search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Petition to the Collector"

    • சோழவந்தான் அருகே குடிநீர் வசதி கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
    • கலெக்டர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள முதலைக்குளம் ஊராட்சியில் உட்பட்ட கீழப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 600 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் கடந்த 6 மாத காலமாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இந்தநிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடிபாண்டி நிதி ஒதுக்கப்பட்டு போர்வெல் போடப்பட்டது. இதன் மூலம் குடிநீர் சப்ளை செய்வதற்கு ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

    இந்த நிலையில்அந்த ஏற்பாட்டை ஒருசிலர் தடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கீழப்பட்டி கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் குடிநீருக்கு அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    கடந்தஒரு மாதத்திற்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் குடிநீர் கிடைப்பதற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் ஒரு மாதம் கடந்த பின்னரும் குடிநீர் கிடைக்க வழியில்லாமல் கீழப்பட்டி கிராம மக்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் தங்களுக்கு போர்வெல் மூலம் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதாவிடம் மனு கொடுத்துள்ளனர்.

    தனி நபர்களின் நலனை கருத்தில் கொண்டு கிராம மக்களுக்கு குடிநீர் கிடைப்பதை தடுத்து வருகின்றனர். இதுகுறித்து கலெக்டர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • பூட்டுத்தாக்கில்‌ உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரிக்கை
    • மது அருந்திய நபர்கள் சாலையில் விழுந்து கிடப்பதும் தொடர்கதையாக உள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க சார்பில் மாவட்ட செயலாளர் ப.சரவணன் தலைமையில் கட்சியினர் நேற்று மாலை கலெக்டர் வளர்மதியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பூட்டுத்தாக்கு பஞ்சாயத்திற்கு உட்பட்ட மேலகுப்பம் சாலையில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது.

    தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 100 மீட்டர் தொலைவிலும், பள்ளி மற்றும் கல்லூரி ,வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் மற்றும் வாகனங்கள் அதிக அளவில் பயன்படுத்தும் சாலையாகவும் மேலகுப்பம் சாலை உள்ளது.

    சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள், பொதுமக்கள் மாலை நேரங்களிலும், இரவு நேரங்களில் வீட்டிற்கு திரும்ப செல்லும் போது மேலகுப்பம் சாலையில் அமைந்துள்ள மதுபான கடையில் மது அருந்தும் நபர்கள் தங்கள் இரு சக்கர வாகனத்தை சாலையிலேயே விட்டுவிட்டு மது அருந்துவதும், மது அருந்திய நபர்கள் சாலையில் விழுந்து கிடப்பதும் தொடர்கதையாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

    எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக மது கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாகவும், பா.ம.கவின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    இதில் பா.ம.க.வின் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், வக்கீல். ஜானகிராமன் உள்பட மாநில, மாவட்ட,ஒன்றிய, நகர , நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கடந்த 2013, 17, 19, 22 மற்றும் 2023-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று நியமன தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் மனு கொடுக்க வந்தனர்.
    • அனைத்து அரசு வேலைகளிலும் மதிப்பெண் அடிப்படையில் தான் பணி யமர்த்தப்படுகின்றனர்.

    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று, கடந்த 2013, 17, 19, 22 மற்றும் 2023-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று

    நியமன தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் மனு கொடுக்க வந்தனர். அவர்கள் கூறும்போது:-

    அனைத்து அரசு வேலைகளிலும் மதிப்பெண் அடிப்படையில் தான் பணி யமர்த்தப்படுகின்றனர். ஆசிரியர் தேர்வு வாரிய தேர்விலும் மதிப்பெண் முறையே பின்பற்றுகிறது.

    அதனால் அரசானை 149 விரைந்து செயல்படுத்தி நியமனத் தேர்வை நடத்த வழிவகை செய்யவேண்டும். நியமனத் தேர்வை ரத்து செய்தால் இளைஞர்கள் ஆசிரியர் பணியினை வெறுக்கும் அபாயம் உண்டாகும்.

    பிஜி டி.ஆர்.பி தேர்வினை போன்று எஸ்.ஜி.டி மற்றும் யூ.சி.டி.ஆர்.பி தேர்வினை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
    • குடிநீர், ரோடு வசதி செய்துதர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முன்னிலை வகித்தார். அப்போது் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் மனைவி விசித்ராவுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ஏற்கனவே ரூ.6 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டது.

    நேற்று கூடுதல் நிவாரணமாக இலவச வீட்டுமனை பட்டாவினை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார். தொடர்ந்து ராமநாதபுரம் அருகே சக்கரகோட்டை டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல்கலாம் நகர் வீட்டு உரிமையாளர்கள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மனு அளித்தனர்.

    இதில், 50 குடும்பங்கள் வசிக்கும் பகுதி அருகே 2 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இதனால் மாணவர்கள், பெண்கள் ரோட்டில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். இக்கடையை பூட்ட பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை. மாறாக சம்பந்தமே இல்லாமல் வேறு பகுதியில் கடையை பூட்டியுள்ளனர்.

    எனவே பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள கடை எண் 6969 பூட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும், என வலியுறுத்தினர். உத்தரகோச மங்கை அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் வெள்ளா மருச்சுகட்டி கிராம மாணவர்கள் பெற்றோருடன் மனு அளித்தனர். பள்ளி நேரத்தில் பஸ் வசதியின்றி 4கி.மீ., நடந்து சிரமப்படுகிறோம். காலை 8 மணி, மாலை 5 மணிக்கு அரசு பஸ் இயக்க வேண்டும். மேலும் குடிநீர், ரோடு வசதி செய்துதர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி கூட்டாம்புளி, சாத்தமங்கலம் கிராம மக்கள் காவிரி குடிநீர் வரவில்லை. சுகாதாரமற்ற குளத்து நீரை பயன்படுத்துகிறோம். சுகாதாரமான குடிநீர் குடம் ரூ.15க்கு விற்கின்றனர். உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும். புதிதாக ரேஷன் கடை கட்டித்தர வேண்டும், என வலியுறுத்தினர்.

    இக்கூட்டத்தில் வீட்டுமனைபட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக 267 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் மாரிசெல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உரிமையை ஊட்டி நகரமன்றத்திற்கு மீண்டும் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
    • அரசிற்கு பரிந்துரை செய்து நிதியினை பெற்றுத்தர வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊட்டி நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி மற்றும் துணை தலைவர் ரவிகுமார் தலைமையில் நகரமன்ற உறுப்பினர்கள் கலெக்டரை சந்தித்து நகராட்சியில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய வளர்ச்சி பணிகள் குறித்த மனுவினை வழங்கினர். அந்த மனுவில் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியினை எளிதில் பெற ஏதுவாக 1500 சதுரடி வரையிலான கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதி வழங்கும் உரிமையை ஊட்டி நகரமன்றத்திற்கு மீண்டும் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பெய்து வந்த கன மழை காரணமாக அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தடுப்புசுவர்கள், மழை நீர் கால்வாய்கள் சேதமடைந்துள்ளது. இவற்றை சரிசெய்திட சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய அரசிற்கு பரிந்துரை செய்து நிதியினை பெற்றுத்தர வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில் ஊட்டி நகர மன்ற உறுப்பினர்கள் ஜார்ஜ், முஸ்தபா, எல்கில் ரவி, தம்பி இஸ்மாயில், ரமேஷ், கீதா, நாகமணி, ரீட்டா, விஷ்னுபிரபு, ரகுபதி, கஜேந்திரன், செல்வராஜ், திவ்யா, மீனா, பிளோரினா, மேரி பிளோரினா, வினோதினி, வனிதா, அனிதாலட்சுமி, விசாலாட்சி, அபுதாகீர், நாதன், நாகராஜ், ரஜினிகாந்த், உமா நித்யசத்யா, ராஜலட்சுமி, ராஜேஸ்வரி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

    • பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் வழங்கப்பட்டது
    • பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வலியுறுத்தல்

    திருப்பத்தூர்:

    தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில பொருளாளர் சி. ஜெயக்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை மனுவை கலெக்டர் அமர்குஷ்வாஹாவிடம் அளித்துள்ளார் அதன் விவரம் வருமாறு:-

    தமிழக முதல்வர், அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதும் சரி, திமுக தேர்தல் அறிக்கையிலும் சரி, சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரைக் சென்ற இடங்களிலும் சரி, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் அதிக எதிர்பார்ப்பான பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்றார்.

    ஆட்சிக்கு வநது 18 மாதங்கள் கடந்தும் இதுவரை அது பற்றின அறிவிப்புகள் ஏதும் இல்லாதது ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திற்கு பிறகு பஞ்சாப் அரசு கூட தனது மாநிலத்தில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தியுள்ளது.

    ஏன் தற்போது இமாச்சல பிரதேச அரசு பொறுப்பெற்றவுடன் பழைய ஓய்வூதிய திட்டத்தை தனது முதல் கூட்டத்திலேயே செயல்படுத்த அறிவித்துள்ளார்கள் தமிழக முதல்வர் அவர்களும் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பை வருகிற ஜன-1 புத்தாண்டு தினத்தில் அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

    மேலும் ஜூலை மாதம் முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை இதுவரை வழங்காமல் இருப்பது அரசு ஊழியர்களின் மத்தியில் ஆசிரியர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராசமுத்து (வயது 67), இவரது மனைவி தனம் (60) ஆகியோர் தங்களின் உறவினர்களுடன் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.
    • இந்நிலையில் எங்கள் வீட்டின் அருகில் குடியிருக்கும் துணை தாசில்தார், வணிக வரித்துறை ஊழியர் ஆகியோர் எங்களை அடிக்கடி மிரட்டி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் முருங்கப்பட்டி அருகே உள்ள பெத்தாம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராசமுத்து (வயது 67), இவரது மனைவி தனம் (60) ஆகியோர் தங்களின் உறவினர்களுடன் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் பெத்தாம்பட்டியில் 45 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு தவமணி என்கிற ராஜகணபதி, தமிழன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். நாங்கள் கூட்டு குடும்பமாக, விசைத்தறி தொழில் செய்து வருகிறோம்.

    இந்நிலையில் எங்கள் வீட்டின் அருகில் குடியிருக்கும் துணை தாசில்தார், வணிக வரித்துறை ஊழியர் ஆகியோர் எங்களை அடிக்கடி மிரட்டி வருகின்றனர். ஏற்கனவே எங்களுக்குள் நிலப் பிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வருகிறது.

    நேற்று முன்தினம், எங்கள் நிலத்தை அளந்து சர்வேயர் எல்லை கல் நட்டார். அடுத்த சில மணி நேரத்தில், துணை தாசில்தார், வணிக வரித்துறை ஊழியர் ஆகிய இருவரும் அடியாட்களுடன் வந்து என்னையும், எனது மனைவி மற்றும் மகன்களை தாக்கிவிட்டு சென்றனர். தற்போது எனது மூத்த மகன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுபற்றி இரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து விசாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளனர்.

    • கடந்த 2005-ம் ஆண்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.
    • 3 ஆண்டுகள், கடிதம் வழியாக தொடர்பில் இருந்த பழனிவேல், அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்தாருடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் உள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வீரகனூர் பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவர் கடந்த 2005-ம் ஆண்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். சுமார் 3 ஆண்டுகள், கடிதம் வழியாக தொடர்பில் இருந்த பழனிவேல், அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்தாருடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் உள்ளார்.

    இந்நிலையில், பழனிவேலை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த முகவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, முறையான பதில் கிடைக்கவில்லை. மேலும் பழனிவேல் சவுதியில் வேலை பார்ப்பதாக நண்பர் ஒருவர் மூலம் அவரது குடும்பத்திற்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரை எவ்வாறு தொடர்பு கொள்வது என தெரியாமல் அவரது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

    இதனை அடுத்து வெளிநாட்டில் உள்ள தங்களின் தம்பியை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழனிவேலின் சகோதரி பழனியம்மாள் கண்ணீர் மல்க, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளித்து உள்ளார். 

    • வாய்க்கால்களை தூர் வாரகோரி கலெக்டரிடம் மனு வழங்கப்பட்டது
    • விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் அளித்தார்

    திருச்சி:

    தமிழக விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்ற சங்கத்தின் மாநில துணை தலைவர் மனோகரன், திருச்சி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தற்போது சம்பா நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு லட்சக்கணக்கில் முதலீடு செய்து நாற்று நட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய வாய்க்கால்கள், கண்மாய்கள் ஆக்கிரமிப்பு செய்து சிலர் வீடு , கடைகள் கட்டி வைப்பதால் மழைக்காலங்களில் நீர் செல்வதற்கு இடமில்லாமல் தேங்கி நின்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவும் பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

    பெட்டவாய்த்தலையில் உள்ள அய்யன் வாய்க்கால் கடந்த இரண்டு வருடமாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் இருந்து கடமடை பகுதிக்கு நீர் செல்ல முடியாமல், சுமார் 300 ஏக்கர் விளை நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே போன்று முசிறி, காட்டுப்புத்தூர், ஆமூர், அய்யம்பாளையம், செவந்தலிங்கபுரம், ஆசாரி பாளையம், வெள்ளூர், போன்ற பகுதிகளில் செங்கல் காளவாய் உரிமையாளர்கள், வாய்க்கால் பகுதிகளை ஆக்கிரமித்து நீர் செல்ல முடியாத வகையில் உள்ளது . இதனால் ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்ய முடியாமல் வீடு கட்டும் நிலங்களாக மாறி வருகிறது.

    இது சம்பந்தமாக பொதுப்பணித்துறை செயற்பொ றியாளர்களுடன் மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுக்கள் மீதான நடவடிக்கையில் 30 நாட்களுக்குள் மேற்படி பணிகளை அதிகாரிகள் செயல்படாவிட்டால் தமிழக விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்ற சங்கத்தின் தலைவர் பாச பரிமளம் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி முசிறி கைகாட்டியில் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்திருந்தனர்.

    • வடக்குமாதவி கிராமத்தில் ஏரிக்கரையிலிருந்து ஊருக்குள் செல்வதற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும்
    • கீழப்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட கே.புதூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே வடக்குமாதவி கிராமத்தில் ஏரிக்கரையிலிருந்து ஊருக்குள் செல்வதற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து வடக்குமாதவி 8 வது வார்டு உறுப்பினர் சந்தோஷ் தலைமையில் 100க்கு மேற்பட்டோர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், பெரம்பலூர் அருகே வடக்கு மாதவி கிராமத்தில் ஏரிக்கரை பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    நாங்கள் பயன்படுத்தி வந்த பாதை தனி நபருடையது. அந்த பாதையை ஒருவர் கிரையம் செய்து வாங்கிவிட்டார். ஆகையால் அந்தபாதையை பயன்படுத்தமுடியவில்லை. ஆகையால் ஏரிக்கரையிலிருந்து வடக்குமாதவி ஊருக்குள் செல்வதற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் அருகே கீழப்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட கே.புதூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    அம்மனுவில் கீழப்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட கே.புதூர் கிராமத்தில் 1983ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை ஊராட்சி ஒன்றிய அலோபதி மருத்துவமனை வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த மருத்துவ மனைக்கு சொந்த கட்டிடம் கட்ட அரசு 2006ம் ஆண்டு நிதி ஒதுக்கியது. இதற்காக ஊர் மக்கள் சார்பில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அந்த இடத்தில் மருத்துவமனை கட்டிடடம் கட்டப்பட்டு 2013ம்ஆண்டு வரை அலோபதி மருத்துவமனை இயங்கி வந்தது. அரசின் உத்தரவின்பேரில் இந்த மருத்துவமனை மூடப்பட்டது, தற்போது இந்த மருத்துவமனை கட்டிடம் பயன்பாடின்றி கிடக்கிறது.

    இந்நிலையில் கீழப்பூலியூரில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மருத்துவமனையை கே.புதூரில் பயன்பாடின்றி கிடக்கும் மருத்துவமனை கட்டிடத்தில் துவங்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

    • அனைத்து குக்கிராமங்களிலும் அடிப்படை தேவைகளான குப்பை அகற்றம், குடிநீர் குழாய் உடைப்பு, தெருவிளக்குகள் சரிபார்த்தல், சுகாதார பொருட்கள் வாங்கியது, மோட்டார் பழுதுபார்த்தல் போன்ற செலவீன பட்டியல்களுக்கு ஊராட்சியில் கடந்த மார்ச் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
    • பொதுமக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது.

    நெல்லை:

    மானூர் யூனியனுக்கு உட்பட்ட பேட்டை ரூரல் பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை, மாவட்ட கலெக்டர் விஷ்ணுவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்களது பஞ்சாயத்துக்குட்பட்ட அனைத்து குக்கிராமங்களிலும் அடிப்படை தேவைகளான குப்பை அகற்றம், குடிநீர் குழாய் உடைப்பு, தெருவிளக்குகள் சரிபார்த்தல், சுகாதார பொருட்கள் வாங்கியது, மோட்டார் பழுதுபார்த்தல் போன்ற செலவீன பட்டியல்களுக்கு ஊராட்சியில் கடந்த மார்ச் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த செலவு தொகைகளை கொடுப்பதற்கு ஊராட்சி ரொக்க புத்தகத்தில் எழுதப்பட்டும் பஞ்சயாத்தின் துணைத்தலைவர் அதில் கையொப்பமிட மறுக்கிறார்.

    இதனால் எங்களது ஊராட்சியில் பொதுமக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. எனவேமாவட்ட கலெக்டர் விஷ்ணு இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 8 அடி வெண்கல சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் என கலெக்டரிடம், தி.மு.க.வினர் மனு அளித்தனர்.
    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன் தலைமையில், நகர செயலாளர் நவாப், நகராட்சி தலைவர் பரிதா நவாப் ஆகியோர் மாவட்ட கலெக்டர்  ஜெயசந்திர பானுரெட்டியிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:- 

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதியை கொண்டாடும் வகையிலும், நினைவு நாளான ஆகஸ்ட் 7&ந் தேதியில் வீரவணக்கம் செலுத்தும் வகையிலும் கிருஷ்ணகிரி 6 வழி சாலை சந்திப்பில் எங்களின் சொந்த செலவில், சொந்த இடத்தில் 8 அடி உயரம் கொண்ட வெண்கலத்தால் ஆன திருவுருவ சிலையை நிறுவ அனுமதி அளிக்க வேண்டும். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அப்போது முன்னாள் எம்.பி. சுகவனம், ஒன்றிய செயலாளர் கோவிந்தன், கவுன்சிலர்கள் செந்தில்குமார், புவனேஸ்வரி, தேன்மொழி மாதேஷ், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் பொன்.குணசேகரன், அரங்கண்ணல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    ×