என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் விரக்தி"

    • விவசாயிகள் விரக்தி
    • மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ் தலைமையில் நடைப்பெற்றது.

    மணல் கொள்ளை

    இதில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துக்கொண்டு அவர்களின் துறைகளில் இருக்கும் திட்டங்கள் விவசாயிகளுக்கு எவ்வாறு பயன் பெறும் என்பதனை எடுத்துறைத்தார்கள்.

    பரபரப்பாக நடந்த கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

    பொய்கை பாலாற்று பகுதியில் அளவுக்கு அதிகமாக மணல் கடத்தப்படுவதாகவும், மேலும் அனுமதிக்கும் அளவை விட 30 மடங்கு அதிகமாக சுரண்டப்பட்டு வருகின்றனர்.

    இதனால் விவசாயம் வெகுவாக பாதிக்கின்றது. வரும் மாதங்கள் கோடைக்காலம் என்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்பு உள்ளது. இவர்கள் அளவுக்கு அதிகமாக மணல் திருடப்படுவதால் விவசாயிகள் நாங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை என புலம்புகின்றனர். உடனடியாக மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    மேலும் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் கூறினர். இதனையடுத்து துறை சார்ந்த அதிகாரிகள் கூறுகையில், வேளாண்துறையில் 3 வகையான மா செடிகளை இலவசமாக வழங்கப்படுகின்றன. இதில் 2.5 ஏக்கர் அளவு பரப்பளவு உடைய நிலத்திற்க்கு 156 செடிகள் கொடுக்கப்படுகிறது. இதற்க்கான ஆவனங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

    மேலும் விவசாயிகளுக்கு 5 வகையான பயிர்களுக்கு காப்பிட்டு திட்டம் உள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் பயனடையலாம் என கூறினார்.

    இதனையடுத்து தாசில்தார் கூறுகையில் -

    அணைக்கட்டு தாலுக்காவிற்க்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான புரம்போக்கு நிலத்தில் இருக்கும் சீம கருவேலம் மரங்கள் இலவசமாகவே யாருவேனுமானாலும் வெட்டி எடுத்துக்கொள்ளலாம்.

    இவை தேவை என்றால் மனு ஒன்று கொடுத்து அதற்க்கான ஒப்புதல் படிவம் பெற்று இலவசமாக எவ்வளவு வேண்டும் என்றாலும் வெட்டிக் எடுத்துக்கொள்ளலாம் எனக் கூறினார்.

    கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கூட்டத்தை கவனிக்காமல் சிலர் போன்களை பார்த்துக்கொண்டு இருந்ததாலும், சிலர் உறங்கிக்கொண்டு இருந்ததாலும், சிலர் நாம் ஏன் வந்தோம் எனவே தெரியாமல் இருந்ததால் சிறிது நேரம் சலசலப்பும், பரபரப்பு எற்ப்பட்டது.

    இதனால் விவசாயிகள் விரக்தி அடைந்தனர்.

    • காய்கறிகள்-பூக்கள் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.
    • வெண்டைக்காயை செடிகளிலேயே காய விட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறினர்.

    மதுரை

    மதுரை மார்க்கெட்களில் காய்கறிகள் மற்றும் பூக்க ளின் விலை வீழ்ச்சி காரணமாக உரிய விலை கிடைக் காமல் விவசாயிகள் கடும் விரக்தி அடைந்துள்ளனர்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரை மார்க்கெட் களில் தக்காளியின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்தது. இதனால் சில்லறை விலைகளில் கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது அது போல வெண்டைக்காய், கத்தரிக் காய் உள்ளிட்ட நாட்டு காய் கறிகளும் 50 ரூபாயை தாண்டி விற்பனையாகின. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்த நிலையில் மதுரை உள்ளிட்ட அண்டை மாவட் டங்களில் காய்கறிகளின் விளைச்சல் அதிகரித்துள் ளது. இதனால் மதுரை மார்க்கெட்டுகளுக்கு காய் கறிகளின் வரத்து எதிர்பார்த் ததை விட அதிகமாக இருப் பதால் அதன் விலையும் திடீ ரென கடுமையாக வீழ்ச்சி யடைந்துள்ளது.

    குறிப்பாக தக்காளி தற் போது விலை வீழ்ச்சிய டைந்து கிலோ 20 ரூபாய் வரை விற்பனை செய்யப் பட்டு வருகிறது. மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் மொத்த விலை யாக கிலோ 15 ரூபாய்க்கும், உழவர் சந்தைகளில் கிலோ 20 ரூபா யாகவும் விற்பனை யாகி வருகிறது.

    வெண்டைக்காயை பொறுத்தவரை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கிலோ 40 முதல் 50 ரூபாய் வரை விற்பனையா னது. தற்போது மகசூல் அதி கரித்துள்ளதால் மூடை மூடையாக வெண் டைக்காய் மதுரை மார்க் கெட்டில் குவிக்கப்பட்டுள்ளன. வரத்து அதிகரித்ததின் காரணமாக வெண்டைக் காயின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக மதுரை உழவர் சந்தைகளில் இன்று ஒரு கிலோ வெண் டைக்காய் 10 ரூபாய்க்கு விற்பனை செய் யப்பட்டது.

    ஆனாலும் அதனை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்று வியா பாரிகள் தெரிவித்துள்ள னர். மேலும் நாட்டுக் காய்கறிகளான கத்திரிக்காய், அவரைக்காய், புடலங்காய், சுரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளன.

    இந்த விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகளும், வியாபாரிகளும் கடும் விரக்தி அடைந்துள்ளனர். காய்கறி விவசாயிகள் கூறு கையில் தற்போது காய் கறிகள் வரத்து அதிகமாக இருக்கிறது. ஆனால் எதிர் பார்த்த விலை கிடைக்க வில்லை. இதன் காரணமாக விவசாயிகளின் வாழ் வாதாரமே கேள்விக்குறி யாகி உள்ளது.

    ஒரு ஏக் கருக்கு பயிர் சாகுபடி மற் றும் விவசாயக் கூலி என்று 4 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய் யப்படுகிறது. ஆனால் காய் கறி மகசூல் அதிகமாக இருந்தாலும் உரிய விலை கிடைக்காததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள் ளது. எனவே காய்கறிகளை பறிக்க கூட கூலி கிடைக்க வில்லை.

    இதனால் வெண் டைக் காய்கள் அறுவடைக்கு தயா ராக இருந்தும் அதனை பறிக்க மனதில்லாமல் செடி களிலேயே காய விட வேண் டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளோம். தற்போது தக்காளி விலையும் கணிச மாக குறைந்து விட்டது. இதனால் எங்கள் வாழ் வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

    எனவே விவசாய விளை பொருள்களுக்கு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்து எங்கள் வாழ்வாதா ரத்தை பேண நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மதுரை பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை யும் கணிசமாக குறைய தொடங்கியுள்ளது. கடந்த 29-ந் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப் பட்ட நிலை யில் பூக்களின் விற்பனை அதிகமாக இருக்கும் என்று வியாபாரி கள் கணித்தனர்.

    ஆனால் அவர்கள் எதிர் பார்த்த அளவுக்கு பூக்கள் விற்பனை யாக வில்லை ஆனாலும் பூக்களின் வரத்து அதிகமாக இருந்ததால் விலை கணிச மாக குறைந் துள்ளது. மல்லி கை பூக்கள் 400 முதல் 500 ரூபாய் வரையிலும் பிச்சி, முல்லை பூக்கள் 400 ரூபாய் க்கும் விற்பனை செய்யப் பட்டு வருகிறது.

    முகூர்த்தம் மற்றும் பண்டிகை காலங்ட களில் 400 ரூபாய் வரை விற்க படும் செவ்வந்தி, சம் மங்கி மற்றும் பட்டன் ரோஸ் உள்ளிட்ட வண்ண மலர்கள் தற்போது அதிக அளவில் மார்க்கெட்டு களுக்கு வந்தும் விற்பனை இல்லாத தால் குவிந்து கிடக் கின்றன.

    இன்று 50 முதல் 80 ரூபாய் வரை இந்த பூக்கள் விலை போயின ஆனாலும் அதிக அளவில் மக்கள் வாங்க ஆர்வம் காட்டாதால் வியாபாரிகள் அதனை குப்பைகளில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது என வே மலர் விவசாயி களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வும் வாழ்வாதாரத்தை பேணவும் பூக்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்வது டன் மதுரையில் இது போன்ற காலங்களில் பூக் களின் தேவைகளை அதி கரிக்கும் வகையில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும் என்பதும் மலர் விவசாயிகளின் கோரிக் யாக உள்ளது.

    ×