என் மலர்
கன்னியாகுமரி
- இரவின் புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 53 பேரும், கோட்டை விளை அரசு நடுநிலைப்பள்ளியில் 21 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- மாவட்டம் முழுவதும் 212 ஆண்களும், 273 பெண்களும், 67 குழந்தைகள் ஒரு திருநங்கை என 553 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகர பகுதியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததையடுத்து மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். படகு மூலமாக பலரும் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளது. இந்த நிவாரண முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வடிவீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் 20 பேரும், தோப்பூர் அரசு தொடக்கப்பள்ளியில் 4 பேரும், கன்னியாகுமரி பேரிடர் நிவாரண மையத்தில் 146 பேரும், இரவின் புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 53 பேரும், கோட்டை விளை அரசு நடுநிலைப்பள்ளியில் 21 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தோவாளை கிருஷ்ணசாமி மண்டபத்தில் 213 பேரும், திருப்பதிசாரம் தனியார் பள்ளி ஒன்றில் 35 பேரும், ஏழுதேசம் பற்று அரசு உயர்நிலைப்பள்ளியில் 11 பேரும், விளவங்கோடு அரசு உயர்நிலைப்பள்ளியில் 15 பேரும், ஏழுதேசம் பேரிடர் பாதுகாப்பு மையத்தில் 5 பேரும், சுசீந்திரம் கிருஷ்ணா திருமண மண்டபத்தில் 30 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் 212 ஆண்களும், 273 பெண்களும், 67 குழந்தைகள் ஒரு திருநங்கை என 553 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- நாகர்கோவிலில் இருந்து இன்று காலை நெல்லை செல்லும் பாசஞ்சர் ரெயில் ரத்து செய்யப்பட்டது.
- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் விருதுநகரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ரெயில் நிலையத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. தாமிரபரணி ஆற்றிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
இதையடுத்து நாகர்கோவிலில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டது.
நாகர்கோவிலில் இருந்து இன்று காலை நெல்லை செல்லும் பாசஞ்சர் ரெயில் ரத்து செய்யப்பட்டது.
இதேபோல் குருவாயூரில் இருந்து நாகர்கோவில் வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் இன்று இயக்கப்படவில்லை.
இதனால் ரெயில் பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். இதேபோல் வெளியூர்களில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் அனைத்து ரெயில்களும் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் விருதுநகரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கோவை, ராமேஸ்வரம், பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ், திருக்குறள் எக்ஸ்பிரஸ், தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ரெயில் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
- பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து 11 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- நாகர்கோவில் நகர பகுதியிலும் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் இன்னும் வடியவில்லை.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. மயிலாடியில் நேற்று அதிகபட்சமாக 303.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் மலையோர பகுதிகளிலும் மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து 11 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் காரணமாக கோதையாறு, குழித்துறை, தாமிரபரணி ஆறு, வள்ளியாறு, பரளியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பல்வேறு இடங்களில் உள்ள விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது. சுசீந்திரம் பகுதியில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
புத்தேரி பகுதியிலும் பழையாற்றில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. மாவட்டத்தின் மேலும் சில இடங்களிலும் சானல்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
பூதப்பாண்டி அருகே சண்முக புரம் குளம் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இரவிபுதூர் ஊராட்சிக்குட்பட்ட காடாங்குளத்திலும் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில் நகர பகுதியிலும் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் இன்னும் வடியவில்லை. ஊட்டுவாழ்மடம், சக்தி கார்டன், மீனாட்சி கார்டன், ரெயில்வே குடியிருப்பு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளதால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
தோவாளை அண்ணா காலனி, திருப்பதிசாரம் நெசவாளர் காலனி, சகாய நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அகஸ்தீஸ்வரம், காமராஜ புரம் தென்தாமரை குளம் பகுதியிலும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. ஈசாந்திமங்கலம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளதால் செவிலியர்கள், டாக்டர்கள், பொதுமக்கள் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பதிசாரம் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
பேச்சிப்பாறை அணைக்கு தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து வருவதால் மேலும் கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. எனவே கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.57 அடியாக உள்ளது. அணைக்கு 6208 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 5032 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 75.32 அடியாக உள்ளது. அணைக்கு 5642 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 587 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 16.89 அடியாக உள்ளது. அணைக்கு 732 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 534 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.
மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகளும் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன. பொய்கை அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது.
- குழித்துறை ஆறு, வள்ளியாறு, பரளியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
- விளை நிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழு வதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழியும் நிலையில் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படு கிறது.
பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குழித்துறை ஆறு, வள்ளியாறு, பரளியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அந்த பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 44.59 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று இரவு 638 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரக்கூ டிய நீர்வரத்து 3000 கன அடியாக அதிகரித்தது. இதனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து இன்று காலை 2000 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது. மதகுகள் வழியாக 452 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் உபரிநீரை அதி கரிக்கவும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல் பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று காலை 73.60 அடியாக உள்ளது. அணைக்கு நேற்று 300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை அணைக்கு 3000 கன அடியாக அதிகரித்தது. பெருஞ்சாணி அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது. சிற்றாறு-1 அணைக்கும் வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்ததையடுத்து சிற்றாறு-1 அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட் டுள்ளது.
3 அணைகளில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள விளை நிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தொடர்ந்து மலையோர பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்ப டும் முக்கடல் அணை நீர்மட்டம் இன்று மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது. இதேபோல் மாம்பழத்துறையாறு அணையும் இன்று முழு கொள்ளள வான 54.12 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.
- மழைநீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
- மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதலே பரவலாக மழை பெய்தது. இரவு பெய்ய தொடங்கிய மழை இடைவிடாது விடிய விடிய கொட்டி தீர்த்தது. காலையிலும் கனமழை கொட்டி வருவதால் மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. நாகர்கோவில் பகுதியில் இன்று அதிகாலை முதலே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இடைவிடாது கொட்டி வரும் மழையின் காரணமாக ரோடுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
செட்டிகுளம் சவேரியார் ஆலயம், வடசேரி, மீனாட்சிபுரம் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காலை 9 மணி வரை இருள் சூழ்ந்த நிலையில் காணப்பட்டது. இதனால் நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் முகப்பு லைட்டுகளை எரிய விட்டவாறு சென்றனர். தொடர் மழையின் காரணமாக பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கினார்கள்.
இதனால் நாகர்கோவில் நகர பகுதியில் உள்ள சாலைகள் வெறிச்சோடியது. நாகர்கோவில் நகர பகுதியில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியது. இடலாக்குடி பகுதியில் சாலையில் ராட்சத பள்ளம் கிடக்கிறது. இதனால் அந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். சாலையின் நடுவே கிடக்கும் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.

இதனால் அந்த பகுதியில் மரம் நடப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் மெதுவாக சென்றனர். இதையடுத்து அங்கு கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. கன்னியாகுமரி பகுதியில் காலை முதலே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் லாட்ஜூகளிலே முடங்கினார்கள். தொடர் மழையின் காரணமாக கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
தொடர்ந்து மழை கொட்டியதால் சூரிய உதயத்தையும் பார்க்க முடியவில்லை. அஞ்சுகிராமம், கொட்டாரம், மயிலாடி, இரணியல், குளச்சல், கோழிப்போர்விளை, முள்ளங்கினாவிளை, ஆணைக்கிடங்கு, பூதப்பாண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. முள்ளங்கினாவிளையில் அதிகபட்சமாக 48.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொது மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். குலசேகரம், தடிக்காரன் கோணம், கீரிப்பாறை பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது. ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
தோவாளை, செண்பகராமன்புதூர் பகுதிகளில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் இரவு முதலே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
- ராஜேஷ் குமார், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 225 மீனவ குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

குளச்சலில் நடைபெற்ற இந்த விழாவில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர்மனோ தங்கராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ் மற்றும் ராஜேஷ் குமார், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- விரிகோடு மேம்பால பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
- கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரெயில்களை அறிமுகம் செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்.
புதுடெல்லியில் மத்திய ரெயில்வே துறை அமைச்சரை சந்தித்த கன்னியாகுமாரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், வெகு நாட்களாக நிறைவேறாமல் இருக்கும் குமரி மாவட்ட மக்களின் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினார்.
கண்டன்விளை மற்றும் கக்கோடில் போக்குவரத்து நெரிசலை தவிர்த்து பொதுமக்கள் சுமூகமாக பயணம் செய்ய மேம்பாலம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும் இரணியலில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணியை விரைந்து முடித்திட வேண்டும் என்றும், விரிகோடு மேம்பால பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரெயில்களை அறிமுகம் செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார். வந்தே பாரத் ரெயில் ஒன்றினை சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்றும், வேளாங்கன்னிக்கு பக்தர்கள் செல்ல வாராந்திர ரெயில், சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்ற கன்னியாகுமரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தினார்.
அதுபோல் நீண்ட காலமாக மக்களின் கோரிக்கையாக இருந்து வரும் ரெயில் நிறுத்தங்கள் குறித்தும் கோரிக்கை வைத்தார். கோவிட் காலத்திற்கு முன்பிருந்த போல் ரெயில் நிறுத்தங்களை மீண்டும் கொண்டு வரவேண்டும் என கேட்டுக்கொண்டார், குறிப்பாக விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு மாவட்டத்தில் இன்னுமொரு நிறுத்தம் தேவை என கேட்டு கொண்டார்.
நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்திற்கு வருவதற்கு நான்கு வழி சாலையில் இருந்து இணைப்பு சாலை அமைக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்
- ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.
- மார்கழி மாதம் நடைபெறும் திருவிழா பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இதில் மார்கழி மாதம் நடைபெறும் திருவிழா பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான மார்கழி மாத தேரோட்டத்தை முன்னிட்டு டிசம்பர் 26-ந்தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்க உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 20-ந்தேதி பணிநாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.
- தமிழக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற துணைத்தலைவர், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தனர்.
- பேரூராட்சி தலைவர்கள், நிர்வாகிகள், ஊராட்சிமன்ற நிர்வாகிகள், காங்கிரஸ் பேரியக்க துணை அமைப்புகளின் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.
கன்னியாகுமரி:
குமரி மேற்கு மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி மேற்கு மாவட்ட அலுவலகத்தில் வைத்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் 77- வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பிறந்தநாள் விழாவிற்கு காங்கிரஸ் கமிட்டி மேற்கு மாவட்ட தலைவர் பினுலால் சிங் தலைமை தாங்கினார்.
தமிழக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற துணைத்தலைவர், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார்கள். மேலும் ஏழைகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் குழித்துறை திமுக நகர் மன்ற தலைவர் திரு.பொன். ஆசைத்தம்பி, மாநிலபொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், மாநில பொதுச் செயலாளர்கள் ஆஸ்கர் பிரிடி, பால்ராஜ், தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர், யூசுப்கான், குமரி மேற்கு காங்கிரஸ் சேவாதள மாவட்ட தலைவர் ஜோசப் தயாசிங், காங்கிரஸ் கமிட்டி பத்மனாபபுரம் நகர தலைவர் ஹனுகுமார், மகிளா காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவி ஷர்மிளா ஏஞ்சல், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர் மற்றும் காங்கிரஸ் பேரியக்க மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், வட்டார தலைவர்கள், நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், பேரூராட்சி தலைவர்கள், நிர்வாகிகள், ஊராட்சிமன்ற நிர்வாகிகள், காங்கிரஸ் பேரியக்க துணை அமைப்புகளின் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இடைக்கால நிதியாக சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு பிரதமருக்கு கடிதம்.
- மத்திய அரசு சுமார் 400 கோடி ரூபாய் ஒதுக்கியது.
மிச்சாங் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. கடந்த 3 மற்றும் 4-ந்தேதி பெய்த கனமழையால் ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கியது.
இன்னும் சில இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில்தான் உள்ளது. போர்க்காள அடிப்படையில் தமிழக அரசு மீட்புப்பணியை மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகர் சகஜ நிலைக்கு திரும்பிவிட்டது.
இந்த புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இடைக்கால நிவாரணமாக சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
முதல்வர் கடிதத்திற்குப் பிறகு மததிய அரசு சுமார் 450 கோடி ரூபாய் நிதி வழங்கியது. முதலமைச்சர் ஐந்தாயிரம் கோடி ரூபாய் கேட்ட நிலையில், மத்திய அரசு அதில் 10 சதவீதம் கூட ஒதுக்கவில்லை என திமுக-வினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில் "ஐந்தாயிரம் கோடி ரூபாய் கேட்டால், 400 கோடி ரூபாய் தந்தால் எப்படி போதுமானதாக இருக்கும். நாங்கள் அட்சய பாத்திரத்தில் பிச்சை கேட்பது போன்று கேட்கவில்லை. நாங்கள் கொடுத்த பணத்தை கேட்கிறோம்.
ஜி.எஸ்.டி. வரி வசூலில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் கிடைக்கக் கூடிய நிதியில் நாம் கடைசியாக இருக்கிறோம். இதுதான் வருத்தமாக உள்ளது. ஐந்தாயிரம் கோடி ரூபாய்க்கு 400 கோடி ரூபாய் என்பதை நியாயப்படுத்தவே முடியாது. இதனால் மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தர வேண்டும் என்பதுதான் நம்முடைய எதிர்பார்ப்பு" என்றார்.
- பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரித்தனர்.
- குமாரின் குடும்பத்தினர் இன்று காலை நாகர்கோவிலுக்கு வந்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் 2-வது பிளாட் பாரத்தில் நேற்று இரவு வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்த ரெயில்வே ஊழியர்கள் நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப் ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த வரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரித்தனர். அப்போது அவர் விருது நகர் மாவட்டம் சாத்தூர் தோட்டி லேயன்பட்டி பகுதியை சேர்ந்த குமார் (வயது 48) என்பது தெரிய வந்தது. இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.
நேற்று குமார் திருவனந்தபுரத்திலிருந்து ஊருக்கு செல்வதற்காக நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளார். நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து ஊருக்கு செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் குமார் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.
அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குமார் தற்கொலை செய்து கொண்டது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
குமாரின் குடும்பத்தினர் இன்று காலை நாகர்கோவிலுக்கு வந்தனர். ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் குமாரின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடந்தது. அவர் தற்கொலை செய்தது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- பேரூராட்சி தலைவி அனுசுயா, காங்கிரஸ் வட்டார தலைவர் கால பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமிகள் திருக்கோவில் கலையரங்கத்திற்கு மேற்கூரை வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து நடைபெற்று வரும் மேற்கூரை பணிகளை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார் .
அவருடன் பேரூராட்சி தலைவி அனுசுயா, காங்கிரஸ் வட்டார தலைவர் கால பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்






