search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    தாராபுரம் அருகே கணவனை இழந்த பெண் தற்கொலை

    சகானா கூலி வேலை செய்து குழந்தைகளை படிக்க வைத்து வந்தார்.
    தாராபுரம்:

    தாராபுரத்தை அடுத்த அலங்கியம் ஜே.ஜே. நகர் பகுதியை சேர்ந்தவர் சகானா (வயது 35) . இவரது கணவர் நசிருதீன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இந்த நிலையில் சகானா கூலி வேலை செய்து குழந்தைகளை படிக்க வைத்து வந்தார். இந்த நிலையில் நேற்று மகனும் மகளும் பள்ளிக்கு சென்ற நிலையில் வீட்டில் உள்ள கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து தகவல் அறிந்ததும்  அலங்கியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

    பின்னர் சகானா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கணவனை இழந்ததால் விரக்தியில் சகானா தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. 

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 
    Next Story
    ×