என் மலர்
மதுரை
- திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை திருவிழாவையொட்டி முருகப்பெருமானுக்கு நாளை பட்டாபிஷேகம் நடக்கிறது.
- வருகிற 26-ந்தேதி தேரோட்டமும், மகா தீபமும் நடக்கிறது.
திருப்பரங்குன்றம்
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என்ற பெருமை கொண்டது திருப்பரங்குன்றம். இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் பிரசித்தி பெற்றது கார்த்திகை தீபத் திருவிழா. இந்த திருவிழா கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கடந்த 17-ந்தேதி கார்த்திகை மாதம் பிறந்தது, இதையடுத்து கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை மாலை சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சி யாக 26-ந் தேதி காலை கார்த்திகை தேரோட்டம் நடைபெறும். பின்னர் மாலையில் கோவில் மூலஸ் தானத்தில் பாலதீபம் ஏற்றப்பட்டு மலை மேல் மகா தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து 16 கால் மண்டபம் பகுதியில் சொக் கப்பனை கொளுத்தப்படும்.
இந்த நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலை மையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
கார்த்திகை தீப திரு விழாவின்போது மலை மேல் உள்ள விநாயகர் கோவில் மேல் தளத்தில் தாமிரக்கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்படும். அதே வேளையில் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் திருப் பரங்குன்றம் மலையை சுற்றி உள்ள பகுதிகள், படிக்கட்டு பாதை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. மேலும் மலை மேல் உள்ள தீபத்தூணை சுற்றிலும் தற்காலிக வேலி அமைத்து 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருகிற 26-ந் தேதி தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு திருப்பரங்குன்றம் நகர் பகுதியை சுற்றிலும்
500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
- கார்த்திகை தீப திருவிழாவுக்கு திருவண்ணாமலை செல்ல வசதியாக 695 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
- காரைக்குடி-ராமேசுவரத்தில் இருந்து செல்கிறது.
மதுரை
அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணா மலையார் திருக்கோவில் கார்த்திகை தீபத்திருநாள் வருகிற 26ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை )மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. மேலும் 27-ந் தேதி பவுர்ணமி கிரிவலம் நடக்கி றது. இதையொட்டி நாளை 25-ந் தேதி முதல் 27 -ந் தேதி வரை அனைத்து பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் கும்ப கோணம் கோட்டத்தின் மூலம் 695 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த சிறப்பு பஸ்கள் காரைக்குடி, ராமேஸ்வரம், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கும்ப கோணம் உள்ளிட்ட பகுதி களில் இருந்து இயக்கப்பட உள்ளது. மேலும் திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக 9 தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பஸ் நிலையங்களில் இருந்து பக்தர்கள் கிரிவலப் பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாகவும் மினி பஸ்கள் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
எனவே பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய எதுவாக www.tnstc.in என்ற இணைய தளம் மூலம் முன்பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் மொபைல் ஆப் மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- சேலத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞரணி மாநாட்டுக்காக அமைச்சர் மூர்த்தி புல்லட்டில் சென்று பிரசாரம் மேற்கொண்டார்.
- வைகை அைண நீர்மட்டத்தை பொறுத்து மேலூர் பகுதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலூர்
தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் 17ந்தேதி நடக்கிறது. இதற்காக மேலூர் பகுதியில் அமைச்சர் மூர்த்தி புல்லட்டில் சென்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை மாவட்டத்திற்கு ஜூன் 1-ந்தேதி இரு போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டிய நிலையில், 3 மாதம் கழித்து தற்போது தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அதே நிலையில் மேலூர் மற்றும் திருமங்கலம் பகுதிகளை சேர்ந்த ஒரு போக பாசன விவசாயிகள் கேட்டுக் கொண்டதின் பேரில், தற்போது குடி நீருக்காக வைகை அணையில் இருந்து 14 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலூர் பகுதி களைச் சேர்ந்த ஒரு போக பாசன விவசாயிகள் தற்போது பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்ற னர்.
தற்போது வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட பகுதிக்கு தரவேண்டிய தண்ணீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், அனைத்து பகுதிக்கும் ஏக போகமாக தண்ணீர் திறந்தால் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும்.
அதனால், வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கு உரிய தண்ணீர் வழங்கப்பட்ட பின்னர் பருவமழை மற்றும் அணையின் தண்ணீர் அளவை பொருத்து மேலூர் பகுதி ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அதிகாரிகளின் ஆய்விற்கு பிறகு அரசு உரிய நடவடிக்கையாக முடிவெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மேலூர் நகர்மன்ற தலைவர் முகமது யாசின், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சுபேதா அப்பாஸ் ஒன்றிய கழக செயலாளர்கள் குமரன், பாலகிருஷ்ணன், ராஜேந்திர பிரபு, ராஜ ராஜன், கிருஷ்ணமூர்த்தி, பழனி, மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டியன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் நாவினிபட்டி வேலாயுதம், வல்லாளப்பட்டி பேரூராட்சி துணை தலைவர் கலைவாணன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- மது போதையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை விரகனூர் அருகே கல்மேடு பகுதியை சேர்ந்தவர்கள் நவநீதன், கிளி ஆனந்த். இவர்கள் நேற்று இரவு அங்குள்ள ஒயின்ஷாப் பார் அருகே அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது 6 பேர் கொண்ட கும்பல் திடீரென வந்து அவர்களிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து அந்த கும்பல் திடீரென தாங்கள் வைத்திருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் நவநீதன் மற்றும் கிளி ஆனந்த் ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டியது.
இதில் படுகாயம் அடைந்த நவநீதன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். மேலும் கிளி ஆனந்த் கத்திக்குத்து காயங்களுடன் கூச்சலிட்டவாறு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதனிடையே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
ரத்த காயத்துடன் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த கிளி ஆனந்த்தை பார்த்த பொதுமக்கள் ஆம்புலன்சு மூலமாக மதுரை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொலை செய்யப்பட்ட நவநீதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்டமாக உறவினர்களுக்குள் இடையே ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அதே பகுதிைய சேர்ந்த மணிமாறன், திருப்பதி ஆகிய 2 பேரை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையில் தொடர்புடைய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரையில் மது போதையில் வாலிபர் கொலை செய்யப்பட்டதோடு மற்றொரு இளைஞர் உயிருக்கு போராடும் நிலையில் உள்ள இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அண்ணா பஸ் நிலைய பகுதியில் 25-ந் தேதி மின்தடை ஏற்படும்.
- இந்த தகவலை வடக்கு செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை மாட்டுத்தாவணி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் 25-ந் தேதி (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணா பேருந்து நிலையம், கலெக்டர் அலுவலக வளாகம், காந்திமியூசியம், கரும்பாலை பகுதிகள், டாக்டர் தங்கராஜ் சாலை, மடீட்சியா, அண்ணா மாளிகை, காந்தி நகர், மதிச்சியம், ஷெனாய் நகர், குருவிக்காரன் சாலை, கமலாநகர், மருத்து வக்கல்லூரி, பனகல் ரோடு, அமெரிக்கன் கல்லூரி அரசு ராசாசி மருத்துவ மனை, வைகை வடகரை, கோரிப்பளையம், ஐம்பு ரோபுரம், மாரியம்மன் கோவில்தேரு, சின்னக் கண்மாய் தெரு, ஓ.சி.பி.எம். பள்ளி, கான்சாபுரம், தல்லாகுளம், ராஜம் பிளாசா பகுதிகள், தமுக்கம் பகுதிகள், சேவாலயம் ரோடு, இஸ்மாயிஸ்புரம், முனிச்சாலை ரோடு, கண்ணா போர்டிங், ஆட்டுமந்தை பொட்டல், வெற்றிலைபேட்டை, சுங்கம் பள்ளி வாசல், யானைக்கல் (ஒரு பகுதி), 50அடி ரோடு, குலமங்கலம் ரோடு, மீனாட்சிபுரம், சத்திய மூர்த்தி 1,2,3,4,5,6,7-வது தெருக்கள், சரஸ்வதி தியேட்டர் பகுதிகள், நரிமேடு மெயின்ரோடு. சாலை முதலியார் ரோடு, நேரு பள்ளி பகுதிகள்.
அன்னைநகர், எல்ஐஜி காலனி, பள்ளிவாசல் தெரு, மவுலானா சாகிப் தேரு கே.டி.கே. தங்கமணி தெரு, லேக் ஏரியா, கே.கே.நகர், தொழிற்பேட்டை ஏரியா அண்ணாநகர், 80அடி ரோடு, அம்பிகா தியேட்டர் சுற்றியுள்ள பகுதிகள், சுந்தரம் தியேட்டர் ரோடு, மானகிரி, சதா சிவநகர், அழகர் கோவில் மெயின்ரோடு, கற்பகநகர், லூர்து நகர், காந்திபுரம், சர்வேயர் காலனி, சூர்யா நகர், மின்நகர், கொடிக்குளம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், அன்பு நகர், தாசில்தார் நகர், மருது பாண்டியர் தெரு, எல்.கே.டி. நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
இந்த தகவலை வடக்கு செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்து உள்ளார்.
- அய்யப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, தேனி சாலை யில் முன்னாள் முதல்வர், ஓ.பன்னீர்செல்வம் உத்தரவுப்படி உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க கோரியும், தி.மு.க. அரசை கண்டித்தும் ஓ.பி.எஸ்.அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தெற்கு மாவட்ட செயலாளர் அய்யப்பன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். இளைஞர் அணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன், நகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன் ஆகியோர் வரவேற்று பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டது. மேலும் அய்யப்பன் எம்.எல்.ஏ. பேசுகையில், 58 கிராம கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும். இல்லையென்றால் தொடர் உண்ணாவிரதப் போ ராட்டம் நடத்துவோம். கடையடைப்பு, மறியல் போராட்டத்திலும் ஈடுபடுவோம் என்றார்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பாரப்பத்தி முத்தையா, காசிநாதன், மாவட்ட ஓட்டுநர் அணி செயலாளர் பிரபு, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திகைசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பாண்டியம்மாள், அவைத்தலைவர் வேலுச்சாமி, நகர செய லாளர் சசிக்குமார், உசிலம் பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜான்சன், வடக்கு ஒன்றிய செயலாளர் கோஸ்மீன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் போத்திராஜன், அய்ய னார்குளம் ஜெயக்குமார், திருமங்கலம் ஒன்றிய செய லாளர் சிவா, சேடப்பட்டி ஒன்றிய செயலாளர்கள் அய்யர், கார்த்திகேயன், செல்லம்பட்டி சவுந்திர பாண்டி, வேங்கைமார்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வாடிப்பட்டி அருகே கண்காணிப்பு காமிரா இல்லாத கோவில்களை குறிவைத்து அடுத்தடுத்து உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது.
- இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் வெவ்வேறு கும்பலா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை கிராமம் உள்ளது. இங்கு பாண்டிய மன்னரால் கட்டப்பட்டதாக கருதப்படும் பழமையான மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உள்ளது. இந்த கோவில் கொடி மரம் அருகே 3 அடி உயர உண்டியல் வைக்கப் பட்டுள்ளது.
நேற்று இரவு பணியாளர்கள் பூஜைகள் முடிந்ததும் பூசாரி, பணியாளர்கள் கோவிலை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை மீண்டும் கோவிலை திறந்த போது வாயிலின் முன்புறமுள்ள கொடிமரம் அருகே வைக்கப்பட்டிருந்த உண்டியல் திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் அருகில் சென்று பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு உண்டியலில் இருந்த பணம் திருடப்பட்டது தெரிய வந்தது. உடனடியாக அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் அருகில் உள்ள தாதம்பட்டி கிராமத்தில் மேட்டுப் பெருமாள் நகரில் அமைந்துள்ள நீலமேக பெருமாள் கோவிலில் வைக்கப்பட்டிருந்த 2 அடி உயர உண்டியலில் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டதாக தகவல் வந்தது.
2 கோவில்களிலும் இருந்த உண்டியல்களில் இருந்து எவ்வளவு பணம்? திருடப்பட்டது என்பது குறித்த தகவல்கள் இல்லை.
ஒரே நாள் நள்ளிரவில் மர்ம நபர்கள் அடுத்தடுத்து கோவில்களின் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்து சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த கொள்ளை சம்ப வங்கள் குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 2 கோவில்களிலும் கண்காணிப்பு காமிரா பொருத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொள்ளையர்கள் இதனை நோட்டமிட்டு திட்டமிட்டு 2 கோவில்களிலும் கொள்ளையடித்து சென்றார்களா? அல்லது இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் வெவ்வேறு கும்பலா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே நாள் இரவில் அருகருகே உள்ள 2 கிராமங்களின் பழமையான கோவில்களில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு அதிலிருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மதுரையில் அடகு கடை உரிமையாளரிடம் ரூ. 1¼ லட்சம் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
- அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பகுதிகளை ஆய்வு செய்தனர்.
மதுரை
மதுரை சிம்மக்கல் எல்.என்.பி. அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சுதர்சன் (வயது35). இவர் ஜான்சி ராணி பூங்கா பகுதியில் உள்ள மதார்கான் டதோர் தெருவில் தங்க நகை அடகு கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு சுதர்சன் கடையை பூட்டி விட்டு ரூ. 1 லட்சத்து 31 ஆயிரத்தை பையில் வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். பணப்பையை மோட்டார் சைக்கிளில் தொங்க விட்டிருந்தார். வீட்டுக்கு சென்ற அவர் பணப்பையை எடுத்துச்செல்லவில்லை. சிறிது நேரம் கழித்து பணப்பை குறித்து ஞாபகம் வந்ததும் சுதர்சன் உடனே வீட்டின் வெளியே வந்து மோட்டார் சைக்கிளை பார்த்தார்.
அப்போது அதில் இருந்த பணப்பை திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் திலகர் திடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பகுதிகளை ஆய்வு செய்தனர். அப்போது செல்லூர் கல் பாலம் காளிதோப்பு பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் மனைவி யோகபிரியா (வயது 31) பணப்பையை திருடிச்சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
- 22 பணியிடங்களுக்கு மட்டுமே தகுதியானவர்கள் தேர்வாகியுள்ளனர்
- விதிகளை பின்பற்றி முறையாக அறிவிப்பாணை வெளியிட்டு ராணுவ வீரர்களை தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும்.
மதுரை:
நெல்லை மாவட்டதை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மற்றும் சிலர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த 2018-ம் ஆண்டில் ராணுவ வீரர்கள் தேர்வில் பங்கேற்றோம். உடல் தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றோம். இந்த தேர்வின் முடிவில் ராணுவ வீரர்கள் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் பட்டியலில் எங்கள் பெயர் இடம் பெறவில்லை.
இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்தபோது, 22 பணியிடங்களுக்கு மட்டுமே தகுதியானவர்கள் தேர்வாகியுள்ளனர் என்றார். ஆனால் ராணுவம் வெளியிட்ட அறிவிப்பாணையில் இந்த பதவிக்கு எத்தனை பேர் தேவை, எத்தனை பேரை தேர்வு செய்ய இருக்கிறார்கள் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.
இது சட்ட விரோதமானதாகும். எனவே இந்த அறிவிப்பாணையை ரத்து செய்துவிட்டு, விதிகளை பின்பற்றி முறையாக அறிவிப்பாணை வெளியிட்டு ராணுவ வீரர்களை தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கில் மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர், முதன்மை ராணுவ அதிகாரி உள்ளிட்டோர் ஏற்கனவே தங்களது தரப்பு பதிலை ஐகோர்ட்டில் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர்களின் கோரிக்கை ஏற்புடையதல்ல. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.
- பேரையூர் அருகே சிறுத்தை ஒன்று உலா வந்ததாக கூறப்படுகிறது.
- சிறுத்தை நடமாட்டம் தகவல் பொதுமக்களிடைேய பீதியை ஏற்படுத்தியது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட எஸ்.மேலப்பட்டி கிராமம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது.
இந்த கிராமத்திற்குள் நேற்று இரவு வந்த சிறுத்தை ஒன்று உலா வந்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுத்தை அதே ஊரைச் சேர்ந்த மகாலிங்கம், சுப்பிர மணி, சுந்தரம் மற்றும் ரவி என்பவர்களின் 5 ஆடுகளை கடித்து தின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.
மேலும் இந்த கிராமத்தில் சிறுத்தை உலா வரும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்வதற்காக வர உள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது. வனத்துறையினர் நேரில் வந்து ஆய்வு மேற் கொண்டால் சிறுத்தையா? அல்லது வேறு ஏதும் மிருகமா? என தெரியவரும்.
சிறுத்தை வந்திருந்தால் அதனை காட்டுப் பகுதிக் குள் விரட்ட வேண்டும் எனவும் அல்லது கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதி யில் விட நடவடிக்கைகள் எடுத்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் தகவல் பொதுமக்களிடைேய பீதியை ஏற்படுத்தியது.
- மதுரை அழகர்கோவிலில் கள்ளழகர் கோவில் பதினெட்டாம்படி ராஜகோபுர மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில் ராஜகோபுரத்துக்கு இன்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பதினெட்டாம்படி ராஜகோபுரத்திற்கு கடந்த 2011-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் கோவி லில் உள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் யாக சாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்றும் 2-வது நாளாக 40 வேத விற்பன்னர்கள் கொண்ட குழுவினர், ஒரே நேரத்தில் 8 யாக குண்டங்களில் வேத மந்திரங்களுடன் யாக பூஜை கள் நடத்தினர்.
இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கும்பாபி ஷேக விழா இன்று காலை நடைபெற்றது. காலை 9.15 மணிக்கு மேல் 10 மணிக்குள் மகா கும்பாபி ஷேக விழா நடைபெற்றது. முன்னதாக நேற்று இரவு கள்ளழகர் கோவில் பதி னெட்டாம்படி 7 நிலை கொண்ட ராஜகோபுரம், முழுக்க முழுக்க வண்ண விளக்குகளால், அலங்க ரிக்கப்பட்டிருந்தது.
பக்தர்கள் பாதுகாப்புடன் நின்று கும்பாபிஷேக விழாவை காண, தனித்தனியாக, இரும்பு கம்பிகளான தடுப்புகள் மாவட்ட காவல் துறை மூலம் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்தது. பதினெட்டாம் படி கருப்பணசுவாமி கோவில் முன்பு மிகப் பழமையான திருப்பவுத்திர புஷ்கரணி தெப்பக்குளத்திற்கு அழகர் மலையில் இருந்து வழிந்து நூபுர கங்கை தீர்த்த தண் ணீர், மற்றும் தற்போது பெய்யும்மழை நீர் சேர்ந்து தெப்பக்குளம் நிரம்பி வழி யும் நிலையில் உள்ளது. இந்த கும்பாபிஷேக நேரத் தில் இந்த தெப்பக்குளம் நிரம்பி உள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் வர வேற்பை பெற்றுள்ளது. முழுக்க முழுக்க நூபுர கங்கை புனித தீர்த்தக் குடங்களிலுருந்து, கும்ப கலசங்களில் குடம் குடமாக ஊற்றி பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க வானத் தில் கருடன் வட்டமிட கும்பாபிஷேக விழா நடை பெற்றது. அப்போது ஹெலிகாப்ட ரில் இருந்து பூ மழை தூவியது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.
விழா ஏற்பாடு களை அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் அறங்காவலர் குழுவினர், திருக்கோவில் கண்கா ணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- சோழவந்தான் அருகே குடிநீர் வசதி கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
- கலெக்டர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள முதலைக்குளம் ஊராட்சியில் உட்பட்ட கீழப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 600 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் கடந்த 6 மாத காலமாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இந்தநிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடிபாண்டி நிதி ஒதுக்கப்பட்டு போர்வெல் போடப்பட்டது. இதன் மூலம் குடிநீர் சப்ளை செய்வதற்கு ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிலையில்அந்த ஏற்பாட்டை ஒருசிலர் தடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கீழப்பட்டி கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் குடிநீருக்கு அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
கடந்தஒரு மாதத்திற்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் குடிநீர் கிடைப்பதற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் ஒரு மாதம் கடந்த பின்னரும் குடிநீர் கிடைக்க வழியில்லாமல் கீழப்பட்டி கிராம மக்கள் உள்ளனர்.
இந்த நிலையில் தங்களுக்கு போர்வெல் மூலம் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதாவிடம் மனு கொடுத்துள்ளனர்.
தனி நபர்களின் நலனை கருத்தில் கொண்டு கிராம மக்களுக்கு குடிநீர் கிடைப்பதை தடுத்து வருகின்றனர். இதுகுறித்து கலெக்டர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






