search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஜோதிடரை கத்தியால் குத்திய வாலிபர் கைது

    ஜோதிடரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கெலமங்கலம் கணேசா காலனியை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் (வயது59). ஜோதிடர். இவரது மகன் கோபிநாத் அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓட்டலுக்கு சென்ற கெலமங்கலம் ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்த வினய்குமார் (21) என்பவர் மீனாட்சிசுந்தரத்திடம் பணம் கேட்டு மிரட்டினார். ஆனால் மீனாட்சிசுந்தரம் பணம் கொடுக்காததால் அவரை மிரட்டி விட்டு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் கெலமங்கலம் பேரூராட்சிக்கு சொந்தமான சந்தை கடை அருகே மீனாட்சிசுந்தரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வினய்குமார் அவரது கழுத்தில் கத்தியால் குத்தினார். இது தொடர்பான புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினய்குமாரை கைது செய்தனர்.
    Next Story
    ×