என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரை மாநகரில் சித்திரை திருவிழாவையொட்டி 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
    • பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம், அழகர் ஆற்றில் இறங்குதல் ஆகி யவை முக்கிய நிகழ்ச்சி களாகும்.

    இந்த நிலையில் தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சங்கர் நேற்று மதுரை வந்தார். மாநகர போலீஸ் கமிஷனர் அலுவல கத்தில் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திரு விழாவில் போதிய பாது காப்பு கொடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    அப்போது சித்திரை திருவிழா பாதுகாப்பு தொடர்பாக அதிகாரி சங்கர் பல்வேறு ஆலோ சனைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர், தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    பின்னர் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் மீனாட்சி அம்மன் கோவில் உள்பட பல்வேறு பகுதி களுக்கு சென்று பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்தார். திருக்கல்யாணம், தேரோட்டம், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், அழகர் கோவிலில் சுவாமி புறப்படும் இடம் ஆகிய வற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கள்ளழகர் வைகை ஆற்றுக்குள் இறங்கும் வைபவத்துக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    கடந்தாண்டு சித்திரை திருவிழாவின்போது வைகை ஆற்றுக்குள் 2 பக்தர்கள் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். நடப்பாண்டு திருவிழாவில் அசம்பாவிதம் நடக்காத வகையில் போலீசார் பாது காப்பு பணிகளை மேற்கொள்வது என்று முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக மதுரை மாநகரில் மட்டும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாக போலீஸ் கமிஷனர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • முத்தரையர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • முத்தரையர் சாதிகளுக்கு என்று தனியாக ‘‘வலையர் புனரமைப்பு வாரியம்’’ அமைக்க வேண்டும்.

    மதுரை

    தமிழ்நாடு முத்தரையர் சங்க மதுரை மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. பொதுச் செயலாளர் குப்புசாமி, மாவட்டச் செயலர் அழகுமணி, பொருளாளர் ராமநாதன், துணைத் தலைவர் நடராஜன், ஆடிட்டர் ஆண்டிசாமி, துணைச் செயலாளர்கள் அழகுமுருகன், பீ.பீ.குளம் பாண்டி, மாநில் பொதுக்குழு உறுப்பினர்கள் குப்பு வெங்கடேசன், குண்டுமலை, அழகர், தமிழ் செல்வன், கருப்பையா, மகாமுனி, உத்தப்புரம் கருப்பையா, மதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பெரும்பிடுகு முத்தரையர் 1348-ம் பிறந்தநாள் விழாவை அடுத்த மாதம் 23-ந் தேதி சிறப்பாக கொண்டாடுவது, சென்னை சிந்தாதிரி பேட்டையில் தலைமை சங்க கட்டிட திறப்பு விழாவிற்கு மதுரை மாவட்டத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பது, தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு- புள்ளிவிபர சேகரிப்புகளை எடுக்க வேண்டும்.

    இதன் அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பில் முத்தரையர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். முத்தரையர் சங்கத்தின் உட்பிரிவை சேர்ந்த வலையர், செட்டிநாடு வலையர், அம்பலகாரர், சேர்வை ஆகிய 4 சாதிகள் சீர்மரபினர் பட்டியலில் உள்ளன. நாங்கள் இன்னமும் பின்தங்கிய நிலையில் தான் உள்ளோம். எனவே முத்தரையர் சாதிகளுக்கு என்று தனியாக ''வலையர் புனரமைப்பு வாரியம்'' அமைக்க வேண்டும்.

    அதில் எங்கள் சமுதாயத்தை சேர்ந்த 4 பேரை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினராக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மதுரை சித்திரை திருவிழாவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள்.
    • தனியார் மருத்துமனைகள் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுரை:

    சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் மதுரை வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை சித்திரை திருவிழாவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு தொற்றுநோய் பாதிப்பு வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவிழாவை முன்னிட்டு மதுரையில் குடிநீர் சுகாதாரமாக வழங்க ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் நகரில் கொசுத்தொல்லை இல்லாத வண்ணம் மாநகராட்சி மூலம் அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருவிழாவின்போது இலவசமாக பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள், நீர்-மோர் உள்ளிட்ட குளிர்பானங்கள் தரம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அன்னதானங்களை சுகாதாரத்துறை அனுமதி பெற்று தான் வழங்கவேண்டும்.

    இவர்கள் உணவு மற்றும் குளிர்பானங்களில் செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து தரமற்ற உணவுகளை விநியோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். கடந்த ஆண்டு 20 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு 56 இடங்களில் முகாம்கள் அமைக்கப்படும்.

    தனியார் மருத்துமனைகள் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாடிப்பட்டி அருகே 2-ந் தேதி மின்தடை ஏற்படுகிறது
    • பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    மதுரை

    சமயநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட வாடிப்பட்டி துணைமின் நிலையத்தில் உள்ள ராயபுரம் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக நாளை மறுநாள் (2-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ரிஷபம், திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிப்பட்டி பங்களா ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    • மேலூர் அரசு கல்லூரி ஆண்டு விழா நடந்தது.
    • அலுவலக பணியாளர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மேலூர் அரசு கலைக் கல்லூரி ஆண்டு விழா நடந்தது. முதல்வர் மணிமேகலா தேவி தலைமை தாங்கினார். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடந்தன. சிறப்பு விருந்தினராக மேலூர் நகர்மன்ற தலைவர் முகமது யாசின் பங்கேற்று கலை நிகழ்ச்சி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    இதில் இணை பேராசிரியர்கள் கணேசுவரி, அந்தோணி செல்வராஜ், மற்றும் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் விளையாடி மாணவி உலக சாதனை படைத்தார்.
    • சிலம்பம் விளையாட பயிற்சியாளர் ஈஸ்வரன் குழுவினர் கடந்த 3 மாதமாக பயிற்சி அளித்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டியில் செயல்பட்டு வரும் சிலம்ப பயிற்சி நிறுவனம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிலம்பப் போட்டிைய நடத்தியது. உலக சாதனை படைக்க நோபல் நிறுவனத்துடன் இணைந்து மாணவர்கள் கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் விளையாட பயிற்சியாளர் ஈஸ்வரன் குழுவினர் கடந்த 3 மாதமாக பயிற்சி அளித்தார். இந்த நிலையில் இன்று டி.கல்லுப்பட்டி-கள்ளிக்குடி சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 110 மாணவ-மாணவிகள் பங்கேற்று கண்கள், கால்களை கட்டிக்கொண்டு 30 நிமிடம் தொடர் சிலம்பம் விளையாடும் நிகழ்ச்சி நடந்தது.

    சிலம்ப கலையின் உள் சுத்து வெளிச்சுத்து, கிறுக்கி, பகிழ் உடான், நாலடி, தலை வெட்டு முன் கம்புபின்னல் பிரித்தல், பின்கம்பு பின்னல் பிரித்தல், உள்சுத்துகை மாற்றுதல், வெளிச்சுத்து கை மாற்றுதல், நான்கடி கைமாற்றுதல், தொடு முறை சுற்றுதல் என பல்வேறு கலைகளை 30 நிமிடத்தில் செய்து காண்பித்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர். உலக சாதனை புரிந்த மாணவ-மாணவிகளுக்கு நோபல் புக் ஆப் ரெகார்ட்ஸ் சார்பில் வினோத் குமார், புளியம்பட்டி பஞ்சாயத்து தலைவர் மணிகண்டன் ஆகியோர் சான்றிதழும், கேடயமும் வழங்கினர்.

    • ரெயில்-பஸ்களில் மது குடித்து விட்டு ரகளையில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
    • மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டால் அவர்களுக்கு பெரிய தொகையை அபராதமாக விதிக்க வேண்டும்.

    மதுரை

    மதுரை மாநகரம் சென்னைக்கு அடுத்து பெரிய நகரமாக விளங்கி வருகிறது. தெற்கு -வடக்கு மாவட்டங்களை இணைக்கும் மையப் பகுதி யாக மதுரை திகழ்கிறது. மதுரைக்கு ரெயில் மற்றும் பஸ்கள் மூலம் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வருகை தருகின்ற னர்.

    இந்தநிலையில் மது குடித்துவிட்டு பஸ் மற்றும் ரெயில்களில் பயணம் செய்யும் சில பயணிகள் ரகளையில் ஈடுபடுவதால் அனைத்து பயணிகளும் அவதிப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    சமீபத்தில் சென்னையில் இருந்து மதுரை வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மது குடித்து வந்த பயணிகள் மோதலில் ஈடுபட்டனர். அவர்களை வேறு வேறு பெட்டிகளில் போலீசார் பிரித்து வைத்த னர். இருந்த போதிலும் போதை அதிகமான ஒரு வாலிபர் மீண்டும் மீண்டும் வேறு பெட்டிக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட தால் அவரை ரெயில்வே போலீசார் எச்சரித்தனர். அவரது தொல்லை சில மணிநேரம் நீடித்ததால் ஆத்திரமடைந்த போலீசார் அவரை அடித்து வழிக்கு கொண்டு வந்தனர்.

    இதேபோல் நீண்ட தூரம் செல்லும் பஸ்களிலும் பயணிகள் மது குடித்துவிட்டு வந்து மோதலில் ஈடுபடும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. மதுரை யில் இருந்து செல்லும் பஸ்களில் போதையில் பயணம் செய்யும் பயணிகள் அடிக் கடி ரகளையில் ஈடுபடுவது தொடர்ந்து வருகிறது.

    இத்தகைய சம்பவங் களால் பாதிக்கப்படும் பயணிகள் பஸ் மற்றும் ரெயில்களில் மது குடித்து விட்டு பயணம் செய்பவர் களை அனுமதிக்கக்கூடாது.

    மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டால் அவர்களுக்கு பெரிய தொகையை அபராதமாக விதிக்க வேண்டும் அல்லது சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று கூறுகின்ற னர். இதனை நடைமுறைப் படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா?

    • போட்டி தொடங்குவதற்கு முன்பு மாடுபிடி வீரர்கள் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
    • சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.

    மதுரை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி தி.மு.க. சார்பில் எம்.சத்திரப்பட்டியில் இன்று மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

    இதற்காக அங்குள்ள திடலில் வாடிவாசல் ஏற்படுத்தப்பட்டு 10 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வகையில் பிரமாண்ட கேலரிகளும் அமைக்கப்பட்டிருந்தன.

    இன்று காலை 7 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதனை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். முன்னதாக போட்டி தொடங்குவதற்கு முன்பு மாடுபிடி வீரர்கள் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் அமைச்சர்கள் மூர்த்தி, ஐ.பெரியசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், மெய்யநாதன், ராஜ கண்ணப்பன், சிவசங்கரன், கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங், எம்.எல்.ஏ.க் கள் தளபதி, சோழவந்தான் வெங்கடேசன், புதூர் பூமிநாதன் மற்றும் கூடுதல் கலெக்டர் சரவணன், தி.மு.க. நிர்வாகி கள் சோமசுந்தர பாண்டியன், ஜி.பி.ராஜா, மருது பாண்டி, வக்கீல் கலாநிதி, வீரராகவன், வைகை மருது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியவுடன் வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் வீரர்கள் பிடியில் சிக்காமல் போக்கு காட்டி யது. வீரர்களும் அதற்கு இணையாக காளைகளை அடக்கினர்.

    ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இதேபோல் 776 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். 10 சுற்றுகளாக நடைபெறும் ஜல்லிக்கட்டில் ஒவ்வொரு சுற்றிலும் குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் வீரர்கள் களம் இறக்கப்பட்டனர்.

    ஜல்லிக்கட்டு போட்டியில் இறுதி சுற்றுவரை பங்கேற்று வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரருக்கும், காளை உரிமையாளருக்கும் முதல் பரிசாக கார்கள் வழங்கப்படுகிறது. இதேபோல் இருபிரிவிலும் 2-ம் பரிசாக 2 புல்லட் பைக்குகளும், 3-ம் பரிசாக 2 ஹீரோ பைக்குகளும் வழங்கப்படுகிறது.

    அதேபோல போட்டியில் பங்கேற்ற அனைத்து காளைகளுக்கும் ஒரு கிராம் தங்க காசு வழங்கப்பட்டது. சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்க பரிசும், வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, சைக்கிள் உள்ளிட்ட சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். போட்டியில் காயம் அடையும் வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவ குழுவும், ஆம்புலன்சு வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார தொடக்க விழா நடந்தது.
    • உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை கடச்சனேந்தலில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் அறக்கட்டளை இணைந்து நடத்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் மதுரை கிழக்கு மண்டல மகளிரணி சார்பில், மனித உரிமை ஆர்வலரும், மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவருமான சென்னை காஜா தலைமையில் நடந்தது.

    மாவட்ட அமைப்பாளர் நந்தகுமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நித்யானந்தம், கிழக்கு மண்டல அமைப்பாளர் லூர்துராஜா முன்னிலை வகித்தனர். கிழக்கு மண்டல மகளிரணி அமைப்பாளர் தவமணி வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மதுரை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசேகரன் பங்கேற்று விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார். விழாவில் பொதுமக்களுக்கு மஞ்சள் துணிப்பையும், இனிப்பும் வழங்கப்பட்டது. இதில் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பாசிச சக்திகளை வீழ்த்திட பாட்டாளி வர்க்கம் ஒன்றுபடுவோம் என்று பசும்பொன் பாண்டியன் தெரிவித்தார்.
    • பாட்டாளி வர்க்கத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உழைக்கும் வர்க்கம் மே தினத்தை சீரும் சிறப்புமாக கொண்டாடி மகிழ்ந்து வருகிறோம், பாட்டாளி வர்க்கத்தை கொத்தடிமை களாக பாவித்து உழைப்பைச் சுரண்டிய முதலாளி வர்க்கத்திற்கு எதிராக சிகாகோ நகரின் ரத்தப் புரட்சியால் விளைந்த பயனே உலகம் முழுவதும் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்பது.

    இது உழைக்கும் வர்க்கத்திற்கு கிடைத்த புரட்சியின் பயனாகும், இந்தியாவில் திராவிட பூமியான தமிழ் மண்ணில் தான் மே தினம் முதன் முதலாக கொண்டாடிய வரலாற்று பெருமை சிங்காரவேலருக்கும், சக்கரைச் செட்டியாருக்கும் கிடைத்த வரலாற்று பெருமையாகும்,

    தொழிலாளர் விடு தலைக்காக போராடிய தமிழ்த்தென்றல் திரு.வி.க. வை நாடு கடத்த வேண்டும் என்று அன்றைய ஆங்கில ஏகாதிபத்திய அரசு முடிவு செய்தது. தந்தை பெரியாரின் கிளர்ச்சியால் நீதி கட்சி அரசால் அந்த உத்தரவு திரும்பபெறப்பட்டது,

    மே தினத்தன்று இந்தியா விலேயே தமிழகத்தில் தான் சம்பளத்துடன் கூடிய விடுமுறை என அறிவித்தது அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி. அதைப்போல 1990-ல் பிரதமராக இருந்த வி.பி.சிங், கருணாநிதியின் பரிந்துரையால் நாடு முழு வதும் சம்பளத்துடன் கூடிய மே தின விடுமுறையை அறிவித்தார். கருணாநிதி மே தின முழக்கமாக 8 மணி நேரம் வேலை என்பதை 6 மணி நேரமாக குறைத்திட வேண்டும் என்று முழங்கி னார். அதன் அடிப்படையில் தான் திராவிட மாடல் அரசின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் 12 மணி வேலை என்கின்ற சட்டத்தை அனைத்து தொழிற்சங்களி னுடைய வேண்டுகோளை ஏற்று நிறுத்தி வைத்தி ருக்கிறார்.

    பா.ஜனதா அரசு தொடர்ந்து தொழிலாளர்க ளுக்கு எதிராக தொழிலாளர் விரோதச் சட்டங்களை பாராளுமன்ற விவாதங்கள் இல்லாமலே சர்வாதிகார மாக நிறைவேற்றி வருகிறது, பாட்டாளி வர்க்கத்தின் நில உரிமைகளை பாதுகாத்திட உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை வென்றெடுக்க பாசிச சக்திகளை வீழ்த்திட பாட்டாளி வர்க்கமே ஒன்றுபடுவோம். உலகம் முழுவதும் உள்ள பாட்டாளி வர்க்கத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • பிச்சாடனர் கோலத்தில் சுந்தரேசுவரர் வீதி உலா நடக்கிறது.
    • 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    மதுரை

    மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் 7-வது நாளான இன்று காலை தங்க சப்பரத்தில் பிச்சாடனர் கோலத்தில் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மனுடன் உலா வந்தார்.

    இறைவனை மறந்த ரிஷிகளுக்கும், ரிஷிபத்தி னிகளுக்கும் உணர்த்தும் வகையில் பிச்சாடனர் கோலத்தில் சுவாமியும்- அம்பாளும் பிச்சை பாத்தி ரம் ஏந்தி வலம் வந்தனர்.

    4 மாசி வீதிகள் வழியாக பிச்சாடனர் கோலத்தில் வலம் வந்த சுவாமிகளுக்கு பக்தர்கள் பிச்சை யளித்தனர். வீதி உலா முடிந்து மீண்டும் கோவிலுக்கு வந்த சுவாமி- அம்மன் சிவகங்கை ராஜா மண்டகப்படி, மீனாட்சி நாயக்கர் மண்டபங்களில் எழுந்தருளினர்.

    இன்று இரவு 7 மணி யளவில் நந்திகேசுவரர், யாழி வாகனத்தில் சுவாமி- அம்மன் வீதிஉலா 4 மாசி வீதிகளிலும் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.

    பட்டாபிஷேகம்

    சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடத்தும் நிகழ்ச்சி நாளை (30-ந்தேதி) நடக்கிறது. இரவு 7.05 மணிக்கு மேல் 7.29 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.

    அப்போது மீனாட்சி அம்மனுக்கு ராயர் கிரீடம் சூட்டி நவரத்தினத்தாலான செங்கோலை வழங்கி பட்டத்து அரசியாக பட்டாபிஷேகம் சூடப்படும். அதில் மீனாட்சி அம்மனிடம் இருந்த செங்கோல் அம்மன் பிரதிநிதியான கோவில் தக்கார் கருமுத்து கண்ண னிடம் வழங்கப்படும். அவர் செங்கோலை பெற்று சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் செங்கோலை ஒப்படைப்பார்.

    பின்னர் மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி 4 மாசிவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    திருக்கல்யாணம்

    சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பாக மீனாட்சி திருக்கல்யாணம் வருகிற 2-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது. அன்று காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் வடக்கு-மேற்கு ஆடி வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் திருக்கல்யா ணம் நடைபெறுகிறது. இதனை காண பக்தர்களுக்கு ரூ.200, ரூ.500 கட்டணத்தில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    • வனத்துறை ஊழியரின் பைக் திருடப்பட்டது.
    • காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் கொடிமங்கலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 55), வனத்துறை ஊழியர் சம்பவத்தன்று இவர், தென்கரை மலை ப்பட்டி,
    வனத்துறை அதிகாரிகள் குடியிருப்பில் தனது மோ ட்டார் சைக்கிள் நிறுத்திவிட்டு சென்றார். மர்ம நபர்கள் மோ ட்டார் சைக்கி ளை திருடி சென்று விட்ட னர். அதில் அரிவாள், ரூ. 500 மற்றும் 2 டைரிகள், ஏ.டி.எம்., ஆதார் கார்டுகள் இருந்தன.

    இது குறித்த புகாரின் பேரில் காடு பட்டி போலீ சார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×