என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • பேரூராட்சி தலைவி அனுசுயா, காங்கிரஸ் வட்டார தலைவர் கால பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்

    சுசீந்திரம் தாணுமாலய சுவாமிகள் திருக்கோவில் கலையரங்கத்திற்கு மேற்கூரை வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    அவர்களின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.


    இதையடுத்து நடைபெற்று வரும் மேற்கூரை பணிகளை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார் .

    அவருடன் பேரூராட்சி தலைவி அனுசுயா, காங்கிரஸ் வட்டார தலைவர் கால பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்

    • முகாமில் ஏராளமான பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டார்கள்.
    • கண் மற்றும் அனைத்து நோய்களுக்கும் சிசிச்சை அளிக்கப்பட்டது.

    ஆரல்வாய்மொழி:

    தோவாளை சக்தி மகளிர் டிரஸ்ட் குலசேகரம் மூகாம்பிகை மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாமை தளவாய் சுந்தரம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

    தோவாளை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் டாக்டர் சாந்தினி பகவதியப்பன் தலைமையில் நடந்த முகாமில் ஏராளமான பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டார்கள்.

    கண் மற்றும் அனைத்து நோய்களுக்கும் சிசிச்சை அளிக்கப்பட்டது.

    கண் மருத்துவர் டாக்டர் குமார் பொது மருத்துவர் டாக்டர் விகாஷ் ஆகியோர் தலைமையில் மருத்துவக் குழு பொதுமக்களுக்கு சிசிச்சை அளித்தது.

    முன்னாள் கவுன்சிலர் தர்மராஜ் ஆசிரியர் சேகர் மற்றும் சக்தி மகளிர் டிரஸ்ட் உறுப்பினர்கள் மருத்துவமனை பிஆர்ஓ சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    • காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.
    • காங்கிரஸ் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை தெற்கு வட்டார காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி கிழக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே டி உதயம், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், காங்கிரஸ் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • எந்த நூற்றாண்டைச் சேர்ந்த கல் வெட்டு என்று அதிகாரப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
    • தமிழ் எழுத்தாளர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கையாக முன் வைத்து உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம் தேரூர் குறண்டியில் கோரக்கர் சித்தர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் பிரதோஷ விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று கோரக்கர் சித்தரை வழிபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இந்த கோவிலின் தெற்கு பகுதியில் பழங்கால தமிழ் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது, இதனைகன்னியா குமரி அருகே உள்ள கொட்டாரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சுந்தர்என்பவர் இந்த கோவிலுக்கு சென்று இருந்தபோது இந்தகல்வெட்டை கண்டுபிடித்து உள்ளார்.

    மேலும் இந்த கல் வெட்டை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் வந்து கள ஆய்வு செய்து, எந்த நூற்றாண்டைச் சேர்ந்த கல் வெட்டு என்று அதிகாரப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

    கன்னியாகுமரி மாவட்ட தொல்லியல்துறை அதிகாரிகள் முன் வர வேண்டும் என்றும் அழிவின் விளிம்பில் இருக்கும் குறண்டி கோரக்கர் சித்தர் கோவிலை புனரமைக்க இது வழிவகுக்கும் என்றும் பக்தர்கள் கோவிலின் தொன்மையை தெரிய வாய்ப்பாக இருக்கும் என்றும் தமிழ் எழுத்தாளர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கையாக முன் வைத்து உள்ளனர்.

    • பூங்கா அமைப்பதற்கு தமிழக அரசு சார்பில் ரூபாய் 41 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
    • காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கு தமிழக அரசு சார்பில் ரூபாய் 41 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

    சிறுவர் பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜையில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.


    இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் திருமதி அனிதா ஆண்றோஸ், காங்கிரஸ் கமிட்டி வட்டாரத் தலைவர் திரு கால பெருமாள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • இந்தியாவின் சமத்துவமின்மையை குறைக்க இத்திட்டம் மிகவும் பயன்பட்டு‌ வந்தது.
    • நாடு முழுவதும் 16 கோடி தொழிலாளர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்து உள்ளார்கள்.

    பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் பேசியதாவது:-

    100 நாள் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி செய்யும் பணியாளர்களுக்கு தக்க சமயத்தில் ஊதியம் வழங்க மத்திய அரசு பொதுவான அதிக நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும்.

    மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு புதிய ஊதியம் வழங்க வேண்டும் எனவும் இதற்காக அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற ஏழை எளிய மக்களின் அடிப்படை வாழ்வாதாரமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் விளங்குகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கடந்த 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை சமன் செய்வதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம், கிராமப்புற வேலைவாய்ப்பு அதிகரித்தது. கிராமப்புற பொருளாதாரமும் உயர்ந்தது. இந்த திட்டத்தின் மூலம், பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் கிராமப்புற பெண்களே அதிக அளவில் பயனடைந்து வருகின்றார்கள். கொரோனா காலத்தில் சாதாரண மக்களின் வாழ்வாதாரம் தலைகீழாக மாறியது. மூன்று வேளை உணவு என்பதே கேள்விக்குறி ஆனது. அந்த நேரத்தில் இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் அடிப்படை தேவையை இந்த நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் கிடைத்த வருவாய் தான் பூர்த்தி செய்தது.

    இந்தியாவின் சமத்துவமின்மையை குறைக்க இத்திட்டம் மிகவும் பயன்பட்டு வந்தது.

    நாடு முழுவதும் 16 கோடி தொழிலாளர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்து உள்ளார்கள். அனைத்து தொழிலாளர்களுக்கும் நூறு நாள் வேலை வழங்க வேண்டும் என்றால் 2.7 இலட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு தற்போது வெறும் 60,000 கோடி தான் நிதி ஒதுக்கி உள்ளது. இது கடந்த ஆண்டு நிதியை விட 21 விழுக்காடு குறைவு. இத்திட்டத்தில் பெரும்பாலும் கிராமப்புற, பட்டியலின பெண்கள் தான் அதிக அளவில் பதிவு செய்து உள்ளனர். மத்திய அரசின் நிதி குறைப்பால் அவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக கேள்விக்குறியாகி உள்ளது. நாட்டின் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்து வந்த நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி அளிப்பதை அதிகரிக்க வேண்டும்.

    நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது. இந்த நேரத்தில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் இந்த திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும், அவர்களின் பசியை போக்க வேண்டும் என இந்த சபையின் வாயிலாக மத்திய அரசை கேட்டுக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • லாட்ஜில் உள்ள அறைகளை சோதனை செய்து பார்த்தபோது ஒரு அறையில் கருப்பசாமி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 78). இவரது மனைவி காந்திமதி. கடந்த 2002-ம் ஆண்டு கருப்பசாமியின் மனைவி காந்திமதி இறந்து விட்டார்.

    இவர்களுக்கு கிருஷ்ண மூர்த்தி என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். மகன் மற்றும் மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியுடன் நெல்லையில் வசித்து வேலை பார்த்து வருகிறார். மேலும் இரண்டு மகள்களும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்கள்.

    இதனால் கருப்பசாமி நாகர்கோவில் வடிவீஸ்வரன் பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். லாட்ஜிலேயே தங்கி வேலை பார்த்து வந்த நிலையில், இன்று காலை அவரை திடீரென காணவில்லை.

    லாட்ஜ் உரிமையாளர் சுப்பிரமணியம் அவரை பலமுறை தொடர்பு கொண்டார். ஆனால் செல்போனை எடுக்கவில்லை. இதையடுத்து லாட்ஜில் உள்ள அறைகளை சோதனை செய்து பார்த்தபோது ஒரு அறையில் கருப்பசாமி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த லாட்ஜ் உரிமையாளர், கோட்டார் போலீசுக்கும், நெல்லையில் உள்ள அவரது மகன் கிருஷ்ணமூர்த்திக்கும் தகவல் தெரிவித்தார். உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    பிணமாக கிடந்த கருப்பசாமி, லாட்ஜில் உள்ள அறையில் கழிவறைக்கு சென்று விட்டு திரும்பியபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அதிகாலையில் கருப்பசாமி வெளியே செல்வது போன்ற காட்சிகள் இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும் கருப்பசாமியின் மகனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது கருப்பசாமி தனது தந்தை கடந்த 15 ஆண்டுகளாக லாட்ஜில் மேலாளராக வேலை பார்த்து வருவதாகவும், பேரக்குழந்தைகளை பார்ப்பதற்கு அவ்வப்போது ஊருக்கு வருவதாகவும் கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன்பும் ஊருக்கு வந்த கருப்பசாமி, தற்போது லாட்ஜிலேயே இருப்பதாக தெரிவித்தார்.

    வழக்கமாக கருப்பசாமி ஆட்கள் இல்லாதபோது மேற்கத்திய கழிவறையை பயன்படுத்தி வந்தார். அதேபோல் இன்று காலையிலும் ஆளில்லாத அறையில் உள்ள மேற்கத்திய கழிவுறையை பயன்படுத்திவிட்டு வெளியே வந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கன்னியாகுமரியை பொறுத்தவரை 2 சீசன் காலங்கள் உள்ளன.
    • திருவள்ளுவர் சிலையில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதிகளை பார்வையிடும் அவர்கள் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கு மிகுந்த ஆர்வம் கொள்கின்றனர்.

    விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் குகன், தாமிரபரணி, விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. படகில் பயணம் செய்ய சாதாரண கட்டணம் ரூ.75 வீதமும், சிறப்பு கட்டணம் ரூ.300 வீதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரியை பொறுத்தவரை 2 சீசன் காலங்கள் உள்ளன. கோடை விடுமுறை மற்றும் நவம்பர், டிசம்பர் மாதங்களான சபரிமலை சீசன் எனப்படும் சீசன் காலங்கள் ஆகும். கன்னியாகுமரியில் தற்போது இந்த சபரிமலை சீசனில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களால் களை கட்டியுள்ளது.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுகள் மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 1 லட்சத்து 90 ஆயிரத்து 200 பேர் பார்த்து ரசித்து உள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் போன்ற தொடர் விடுமுறை நாட்கள் காரணமாக வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். திருவள்ளுவர் சிலையில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

    • மாரியப்பன் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
    • மாரியப்பன், சித்ரா தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இரணியல்:

    மதுரை பில்லாபுரம் துளசிராம் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 55), தச்சுதொழிலாளி. இவரது மனைவி சித்ரா (50). இவரது மகன் மாதேஸ்வரன் (23). இவர் சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு மகன் பாக்கியராஜ் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தற்பொழுது மாரியப்பன்-சித்ரா தம்பதியினர் குமரி மாவட்டம் இரணியல் அருகே கண்ணாட்டுவிளை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    மாரியப்பன் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் மாரியப்பனிடம் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுக்க தொடங்கினார்கள். ஆனால் மாரியப்பனால் பணத்தை திரும்பிக்கொடுக்க முடியவில்லை. இதனால் மாரியப்பன் மனமடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் இன்று காலை மாரியப்பன் வீட்டிற்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் வந்துள்ளார். அப்போது அவர் மாரியப்பனின் வீட்டின் கதவை தட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் கதவு திறக்கப்படவில்லை. அப்போது வீட்டின் கதவு வழியாக பார்த்தபோது மாரியப்பன் மற்றும் அவரது மனைவி சித்ரா இருவரும் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    மாரியப்பன் மற்றும் அவரது மனைவி சித்ரா தற்கொலை செய்து கொண்டது குறித்து சென்னையில் உள்ள அவரது மகனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைக்கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    சென்னையில் இருந்து மாதேஸ்வரன் ஊருக்கு வந்து கொண்டிருக்கிறார். மாரியப்பன், சித்ரா தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன்-மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இரணியல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வியாபாரிகள், ஏலதாரர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    குளச்சல்:

    கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமரங்களும் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றன.

    இதில் செல்லும் மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள், குளச்சல் துறைமுகத்தில் ஏலம் விடப்படும். இதனை ஏலம் எடுக்க ஏலதாரர்களும் வியாபாரிகளும் துறை முகத்தில் குவிவதுண்டு.

    நேற்றும் அவர்கள் அங்கு திரண்டனர். அப்போது 3 விசைப்படகுகள் மீன்களுடன் வந்தன. அவற்றில் தடை செய்யப்பட்ட சாவாளை மீன்கள் இருந்தன. இதனை பார்த்த ஏலதாரர்கள் அந்த மீன்களை எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 3 விசைப் படகுகளில் இருந்த மீன்களும் இறக்கப்பட வில்லை,

    இந்த நிலையில் இன்று குளச்சல் துறைமுக வியாபாரிகள், ஏலதாரர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தடை செய்யப்பட்ட சாவாளை மீன்களை இறக்க அனுமதி அளிக்க கூடாது, சாவாளைமீன்களை பிடித்து நேரடியாக கோழித்தீவன நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் விசைப்படகு உரிமையாளர்கள் மீது மீன் வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்தப் போராட்டம் காரணமாக குளச்சல் மீன்பிடி துறைமுக ஏலக்கூடம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது. இதற்கிடையில் வேறு சில விசைப்படகுகள், மீன்களுடன் இன்று குளச்சல் துறைமுகம் வந்தன. ஆனால் போராட்டம் காரணமாக அவற்றில் இருந்தும் மீன்கள் இறக்கப்படவில்லை.

    இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக குளச்சல் துறைமுகத்தில் டண் கணக்கில் மீன்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால் சுமார் ரூ.3 கோடி ரூபாய் வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • இடிச்சத்தம் காதை பிளக்கும் வகையிலும், மின்னல் கண்ணை பறிக்கும் வகையிலும் இருந்தது
    • நாகர்கோவிலில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது.

    நாகர்கோவில்:

    வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் நெல்லூர்-மசூலிபட்டினம் இடையே 5-ந்தேதி கரையை கடக்கிறது. இதனால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    குமரி மாவட்டத்திலும் மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலையில் மாவட்டம் முழுவதும் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. கொட்டாரம், மயிலாடி பகுதியில் மாலை 5 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரம் இடைவிடாது வெளுத்து வாங்கியது.

    இடிச்சத்தம் காதை பிளக்கும் வகையிலும், மின்னல் கண்ணை பறிக்கும் வகையிலும் இருந்தது. கனமழையால் அந்த பகுதியில் உள்ள சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இரவும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. மயிலாடியில் அதிகபட்சமாக 55.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது.

    அதன் பிறகு மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருக்கிறது. பூதப்பாண்டி, களியல், சுருளோடு, தக்கலை, குளச்சல், இரணியல், மாம்பழத்துறையாறு, ஆரல்வாய்மொழி, அடையா மடை, குருந்தன்கோடு, முள்ளங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய் தது.

    நாகர்கோவிலில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் அணைகளில் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். திற்பரப்பு அருவி பகுதியிலும் மழை பெய்தது. இதனால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.18 அடியாக உள்ளது. அணைக்கு 425 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 403 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.53 அடியாக உள்ளது. அணைக்கு 225 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 15.84 அடியாக உள்ளது. அணைக்கு 119 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 2 அணை நீர்மட்டம் 15.94 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 8 அடியாக உள்ளது. மாம்பழத்துறையாறு, முக்கடல் அணையின் முழு கொள்ளளவு எட்டி நிரம்பி வழிகின்றன.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 3.8, பெருஞ்சாணி 2.2, சிற்றார் 1-2, சிற்றார் 2-10.4, பூதப்பாண்டி 15.2, களியல் 25, கன்னிமார் 4.6, கொட்டாரம் 23.6, குழித்துறை 29.6, மயிலாடி 55.4, நாகர்கோவில் 34.2, புத்தன்அணை 1.8, சுருளோடு 5, தக்கலை 7, குளச்சல் 24.8, இரணியல் 13.2, பாலமோர் 7.2, மாம்பழத்துறையாறு 4, திற்பரப்பு 20.4, கோழிப்போர்விளை 5.4, அடையாமடை 21.2, குருந்தன்கோடு 13.4, முள்ளங்கினாவிளை 21.6, ஆணை கிடங்கு 3.2, முக்கடல் 4.6.

    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களியக்காவிளை:

    குமரி மாவட்டம் புதுக்கடை அருகே அம்சி பகுதியை சேர்ந்தவர் விபின் (வயது 19), கூலி தொழிலாளி. இவரும், அதே ஊரை சேர்ந்தவர் வினித் (20), பிளம்பிங் தொழிலாளியும் நண்பர்கள்.

    வினித்துக்கு செல்போன் வாங்குவதற்காக நேற்று இரவு 2 பேரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் காப்பிக்காடு பகுதிக்கு சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளை விபின் ஓட்டி சென்றார். அவர்கள் இருவரும் காப்பிக்காடு பகுதியில் உள்ள செல்போன் கடைக்கு சென்று செல்போன் ஆர்டர் செய்தனர்.

    பின்னர் குழித்துறை பகுதியில் உள்ள விபின் உறவினர் வீட்டுக்கு சென்றனர். அப்போது அவர்கள் மோட்டார் சைக்கிளில் குழித்துறை அருகே ஆற்றுப் பாலம் பகுதியில் வந்தபோது எதிரே கேரளாவில் இருந்து பால் ஏற்றி வந்த மினி டெம்போ எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்திலேயே விபின் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வினித் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை வினித் பரிதாபமாக இறந்தார். விபத்து தொடர்பாக களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இந்த விபத்தால் குழித்துறை பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உறவினர் வீட்டுக்கு சென்ற வாலிபர்கள் வாகனம் மோதி பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    ×