என் மலர்
மயிலாடுதுறை
சீர்காழி:
சீர்காழி அருகே திருக்கக்காவூர் மந்தக்கருப்பண்ண சுவாமி, ஏழைக்காத்தம்மன், காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாகவிழா நடைபெறாதநிலையில் இந்தாண்டுகோவிலின் திருவிழா கொடியேற்ற த்துடன் தொடங்கியது.
உப்பனாற்றங்கரையில் இருந்து கரகம் எடுத்து வரப்பட்டது. அதனையடுத்து வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாலியை பக்தர்கள் கோவிலுக்கு எடுத்து வந்து வைத்தனர்.
தொடர்ந்து கோவிலில் இருந்து பெரிய கரகத்தை எடுத்து செல்ல, தொடர்ந்து விரதமிருந்த 500-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் முளைப்பாரியை எடுத்துக் கொண்டு உப்பனாற்று கரைக்கு சென்றனர்.
அங்கு பூஜைகள் முடிவடைந்த பின்னர் பெண்கள் அனைவரும் தாங்கள் எடுத்து வந்த முளைப்பாரிகளை ஆற்றில் கரைத்து நேர்த்திக்கடனை செலுத்திய பின்னர் கோவி லுக்கு வந்து வழிபட்டனர்.
- சுருக்கு வலை, இரட்டை மடி வலை உள்ளிட்ட வலைகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
- மீனவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக மீன்பிடித் தொழில் செய்ய முடியாமல் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக கூறினர்.
சீர்காழி:
சுருக்குவலையை பயன்படுத்தி மீன்படிக்க அனுமதிக்கவேண்டும் என சுருக்குவலை ஆதரவு 18மீனவ கிராம பிரதிநிதிகள் சீர்காழி கோட்டாட்சியரிடம் அமைதி பேச்சுவார்த்தையின்போது செவ்வாய்கிழமை வலியுறுத்தினர்
மீன்பிடி தடை காலம் செவ்வாய்கிழமை இரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில் கடலோரப் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வெள்ளைமணல் பூம்புகார் சின்னுர்பேட்டை, சந்தரபாடி வரையிலான 18 மீனவ கிராமங்களில் சுருக்குவலை பயன்படுத்தும் மீனவர்கள் வசித்து வருகின்றனர்.
அரசின் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் 1983 இல் உள்ள இருபத்தியோரு விதிகளில் காரணமாக கடந்தமூன்று ஆண்டுகளாக சுருக்கு வலை, இரட்டை மடி வலை உள்ளிட்ட வலைகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் நாளை மீன்பிடி தடை காலம் முடிவடையவதையொட்டி சுருக்குவலை பயன்படுத்தும் மீனவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி கோட்டாட்சியர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சுருக்குவலை மீனவர்களை அழைத்து சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் அர்ச்சனை தலைமை யில்அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.
வட்டாட்சியர் செந்தி ல்குமார், டிஎஸ்பிலாமெக், கடலோர காவல் அமலா க்கபிரிவு இன்ஸ்பெக்டர் வெர்ஜினியா மற்றும் மீன்வளத்துறை அதிகா ரிகள் முன்னிலை வகி த்தனர்.அப்பொழுது தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித் தொழில் செய்யக்கூடாதுஎன கோ ட்டாட்சியர் தெரிவித்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்க மறுத்த மீனவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக மீன்பிடித் தொழில் செய்ய முடியாமல் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகவும் எனவே எவ்வித தடையுமின்றி வழக்கம் போல் இந்த ஆண்டு தங்கள் மீன்பிடித் தொழிலை செய்ய அனுமதிக்க வேண்டு மெனவும் கோரிக்கை விடுத்து கலை ந்து சென்றனர்.
மேலும் மீன்பிடி ஒழுங்கு முறைசட்டத்தை முழுமையாக அமல்படு த்தவும் கோரிக்கை விடுத்து ள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (40). இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த கணபதி (36), கார்த்திகேயன் (35), விக்னேஷ் ஆகியோரிடம் கடனாக மொத்தம் ரூ.20 ஆயிரம் வரை பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சுந்தரமூர்த்தியிடம் கணபதி, கார்த்திகேயன், விக்னேஷ் மூவரும் பணத்தை கேட்டு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சுந்தரமூர்த்தி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டர். இதுதொடர்பாக அவரது மனைவி கமலி திருவெண்காடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கந்து வட்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கணபதி, கார்த்திகேயன் ஆகிய இருவரையும் கைது செய்ததுடன் தலைறைவான விக்னேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறைமாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த புற்றடிமாரி அம்மன் ஆலயத்தில் கடந்த கடந்த ஏப்ரல் 29ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து தினம் தோறும் மண்டலாபிஷேகம் நடைபெற்று வந்தது.இந்நிலையில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது.
இதனையொட்டி உலக தேச நலன் பெற வேண்டி அம்மனுக்கு சர்வ மங்கள மகா சண்டி யாகம் நடைபெற்றது. யாகத்தில் 108வகையான மூலிகை, வேதிகை பொருட்கள், பட்டுபுடவை, தங்கதாலி, வெள்ளிகொலுசுஆகியவை இட்டு பூர்ணாஹூதி,தீபாரா தனை நடை பெற்றது. முன்னதாக கோபூஜை, கஜபூஜைகள் செய்யப்ப ட்டது. மகாதீபா ராதனை கட்டப்பட்டது.பின்னர் யாகத்தில் வைத்து பூஜிக்க ப்பட்ட 108 கலசங்களைக் கொண்டு அம்மனுக்கு கலச அபிஷேகம் நடைபெ ணற்றது.பூஜைகளை வைத்தீஸ்வரன்கோயில் ராஜாமகாதேவ சிவாச்சா ரியார் தலைமை யில் 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் செய்தனர்.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
- ஆலை தொழிலாளர்களும், கரும்பு விவசாயிகள் பலமுறை போராட்டம் நடத்தியும், கடந்த ஆட்சியில் ஆலையை இயக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- தமிழக அரசு ஆலையை இயக்க 10 பேர் கொண்ட ஆய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறைஅருகே தலைஞாயிறு கிராமத்தில் என்.பி.கே.ஆர்.ஆர் அரசு கூட்டுறவு சக்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை அதிகாரிகளின் அலட்சியத்தினாலும், தவறான ஆலை விரிவாக்க த்தாலும் நஷ்டம் ஏற்பட்டு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது.
இதனால் ஆயிரக்கணக்கான கரும்பு விவசாயி களும், ஆலை தொழிலாளர்களும் வேலை இன்றி பாதிக்கபட்டனர், ஆலை தொழிலாளர்களும், கரும்பு விவசாயிகள் பலமுறை போராட்டம் நடத்தியும், கடந்த ஆட்சியில் ஆலையை இயக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது தமிழக அரசு ஆலையை இயக்க 10 பேர் கொண்ட ஆய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது.இந்த குழுவில் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் சிவமலர் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் இந்த ஆலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு பணிபுரிந்த போது ஆலை மூடுவதற்கு காரணமாக இருந்தவர் எனக் கூறியும்,
இவரை தற்போது ஆய்வு குழுவில் இருப்பதால் இவர் ஆலைக்கு எதிராக தான் செயல்படுவார்.எனவே இந்தகுழுவில் இருந்து நீக்க வலியுறு த்தியும், மக்களால் தேர்ந்தெடு க்கபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராஜகுமார், ஆலை இயங்காது என மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்வதை கண்டித்தும் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், மாநில கரும்பு விவசாய சங்க செயலாளர் காசிநாதன் தலைமையில் கவனஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்பா ட்டத்தில்நூற்றுக்கு மேற்பட்ட கரும்பு விவசா யிகள் கலந்து கொண்டு, கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் சிவமலர் எதிரா கவும், எம்.எல்.ஏராஜ்குமாருக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
மீன் பிடிதடைக்காலம் முடிந்து மீன்பிடிப்புக்கு செல்லும் அனைத்து மீனவர்களும் உயிர்காப்பு சாதனங்கள், மீனவர் அடையாள அட்டை, மீன்பிடி–கலனின் பதிவுசான்று, மீன்பிடி உரிமம், மீன்பிடி கலனிற்கான காப்புறுதி ஆவணம் மற்றும் குறியீடு இட்ட ஆதார் அடையாள அட்டை ஆகிய ஆவணங்கள் தவறாது எடுத்து செல்லவும் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983 மற்றும் 2020 அரசாணை எண்.எம்.எஸ்.40, கால்நடை பராமரிப்பு மற்றும் மீனவளத்துறை (4) நாள் 25.03.2000-ன் மற்றும் வழிகாட்டுலின்படி செயல்படவும் அனைத்து மீன்பிடி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு உரிமை யாளர்கள் கேட்டுக்ெகாள்ள ப்படுகிறார்கள்.
தவறும் பட்சத்தில் தமிழ்நாடு கடல்மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தி–ன்படி உரிய நடவடிக்கை மேற்ெகாள்ளப்படும். மேலும் மீன்வளம் மற்றும் மீன்வர்நலத்துறை வாயிலாக வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் அனைத்து ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே திருவிழந்நூர் ஊராட்சி காமராஜர் தெருவை சேர்ந்தவர்கள் சாலைவசதி செய்து தரகோரி சாலை மறியல் செய்தனர்.
தகவலறிந்த இன்பெக்டர் செல்வம் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது சாலை மறியல் செய்த மக்கள் கூறியதாவது. கடந்த பத்து வருடங்களுக்கு மேல் சாலைவசதிகள் இல்லாமல் பெரும் சிரமத்து க்கு ஆளாக்கப்பட்டு வருகிறோம். ஆளுங்கட்சியை சேர்ந்த கூட்டணி எம்.எல்,ஏ. சாலை போட்டு தருவதாக வாக்குறுதி அளித்தார் இதுவரை கண்டுகொள்ளவில்லை.
பள்ளி மாணவ மாணவிகள்,வேலைக்கு போகிறவர்கள் கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் உள்ளிட்டவர்கள் குண்டும் குழியுமான சாலையை கடந்து செல்ல வேண்டி இருப்பதால் அவசர உதவிக்கு ஆட்டோக்காரர்கள் கூட வருவதில்லை. இப்பகுதியில் சுமார் 250 குடும்பங்களை சேர்ந்தவர்கள்வசித்து வருகிறோம்.எங்க ளுக்கு உடனடியாகஇப்பகு தியில்சாலை வசதியை ஏற்்படுத்தி தர வேண்டும் என்ற னர்.உரிய அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
சீர்காழி:
கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திங்கள்கி ழமை பள்ளி திறக்கப்பட்டது. பள்ளி திறந்த முதல் நாளே மாணவர்களுக்கு அரசு வழங்கும் விலையில்லா புத்ககம் உள்ளிட்டஉபகர ணங்களை வழங்க வேண்டும் என உத்தரவிட ப்பட்டுள்ளது.
அதன்படி சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலை ப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி தலைமையில் மாண வர்களுக்கு விலையில்லா புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்ப்பட்டது. அப்போது உடற்கல்வி இயக்குனர் முரளிதரன், தேசிய மாணவர் படை அலுவலர் சிவக்குமார் உடனிருந்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இலவச மருத்துவ ஆலோ சனை முகாம் நடைபெற்றது.
முகாமை, ராஜகுமார் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். ஜெம் மருத்துவமனை இயக்குனரும், குடல்நோய் மருத்துவ நிபுணருமான செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். முகாமில், மகளிர் நலம், வயிற்றுக்கோளாறு, உடல் பருமன், குடலிரக்கம், கல்லீரல், கணையம், பித்தப்பை மற்றும் குடல் சம்பந்தமானபிரச்னை களால் பாதிக்கப்ப ட்டவ ர்களுக்கு பரிசோத னைகள் மேற்கொ–ள்ள ப்பட்டு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
மேலும் முகாமில் எண்டோஸ்கோப்பி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைதேவைப்ப டுவோர்க்கு 50 சதவீதம் வரை சிறப்பு சலுகைகள் வழங்க ப்படவுள்ளது. நிகழ்ச்சியை ஜெம்ம ருத்து– வமனை, மயிலா டுதுறை கிங்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் குத்தாலம் ஸ்ரீஆதிச ங்கரர் பேரவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பாலச்சந்திர சிவச்சாரியார், ஏ.ஆர்.சி. விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொன்டனர்.
- மாத்தூர் கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 185 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
- பள்ளியில் உள்ள 1, 2, 3-ம் வகுப்பறைகள் ரெயில் பெட்டிகள் போன்று வர்ணம் தீட்டி புதுப்பிக்கப்பட்டது.
தரங்கம்பாடி:
பூம்புகார் தொகுதி, செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம் மாத்தூர் கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 185 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு 8 ஆசிரியர்கள் கல்வி கற்பித்து வருகின்றனர்.இந்நிலையில் கோடை விடுமுறை நாட்கள் முடிவடைந்தது.
பள்ளியில் உள்ள 1, 2, 3ம் வகுப்பறைகள் ரெயில் பெட்டிகள் போன்று வர்ணம் தீட்டி புதுப்பிக்கப்பட்டது. இதனை பார்த்த மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.விடுமுறை முடிந்த நிலையில் நேற்று புதுப்பி க்கப்பட்ட வகுப்பறைகள் திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு ஒன்றிய குழுத்தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.
தலைமை ஆசிரியர் மங்கை, ஊராட்சி மன்ற தலைவர் ராஜலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில் பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் கலந்துகொண்டு புதுப்பி க்கப்பட்ட வகுப்பறைகளை திறந்து வைத்தார். தொட ர்ந்து மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இதில் ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் செல்வ ராஜ், வட்டார கல்வி அலுவலர்கள் பூவராகவன், டேவிட் பிரேம்குமார், தி.மு.க மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஸ்ரீதர், பொதுக்குழு உறுப்பினர் அமுர்தவிஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரிசெய்வதில் தன்னார்வலர்களின் பங்கு மகத்தானது.
- பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது போன்றவற்றை சமூக நோக்கத்துடன் கண்டறிந்து தகவல் அளிக்க வேண்டும்.
சீர்காழி:
கொள்ளிடம் ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. கூட்ட த்திற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் சீனிவாசன், சரஸ்வதி கூட்டத்தை தொடங்கிவைத்து தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். வட்டார வளமைய ஆசிரியர் பயி ற்றுநர் கவிதா வரவேற்றார்.
கூட்டத்தில மேற்பார்வை யாளர் ஞானபுகழேந்தி பேசுகையில், கொரோனா பெருந்தொற்றினால் மாண வர்களுக்குஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரிசெ ய்வதில் தன்னார்வலர்களின் பங்கு மகத்தானது. பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது போன்றவற்றை சமூக நோக்கத்துடன் நீங்கள் கண்டறிந்து தகவல் அளிக்க வேண்டும். மாணவர்களின் வாசித்தலை மேம்படுத்த குழந்தைகளுக்கு தொடர் பயிற்சி அளிக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக வட்டார ஒருங்கி ணைப்பாளர் ரஞ்சித் நன்றி கூறினார்.
சீர்காழி:
சீர்காழி அருகே ஆர்ப்பாக்கத்தில் பூரணபுஷ்க லாம்பிகா சமேத அய்யனார் ஆலய கும்பாபிஷேகம 6வது ஆண்டு நிறைவு விழா, சம்வத்ஸரா அபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்க ப்பட்டு சிறப்பு ஹோமம் நடைபெற்று பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர்.






