என் மலர்
மதுரை
- சுயநிதி கல்லூரி ஆசிரியர்களுக்கு யு.ஜி.சி. பரிந்துரைத்த ஊதியத்தை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
மதுரை
சுயநிதி கல்லூரி ஆசிரியர் பாதுகாப்பு மாநாடு மதுரை காமராசர் பல்கலைக் கழக கல்லூரியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மூட்டா தலை வர் செந்தாமரைக் கண்ணன் தலைமை தாங்கினார். மண் டல தலைவர்கள் ரமேஷ் ராஜ், ஞானேஸ்வரன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். செயலாளர் ராபர்ட் திலீபன் வரவேற்றார். மாநாட்டின் முக்கிய நோக் கம் குறித்து பொதுச்செயலா ளர் நாகராஜன் பேசினார்.
மாநாட்டில் தமிழ்நாடு அரசு சுயநிதி ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கேரள அரசின் சுயநிதி ஆசிரியர்கள் ஒழுங்காற்றுச் சட்டத்தைப் போல் ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும், தமிழ்நாடு அரசு சுயநிதி சுல்லூரிகளை ஒழுங்குபடுத்த தனி இயக்கு னரகம் தொடங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு, சுயநிதி ஆசிரியர்களுக்கு யு.ஜி.சி. பரிந்துரைத்த ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாடு அரசு சுயநிதி கல்லூரிகள் பற்றிய வெள்ளை அறிக்கை வெளி யிட வேண்டும். பொறியியல் கல்லூரிகளில் சுயநிதி பிரி வில் பணியாற்றும் ஆசிரியர் களுக்கு ஏ.ஐ.சி.டி.இ. நிர்ண யித்துள்ள ஊதிய விகிதம்,
அகவிலைப்படி உள் ளிட்ட பிற படிகளும், ஆசிரி யர் அல்லாத அலுவலர்க ளுக்கு குறைந்தபட்ச கூலிச் சட்டம் 1948-ன் அடிப்ப டையில் ஊதியம் அகவி லைப்படி உள்ளிட்ட பிற படிகளும் ஆண்டு ஊதிய உயர்வு மருத்துவ விடுப்பு மகப்பேறு மருத்துவ விடுப்பு உள்ளிட்ட சலுகைகளும் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட் டன.
முடிவில் பொருளாளர் ராஜ ஜெயசேகர் நன்றி கூறி னார்.
- ஷேர் ஆட்டோக்களின் விதிமீறல்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் மதுரை நகர சாலைகள் உள்ளன.
- குறைந்தது 8 பயணிகள் வரை ஏற்றிச் செல்கின்றனர்.
மதுரை
தமிழகத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப வாகன பயன்பாடும் அதிகரித்துள்ளது. குறிப்பாக பொது போக்குவரத்தான அரசு பஸ்களை அதிக அளவில் மக்கள் நம்பியுள்ளனர். அரசு பஸ்கள் செல்லாத வழித்தடங்களில் மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் ஓர் இடத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு செல்ல பயணங்கள் எளிதாகின்றன.
ஆனால் மதுரை நகரில் ஷேர் ஆட்டோக் களால் நன்மைகளை விட சிரமங்களையே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிகமாக சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை நகரில் குறைந்த அளவு ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டது. ஆனால் தற்போது புற்றீசல்கள் போல் ஷேர் ஆட்டோக்கள் அதிகரித்து வருகின்றன.
நினைத்த இடத்தில் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி ஆட்களை ஏற்றுவதும் இறக்குவதும், பஸ் நிறுத்தங்களில் மணிக்கணக்கில் நின்று பயணிகளை ஏற்றி செல்வது, சாலையில் அதிவேகமாக ஓட்டி செல்வது உள்ளிட்ட பல்வேறு விதிகளை ஷேர் ஆட்டோக்கள் ஓட்டுனர்கள் மீறி வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது. ஏற்கனவே மதுரை நகர சாலைகள் குண்டும் குழியுமாக உள்ள நிலையில் ஷேர் ஆட்டோக்களின் விதிமீறல்களால் வாகன ஓட்டிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.
தெற்கு வாசல், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, பெரியார் பஸ் நிலையம், அவனியாபுரம், காளவாசல், திருப்பரங்குன்றம், கீழவாசல், காமராஜர் சாலை, உள்ளிட்ட பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்புக்கும் நெரிசலுக்கும் முக்கிய காரணமாக இருப்பது ஷேர் ஆட்டோக்கள் என்பது நிதர்சனமான உண்மை. ஷேர் ஆட்டோக்கள் ரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும் பயணிகளை ஏற்றுவதில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களிடையே நடுரோட்டிலேயே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. சில நேரங்களில் அடிதடிகளில் முடிகிறது.
பண்டிகை நேரத்தில் ஆட்களை ஏற்றி செல்வதில் அருகருகே ஆட்ேடாக்களை நிறுத்தி வைத்து கொண்டு வாக்கு வாதத்தில் ஈடுபடு கின்றனர்.
மோட்டார் வாகன சட்டத்தின் படி 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் லைசன்ஸ் பெற்றவர்கள் மட்டுமே மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாக னங்களை இயக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் மதுரையில் ஓட்டும் சில ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மேற்கண்ட ஆவணங்கள் முறையாக உள்ளதா? என தெரியவில்லை. போக்குவரத்து விதிகள் குறித்தும் போதிய விழிப்புணர்வும் இல்லை. 18 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் ஷேர் ஆட்டோக்களை இயக்குவதை காண முடிகிறது. மதுரையில் இயக்கப்படும் ஒரு ஷேர் ஆட்டோவில் குறைந்தது 8 பயணிகள் வரை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
ஷேர் ஆட்டோக்கள் விதிமீறல்களுக்கு தொடர்ச்சியாக அபராதங்கள் விதிக்கப்படு கிறது. ஆனால் அபராதம் கட்டிவிட்டு மீண்டும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் மனம் போன போக்கில் செயல்படுகின்றனர். பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக ஷேர் ஆட்டோக்கள் உள்ளன.
கடந்த காலங்களில் 3 மாதத்திற்கு ஒருமுறை நகர் முழுவதும் ஷேர் ஆட்டோக்களை போலீசார் தணிக்கை செய்து வந்தனர். ஆனால் தற்போது இந்த நடைமுறையை காண முடியவில்லை. இது ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாதகமாக அமைந்து விட்டது.
இந்த நிலையில் மதுரை நகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் ஷேர் ஆட்டோக்கள் விதிமீறல் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது .
- பா.ம.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
- அலங்கை ஒன்றிய பெருந்தலைவர் சண்முகவேல் நன்றி கூறினார்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங் காநல்லூர் அருகே முடுவார் பட்டி ஊராட்சியில் பாட் டாளி மக்கள் கட்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட தலை வர் செல்லம்பட்டி முருகன், மாவட்ட துணைத் தலைவர் ராஜா, அலங்கை ஒன்றிய தலைவர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர் செந் தில்குமார், பொருளாளர் ரேவதி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
மாநில செயற்குழு உறுப் பினர் செல்வம், ஸ்டாலின் வரவேற்றார். செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ஈஸ்வ ரன் சிறப்புரையாற்றி னார். இந்த கூட்டத்தில் மது ஒழிப்பு மற்றும் தடை செய் யப்பட்ட போதை பொருட் கள் விநியோகத்தை கட்டுப்ப டுத்த வலியுறுத்தி தீர்மா னங் கள் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் அலங்கை ஒன் றிய பெருந்தலைவர் சண் முகவேல் நன்றி கூறினார்.
- அரசு பள்ளியில் அறிவியல் நிகழ்ச்சி நடந்தது.
- முடிவில் ஆசிரியை அருவகம் நன்றி கூறினார்.
மதுரை
மதுரை கிழக்கு ஒன்றியம் கருப்பாயூரணி எல்.கே.பி.நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் மஞ்சள் பை அறக்கட்டளை சார்பில் 'அறிவியல் களியாட்டம்' என்ற நிகழ்வில் எளிய அறிவியல் பரிசோதனைகள் செய்து காட்டுதல் நிகழ்வு தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. அறிவியல் ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். ஆசிரியர் ராஜ வடிவேல் வரவேற்றார். சென்னையில் இருந்து அறிவியல் ஆசான் அறிவரசன் வருகை புரிந்து செயற்கை ரத்தம் உருவாக்குதல், சினிமாக்களில் புகை உருவாக்கும் விதம், கார்களில் ஏர் பலூன் செயல்படும் விதம், நெருப்பு உருவாதல், பரப்பை பொறுத்து அழுத்தம் எவ்வாறு மாறுகிறது என்ற சோதனை, ஒளி உருவாதல், நுரை உருவாக்கும் சோதனை, புகை உருவாதல் போன்ற பல வகையான சோதனைகளை செய்து காண்பித்து அறிவியல் மனப்பான்மை குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளக்கினார். நிகழ்ச்சியில் விஞ்ஞானி ஆக்கம் சங்கர், மஞ்சப்பை அறக்கட்டளை நிறுவனர் கிருஷ்ணன், கல்வி பிரிவு ஒருங்கிணைப்பாளர் முகமது கனி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை அருவகம் நன்றி கூறினார்.
- குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.
- அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து பகுதியில் வைகை அணையில் இருந்து மதுரை மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது
இதற்காக ஜே.சி.பி. எந்திரம் மற்றும் ராட்சத கிரேன் மூலம் குடிநீர் குழாய் களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதிகளில் பள்ளங்களை தோண்டி பதிக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது.
இதில் தச்சம்பத்து முதல் மேலக்கால் பாலம் வரை உள்ள சாலை ஓரங்களில் பெரிய பள்ளங்களை தோண்டி குடிநீர் குழாய் களை பதித்து விட்டு அதை மூடும்போது முறையாக சாலையை சரி செய்யாமல் விட்டு செல்வதால் மழைக் காலங்களில் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது.
குறிப்பாக தச்சம்பத்து பகுதியில் சிறிய மழை பெய்தாலே சேரும் சகதியும் தேங்கி நிற்கிறது. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் கார்களில் செல்வோர் மிகுந்த சிர மத்திற்கு உள்ளாகின்றனர்.
ஆகையால் மாநகராட்சி அதிகாரிகள் இதில் தனி கவனம் செலுத்தி குடிநீர் குழாய்களை பதித்த பின்பு அதை முறையாக சரி செய்ய வேண்டும் என்றும், பெரிய அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ரெயில்களில் பட்டாசுகளை எடுத்து சென்றால் அபராதம்-சிறை என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்களிடம் ரூ.1 கோடி வசூல்.
மதுரை
மதுரை ெரயில்வே கோட்டத்தின் அக்டோபர் மாத பயணச்சீட்டு பரிசோ தனை வருமானம் ரூ.ஒரு கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது.
பண்டிகை காலமான அக்டோபர் மாதத்தில் ெரயில் நிலையங்கள், ெரயில்களில் அதிரடி பயணச்சீட்டு சோதனைகள் நடைபெற்றன. இதன் மூலம் மதுரை கோட்டம் பயண சீட்டு பரிசோதனை வருமானமாக ரூ.1 கோடியே 8 லட்சத்து 12 ஆயிரத்து 26 ஈட்டியுள்ளது. பயண சீட்டுகள் இல்லாமலும், குறைபாடுடைய பயணச் சீட்டுகளை வைத்தும் பயணம் செய்த 15 ஆயிரத்து 734 பேர் பிடிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து பயணக்கட்டணத்துடன் அபராதமாக ரூ.1 கோடியே 6 லட்சத்து 13ஆயிரத்து 680 வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும் பதிவு செய்யாமல் அதிக அளவு உடைமைகளை ெரயில்களில் கொண்டு சென்ற 308 பேர் பிடிக்கப் பட்டு அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்து 346 வசூலிக்கப் பட்டுள்ளது.
தீ விபத்துகளை தவிர்க்க ெரயில்களில் பட்டாசு கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கப் பட உள்ளது. இந்திய ெரயில்வே சட்டம் 1989-ல் உள்ள பிரிவுகள் 67, 154, 164, 165 ஆகியவற்றின் வாயிலாக கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.
இந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட் டால் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.1000 அபராதம் அல்லது இந்த 2 தண்டனை களும் சேர்த்து வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது.
தீ விபத்தால் ஏற்படும் நஷ்டம், சேதம், உயிரிழப்பு ஆகியவற்றிற்கும் குற்றவாளி பொறுப்பேற்க நேரிடும். இதற்காக தீபாவளி பண்டிகை நாட்களில் பயணச் சீட்டு பரிசோத னையை தீவிரமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் ெரயில்களில் அதிக அளவில் பயணிகள் பயணிக்க வாய்ப்பு இருக்கி றது. இந்த காலத்திலும் நாளை முதல் 30-ந்தேதி வரை சிறப்பு பயண சீட்டு பரிசோதனை நடைபெற உள்ளது. ெரயில்களில் பட்டாசு, மண்எண்ணை, எரிவாயு உருளை, பெட் ரோல் போன்ற எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்வோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க ெரயில்வே பாது காப்பு படையும் தீவிர அதிரடி சோதனைகள் நடத்தி வருகிறது.
- மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
- வளாகம் முழுவதும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
மதுரை
தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஏராள மான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்தி லேயே இரு பாலருக்கும் தனித்தனியே தங்கும் விடுதிகள் உள்ளன.
இந்த நிலையில் நேற்று இரவு பெய்த மழையின் போது பல்கலைக்கழக பெண்கள் விடுதி அருகே இருந்த மின் கம்பத்தில் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. இதனால் செய்வதறியாது திணறிய மாணவிகள் விடுதியில் இருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து மாணவிகள் பல்கலைகழக நிர்வாகத்தி னருக்கு தகவல் தெரிவித்தனர். சில விடுதி மாணவி களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே தீயணைப்பு துறையினருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து பெரியார் மற்றும் திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் விரைந்து வந்தனர்.
மின்சார வாரியத்திற்கும் உடனடியாக தகவல் தெரி விப்பட்டது. மின்வாரி யத்தினர் உடனடியாக மின்சாரத்தை துண்டி த்ததால் பெரும் அசம்பா விதம் நடப்பது தவிர்க்கப் பட்டது. இதனால் மின் கம்பத்தில் இருந்து புகை வந்ததால் பல்கலைக்கழக மாணவிகள் விடுதி வளாகம் முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.
இதில் 4 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவர்களை அருகில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் முதலு தவி சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர்.
மழையினால் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவிகள் விடுதி அருகே இருந்த மின் கம்பத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவி விடுதி வளாகம் முழுவதும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகமலை புதுக்கோட்டை இன்ஸ் பெக்டர் சிவகுமார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மாநகராட்சி மண்டலம் 4-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 7-ந்தேதி நடக்கிறது
- மதுரை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய் கிழமை வார்டு மறுவரை யறை செய்யப்பட்ட 5 மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
அதன்படி வருகிற 7-ந்தேதி சி.எம்.ஆர். ரோட்டில் உள்ள மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற உள்ளது.
(மண்டலம் 4 (தெற்கு) உட்பட்ட வார்டு பகுதிகள்: வார்டு எண்.29, செல்லூர், வார்டு எண்.30 ஆழ்வார் புரம், வார்டு எண்.41 ஐராவதநல்லூர், வார்டு எண்.42 காமராஜர் சாலை, வார்டு எண்.43 பங்கஜம் காலனி, வார்டு எண்.44 சேர்மன் முத்துராமய்யர் ரோடு, வார்டு எண்.45 காமராஜபுரம், வார்டு எண்.46 பழைய குயவர் பாளையம், வார்டு எண்.47 சின்னக்கடை தெரு, வார்டு எண்.48 லெட்சுமிபுரம், வார்டு எண்.49 காயிதே மில்லத் நகர், வார்டு எண்.53 செட்டியூரணி, வார்டு எண்.85 கீழவெளி வீதி, வார்டு எண்.86 கீரைத்துறை, வார்டு எண்.87 வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, வார்டு எண்.88 அனுப்பானடி, வார்டு எண்.89 சிந்தாமணி, வார்டு எண்.90 கதிர்வேல் நகர் ஆகிய வார்டுகள்)
இந்த குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு காணலாம்.
இந்த தகவலை மதுரை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- மதுரையில் நடந்த நடப்போம், நலம் பெறுவோம் திட்டம் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மதுரை
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் இன்று சென்னை, பெசண்ட் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி காட்சி வாயிலாக அனைத்து மாவட்டங்களிலும் "நடப்போம் நலம் பெறுவோம்" திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் "நடப்போம் – நலம் பெறுவோம்" ஆரோக்கிய நடைபயண திட்டத்தை அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மதுரை மாவட்டத்தில் நடைப்பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் நுழைவு வாயில் முதல் தொடங்கி ஐய்யர் பங்களா சந்திப்பு வழியாக மீண்டும் ரேஸ்கோர்ஸ் மைதானம் நுழைவு வாயில் வரை மொத்தம் (8கி.மி) தூரம் ஆரோக்கியம் நடை பயண பகுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில் பயணிப்பவர்களுக்கு வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி, ஓய்வறை கள், இருக்கை வசதிகள், கழிப்பறை மற்றும் பாதுகாப்பு வசதி களுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் கலெக்டர் சங்கீதா, மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல், துணை மேயர்நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராமேசுவரம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.
- கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம் ஊராட்சி உள்ளது. இங்கு ராமேசுவரம், ராமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன.
இந்த நிலங்களில் பலர் உரிய அனுமதி பெற்று வீடு கட்டி கோவிலுக்கு வரி செலுத்தி வசித்து வருகின்ற னர். 25-க்கும் மேற்பட்ட வீடுகள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ளன. இந்த நிலையில் சிலர் கோவிலுக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையை முறையாக செலுத்தாமலும், கோவில் நிலத்தில் உரிய அனுமதி யின்றியும் கட்டிடம் கட்டி வசித்து வந்ததாக கூறப்படு கிறது.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்துக்கு தெரியவந்த நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்து அனுமதியின்றி வசித்து வருபவர்கள் தங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் படியும், வரி செலுத்தாத வர்கள் வரி பாக்கியை செலுத்துமாறும் பலமுறை நோட்டீஸ் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதில் தீர்வு ஏற்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் இது குறித்து நீதிமன்றம் மூலமாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த நிலையில் அனுமதியின்றி கட்டிடம் கட்டி வசித்து வந்த வீடுகளை, இடித்து அப்புப்புறப்படுத்தும்படி நிலம் மீட்பு தீர்ப்பாணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து கோவில் அதிகாரிகள் அனுமதியின்றி கட்டப்பட்ட வீட்டு உரிமையாளர்களிடம் வீட்டை காலி செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து நேற்று மாலை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அனுமதியின்றி கட்டப்பட்ட2 வீடுகளை இடித்து அகற்றுவ தற்காக போலீசாருடன் அதிகாரிகள் வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த வர்களை வெளியே செல்லும்படி கேட்டுக் கொண்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு வீட்டை காலி செய்வதற்கு மேலும் சில நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டு மென கோரிக்கை வைத்த னர். அதற்கு அதிகாரிகள் கடந்த 2010-ம் ஆண்டே இது குறித்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தீர்ப்பு வழங்கப்பட்ட தாகவும் இனி அவகாசம் தர முடியாது எனவும் தெரி வித்தனர். மேலும் அந்த வீடுகளில் வசித்தவர்கள் கோவில் நிர்வாகத்தை அணுகி உரிய அனுமதி பெற்று மீண்டும் அதே இடத்தில் வீடு கட்டி வசிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து 2 வீடுகளில் வசித்தவர்கள் போலீசார் பாதுகாப்புடன் வெளி யேற்றப்பட்டு அந்த வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப் பட்டன.
- மதுரையில் இளம்பெண்கள் தற்கொலை செய்துகொண்டார்.
- 10 ஆண்டுகள் தண்டனை பெற்று தற்போது சிறையில் இருந்து வருகிறார்.
மதுரை
மதுரை அண்ணாநகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கவிதா (வயது37). 10 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சினையில் மகள் மீது கணவர் ஆசிட் ஊற்ற முயன்றுள்ளார். இது தொடர்பான வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை பெற்று தற்போது சிறையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கணவரை ஜாமீனில் கொண்டுவர கவிதா ப லமுறை முயற்சித்துள்ளார். ஆனால் கணவரை அவரால் ஜாமீனில் எடுக்க முடியவில்லை. இதனால் மன விரக்தியில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.உயிருக்கு போராடிய அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவிதா பரிதாபமாக இறந்தார். இது குறித்து அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு கிருஷ்ணபாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி பிரியா (27). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கணவர் வீட்டில் பிரியா வசித்து வந்தார். இதனால் மன விரக்தியில் இருந்த அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரியா இறந்தார். இது குறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தென் மாவட்டங்களுக்கு மோசமான நிலையில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
- இதுபோன்ற பராமரிப்பு இல்லாத அரசு பஸ்கள் உடனடியாக நிறுத்தப்படும் என்றும் பணிமனை மேலாளர் தெரிவித்தார்.
மதுரை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒரு புறம் தொடங்கியிருக்க வளிமண்டலத்தில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்க ளில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்திருந்த நிலையில் இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.
மதுரை, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை காரணமாக பொதுமக்க ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை ஒட்டி பொது மக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகிறார்கள். தமிழகத்தில் இரண்டாவது தலைநகர் பட்டியலில் முன்னிலைப்படுத்தப்பட்ட மதுரைக்கு பல்வேறு ஊர்க ளில் இருந்தும், அண்டை மாவட்டங்களை சேர்ந்த வர்களும் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கிறார்கள்.
இதற்காக அவர்கள் பெரும்பாலும் அரசு பேருந்துகளையே முழுமையாக நம்பியுள்ளனர். ஆனால் அரசு பேருந்துகளின் நிலைக்கு பயந்து தற்போது பயணத்தை ரத்து செய்யும் அளவுக்கு அச்சமடைந்துள்ளனர். காரணம் சற்றும் பராமரிப்பில்லாமல் அசாதாரண பயணம் மேற்கொள்ளும் வகையில் அமைந்துள்ள அரசு பஸ்களின் நிலை தான் என்று புகார் எழந்துள்ளது.
பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அரசு பேருந்துகள் முழுமையாக பராமரிக்கப்பட்டு எந்த வித சிரமமும் இன்றி வெளியூர்களுக்கு பயணிக்கலாம் என்ன அரசு உத்தரவாதம் அளித்திருந்த நிலையில் தற்போது இயக்கப்படும் பேருந்துகள் அனைத்துமே துளியும் பராமரிப்பு இல்லாத நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. மேற்கூரை பெயர்ந்தும், பக்கவாட்டு கண்ணாடிகள் இல்லாமலும் பல பேருந்துகள் உள்ளதால் மழைக்காலங்களில் அதில் பயணம் செய்பவர்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கி ணைந்த பேருந்து நிலையத்திலிருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தென்காசி நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. வழி நெடுகிலும் லேசான சாரல் மழை பெய்த நிலையில் திருமங்கலத்தில் இருந்து மிக கனமழை பெய்தது. இதனால் பஸ்சின் மேற்கூரையிலிருந்து குழாயை திறந்தது போல் தண்ணீர் கொட்டிக் கொண்டே வந்தது. மேலும் பக்கவாட்டு கண்ணாடிகள் இல்லாததால் பேருந்துக்குள் மழை பெய்தது போன்று தண்ணீர் பாய்ந்தது.
இதன் காரணமாக இருக்கைகள் இருந்தும் பயணிகள் அமர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அத்துடன் ஒரு சிலர் தாங்கள் வைத்திருந்த குடையை விரித்தும் பஸ்சில் பயணம் செய்த னர். அத்துடன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராஜபாளை யம், ஸ்ரீவில்லிபுத்தூர், கடையம், தென்காசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து புத்தாடை வாங்கிவிட்டு திரும்பிச் சென்ற பயணிகள் பேருந்துக்குள் கொட்டிய மழை நீரால் புத்தாடை நனைந்த நிலையில் அரசு போக்குவரத்து கழகத்தை கடுமையாக விமர்சித்தனர்.
சுமார் 185 கிலோ மீட்டர் தூரம் உள்ள மதுரை-தென்காசி இடையே இயக்கப்படும் அரசு பேருந்து இவ்வளவு மோசமான நிலையில் இருந்தால் பயணிகள் எப்படி பயணம் செய்வார்கள் என்பதை அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் பயணிகள் கேட்டுக் கொண்டனர்.
இது பற்றி மதுரையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளரிடம் கேட்டபோது, இந்த பேருந்து இன்று இரவுடன் சேவையை நிறுத்திக் கொள்ளும் என்றும், பயணிகள் மாற்று பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். அத்துடன் இதுபோன்ற பராமரிப்பு இல்லாத அரசு பஸ்கள் உடனடியாக நிறுத்தப்படும் என்றும் பணிமனை மேலாளர் தெரிவித்தார்.






