search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டரிடம்"

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 8 அடி வெண்கல சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் என கலெக்டரிடம், தி.மு.க.வினர் மனு அளித்தனர்.
    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன் தலைமையில், நகர செயலாளர் நவாப், நகராட்சி தலைவர் பரிதா நவாப் ஆகியோர் மாவட்ட கலெக்டர்  ஜெயசந்திர பானுரெட்டியிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:- 

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதியை கொண்டாடும் வகையிலும், நினைவு நாளான ஆகஸ்ட் 7&ந் தேதியில் வீரவணக்கம் செலுத்தும் வகையிலும் கிருஷ்ணகிரி 6 வழி சாலை சந்திப்பில் எங்களின் சொந்த செலவில், சொந்த இடத்தில் 8 அடி உயரம் கொண்ட வெண்கலத்தால் ஆன திருவுருவ சிலையை நிறுவ அனுமதி அளிக்க வேண்டும். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அப்போது முன்னாள் எம்.பி. சுகவனம், ஒன்றிய செயலாளர் கோவிந்தன், கவுன்சிலர்கள் செந்தில்குமார், புவனேஸ்வரி, தேன்மொழி மாதேஷ், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் பொன்.குணசேகரன், அரங்கண்ணல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    ×