search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
    X

    கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

    • ஆலை தொழிலாளர்களும், கரும்பு விவசாயிகள் பலமுறை போராட்டம் நடத்தியும், கடந்த ஆட்சியில் ஆலையை இயக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • தமிழக அரசு ஆலையை இயக்க 10 பேர் கொண்ட ஆய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறைஅருகே தலைஞாயிறு கிராமத்தில் என்.பி.கே.ஆர்.ஆர் அரசு கூட்டுறவு சக்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை அதிகாரிகளின் அலட்சியத்தினாலும், தவறான ஆலை விரிவாக்க த்தாலும் நஷ்டம் ஏற்பட்டு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது.

    இதனால் ஆயிரக்கணக்கான கரும்பு விவசாயி களும், ஆலை தொழிலாளர்களும் வேலை இன்றி பாதிக்கபட்டனர், ஆலை தொழிலாளர்களும், கரும்பு விவசாயிகள் பலமுறை போராட்டம் நடத்தியும், கடந்த ஆட்சியில் ஆலையை இயக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது தமிழக அரசு ஆலையை இயக்க 10 பேர் கொண்ட ஆய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது.இந்த குழுவில் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் சிவமலர் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் இந்த ஆலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு பணிபுரிந்த போது ஆலை மூடுவதற்கு காரணமாக இருந்தவர் எனக் கூறியும்,

    இவரை தற்போது ஆய்வு குழுவில் இருப்பதால் இவர் ஆலைக்கு எதிராக தான் செயல்படுவார்.எனவே இந்தகுழுவில் இருந்து நீக்க வலியுறு த்தியும், மக்களால் தேர்ந்தெடு க்கபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராஜகுமார், ஆலை இயங்காது என மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்வதை கண்டித்தும் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், மாநில கரும்பு விவசாய சங்க செயலாளர் காசிநாதன் தலைமையில் கவனஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்பா ட்டத்தில்நூற்றுக்கு மேற்பட்ட கரும்பு விவசா யிகள் கலந்து கொண்டு, கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் சிவமலர் எதிரா கவும், எம்.எல்.ஏராஜ்குமாருக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.

    Next Story
    ×