என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • மக்களை தேடி மருத்துவ திட்டம் பற்றி பாடல் பாடியுள்ளார்.
    • பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.

    வேதாரண்யம்:

    பொதுசுகாதார த்துறை நூற்றாண்டு நிறைவ டைவதை தமிழகம் முழுவதும் அத் துறையினர் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில்தலை ஞாயிறு ஆரம்பசுகாதார நிலையத்தில்வட்டார சுகாதார மேற்பார்வை யாளராக பணியாற்றும் நாகை செல்வன் சமீபத்தில் ரஜினி நடித்த முரட்டுகாளை படத்தில் வரும் பொதுவாக எம் மனசு தங்கம் பாடல் வரிகளை மாற்றி அமைத்து பொது சுகாதாரத் துறையின் சேவைகளையும் தமிழக அரசின் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டம் பற்றியும் பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டார் .

    அந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்பாடலை சிறப்பாக பாடியத்தற்காக நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், நாகை செல்வனை பாராட்டினார்.

    • பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
    • வகுப்பறை மட்டும் ஆய்வக கட்டிடம் கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொ ண்டார்.

    அப்போது அவரிடம், இதுவரை பழுதடைந்த 8 வகுப்பறை கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளதால் பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆய்வக கட்டடம் இல்லா மல் மாணவர்கள் சிரம ப்படுவதாகவும் பள்ளியின் சார்பில் கோரிக்கை வைக்க ப்பட்டது.

    அப்போது, வகுப்பறை மட்டும் ஆய்வக கட்ட டம் கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க ப்படுமென ஷாநவாஸ் எம்.எல்.ஏ உறுதியளித்தார். அத்துடன், அங்கு நடை பெற்று வரும் நீட் பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் சட்டப் போராட்டம் ஒருபுறம் நடைபெற்றாலும், விலக்கு பெறும் வரையில், அத்தேர்வை துணிவுடன் எதிர் கொண்டு வெற்றிபெற வேண்டும் என்று மாணவ ர்களிடம் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது, திட்டச்சேரி பேரூராட்சி உறுப்பினர்கள் முகம்மது சுல்தான், செய்யது ரியா சுதீன், ரிபாயுதீன், விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து 436 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • மாணவ- மாணவிகளுக்கு சுழற்கோப்பை உட்பட 230 வகையான பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கல்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் அகரம் மெட்ரிக் பள்ளியில் வாய்மேடு இலக்குவனார் சதுரங்க பயிற்சி மையம், நாகை மாவட்ட சதுரங்க கழகம் ஆகியவற்றின் சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடந்தது.

    இதில் தஞ்சை, நாகை, திருவாரூர், தேனி உட்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 9 முதல் 19 வயது வரையிலான 436 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 10 பிரிவுகளில் நடந்த போட்டிகளை அகரம் மெட்ரிக் பள்ளி நிறுவனரும், முன்னாள் எம்.பி.யுமான பி.வி.ராஜேந்திரன் தொடக்கி வைத்தார்.

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சுழற்கோப்பை உட்பட 230 வகையான பரிசுகள், சான்றிதழ்களை பள்ளி செயலாளர் மகேஸ்வரி விவேக் வெங்கட்ராமன், வேதநாயகி, ராஜேந்திரன் ஆகியோர் வழங்கினர்.

    செஸ் கழக மாநில இணை செயலாளர் பாலகுணசேகரன், தலைவா் விஜயன், செயலாளர் சுந்தர்ராஜ், பொருளாளர் அருண்குமார் உட்பட பயிற்சியாளர்கள் நடுவர்களாக இருந்து போட்டியை நடத்தினர்.

    அகரம் பள்ளி முதல்வர் வெற்றிச்செல்வி வரவேற்றார். செஸ் கழக இணை செயலர் மணிமொழி நன்றி கூறினார்.

    • வேதாரண்யம் பகுதியில் உப்பை மூலமாக கொண்டு தொழிற்சாலை தொடங்க வேண்டும்.
    • கோடியக்கரையை பறவைகள் சரணாலயமாக அறிவித்து சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து வசதியும் செய்து தர வேண்டும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராணி தலைமை தாங்கினார்.

    வேதாரண்யம் வட்ட செயலாளர் ராமமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.

    மாநில தலைவர் அன்பரசு, மாவட்ட செயலாளர் அன்பழகன், மாவட்ட பொருளாளர் அந்துவன்சேரல், மாநில செயலாளர் டானியல் ஜெயசிங், நாகை மாலி எம்.எல்.ஏ மற்றும் ஒன்றிய, மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், வேதாரண்யம் பகுதியில் உப்பை மூலமாக கொண்டு தொழிற்சாலை தொடங்க வேண்டும், நாகப்பட்டினம் - தஞ்சாவூர் இடையிலான தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், கோடியக்கரையை பறவைகள் சரணாலயமாக அறிவித்து சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து வசதியும் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர்

    அற்புதராஜ் ரூஸ்வெல்ட் நன்றி கூறினார்.

    • பணிமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமை தாங்கி தி.மு.க. கொடியேற்றி வைத்தார்.

    பின்பு, போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இதில், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் கருணாநிதி, தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன்,

    அரசு வழக்கறிஞர் வெங்கடேஸ்வரன், வழக்கறிஞர் அணி அன்பரசு, மாவட்ட மாணவரணி செந்தாமரை செல்வன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • வீடு வீடாகச் சென்று இளைஞ ர்களை தங்களை இணைத்துக் கொண்டனர்.
    • வேதா ரண்யம் மேற்குஒன்றிய தி.மு.க. செயலாளர் உதயம் முருகையன் உறுப்பினர் சேர்க்கையைதொடங்கி வைத்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் மேற்கு ஓன்றியம் சார்பில் இல்லம் தேடி இளைஞரணி உறுப்பி னர்கள் சேர்க்கும் முகாம் நகர மன்ற தலைவரும் நகர தி.மு.க. செயலாளருமான புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.

    ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் விக்னேஷ்காமராஜ் முன்னிலை வகித்தார். வேதா ரண்யம் மேற்குஒன்றிய தி.மு.க. செயலாளர் உதயம் முருகையன் உறுப்பினர் சேர்க்கையைதொடங்கி வைத்தார்.

    வேதாரண்யம் மேற்கு ஒன்றியம் ஆயக்காரன்புலம் ஒன்றுஊராட்சிக்கு உட்பட்ட பழையகரம், முதலியார் குத்தகை, பெரிய குத்தகை கொச்சிகுத்தகைஉள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடு வீடாகச் சென்று இல்லம் தேடி இளைஞரணிஉறுப்பினர்கள் சேர்க்கும்பணி நடைபெற்றது. இதில் வீடு வீடாகச் சென்று இளைஞர்களை தங்களை இணைத்துக் கொண்டனர்.

    இதில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்அசோக் குமார்ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆசைத்தம்பி, வழக்கறிஞர் அணி அன்பரசு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் குமார் முன்னாள் மாவட்ட பிரதிநிதி பாபு ஊராட்சி செயலாளர் தமிழ்செல்வன் மேற்கு ஒன்றியதுணை செயலாளர் அருள்அரசன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • புதிதாக 2 மின்மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.
    • முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட மின் மாற்றிகளை பொதும க்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி நாட்டார்மங்கலம் மற்றும் வடகரை ஊராட்சி திருப்பனையூர் ஆகிய பகுதிகளில் மின் பற்றாக்குறையைப் போக்கும் விதமாக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிதாக 2 மின்மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சிக்கு திருமருகல் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். திருமருகல் நாகை கோட்ட பொறியாளர் சேகர், திருமருகல் உதவி மின் பொறியாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட மின் மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் எரவாஞ்சேரி ரஜினிதேவி பாலதண்டாயுதம், வடகரை மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் மற்றும் மின் ஊழியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

    • தமிழ்நாடு தொழிற்சாலை 80 சதவீத வேலையை தமிழர்களுக்கு வழங்க தமிழக அரசு சட்டம் நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க வேண்டும்.
    • ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை தமிழகத்தில் 82 பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்து இருப்பதாக வேதனை தெரிவித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடை பெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று நாகை மாவட்டத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    மீன்வள ஏற்றுமதி மண்டலம்

    நாகப்பட்டினம் மாவ ட்டத்தை மீன்வள ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்க வேண்டும். சென்னை முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை ெரயில் பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்,

    தமிழ்நாடு தொழிற்சாலை 80 சதவீத வேலையை தமிழர்களுக்கு வழங்க தமிழக அரசு சட்டம் நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க வேண்டும்.

    ரெயில் மறியல்

    நீட் தேர்வு, மின் கட்டண கணக்கீடு, மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட எந்த வாக்குறுதியும் திமுக அரசு நிறைவேற்ற வில்லை. மற்ற மாநிலங்களைப் போல் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். நாகை திருவாரூரில் நாளை நடைபெற உள்ள ெரயில் மறியல் போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியும் கலந்து கொள்ளும்.

    ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை தமிழகத்தில் 82 பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்து இருப்பதாக வேதனை தெரிவித்த அன்புமணி, தமிழகத்தில் இனி ஒரு உயிர் போனாலும் அதற்கு ஆளுநரே காரணம்.

    ராகுல்காந்தியின் நடைபய ணம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ், இந்திய அரசியலில் ராகுல் காந்தி நடைபயணம் பெரிய எதிரொலியை ஏற்படுத்தி பாஜகவிற்கு பின்னடைவை உண்டாக்கும் என்று தனது கருத்தை தெரிவித்தார்.

    • மக்கள் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த லூயிஸ்டேவிட்டை பிடித்து அங்குள்ள கோவிலின் உள்ளே பூட்டி வைத்தனர்.
    • சாலை விபத்தில் காயமடைந்த நாகூரை சேர்ந்த ரோஷினி மற்றும் 2 பேரையும் சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், நாகூரில் கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்லும் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் நாகூர் வழியாக பொது போக்குவரத்து செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக சிவன் மேலவீதி, சிவன் கீழ வீதி, மருத்துவமனை சாலை வழியாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு அதிவேகமாக அந்த பகுதியில் வந்த கார், எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த பெண் உள்பட 3 பேரும் தூக்கி விசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    இதனை கண்டு ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த லூயிஸ்டேவிட்டை பிடித்து அங்குள்ள கோவிலின் உள்ளே பூட்டி வைத்தனர்.

    பின்னர் இதுகுறித்து அவர்கள் நாகூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீசாரிடம் பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்திய டிரைவரை ஒப்படைத்தனர்.

    இந்த சாலை விபத்தில் காயமடைந்த நாகூரை சேர்ந்த ரோஷினி மற்றும் 2 பேரையும் சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து நாகூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அனைத்து வங்கிகளையும் ஒரே இடத்தில் வரவழைத்து கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
    • 68 பயனாளிகளுக்கு கடன் வழங்கியது போல், மற்ற விண்ணப்பங்கள் மீதும் நடவடிக்கை.

    நாகப்பட்டினம்:

    பொருளாதார நெருக்கடி யின் காரணமாக உயர்கல்வியை தொடர முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில், நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், கல்விக் கடன் முகாம், கடந்த 28-ந் தேதி அன்று நடத்தப்பட்டது.

    தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் என மொத்தம் 18 வங்கிகள் பங்கேற்ற அந்த முகாமில், மொத்தம் 304 மாணவர்கள் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தனர். அந்த விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலித்து அதில் 68 பயனாளிகளுக்கு நேற்று 2.70 கோடி ரூபாய் கல்விக் கடன் வழங்கப்பட்டது.

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ், வங்கிகளை தேடி மாணவர்கள் அலைந்த நிலை மாற்றப்பட்டு, அனைத்து வங்கிகளையும் ஒரே இடத்தில் வரவழைத்து கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

    விரைந்து செயல்பட்டு கடன் வழங்கிய வங்கிகளுக்கு பாராட்டுகள்.

    கடன் பெற்ற மாணவர்கள் அதை பொறுப்புடன் திருப்பிச் செலுத்த வேண்டும். 68 பயனாளிகளுக்கு கடன் வழங்கியது போல், மற்ற விண்ணப்பங்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு ஷா நவாஸ் எம்.எல்.ஏ பேசினார்.

    விழாவில், மாவட்ட கலெக்டர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என்கெளதமன், தாட்கோ தலைவர் உ.மதிவாணன், நாகைமாலி எம்.எல்.ஏ மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகளவில் காலா மீன், வாவல், நிலக்கால் நண்டு, புள்ளி நண்டு, இறால் உள்ளிட்ட மீன்கள் கிடைத்துள்ளன.
    • மீன்களை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதா ரண்யம் கோடியக்கரையில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலமாகும்.

    தற்போது பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரையில்யில் தாங்கி மீன் பிடித்து வருகின்றனர்.

    காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 10 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாத நிலையில் நேற்று இரவு மீன் பிடிக்க சென்ற கோடியக்கரை மீனவர்களது வலையில் அதிக அளவில் காலாமீன், வாவல், நிலக்கால் நண்டு, புள்ளி நண்டு, இறால், உள்ளிட்ட மீன்கள் கிடைத்துள்ளன.

    இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் காலா மீன் கிலோ ரூபாய் 500, வாவல் மீன் ரூ. 700, இறால் ரூ. 200,நீலக்கால் நண்டு ரூ. 700, புள்ளிநண்டு ரூ.200க்கும், ஏலம் போயின.

    ஒரே நாளில் 5 டன்மீன்கள் கிடைத்ததாலும் அதற்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மீன்களை வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஐஸ் வைத்து அனுப்பும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

    • ரூ.25.99 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான ஆணை.
    • ரூ.38 லட்சத்து 35 ஆயிரத்து 549 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், பஞ்சநதி க்குளம் நடுச்சேத்தி ஊராட்சியில் சிறப்பு மக்கள்நேர்காணல் முகாம் கலெ க்டர்அருண்தம்பு ராஜ் தலைமையில் நடைபெற்றது.

    முகாமில் கலெக்டர் அருண்தம்புராஜ் பேசி யதாவது:-

    இந்த ஊராட்சியில் கடந்த முறை கணபதிதேவன்காடு கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெரு சாலையை ரூ.34.86 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட சாலை அமைக்கவும், சிறுதலைக்காடு சாலையை ரூ.14.84 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலையாக அமைக்கவும், கணபதிதேவன்காடு அடப்போடை சாலையை ரூ.14.05 லட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு கப்பி சாலையாக மாற்றும் பணியையும் வழங்கியுள்ளது.

    அதனை தொடர்ந்து தற்போது ரூ.25.99 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான ஆணை, ஆவடைக்கோன் காடு மயான சாலையில் ரூ.27.76 லட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு ஜல்லி சாலையாக மாற்றுவதற்கும், கணபதி தேவன் காடு மயான கொட்டகையின் கூரை அமைக்கும் பணிக்காக ரூ.3 லட்சம் மதிப்பீட்டிலும் மூன்று பணிகள் நடைபெறுவதற்கான ஆணை வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    முகாமில் மாற்றுத்தி றனாளி நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ. 59,150 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 150 பயனாளிகளுக்கு சுமார் ரூ.38 லட்சத்து 35 ஆயிரத்து 549 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார். முகாமில் வருவாய் அலுவலர் ஷகிலா, வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ பௌலின், வேளாண் இணை இயக்குனர் அகண்டாராவ், ஒன்றிய குழு தலைவர் கமலா அன்பழகன், ஊராட்சிமன்ற தலைவர்கள் சத்தியகலா, தேவி தமிழரசி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப்பையன், ஒன்றிய கவுன்சிலர் கண்ணகி, மருதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குநர் உதயம் முருகையன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ராஜ், பாஸ்கர் தாசில்தார் ஜெயசீலன் தனி வட்டாட்சியர்கள் ரமேஷ், வேதையன், மாதவன், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

    ×