search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நியமனத் தேர்வை நடத்த கோரிஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கலெக்டரிடம் மனு
    X

    நியமனத் தேர்வை நடத்த கோரிஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கலெக்டரிடம் மனு

    • கடந்த 2013, 17, 19, 22 மற்றும் 2023-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று நியமன தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் மனு கொடுக்க வந்தனர்.
    • அனைத்து அரசு வேலைகளிலும் மதிப்பெண் அடிப்படையில் தான் பணி யமர்த்தப்படுகின்றனர்.

    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று, கடந்த 2013, 17, 19, 22 மற்றும் 2023-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று

    நியமன தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் மனு கொடுக்க வந்தனர். அவர்கள் கூறும்போது:-

    அனைத்து அரசு வேலைகளிலும் மதிப்பெண் அடிப்படையில் தான் பணி யமர்த்தப்படுகின்றனர். ஆசிரியர் தேர்வு வாரிய தேர்விலும் மதிப்பெண் முறையே பின்பற்றுகிறது.

    அதனால் அரசானை 149 விரைந்து செயல்படுத்தி நியமனத் தேர்வை நடத்த வழிவகை செய்யவேண்டும். நியமனத் தேர்வை ரத்து செய்தால் இளைஞர்கள் ஆசிரியர் பணியினை வெறுக்கும் அபாயம் உண்டாகும்.

    பிஜி டி.ஆர்.பி தேர்வினை போன்று எஸ்.ஜி.டி மற்றும் யூ.சி.டி.ஆர்.பி தேர்வினை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×