search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ம.க.வினர் கலெக்டரிடம் மனு
    X

    பா.ம.க.வினர் கலெக்டரிடம் மனு

    • பூட்டுத்தாக்கில்‌ உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரிக்கை
    • மது அருந்திய நபர்கள் சாலையில் விழுந்து கிடப்பதும் தொடர்கதையாக உள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க சார்பில் மாவட்ட செயலாளர் ப.சரவணன் தலைமையில் கட்சியினர் நேற்று மாலை கலெக்டர் வளர்மதியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பூட்டுத்தாக்கு பஞ்சாயத்திற்கு உட்பட்ட மேலகுப்பம் சாலையில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது.

    தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 100 மீட்டர் தொலைவிலும், பள்ளி மற்றும் கல்லூரி ,வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் மற்றும் வாகனங்கள் அதிக அளவில் பயன்படுத்தும் சாலையாகவும் மேலகுப்பம் சாலை உள்ளது.

    சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள், பொதுமக்கள் மாலை நேரங்களிலும், இரவு நேரங்களில் வீட்டிற்கு திரும்ப செல்லும் போது மேலகுப்பம் சாலையில் அமைந்துள்ள மதுபான கடையில் மது அருந்தும் நபர்கள் தங்கள் இரு சக்கர வாகனத்தை சாலையிலேயே விட்டுவிட்டு மது அருந்துவதும், மது அருந்திய நபர்கள் சாலையில் விழுந்து கிடப்பதும் தொடர்கதையாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

    எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக மது கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாகவும், பா.ம.கவின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    இதில் பா.ம.க.வின் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், வக்கீல். ஜானகிராமன் உள்பட மாநில, மாவட்ட,ஒன்றிய, நகர , நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×