என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    ஜோதிடரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கெலமங்கலம் கணேசா காலனியை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் (வயது59). ஜோதிடர். இவரது மகன் கோபிநாத் அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓட்டலுக்கு சென்ற கெலமங்கலம் ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்த வினய்குமார் (21) என்பவர் மீனாட்சிசுந்தரத்திடம் பணம் கேட்டு மிரட்டினார். ஆனால் மீனாட்சிசுந்தரம் பணம் கொடுக்காததால் அவரை மிரட்டி விட்டு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் கெலமங்கலம் பேரூராட்சிக்கு சொந்தமான சந்தை கடை அருகே மீனாட்சிசுந்தரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வினய்குமார் அவரது கழுத்தில் கத்தியால் குத்தினார். இது தொடர்பான புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினய்குமாரை கைது செய்தனர்.
    மீஞ்சூரை அடுத்த சுப்பாரெட்டி பாளையம் ஊராட்சி அருகே கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தரைப்பாலம் மூழ்கி உள்ளது.

    பொன்னேரி:

    தொடர் மழை காரணமாக பூண்டி ஏரி நிரம்பி வழிகிறது. ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    இதனால் மீஞ்சூரை அடுத்த நாப்பாளையம் பாலத்தை தொட்டபடி தண்ணீர் பாய்ந்து செல்கிறது. இதனை பார்க்க அதிக அளவில் பொதுமக்கள் குவிந்து வருவதால் அப்பகுதி சுற்றுலாதலமாகமாறி உள்ளது.

    வெள்ள நீர் வெள்ளி வாயல் விச்சூர், மணலி புதுநகர் பகுதியில் ஊருக்குள் புகுந்து உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் தங்களது கார்களை பாதுகாப்புக்காக மீஞ்சூர் மணலி சாலையில் வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட கார்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு உள்ளன. வெள்ள நீர் சூழந்த இடங்களில் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.

    மீஞ்சூரை அடுத்த சுப்பாரெட்டி பாளையம் ஊராட்சி அருகே கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தரைப்பாலம் மூழ்கி உள்ளது. இதனால் ஆற்றை கடக்க முடியாமல் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் ஆற்றில் படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. அரசு அதிகாரிகள் யாரும் இங்கு வந்து தேவையான உதவிகள் செய்யவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    தர்மபுரி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி எம்.ஒட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். (வயது 55). தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய தற்கொலை குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    செல்பி மோகத்தில் கல்லூரி மாணவர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கதவணிபுதூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. விவசாயி. இவரது மகன் விக்னேஷ் (வயது 18). நாமக்கல் தனியார் கல்லூரியில் பார்மசி படித்து வருகிறார்.

    இவர் தனது உறவினர்கள் பரமசிவம் (45), ஆறுமுகம் (37) ஆகியோருடன் சேர்ந்து நேற்று மாலை கதவணிபுதூர் அருகே உள்ள பாம்பாறு தடுப்பணைக்கு சென்றார்.

    அங்கு ஆறுமுகமும், பரமசிவமும் மீன்பிடித்து கொண்டிருந்த போது, விக்னேஷ் ஆற்றில் இறங்கி செல்போனில் ‘செல்பி’ எடுக்க முயன்றார்.

    அப்போது நிலைதடுமாறி ஆற்றில் விழுந்த அவரை தண்ணீர் இழுத்து சென்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆறுமுகமும், பரமசிவமும் விக்னேசை மீட்க முயன்றனர். ஆனால் ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களால் விக்னேசை காப்பாற்ற முடியவில்லை. ஆற்றி வெள்ளத்தில் விக்னேஷ் அடித்து செல்லப்பட்டார்.

    இதுகுறித்து ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கிராம மக்கள் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    பின்னர் இரவு நேரமானதால் விக்னேசை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து இன்றும் 2-வது நாளாக தேடும் பணி நடந்தது.

    நாட்டிலேயே தூய்மையான நகரங்கள் பட்டிலில் இந்தூர் முதலிடம் பிடித்தது. சூரத் 2-வது இடமும், விஜயவாடா 3-வது இடமும் பிடித்தது.
    சென்னை:

    தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னை மாநகராட்சிக்கு 43-வது இடம் கிடைத்து உள்ளது.

    மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற துறை அமைச்சகம் சார்பில் தூய்மை இந்தியா இயக்கம் கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2016-ம் ஆண்டு முதல் தேசிய அளவில் தூய்மை நகர கணக்கெடுப்பு நடத்தி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

    தூய்மை பணியில் சிறந்து விளங்கும் நகர்புற உள்ளாட்சிக்கு விருதுகளும் வழங்கப்பட்டு வருகினறன.

    2021-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடந்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தரவரிசை பட்டியலை வெளியிட்டார். நாட்டிலேயே தூய்மையான நகரங்கள் பட்டிலில் இந்தூர் முதலிடம் பிடித்தது. சூரத் 2-வது இடமும், விஜயவாடா 3-வது இடமும் பிடித்தது.

    தூய்மை நகரங்கள் பட்டிலில் சென்னை மாநகராட்சி 43-வது இடம் பிடித்தது. கடந்த ஆண்டில் சென்னை மாநகரம் 45-வது இடத்தினை பெற்று இருந்தது குறிப்பிடதக்கது.

    இந்த போட்டியில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 48 நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் பங்கேற்றன. இதில் சென்னைக்கு தற்போது 43-வது இடம் கிடைத்து இருக்கிறது.

    இந்த தரவரிசையில் தமிழகத்தின் சார்பில் பங்கு பெற்ற சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.

    சென்னை மாநகராட்சி

    இந்த ஆண்டுக்கான திடக்கழிவு மேலாண்மையில் புதுமை படைத்தல் மற்றும் சிறந்த நடைமுறைகளை பின்பற்றுதல் என்ற பிரிவின் கீழ் சென்னை மாநகராட்சிக்கு விருது கிடைத்து உள்ளது. இந்த விருதை மத்திய வீட்டு வசதி நகர்புற துறை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா வழங்கினார். அதனை சென்னை மாநகராட்சி துணை ஆணையர் எஸ்.மனீஷ் பெற்று கொண்டார்.

    மேலும் திடக்கழிவு மேலாண்மையில் புதுமை படைத்தல் மற்றும் சிறந்த நடைமுறைகளை பின் பற்றுதல் என்ற விருதும் சென்னை மாநகராட்சிக் வழங்கப்பட்டது.

    தேன்கனிக்கோட்டை அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் டாக்டர் உள்பட 2 பேர் பலியாகினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி சாலையை சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மகன் மஞ்சுநாத் (வயது 22). டாக்டர். தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்ற இருந்தார். இவரும், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ரங்கசந்திரம் கிராமத்தை சேர்ந்த பரத் (21), பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேதாந்து (21), பைபாஸ் சாலையை சேர்ந்த கோகுல் (22) ஆகிய 4 பேரும் நண்பர்கள்.

    இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் காரில் பெங்களூருவுக்கு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் நள்ளிரவு 2 மணி அளவில் அவர்கள் பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக தேன்கனிக்கோட்டை நோக்கி காரில் வந்து கொண்டு இருந்தனர். காரை கோகுல் ஓட்டி வந்துள்ளார்.

    தேன்கனிக்கோட்டை தண்டரை அருகே கார் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் நொறுங்கியது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி பரத் மற்றும் டாக்டர் மஞ்சுநாத் இருவரும் பரிதாபமாக இறந்தனர். கோகுல், வேதாந்து ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளி மகள் சிகிச்சைக்கு ரூ.16 கோடியை ஒரே காசோலையாக சவுத் ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.
    ராய்ப்பூர்:

    சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள சவுத் ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் நிறுவனத்தின் (பொதுத்துறை) தொழிலாளி சதீஷ் குமார் ரவி. இவரது 2 வயது மகள் சிருஷ்டி ராணி மிகவும் அபூர்வமான முதுகெலும்பு தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நோய் தாக்கினால் முதுகுத்தண்டு மற்றும் மூளைத்தண்டில் உள்ள நரம்பு செல்கள் இழப்பால், தசைகளின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் போய் விடும். இது மரபணு கோளாறு என்று சொல்லப்படுகிறது.

    இந்த கோளாறுக்காக சிருஷ்டி ராணி, டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி மற்றும் பிலாஸ்பூர் அப்பல்லோ ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார். தற்போது அவர் திப்காவில் உள்ள வீட்டில் வென்டிலேட்டர் துணையுடன் சிகிச்சை பெறுகிறார்.

    அவருக்கு தற்போது ‘ஜேர்ஜென்ஸ்மா’ என்ற ஊசி மருந்தை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து செலுத்த வேண்டுமாம். இந்த ஊசி மருந்தின் விலை ரூ.16 கோடி ஆகும்.

    இதுகுறித்து சதீஷ் குமார் ரவி தனது நிறுவனத்திடம் முறையிட்டார்.

    இதையடுத்து ரூ.16 கோடிக்கான காசோலையை நேற்று முன்தினம் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியான சஷாங் சேகர் தேவாங்கன், சதீஷ் குமார் ரவியிடம் வழங்கினார்.

    “இந்த உதவியின் மூலம் ஊழியர்களும், அவர்களின் குடும்பங்களும் ஒரு நிறுவனத்தின் உண்மையான செல்வம், அவர்களின் உயிரைக்காப்பாற்றுவது முதன்மையான வேலை என்பதைக் காட்டுவதின் மூலம் ஒரு முன்மாதிரியை எங்கள் நிறுவனம் வைத்துள்ளது” என்று சஷாங் சேகர் தேவாங்கன் குறிப்பிட்டார்.
    தேன்கனிக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை போலீசார் சந்தப்பள்ளி அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அந்த ஊரை சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 26) குருப்பட்டி மோகன் (32), எருதுகோட்டை சிவலிங்கம் (26), திருமூர்த்தி (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக அவரது தந்தை கொடுத்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மனைவி யுவராணி (வயது 35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஸ்ரீதர் மேலமாத்தூரில் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். யுவராணி பெரம்பலூரில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று காலை ஸ்ரீதர் பால் வாங்குவதற்காக வெளியே சென்றபோது, யுவராணி அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று மயங்கி கிடந்தார். பால் வாங்கி விட்டு வீட்டிற்கு வந்து ஸ்ரீதர், அதைக்கண்டு உடனடியாக யுவராணியை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் யுவராணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக யுவராணியின் தந்தை செல்லையா கொடுத்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த சில வருடங்களாக யுவராணிக்கு கடுமையான வயிற்று வலி இருந்து வந்ததாகவும், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் விரக்தியடைந்த அவர், அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்டதாகவும், விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
    ஓசூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் ஆவலப்பள்ளி அருகே உள்ள பெத்தகுள்ளுவை சேர்ந்தவர் நாராயணப்பா. இவரது மகன் சதீஷ் (வயது 20). விவசாயி. இவர் நேற்று காலை தனது தக்காளி தோட்டத்திற்கு சென்றார். அப்போது அந்த பகுதியில் இருந்த மின்சார வயரில் வவ்வால்கள் அமர்ந்திருந்தன. அவை ஒன்றோடு ஒன்று உரசியதில் மின் கம்பி ஒன்று அறுந்து கீழே விழுந்தது. இதை கவனிக்காத சதீஷ் அந்த மின்சார வயரை மிதித்தார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சதீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சகானா கூலி வேலை செய்து குழந்தைகளை படிக்க வைத்து வந்தார்.
    தாராபுரம்:

    தாராபுரத்தை அடுத்த அலங்கியம் ஜே.ஜே. நகர் பகுதியை சேர்ந்தவர் சகானா (வயது 35) . இவரது கணவர் நசிருதீன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இந்த நிலையில் சகானா கூலி வேலை செய்து குழந்தைகளை படிக்க வைத்து வந்தார். இந்த நிலையில் நேற்று மகனும் மகளும் பள்ளிக்கு சென்ற நிலையில் வீட்டில் உள்ள கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து தகவல் அறிந்ததும்  அலங்கியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

    பின்னர் சகானா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கணவனை இழந்ததால் விரக்தியில் சகானா தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. 

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 
    மரத்தில் டிராக்டர் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குருபரப்பள்ளி:

    கிருஷ்ணகிரி தாலுகா கோடிப்பள்ளி பக்கமுள்ள சீலேப்பள்ளியை சேர்ந்தவர் நாகேஷ் (வயது 50). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் டிராக்டரில் அமர்ந்து வந்து கொண்டிருந்தார். டிராக்டரை அதே ஊரை சேர்ந்த முனிராஜ் (30) என்பவர் ஓட்டி வந்தார். சீலேப்பள்ளி பக்கமாக வந்த போது திடீரென்று டிராக்டர் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் நாகேஷ் கீழே தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×