என் மலர்
மதுரை
- சத்குரு பிறந்த நாளையொட்டி 2 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்படுகிறது.
- இதில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மதுரை
சத்குரு பிறந்த நாளையொட்டி நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் தினமாக ஈஷாவால் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 132 விவசாய நிலங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்படுகிறது. நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் வகையிலும் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் வகையிலும் காவேரி கூக்குரல் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கம் கடந்த 2020 ஆண்டில் இருந்து தமிழகம் மற்றும் கர்நாடகாவில் 2 லட்சத்திற்கும் அதிகமமான மரங்கள் நடப்பட்டது. கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் 1.10 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 34 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக உசிலம்பட்டி அருகே உள்ள பூசலபுரம் கிராத்தில் ஒன்றிய கவுன்சிலர் குபேந்திரன், கிராம அலுவலர் ஜெயராணி ஆகியோர் தலைமையில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- சோழவந்தான் அருகே குருவித்துறை கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.
- திருவேடகம் கோவில் செயல் அலுவலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை கிராமத்தில் சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் உள்ளது. குருஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த கோவிலில் பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. கடந்த 2018-ம் ஆண்டு இந்த கோவிலில் இருநது திருடி செல்லப்பட்டு, மீட்கப்பட்ட சிலைகளுக்கு யாக பூஜை நடந்தது.
இதைத் தொடர்ந்து சித்திர ரத வல்லப பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள மண்ட பத்தில் திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக செயல் அலுவலர் பாலமுருகன், உபயதாரர்கள் முன்னிலையில் மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு நடந்தது.
மதுரை, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. இதில் வெங்கடேசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். கோவில் ஆய்வாளர் ஜெயலட்சுமி, திருவேடகம் கோவில் செயல் அலுவலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சோழவந்தான் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
- கரட்டுப்பட்டி, மேல நாச்சிகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட கரட்டுப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு சரி வர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் மதுரை- திண்டுக்கல் சாலையில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் கூறுகையில், மதுரை மாநக ராட்சி குடிநீர் தேவைக்காக பைப்லைன் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் ஊராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட குடிநீர் குழாய்களும் சேதமடைகிறது.
ஊராட்சி மன்ற நிர்வா கம் மூலம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவைகள் சரி வர சீரமைக்கப்படவில்லை. குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படு கிறது. இதனால் கரட்டுப்பட்டி, மேல நாச்சிகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
இது குறித்து மதுரை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஊராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட குடிநீர் குழாய்கள் சேதமடையாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே சேதமைடைந்த குழாய்கள் சீரமைத்து தர வேண்டும் என்றனர். இதனை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்த பின்னர் அவர்கள் மறியலை கைவிட்டனர்.
- வாடிப்பட்டியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
- இதில் முன்னாள்அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் அ.தி.மு.க. சார்பாக நாடாளுமன்ற தேர்தல் பூத்கமிட்டி அமைக்க ஆலோசனைக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பேரூர் செய லாளர் டாக்டர் அசோக் குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, மாணிக்கம், மாவட்ட பொருளாளர் திருப்பதி, முன்னாள் பேரூ ராட்சி துணைத்தலைவர் சோனை, வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ், யூனியன் சேர்மன் மகா லட்சுமி ராஜேஷ்கண்ணா, மகளிரணி மாவட்ட செய லாளர் வக்கீல்லெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித் தனர்.
பேரூர் துணைச்செயலாளர் சந்தனதுரை வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று பலகட்ட ஆய்வுகளுக்குபின் முன்னாள் ஜனா திபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட குழுஆய்வு செய்து அந்த ஆய்வறிக்கையை நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறார்கள் அங்கு இருஅவைகளிலும் விவாதித்தபின் சட்டத்தை நிறைவேற்றிவிட்டால் அது தமிழ்நாடு மட்டுமல்ல நாடு முழுவதும் இந்தியாவில் உள்ளஅனைத்து மாநிலங்க ளுக்கும் செல்லும் என்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு தெரியாதா, அவர் அறியாமையில் புலம் புகிறார்.
முதல்வராக இருந்தும் கூட இது தெரியவில்லை என்பது வேதனையாக உள்ளது. திருமண வீட்டில் மணமக்களை வாழ்த்த வந்தவர் மாலையும், கழுத்துமாக காத்திருக்கும் வேளையிலே மணமக்களை வாழ்த் தாமல் ஆட்சி பறிபோகி விடுமோ என்ற பயத்தில் தனது கவலையை பகிர்ந்து கொண்டார். ஆட்சி அதிகா ரம் போய்விட்டால் என்ன செய்வது என்று கவலை யோடு பேசியிருக்கிறார்.
எப்போது எல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகி றதோ, அப்போதெல் லாம் அவர்கள் ஆட்சி அற்ப ஆயு ளில் கவிழ்ந்துவிடும் என் பதுதான் கடந்த கால வரலாறு. அது கருணாநிதி காலத்திலிருந்து தொடர்கிறது. அது தற்போது மு.க.ஸ்டாலின் காலத்திலும் தொடர இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சி காலத்திட்டங் களை அரசியல் காழ்ப்பு–ணர்ச்சி காரணமாக தி.மு.க. ஆட்சியில் ரத்து செய்யப் பட்டுள்ளது.
சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர். என்று ஐக்கிய நாட்டு சபையில் சொல்வார்கள். தி.மு.க. இன்று காலை உணவுத்திட்டம் கொண்டு வருவதில் எந்தவித ஆட்சேப னையும் இல்லை. மாண வர்கள் பயனடைகிறார்கள் என்றால் அதை வரவேற் போம். ஆனால் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கொடுக்கப்படுகிறது. ஆனால் சத்துணவு 1 முதல் 10-ம் வகுப்பு வரை கொடுக் கப்படுகிறது.
இதில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை காலை உணவு யார் கொடுப்பார் கள்? எதற்கு இந்த வேறு பாடு. காலை உணவு திட் டத்தை அமுல்படுத்தும் போது ஒரே மாதிரியாக அமுல்படுத்த வேண்டும். சத்துணவு திட்டம் நிறுத்தப் பட்டு விடுமோ என்று நினைக்க தோன்றுகிறது. காரணம் சத்துணவுதிட்ட போர்டுகள் அகற்றப்பட்டு விட்டது.
எம்.ஜி.ஆர். பெயரை தாங்கிய பெயர் பலகைகளை அகற்றிவிட்டு காலை உண வுத்திட்ட பெயர்பலகை வைப்பதனால் எம்.ஜி.ஆர். புகழை எந்த காலத்திலும் யாராலும் அழிக்கமுடியாது. அது இதயத்தில் ஊறிப்போய் உள்ளது, ரத்தத்தில் கலந்து போய் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் எம்.ஜி.ஆர். மன்ற பேரூர் செயலாளர் முத்து கண்ணன், ஒன்றிய அவைத் தலைவர் ராமசாமி, வார்டு கவுன்சிலர்கள் சூர்யா, வெங்கடேஸ்வரி, பிரியதர்ஷினி, பஞ்சவர் ணம், கீதா, 18 வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூர் பேரவை செயலாளர் தனசேகரன் நன்றி கூறினார்.
- மலர் மாலையிலும் 'மதுரையினா பாசம், இனிமேல் இந்த உறவை ஊரே பேசும்' என்ற வாசகமும் எழுதப்பட்டிருந்தது.
- நண்பர் இல்ல காதணி விழாவை உலகறிய செய்தமைக்காக தம்பதியினர் கண்ணீர் மல்க தங்களது நன்றியை உணர்வுப்பூர்வமாக தெரிவித்துக்கொண்டனர்.
மதுரை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட பாரம்பரிய நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், செய்முறைகள் இன்றளவும் நடத்தப்பட்டு வருவது எந்திரத்தனமான இந்த டிஜிட்டல் உலகையும் வியக்க வைக்கும் அளவிற்கும் அமைந்துள்ளது. காலங்கள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஆங்காங்கே நடந்து வரும் நிகழ்ச்சிகளே இதற்கு சான்று. அந்த வகையில் தான் உறவுகள் ஆயிரம் இருந்தாலும் நட்பே சிறந்தது என்பதை வாடிப்பட்டி அருகே நடந்த காதணி விழா வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
இங்கு எந்த ஒரு இல்ல விழாவாக இருந்தாலும், அதனை தனித்துவத்தோடு நடத்துவது மண்ணின் பாரம்பரிய வழக்கம். அதிலும் குறிப்பாக தாய்மாமன் சீர்வரிசை செய்வதில் போட்டியே நடக்கும். அந்த வகையில் தாய் மாமன் சீர்வரிசைக்கு போட்டியாக நண்பர்கள் சீர்வரிசை செய்து அசத்திய நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டியை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன்-லதா தம்பதியினர். இவர்களது மகன், மகள் இருவருக்கும் காதணி விழா வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி பங்களாவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பாலகிருஷ்ணனின் உறவினர்கள் பல்வேறு சீர்வரிசை செய்தனர்.
ஆனால் அவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் பாலகிருஷ்ணனின் நண்பர்களான கார்த்திக், சேதுராமன், நாகராஜன், செல்வ பாண்டி, அபுதாஹிர், மதன் மற்றும் திருமுருகன் உள்ளிட்ட ஏழுபேரும் சேர்ந்து பாலகிருஷ்ணனின் குழந்தைகளுக்கு தாங்களும் தாய்மாமன்கள் தான் என நிரூபிக்கும் வகையில் சுமார் 500 கிலோ எடை கொண்ட மிகப்பெரிய ராட்சத மாலையை கிரேன் மூலம் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
மேலும் பொய்க்கால் குதிரை, ஆட்டம் பாட்டம், மேளதாளத்துடன் தாய்மாமன் சீர்வரிசை செய்வது போல் அந்த பொருட்களுடன் ஆடிப்பாடி ஊர்வலமாக வந்தவர்கள் நண்பன் குடும்பத்தினருக்கு ராட்சத மாலையுடன், தம்பதிக்கு 500 ரூபாய் நோட்டுகளால் உருவாக்கப்பட்ட பண மாலையையும் அணிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் ஜல்லிக்கட்டு காளையையும் சீர்வரிசையாக வழங்கி மிரள வைத்தனர்.
அப்போது விசேஷ வீட்டார் ஆனந்த கண்ணீர் வடித்தனர். மேலும் ஆட்டம் பாட்டம் என காதணி விழாவையே குதூகலப்படுத்திய நண்பர்களின் இச்செயல் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதேபோல் அந்த மலர் மாலையிலும் 'மதுரையினா பாசம், இனிமேல் இந்த உறவை ஊரே பேசும்' என்ற வாசகமும் எழுதப்பட்டிருந்தது.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் 150 கிலோ மட்டன், சிக்கன் கறி விருந்தும் அளிக்கப்பட்டது. இது அந்த பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. உறவுக்காரர்கள் கூட ஒதுங்கி செல்லும் சூழலில் நண்பர் இல்ல காதணி விழாவை உலகறிய செய்தமைக்காக தம்பதியினர் கண்ணீர் மல்க தங்களது நன்றியை உணர்வுப்பூர்வமாக தெரிவித்துக்கொண்டனர்.
- பசுமலை பயிற்சி மையத்தில் ஓட்டுநர் திறன் மேம்பாட்டு சாதனம் திறப்பு விழா நடந்தது.
- திறன் மேம்பாட்டு சாதனைத்தை தளபதி எம்.எல்.ஏ. திறந்து வைத்து இயக்கினார்.
மதுரை
மதுரை பசுமலையில் தமிழ்நாடு அரசு போக்குவ ரத்துக் கழகம் சார்பாக ஓட்டுநர் திறன் மேம்பாட்டு சாதனம் திறப்பு விழா தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பி னர் கோ.தளபதி திறன் மேம்பாட்டு சாதனத்தை திறந்து வைத்தார். இந்த திறன் மேம்பாட்டு சாதனம் மூலம் ஓட்டுநர்களின் திறன் அதிகரித்து விபத்து இல்லாமல் பேருந்துகளை இயக்க முடியும். ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பயிற்சி மையத்தின் மூலம் மனவள கலை மற்றும் தியானப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இவ்விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மண்டல பொது மேலாளர் ராகவன், தொ.மு.ச. தொழிற்சங்க தலைவர் அல்போன்ஸ், இணை இயக்குநர் (மக்கள் தொடர்பு) பாஸ்கரன், அலுவலக மக்கள் தொடர்பு அலுவலர் சந்தானகிருஷ்ணன் மற்றும் போக்குவரத்து கழக தொழிற்சங்க பிரதிநிதிகள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- சனாதனத்தை ஒழிப்பேன் என்று பேசுவதா? என்று உதயநிதி பேச்சுக்கு, உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- இந்து மதத்தின் கொள்கைகளையும், அந்த வழிபாட்டு முறைகளையும் எல்லோரும் எல்லாம் அறிந்தவர்கள் கிடையாது என்றார்.
மதுரை
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
சமத்துவத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது எது என்பது குறித்து ஜனநாய கத்தை குழிதோண்டி புதைக் கக் கூடிய வகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றைக்கு நாட்டிலே வேற்றுமையை பற்றி பேசியிருக்கிற கருத்து மக்களிடத்திலே வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.
அவர் கூறியிருக்கிற கருத்துக்கள் ஜனநாயக அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நாடு முழுவதும் விவாதித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒருவருக்கு ஒரு கருத்திலே, ஒரு மரபிலே ஒரு பழக்க வழக்கத்தில் நம்பிக்கை இருக்கிறது என்று சொன்னால் அதை நான் ஒழித்து கட்டுவேன் என்று ஆணவத்தோடும், அகங்காரத் தோடும் பேசுவது என்பது ஜனநாயகத்தில் ஏற்புடையதாக இருக்காது.
சனாதனத்தை ஒழித்து கட்டுவேன் என்கின்ற அந்த சொல் இன்றைக்கு இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிற பாரம் பரியத்தின் மீதும், பண்பாட்டின் மீதும் நம்பிக்கை வைத்திருக் கிற மக்களுக்கு வேதனையாக இருக்கிறது.
இன்றைக்கு இந்து மதத்தின் அந்த மரபுகளையும், அந்த லட்சியங்களையும், அந்த கொள்கைகளையும், அந்த வழிபாட்டு முறைகளை யும் எல்லோரும் எல்லாம் அறிந்தவர்கள் கிடையாது.
இந்த உலகத்தில் எல்லோ ரும் எல்லாம் தெரிந்தவர்கள் உண்டா? நீங்கள் சனாதனத்தை பற்றி பேசி இருக்கிறீர் களே அதை பற்றி நீங்கள் முழுமையாக அறிந்தது உண்டா? அவ்வையார் சொன்னது போல கற்றது கையளவு கல்லாது உலக ளவு.
உங்களை நீங்கள் தலைவராக நிலை நிறுத்திக்கொள்வதில், நீங்கள் எடுத்து வருகிற அதனுடைய முயற்சியாக தான் இந்த உங்களுடைய பேச்சு அமைந்திருக்கிறது.
நீங்கள் சொல்லிய அந்த சொல் உங்களுடைய தகுதியை இன்றைக்கு உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டு கிறது. ஆகவே சமூக நீதிக்கும், சமதர்மத்திற்கும் எதிரானது என்று சொல்லுகிற அந்த நம்பிக்கையை காலம், கால மாக கடை பிடித்து வருகிற அந்த நம்பிக்கையை, அதை கடைபிடித்து வருகிற அந்த மக்களின் நம்பிக்கையை நீங்கள் கொச்சைப்படுத்தி பேசி அதை ஒழிப்போம் என்று சொல்வது அந்த நம்பிக்கையை ஒழிக்க போகிறீர்களா? அல்லது அதை கடைபிடிப்பவர்களை ஒழிக்க போகிறீர்களா? என்பதுதான் கேள்வியாக உள்ளது. ஆகவே நாட்டிலே வெறுப்புணர்வை தூண்டுகிற வகையில் உங்கள் பேச்சு அமையுமானால்,அதை ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உங்கள் பேச்சையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மாணவர்களுக்கு சப்ளை செய்ய வைத்திருந்த 17 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- மதுரையில் போலீஸ் நிலையம் அருகில் என்.எம்.ஆர். பாலம் கீழ்ப்பகுதியில் விற்பனை செய்யப்பட்டது.
மதுரை
மதுரை தெற்குவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தி ரன் மற்றும் போலீசார் சம்பவத்தன்று ரோந்து சென்றனர். போலீஸ் நிலையம் அருகில் உள்ள என்.எம்.ஆர். பாலம் கீழ்ப்பகுதியில் உள்ள பிள்ளையார்பாளையம் ரோட்டில் சென்றபோது அந்தப்பகுதியில் புகையிலை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்குள்ள ஒரு இடத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 கிலோ புகையிலை பாக்கெட்டு களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் புகையிலை விற்ற பணம் ரூ.17 ஆயிரமும் கைப்பற்றப் பட்டது.
இது தொடர்பாக தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்ததாக சிம்மக்கல்லை சேர்ந்த அசோக்குமார் ஜெயின் (வயது52) என்பவரை கைது செய்தனர்.
இவரிடம் நடத்திய விசாரணையில், மதுரையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. எங்கிருந்து புகை யிலை பாக்கெட்டுகள் கடத்தி வரப்பட்டது? இதற்கு மூளையாக செயல்பட்டவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெற்குவாசல் போலீஸ் நிலையத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் 17 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகரில் சமூக விரோதிகள் கஞ்சா, புகை யிலை பாக்கெட்டுகளை சர்வ சாதாரணமாக விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி பகுதிகளில் மாணவர்களை குறிவைத்து விற்பனை நடக்கிறது. இதை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
- காய்கறிகள்-பூக்கள் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.
- வெண்டைக்காயை செடிகளிலேயே காய விட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறினர்.
மதுரை
மதுரை மார்க்கெட்களில் காய்கறிகள் மற்றும் பூக்க ளின் விலை வீழ்ச்சி காரணமாக உரிய விலை கிடைக் காமல் விவசாயிகள் கடும் விரக்தி அடைந்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரை மார்க்கெட் களில் தக்காளியின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்தது. இதனால் சில்லறை விலைகளில் கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது அது போல வெண்டைக்காய், கத்தரிக் காய் உள்ளிட்ட நாட்டு காய் கறிகளும் 50 ரூபாயை தாண்டி விற்பனையாகின. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இந்த நிலையில் மதுரை உள்ளிட்ட அண்டை மாவட் டங்களில் காய்கறிகளின் விளைச்சல் அதிகரித்துள் ளது. இதனால் மதுரை மார்க்கெட்டுகளுக்கு காய் கறிகளின் வரத்து எதிர்பார்த் ததை விட அதிகமாக இருப் பதால் அதன் விலையும் திடீ ரென கடுமையாக வீழ்ச்சி யடைந்துள்ளது.
குறிப்பாக தக்காளி தற் போது விலை வீழ்ச்சிய டைந்து கிலோ 20 ரூபாய் வரை விற்பனை செய்யப் பட்டு வருகிறது. மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் மொத்த விலை யாக கிலோ 15 ரூபாய்க்கும், உழவர் சந்தைகளில் கிலோ 20 ரூபா யாகவும் விற்பனை யாகி வருகிறது.
வெண்டைக்காயை பொறுத்தவரை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கிலோ 40 முதல் 50 ரூபாய் வரை விற்பனையா னது. தற்போது மகசூல் அதி கரித்துள்ளதால் மூடை மூடையாக வெண் டைக்காய் மதுரை மார்க் கெட்டில் குவிக்கப்பட்டுள்ளன. வரத்து அதிகரித்ததின் காரணமாக வெண்டைக் காயின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக மதுரை உழவர் சந்தைகளில் இன்று ஒரு கிலோ வெண் டைக்காய் 10 ரூபாய்க்கு விற்பனை செய் யப்பட்டது.
ஆனாலும் அதனை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்று வியா பாரிகள் தெரிவித்துள்ள னர். மேலும் நாட்டுக் காய்கறிகளான கத்திரிக்காய், அவரைக்காய், புடலங்காய், சுரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளன.
இந்த விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகளும், வியாபாரிகளும் கடும் விரக்தி அடைந்துள்ளனர். காய்கறி விவசாயிகள் கூறு கையில் தற்போது காய் கறிகள் வரத்து அதிகமாக இருக்கிறது. ஆனால் எதிர் பார்த்த விலை கிடைக்க வில்லை. இதன் காரணமாக விவசாயிகளின் வாழ் வாதாரமே கேள்விக்குறி யாகி உள்ளது.
ஒரு ஏக் கருக்கு பயிர் சாகுபடி மற் றும் விவசாயக் கூலி என்று 4 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய் யப்படுகிறது. ஆனால் காய் கறி மகசூல் அதிகமாக இருந்தாலும் உரிய விலை கிடைக்காததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள் ளது. எனவே காய்கறிகளை பறிக்க கூட கூலி கிடைக்க வில்லை.
இதனால் வெண் டைக் காய்கள் அறுவடைக்கு தயா ராக இருந்தும் அதனை பறிக்க மனதில்லாமல் செடி களிலேயே காய விட வேண் டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளோம். தற்போது தக்காளி விலையும் கணிச மாக குறைந்து விட்டது. இதனால் எங்கள் வாழ் வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே விவசாய விளை பொருள்களுக்கு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்து எங்கள் வாழ்வாதா ரத்தை பேண நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மதுரை பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை யும் கணிசமாக குறைய தொடங்கியுள்ளது. கடந்த 29-ந் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப் பட்ட நிலை யில் பூக்களின் விற்பனை அதிகமாக இருக்கும் என்று வியாபாரி கள் கணித்தனர்.
ஆனால் அவர்கள் எதிர் பார்த்த அளவுக்கு பூக்கள் விற்பனை யாக வில்லை ஆனாலும் பூக்களின் வரத்து அதிகமாக இருந்ததால் விலை கணிச மாக குறைந் துள்ளது. மல்லி கை பூக்கள் 400 முதல் 500 ரூபாய் வரையிலும் பிச்சி, முல்லை பூக்கள் 400 ரூபாய் க்கும் விற்பனை செய்யப் பட்டு வருகிறது.
முகூர்த்தம் மற்றும் பண்டிகை காலங்ட களில் 400 ரூபாய் வரை விற்க படும் செவ்வந்தி, சம் மங்கி மற்றும் பட்டன் ரோஸ் உள்ளிட்ட வண்ண மலர்கள் தற்போது அதிக அளவில் மார்க்கெட்டு களுக்கு வந்தும் விற்பனை இல்லாத தால் குவிந்து கிடக் கின்றன.
இன்று 50 முதல் 80 ரூபாய் வரை இந்த பூக்கள் விலை போயின ஆனாலும் அதிக அளவில் மக்கள் வாங்க ஆர்வம் காட்டாதால் வியாபாரிகள் அதனை குப்பைகளில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது என வே மலர் விவசாயி களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வும் வாழ்வாதாரத்தை பேணவும் பூக்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்வது டன் மதுரையில் இது போன்ற காலங்களில் பூக் களின் தேவைகளை அதி கரிக்கும் வகையில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும் என்பதும் மலர் விவசாயிகளின் கோரிக் யாக உள்ளது.
- தசரா திருவிழாவின் 9-வது நாள் விரதமிருந்து பெண்கள், குழந்தைகள் அதிகளவில் கலந்து கொண்டு கோவிலிலேயே தங்கி வழிபாடு செய்கின்றனர்.
- முத்தாரம்மன் கோவில் திருவிழாவில் சினிமா பாடல்கள் என்ற பெயரில் குத்து பாடல்களுக்கு நடனக்கலைஞர்கள் ஆபாசமான மற்றும் கொச்சையான நடனங்களை ஆடுவது பக்தர்களின் மனதை புண்படுத்துகிறது.
மதுரை:
திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது:-
திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் கடற்கரையில் முத்தாரம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மைசூருக்கு அடுத்த படியாக தசரா திருவிழா மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. முத்தாரம்மன் கோவிலில் 12 நாட்கள் தசரா திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக் கடன் சிறப்பு வழிபாடுகளை செய்வார்கள்.
கோவில் பாரம்பரியத்தின்படி, பக்தர்கள், இளம் குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என அனைத்து வயதினரும் காளி, சிவன், அரசர்கள், குரங்குகள், யமன் போன்ற பல வேஷங்களை அணிந்து யாசகம் பெற்று காணிக்கைகளை அம்மனுக்கு கொடுப்பார்கள்.
இத்திருவிழாவின் 9-வது நாள் விரதமிருந்து பெண்கள், குழந்தைகள் அதிகளவில் கலந்து கொண்டு கோவிலிலேயே தங்கி வழிபாடு செய்கின்றனர். இந்நிலையில் முத்தாரம்மன் கோவில் திருவிழாவில் சினிமா பாடல்கள் என்ற பெயரில் குத்து பாடல்களுக்கு நடனக்கலைஞர்கள் ஆபாசமான மற்றும் கொச்சையான நடனங்களை ஆடுவது பக்தர்களின் மனதை புண்படுத்துகிறது.
ஏற்கனவே கோவில்களில் நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச நடனங்கள் இடம்பெறக் கூடாது. மேலும் குறவன் குறத்தி சமூகத்தை அவமதிக்கும் வகையில் நடனங்கள் நாடகங்கள் உள்ளிட்டவை நடைபெறக்கூடாது என ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் தசரா திருவிழாவில் அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமான வகையில் சினிமா பாடல்கள் மற்றும் குத்துப் பாடல்களுக்கு நடனம் ஆடப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுந்தர், பரத சக்கரவர்த்தி முன்பு இன்று விசரனைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, கடந்த வருடம் நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. எந்த புகாரும் தெரிவிக்கப்படவில்லை என்றார்.
இதனை தொடர்ந்து நீதிபதிகள், இந்த வழக்கில் ஏற்கனவே கடந்த ஆண்டு இந்த கோர்ட்டு விரிவான உத்தரவு பிறத்துள்ளது. எனவே அதனை முறையாக பின்பற்ற வேண்டும். மேலும், தென் மாவட்டங்களில் இது போன்ற ஆடல், பாடல் கரகாட்டங்கள் எல்லாம் ரசிக்க கூடிய வகையில் பொழுது போக்குக்கான ஒன்றாக தானே இருக்கும் என கருத்துக்களை தெரிவித்தனர்.
மேலும் இதில் நாங்கள் புதிய உத்தரவு பிறப்பிக்க விரும்பவில்லை கடந்த ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றாத பட்சத்தில் மனுதாரர் அவமதிப்பு வழக்கு தொடரலாம் என கூறிய நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.
- சோழவந்தான் அருகே விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- ஆர். எம்.எஸ். காலனி குடியிருப்போர் நல சங்க சார்பில் விழா ஏற்பாடுகள் நடந்தது.
சோழவந்தான்
சோழவந்தான் கற்பகம் கார்டன்ஸ் ஆர்.எம்.எஸ். காலனியில் உள்ள கற்ப விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு தென்கரை பாலாஜி பட்டர் தலைமையில் 2 நாள் யாக பூஜை நடந்தன.
இன்று அதிகாலை 2-ம் கால யாக பூஜை தொடங்கப்பட்டு, பூர்ணாகுதி நடந்தது. இதைத் தொடர்ந்து புனித நீர் குடங்களை எடுத்து வலம் வந்து விநாயகருக்கு பல்வேறு அபிஷேகம் நடந்து
கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஆர். எம்.எஸ். காலனி குடியிருப்போர் நல சங்க சார்பில் விழா ஏற்பாடுகள் நடந்தது.
- அலங்காநல்லூர் அருகே அழகி நாசியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- தொடர்ந்து நேற்று மாலையில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி, வலசை கிராமத்தில் அமைந்துள்ள அழகி நாச்சியம்மன், பாரிகருப்புசாமி உள்ளிட்ட 21 பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது.
விழாவில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி, துணை சேர்மன் சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நேற்று மாலையில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
ஏற்பாடுகளை நிர்வாககுழு தலைவர் பாலசுப்ரமணியம் மற்றும் பொருசுப்பட்டி பங்காளிகள் செய்திருந்தனர்.






