விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

சோழவந்தான் அருகே விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆர். எம்.எஸ். காலனி குடியிருப்போர் நல சங்க சார்பில் விழா ஏற்பாடுகள் நடந்தது.
விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
Published on

சோழவந்தான்

சோழவந்தான் கற்பகம் கார்டன்ஸ் ஆர்.எம்.எஸ். காலனியில் உள்ள கற்ப விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு தென்கரை பாலாஜி பட்டர் தலைமையில் 2 நாள் யாக பூஜை நடந்தன.

இன்று அதிகாலை 2-ம் கால யாக பூஜை தொடங்கப்பட்டு, பூர்ணாகுதி நடந்தது. இதைத் தொடர்ந்து புனித நீர் குடங்களை எடுத்து வலம் வந்து விநாயகருக்கு பல்வேறு அபிஷேகம் நடந்து

கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஆர். எம்.எஸ். காலனி குடியிருப்போர் நல சங்க சார்பில் விழா ஏற்பாடுகள் நடந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com