுள்ள உயிர் நீத்தோர் நினைவுத்தூனுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர்.

    கப்பல்படை லெப்டினன்ட் கமாண்டர் கர்மேந்தர் சிங், மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    தொடர்ந்து ஆயுதப்படை சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி மற்றும் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

    மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் நிவாரண தொகைக்கான காசோலையை கலெக்டர்மற்றும் எஸ்.பி வழங்கினர்.

    • திருமலைராஜன் பட்டினத்தில் இருந்து தனது வீட்டிற்கு சைக்கிளில் வந்துள்ளார்.
    • ராஜசேகரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி ப. கொந்தகை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி மகன் ராஜசேகர் (வயது53) கூலித்தொழிலாளி.

    இவர் இரவு திருமலைராஜன் பட்டினத்தில் இருந்து தனது வீட்டிற்கு சைக்கிளில் வந்துள்ளார்.

    அப்போது எதிரே வந்த மருங்கூர் நெய்குப்பை காலனி தெருவை சேர்ந்த ரமேஷ் மகன் ராம்குமார் (22) என்பவர் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் ராஜசேகர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

    உடன் அக்கம் பக்கத்தினர் ராஜசேகரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.அங்கு ராஜசேகரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    எதிரே மோட்டார் சைக்கிள் வந்த ராம்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • பல்வேறு மாவட்டங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள் பங்கேற்றன.
    • போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கம், சான்றிதழ், கோப்பை ஆகியன வழங்கப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடியில் நாகூர் வீ.ஹெச்.எப் குடும்பத்தினர் மற்றும் திட்டச்சேரி நண்பர்கள் இணைந்து நடத்திய குதிரை வண்டி போட்டி நடைபெற்றது. போட்டியை நாகை தி.மு.க மாவட்ட செயலாளர் கெளதமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இப்போட்டி புதிய குதிரை, கரிச்சான் குதிரை, பெரிய குதிரை என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டன.

    இதில் சேலம், கோயம்புத்தூா், சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள் பங்கேற்றன.

    பந்தய தொலைவு குதிரைகளுக்கு ஏற்ப நிா்ணயிக்கப்பட்டது. இதில் பெரிய குதிரையில் சென்னை, கரூர், பேராவூரணி குதிரைகள் முதல் முன்று இடங்களை பெற்றது.

    கரிச்சான் குதிரையில் திப்புராஜபுரம், நாகூர், பூண்டி குதிரைகள் முதல் மூன்று பரிசுகளை பெற்றது. புது குதிரையில் 2 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் முதலிடம் திருச்சி, அரதாங்கி குதிரைகளும், 2ம் நாகை, மதுரை குதிரைகளும், 3ம் திருச்சி, நாகூர் குதிரைகளும் பரிசுகளைப் பெற்றன.

    வெற்றி பெற்ற குதிரை வண்டிகளை ஓட்டியவா்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ், பரிசுக் கோப்பை ஆகியன வழங்கப்பட்டன.

    இதில் நாகூர் தி.மு.க. நகர செயலாளர் செந்தில்குமார், திட்டச்சேரி அ.தி.மு.க நகர செயலாளர் அப்துல் பாசித், உத்தமசோழபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜனனி பாலாஜி, வி.ஹெச்.எப் குடும்பத்தார் நூர்சாதிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இப்போட்டியைக் காண மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் வந்திருந்தனா். இதையொட்டி, 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

    • ராம்குமார் கடந்த 8 மாதங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
    • கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த பாட்டி ராஜலட்சுமி கதவை திறக்க முயன்றுள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சி சன்னதி தெருவை சேர்ந்தவர் ராம்குமார் மனைவி விவேதா (வயது 20). இருவருக்கும் திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது.

    இவர்களுக்கு நித்தீஸ்வரன் (வயது 1) என்ற ஆண் குழந்தை உள்ளது. ராம்குமார் வெளிநாட்டில் கடந்த 8 மாதங்களாக வேலை பார்த்து வருகிறார். விவேதா மாமனார் ராமலிங்கம், மாமியார் செல்வி, ராமலிங்கத்தின் தாயார் ராஜலட்சுமி ஆகியோருடன் கங்களாஞ்சேரியில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முதல் நாள் காலை 9 மணிக்கு வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்றுள்ளனர்.

    பாட்டி ராஜலட்சுமி மட்டும் வீட்டிலிருந்துள்ளார்.

    விவேதா குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டு அறையில் இருக்கிறார் என நினைத்துக் கொண்டு இருந்துள்ளார்.

    காலை 11 மணி ஆகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த பாட்டி ராஜலட்சுமி கதவை திறக்க முயன்றுள்ளார்.

    பின்னர் வீட்டை விட்டு வெளியே சென்று கத்தி கூச்சலிட்டுள்ளார்.

    அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது விவேதா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் போலீசார் விவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருமணமாகி 2 ஆண்டுகளில் விவேதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதால் உதவி கலெக்டர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • புதிய மின்விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.
    • நாகை எம்.எல்.ஏ ஜெ.முகம்மது ஷா நவாஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டது.

    இதனால் அங்கு வந்து செல்லும் பயணிகள் மிகுந்த சிரமங்களை சந்தித்தனர். எனவே, அதை சீரமைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், மூலதன மானிய நிதியிலிருந்து ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நாகை பேருந்து நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.

    பேருந்து நிலையத்திலுள்ள கட்டிடத்தின் மேல் தளத்தில் தட்டு ஓடு பதித்தல், நடைபாதையில் டைல்ஸ் மற்றும் பேவர் பிளாக் அமைத்தல், தார்ச்சாலை அமைத்தல், சாலையோர வியாபாரிகளுக்கு கடைகள் கட்டுதல், புதிய மின்விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருவதை நாகை எம்.எல்.ஏ ஜெ.முகம்மது ஷா நவாஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைக்காலத்திற்கு முன்பு பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

    ஆய்வின் போது, நாகை நகராட்சி ஆணையர், செயற் பொறியாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • மாநில வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு என்ற தலைப்பில் கட்டுரை போட்டி.
    • முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதார ண்யம் தாலுகா, வாய்மேடு போலீஸ் நிலையத்தில், போலீசார் சார்பில் தகட்டூர் அரசு தொடக்கப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கட்டுரை போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடைபெற்றது.

    போட்டியில் மாநில வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், போலீசார் பணி பற்றிய ஓவிய போட்டியும் நடத்தப்பட்டு முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் டி.எஸ்.பி. முருகவேல், வாய்மேடு இன்ஸ்பெக்டர் கன்னிகா, சப்-இன்ஸ்பெக்டர் வாகீஸ்வரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழரசன், கார்த்திகேயன், எஸ்ஐ செல்வராசு, சிறப்பு இன்ஸ்பெக்டர் வாசு, நிலைய எழுத்தர் மதியழகன் உள்ளிட்ட போலீசார் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

    அகஸ்தியம்பள்ளியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பாத்திகள் அமைத்து உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் பகுதியில்வடகிழக்குபருவ மழை காலம் துவங்கிய நிலையில் வேதாரண்யம் பகுதியில் உள்ள பல ஆயிரக்கக்கான ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பளங்கள் மழைநீரால் சூழப்பட்டதால் உப்பு உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது

    இதனால் உப்பளத்தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்

    தமிழகத்தில் உப்பு உற்பத்திக்கு தூத்துக்குடிக்கு அடுத்த இடத்தை பிடிப்பது நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியாகும். வேதாரண்யத்தில் இருந்து தெற்கே கோடியக்கரை செல்லும் வழியில் உள்ள அகஸ்தியம் பள்ளியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பாத்திகள் அமைத்து உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    இதில் சுமார் 3500 ஏக்கர் அளவில் சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்களால் சாப்பாட்டுக்கு தேவையான உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    இங்கு உற்பத்தியாகும் அனைத்து வகை உப்பும் சாலை மார்க்கதில் லாரிகள் வழியாக தான் ஏற்றுமதியாகிறது.

    இந்த தொழிலை நம்பி பாத்தி அமைத்தல், உப்பு வாறுதல், ஏற்றுமதி, மூட்டைகள் பிடித்தல் என பல வழிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்

    தற்போது பெய்த மழையால் அனைத்து உப்பள பகுதிகளும் மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது.

    இதேபோல உப்பள பகுதிக்குள் செல்லும் அனைத்து சாலைகளையும் சேதமடைந்து அனைத்து உப்பள சாலைகளும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

    இந்நிலையில் நடப்பாண்டில் கடந்த சில மாதங்களாக பருவம் தவறி மழை பெய்ய துவங்கிய உப்பளங்கள் பாதிக்கப்பட்டது.

    மேலும் தற்போது பருவமழை காலம் தொடங்கிய நிலையில் ஜனவரி வரை மழை பொழிவு இருக்கும் என்பதால் உப்பள பகுதிகளில் முழுமையாக உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்து.

    • போதை பழக்கங்களில் இருந்து மாணவர்கள் மீண்டு வர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
    • பள்ளி பருவத்தில் இருந்தே மாணவர்கள் செல்போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி நாகை மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் நடைபெற்றது.

    கலெக்டர் அருண்தம்பு ராஜ் தலைமையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் வட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் விபத்துக ளால் ஏற்படும் உயிரிழப்புகளை எவ்வாறு தவிர்ப்பது, விபத்து அவசர காலங்களில் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் என்ன போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து உலக விபத்து காய தினம் குறித்து விழிப்புணர்வு உறுதி மொழியை கலெக்டர் முன்னிலையில் ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டனர்.

    நிகழ்ச்சியில் பேசிய கலெக்டர் அருண் தம்பு ராஜ், போதை பழக்கங்களில் இருந்து பள்ளி மாணவர்கள் மீண்டு வர ஆசிரியர்கள் விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும், பள்ளி பருவத்தில் இருந்தே மாணவர்கள் செல்போன் பயன் பாட்டை தவிர்க்க வேண்டும் என ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் என்று கூறினார்.

    ×