என் மலர்
கன்னியாகுமரி
- திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
- மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டி உள்ளது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டின. இதையடுத்து அணைகளில் இருந்து மதகுகள் வழியாகவும், உபரி நீரும் வெளியேற்றப்பட்டு வந்தது.
அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் கோதையாறு உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் அதிக அளவில் சென்றது. திற்பரப்பு அருவியிலும் அதிக அளவு தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக குமரி மாவட்டத்தில் மழை குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அணைகளுக்கு வரும் தண்ணீர் வரத்தும் குறைந்தது. இதனால் நேற்று பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டது. சிற்றாறு, பேச்சிப்பாறை அணைகளில் இருந்து மட்டும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இன்று அந்த அணைகளில் இருந்தும் உபரி நீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
உபரி நீர் திறக்கப்படாததால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்து சீரான அளவில் தண்ணீர் செல்கிறது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் மிதமாக கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து விடுமுறை நாளான நேற்று பகலில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். ஒரு வார காலத்திற்கு பிறகு அங்கு குளிக்க அனுமதி வழங்க்ப்பட்ட நிலையில், பேரூராட்சி சார்பில் சுகாதார பணிகளும் செய்யப்பட்டன.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.99 அடியாக இருந்தது. அணைக்கு 354 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 301 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 73.09 அடியாக உள்ளது. அணைக்கு 360 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 400 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. சிற்றார் 1 அணையின் நீர்மட்டம் 15.78 அடியாக உள்ளது. அணைக்கு 100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 400 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 15.87 அடியாக உள்ளது. மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டி உள்ளது.
- நெடுஞ்சாலை பணியாளர்கள் 2 சாலைகளின் குறுக்கே இரும்பு கேட்டுகள் அமைத்து ஒரு புறத்திலிருந்து மறுபுறம் நடந்து கூட செல்லாத அளவிற்கு தடுப்பு அமைத்துள்ளனர்.
- போராட்டத்தினால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.
மதகடிப்பட்டு:
விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக விழுப்புரம்-புதுச்சேரி வரை 90 சதவீத பணி நிறைவு பெற்றுவிட்டது.
இந்நிலையில் புதுச்சேரி மதகடிப்பட்டு 4 வழி சாலைக்கு அருகாமையில் தமிழக பகுதியான எல்.ஆர். பாளையம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இதற்கிடையே எல்.ஆர். பாளையம் வழியாகவே பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை விழுப்புரம்-புதுச்சேரி 4 வழி சாலையில் வந்து இணைகிறது.
இந்த சாலைக்கு எதிர் புறம் பிரபல மருத்துவக் கல்லூரி, கலைக்கல்லூரி, பள்ளி என அதிகமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. மாணவர்கள் இந்த சாலையை கடந்தே மறுமுனைக்கு செல்ல வேண்டும். மேலும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்வோரும் இந்த சாலையை கடந்து செல்ல வேண்டும்.
ஆனால் நெடுஞ்சாலை பணியாளர்கள் 2 சாலைகளின் குறுக்கே இரும்பு கேட்டுகள் அமைத்து ஒரு புறத்திலிருந்து மறுபுறம் நடந்து கூட செல்லாத அளவிற்கு தடுப்பு அமைத்துள்ளனர்.
இதனால் எல்.ஆர். பாளையம் பகுதியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் பொதுமக்களும் அப்பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுங்க சாவடியை கடந்து செல்ல வேண்டிய நிலைமை உள்ளது.
இதனை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த போலீசார் அதிகாரிகளிடம் பேசி சர்வீஸ் சாலையை அகலப்படுத்தி பாதை ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தனர்.
இந்நிலையில் உறுதி அளித்தப்படி பாதை அமைத்து தராததால் மீண்டும் மறியல் போராட்டம் நடத்த போவதாக எல்.ஆர். பாளையம் பொதுமக்கள் அறிவித்தனர்.
அதன் படி இன்று எல்.ஆர். பாளையம் பொதுமக்கள் விழுப்புரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் மதகடிப்பட்டு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தினால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.
- ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தார்.
- செல்வின் சேகர் நோயால் பாதிக்கப்பட்டு, மூளைச்சாவு ஏற்பட்டது.
குமரி மாவட்டம் புதுக்கடைகீழ்குளம் அருகே உள்ள சரல்விளையை சேர்ந்தவர் செல்வின் சேகர் (வயது 36). இவர் மருத்துவம் சார்ந்த முதுநிலை பட்டப்படிப்பு படித்துள்ளார். கருங்கல், புத்தன் துறை ஆகிய பகுதிகளில் மருந்தகம் வைத்து நடத்தி வந்தார்.
செல்வின் சேகர் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தார். இப்படி எண்ணற்ற உதவிகளை செய்து வந்த செல்வின் சேகர் நோயால் பாதிக்கப்பட்டு, மூளைச்சாவு ஏற்பட்டது. அவருடைய இதயம், நுரையீரல் உள்ளிட்ட 7 உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
செல்வின் சேகருக்கு விஜய் வசந்த் எம்.பி. இறுதி அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
இத்தகைய தருணத்தில் இந்த முடிவினை எடுத்த செல்வின் சேகர் அவர்கள் மனைவி மற்றும் குடும்பத்தினர் பாராட்டப்பட வேண்டியவர்கள். தான் இறக்கும் போது 7 பேரை வாழ வைத்த செல்வின் சேகர் அவர்களின் பெருமை பேசப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இதயம் கொல்லத்தில் 14 வயது சிறுவனுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.
- ஏழை குழந்தைகளை சிலரை படிக்க வைத்து சமூக சேவகராக திகழ்ந்தார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் புதுக்கடைகீழ்குளம் அருகே உள்ள சரல்விளையை சேர்ந்தவர் செல்வின் சேகர் (வயது 36). இவர் மருத்துவம் சார்ந்த முது நிலை பட்டப்படிப்பு படித்துள்ளார். கருங்கல், புத்தன் துறை ஆகிய பகுதிகளில் மருந்தகம் வைத்து நடத்தி வந்தார். இவர் கீதா என்ற பெண்ணை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்களும்,
ஒரு மகனும் உண்டு. செல்வின் சேகர் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தார். அத்துடன் ஆதரவற்று சுற்றித்திரியும் பெரியோர்களுக்கு உணவுகள் அளித்தும், காப்பகத்தில் சேர்த்து அவர்களுக்கு மாத செலவு கட்டணமும் வழங்கியும் வந்துள்ளார். அத்துடன் ஏழை குழந்தைகளை சிலரை படிக்க வைத்து சமூக சேவகராக திகழ்ந்தார்.
இப்படி எண்ணற்ற உதவிகளை செய்து வந்த செல்வின் சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்தபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனாலும் அவரது உடல் நிலை மோசமானது. தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அப்போது அவரது மூளையில் உள்ள ரத்தநாளங்களில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. அவரை காப்பாற்றும் நடவடிக்கையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஒரு கட்டத்தில் உடல் நிலை மிகவும் மோசமாகி கோமா நிலைக்கு சென்றார். பின்னர் மூளைச்சாவு ஏற்பட்டது.
செல்வின் உயிருடன் இருக்கும் போதே, தான் இறந்த பின்பு தனது உடல் "உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என மனைவியிடம் கூறியிருந்தார். அதன்படி உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன் வந்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் கூறினர்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கண்கள், கல்லீரல், இதயம், நுரையீரல் உள்ளிட்ட 7 உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
அவரது இதயம் கொல்லத்தில் 14 வயது சிறுவனுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக இதயத்தை திருவனந்தபுரத்தில் இருந்து கொல்லத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு சென்று அந்த சிறுவனுக்கு பொருத்தப்பட்டது. மீதமுள்ள 6 உறுப்புகளும் 6 பேருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று அவரது உடல் சொந்த ஊரானாக் மாவட்டம் சரல்வி பகுதிக்கு ஆம்புலன்ஸ் மூலம்-கொண்டு வரப்பட்டது. பின்னர் அவரது உடல் வீட்டில் ல்! உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி டீன் பிரின்ஸ் பயஸ் மற்றும் தாசில்தார்கள், கிராம நிர்வாகிகள் உள்பட 5 அரசு அதிகாரிகள் பலரும் நேரில் சென்று உட லுக்கு அரசு மரியாதை செலுத்தினர். மேலும் செல்வின் சேகர் உடலுக்கு உறவினர்கள், ஊர்மக்கள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பலர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
- பஸ் வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்ததும் இருவரும் சரமாரியாக மாறி மாறி தாக்கி கொண்டனர்.
- இரு பெண்கள் சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில் :
குலசேகரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அழகு கலை பயிற்சி முடித்த அவர் தற்போது நாகர்கோவில் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அதே பகுதியில் அழகு கலை பயிற்சி பெற்ற மற்றொரு பெண்ணும் வசித்து வருகிறார். இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இருவரும் நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு பஸ்சில் வந்தனர். அப்போது இருவருக்கும் பஸ்சில் வைத்து தகராறு ஏற்பட்டது.
அதோடு பஸ் வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்ததும் இருவரும் சரமாரியாக மாறி மாறி தாக்கி கொண்டனர். ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கியதுடன் கடித்தும் கொண்டனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீசார் இருவரையும் சமாதானம் செய்தனர். இந்த பிரச்சினை தொடர்பாக இருவரும் வடசேரி போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பஸ் நிலையத்தில் இரு பெண்கள் சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- விடுமுறை நாளில் சுற்றுலா பயணிகளும் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடி
- கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கன்னியாகுமரி :
சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து குவிந்தனர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு அவர்கள் முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியல் போட்டனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகனந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.
மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
- பார்வையாளர் சரவணவேல்ராஜ் பங்கேற்பு
- “18 வயது நிரம்பிய தகுதியான அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும்.
நாகர்கோவில், நவ.26-
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு குமரி மாவட்ட வாக்காளர் பட்டியல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சரவண வேல்ராஜ் பங்கேற்று அரசியல் கட்சி பிரதிநிதி களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது "குமரி மாவட்டத்தில் 7 லட்சத்து 61 ஆயிரத்து 883 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 60 ஆயிரத்து 10 பெண் வாக்காளர்களும், 143 இதர வாக்காளர்களும் என மொத்தம் 15 லட்சத்து 22 ஆயிரத்து 36 வாக்காளர்கள் உள்ளனர். 1698 வாக்குச்சா வடிகள் உள்ளன" என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் கூறியதாவது:-தேர்தலுக்கு முந்தைய நாள் வரை 18 வயது நிரம்பிய தகுதியா னவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யும்போது அந்த வாக்காளர் குறித்த விவரங்கள் முழுமையாக தெரிந்த பிறகு நீக்கம் செய்ய வேண்டும். நாகர்கோவில் மாநகர பகுதியில் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் மாறி உள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரம் ஊராட்சிக்குட்பட்ட காற்றாடிதட்டு பகுதியில் சில வாக்காளர்கள் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று வாக்களிக்க வேண்டி யுள்ளது. எனவே அந்த வாக்காளர்களை அருகில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கா ளர் பட்டியலில் பெயர் நீக்கம் தற்போது அதிகமாக செய்யப்பட்டு வருகிறது. வீடுகள் மாறி இருந்தால் கூட அதிகாரிகள் அந்த வாக்காளர்களின் பெயர் களை நீக்கி விடுகிறார்கள்.
எனவே முறையாக ஆய்வு செய்து பெயர் நீக்கம் செய்ய வேண்டும். குமரி மாவட்டத்தில் வழக்கமாக ஆண்கள், பெண்கள் மற்றும் பொது என பிரிக்கப்பட்டு எத்தனை வாக்குச்சாவடிகள் உள்ளது? என்று தெரிவிக்கப்படும். ஆனால் தற்போது வரை அந்த தகவல் தெரிவிக்கவில்லை. அதை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கு பதிலளித்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சண்முக வேல்ராஜ் பேசியபோது, "18 வயது நிரம்பிய தகுதியான அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும். யாரும் விடுபட்டு விடக்கூடாது. இதற்கு அரசியல் கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யும்போது அதற்கான படிவங்கள் முறையாக வழங்கப்பட்டால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படும். அரசியல் கட்சியினர் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் தலைமை தேர்தல் அதிகாரி யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குமரி மாவட்டத்தை பொறுத்த வரை ஒரு வாக்குச்சாவடியில் 1,500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இல்லை. 1,500 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே ஆண், பெண் மற்றும் பொது என வாக்காளர்கள் பிரிக்கப்பட்டு வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட வேண்டும்" என்றார்.
முன்னதாக டதி பள்ளி மற்றும் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்த முகாமை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சண்முகவேல்ராஜ் மற்றும் கலெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
கூட்டத்தில் வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணி யம், சப்-கலெக்டர் கவுசிக், ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், தி.மு.க. சார்பில் வர்கீஸ், பா.ஜனதா சார்பில் ஜெகதீசன், அ.தி.மு.க. சார்பில் ஜெயகோபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இசக்கிமுத்து, தே.மு.தி.க. சார்பில் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ரூ.15,000 பறிமுதல்
- அரவிந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் நகர பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் தலைமையிலான போலீசார் கம்பளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அங்கு அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்த அரவிந்த் (வயது 28) என்பவரை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.15 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அரவிந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- பெருஞ்சாணியில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தம்
- அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண் காணித்து வருகிறார்கள்.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, சிற்றாறு, மாம்ப ழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ள ளவை எட்டி நிரம்பி வழி கின்றன. அணைகள் நிரம்பி வழிவதையடுத்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண் காணித்து வருகிறார்கள்.
அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப அணை யில் இருந்து தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வரு கிறது. அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப் பட்டு வருவதால் கோதை யாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கோதை யாற்றின் கரையோர பொது மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, சிற்றாறு அணை களில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டு உள்ளது. சிற்றாறு, பேச்சிப் பாறை அணைகளில் இருந்து மட்டும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் அளவும் குறைக்கப் பட்டு உள்ளதால் கோதை யாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு சற்று குறைந் துள்ளது.
திற்பரப்பு அருவியில் தொடர்ந்து தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் அருவியில் குளிப்பதற்கு இன்று 8-வது நாளாக தடை விதிக்கப் பட்டுள்ளது. இன்று அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டும் இன்றி சுற்று லா பயணிகள் ஏராளமா னோர் திரண்டு இருந்தனர். அவர்கள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற் றத்துடன் திரும்பி சென்ற னர். பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 43.98 அடியாக இருந்தது. அணைக்கு 426 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யிலிருந்து 301 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாக வும், 106 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளி யேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 73.07 அடியாக உள்ளது. அணைக்கு 509 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 700 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வரு கிறது. சிற்றார் 1 அணையின் நீர்மட்டம் 15.78 அடியாக உள்ளது. அணைக்கு 244 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யிலிருந்து 100 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 234 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வரு கிறது.
- குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் வழங்கப்பட்டது
- குமரி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய தலைவருமான ஜெகநாதன் தலைமை தாங்கினார்.
திருவட்டார் :
தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் மாத்தார் புனித மரியன்னை முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு குமரி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பா ளரும், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய தலைவரு மான ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஜெபர்சன், ஷிஜு, லிஜீஷ் ஜீவன், ஜெயசந்திர பூபதி, ஆல்பின் பினோ மற்றும் மாவட்ட துணை செயலாளர் ராஜ், குமரன்குடி ஊராட்சி தலைவர் பால்சன், ஆற்றூர் பேரூராட்சி துணை தலை வர் தங்கவேல், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் லெனின், நிர்வாகிகள் விஜயகுமார், ராஜகுமார், அப்ரின், லிபின் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
- விளையாட்டு போட்டி நடத்த தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என உறுதிமொழி அளித்தார்
ஆரல்வாய்மொழி :
ஆரல்வாய்மொழி அருகே உள்ள சகாயநகர் ஊராட்சிக்குட்பட்ட அனந்த பத்மநாபபுரம் பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் மாவட்டம் தழுவிய பல்வேறு அணிகள் பங்கேற்கும் கபடி போட்டி ஆண்டுதோறும் நடைபெறுவது உண்டு.
இந்த ஆண்டு விளையாட அனுமதி கேட்டு ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்துக்கு மனு அனுப்பப்பட்டது. போட்டியை நடத்தவும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.இந்த நிலையில் பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ், ஆரல்வாய்மொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜா, சுந்தர்சிங், கீதா மற்றும் போலீசார், விளையாட அனுமதி இல்லை என கூறி எச்சரிக்கை விடுத்தனர்.
இதனால் அந்த பகுதி பரபரப்பானது. அந்த பகுதி இளைஞர்கள் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தர்மர் தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்தவுடன் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளரும், ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவருமான முத்துக்குமார் ஆகியோரும் அங்கு வந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. முறைப்படி அனுமதி பெற்று மீண்டும் விளையாட்டு போட்டி நடத்த தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என உறுதிமொழி அளித்தார். அதன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
- கடுமையான பனிப்பொழிவால் பூக்கள் உற்பத்தி மிக குறைந்துள்ளது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது.
ஆரல்வாய்மொழி :
குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பூச்சந்தை தோவாளையில் உள்ளது. ஆரல்வாய்மொழி, ஆவரைகுளம், மாடநாடநாடார் குடியிருப்பு, புதியம்புத்தூர், ராதாபுரம், வடக்கன்குளம், காவல்கிணறு ஆகிய பகுதியிலிருந்து பிச்சிப்பூ.
சங்கரன்கோவில், ராஜபாளையம்,மதுரை மானாமதுரை, திண்டுக்கல், கொடைரோடு, வத்தலகுண்டு ஆகிய ஊர்களில் இருந்து மல்லிகை பூ. பெங்களூர், ஓசூர், ராயக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து மஞ்சள் கிரேந்தி பட்டரோஸ். திருக்கண்ணங்குடி அம்பாசமுத்திரம், தென்காசி, புளியங்குடி, புளியரை ஆகிய ஊர்களில் இருந்து பச்சை துளசி. தோவாளை, செண்பகராமன் புதூர், ராஜாவூர், மருங்கூர், கோழிக்கோடு பொத்தை ஆகிய ஊர்களில் இருந்து சம்பங்கி, அரளி, கோழிக்கொண்டை, அருகம்புல், கனகாம்பரம், தாமரை. சேலத்தில் இருந்து அரளிப்பூ பூச்சந்தைக்கு வந்து பின்னர் மாநிலம், மாவட்டம் முழுவதும், கேரளாவுக்கும் விற்பனையாகிறது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினாலும் கடுமையான பனிப்பொழிவால் பூக்கள் உற்பத்தி மிக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று திருக்கார்த்திகையை முன்னிட்டு தோவாளை பூச்சந்தையில் ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ. 1500, மல்லிகைப்பூ ரூ.1500, அரளி ரூ.200 சேலம்அரளி ரூ. 200, சம்பங்கி ரூ.100, ரோஜா பாக்கெட் ரூ.30, பட்டர் ரோஸ் ரூ. 150, கனகாம்பரம் ரூ.500, துளசி ரூ.30, கொழுந்து ரூ.150, மஞ்சள் கிரோந்தி ரூ.90, சிவப்பு கிரோந்தி ரூ.100-க்கும் விற்பனையானது. மேலும் மற்ற பூக்களும் விலை உயர்ந்து காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






