என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • மது அருந்தும் பழக்கம் இருந்த ஜெயராஜ் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்
    • அவரை குடும்பத்தினர் மீட்டு நெய்யூரில் ஒரு தனியார் மருத்துமனையில் சேர்த்தனர்.

    குளச்சல், நவ. 27-

    மண்டைக்காடு அருகே காரியாவிளை வட்டக்கோட்டையை சேர்ந்தவர் ஜெயராஜ்(வயது 53).வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஊர் திரும்பி உடையார்விளை பகுதியில் ஆக்கர்கடை நடத்தி வந்தார்.

    மது அருந்தும் பழக்கம் இருந்த ஜெயராஜ் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த 21-ந் தேதி ஜெயராஜ் விஷம் குடித்து மயங்கினார். அவரை குடும்பத்தினர் மீட்டு நெய்யூரில் ஒரு தனியார் மருத்துமனையில் சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ஜெயராஜ் பரிதாபமாக இறந்தார்.இது குறித்து அவரது மனைவி சகிதா மிஸ்ரயேல், குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வடக்கு மண்டல தலைவர் தகவல்
    • மழைக்காலங்களில் தேசிய நெடுஞ்சாலையிலும் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்படுத்தும் நிலை இருந்தது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 16-வது வார்டு உறுப்பினரும், வடக்கு மண்டல தலைவருமான ஜவஹர் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சி 16-வது வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதும் வார்டு பகுதியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன்படி ஹனிபா நகரில் மேடுபள்ளமாக இருந்த பகுதிகள் சீர் செய்யப்பட்டு கழிவுநீர் பாய்ந்தோட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜோதி தெருவில் மழைநீர் வடிகால்கள் சீர் செய்யப்பட்டது.

    16-வது வார்டு சுத்தம், சுகாதாரம் நிறைந்த வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. 2 போர்வெல்களில் இருந்து வரும் தண்ணீர் இணைக்கப்பட்டு தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யப்படுகிறது. இம்மானுவேல் தெரு, ேஜாதி தெரு பகுதியில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டும், நிலை உயர்த்தப்பட்டும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.

    அடுத்து 2 மாத காலத்திற்குள் புத்தன் அணை குடிநீர் திட்டம் அமலுக்கு வரும்போது தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்படும், வார்டு பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் சீர் செய்யப்பட்டு வருகின்றன. கே.பி.ரோடு, எம்.எஸ்.ரோடு, கிறிஸ்டோபர் தெரு ஓடைகள் புதுப்பிக்கப்படும் பணிகள் நடந்து வருகிறது. இதில் சாலையோரம் நடைபாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    16-வது வார்டு பகுதியில் சுகாதார மையம் இல்லை. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சுகாதார மையம் அமைக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் கோரிக்கை ஆகும். அதனை போன்று 2 அங்கன்வாடிகள் உள்ளது. அவை மோசமான நிலையில் உள்ளது. அதற்கும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நூலக கட்டிடம் அருகே அங்கன்வாடி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாகர்கோவில் மாநகராட்சியில் அனைத்து வார்டுகளும் மேயரின் கண்காணிப்பில் இருந்து வருகிறது. 16-வது வார்டில் மட்டும் இதுவரை ரூ.2.50 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது.

    எம்.எஸ்.ரோட்டில் கிறிஸ்துநகர் முன்பு ஓடைகள் முறையாக சீரமைக்கப்படாததால் இந்த பகுதியில் 20 வருடங்களாக தண்ணீர் தேங்கும். மழைக்காலங்களில் தேசிய நெடுஞ்சாலையிலும் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்படுத்தும் நிலை இருந்தது. தற்ேபாது வடிகால் சீர் செய்யப்பட்டு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கீழ் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட இடங்கள் மின்விநியேகம் இருக்காது.
    • குழித்துறை மின் வினியோக செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

    களியக்காவிளை :

    குழித்துறை மின் வினியோக செயற்பொறி யாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    குழித்துறை கோட்டம் புதுக்கடை உபகோட்டம், புதுக்கடை, கருங்கல், கொல்ல ங்கோடு, நம்பாளி, இரவி புதூர்கடை, கிள்ளியூர், பள்ளியாடி மற்றும் சூரிய கோடு ஆகிய பிரிவு களுக்குட்பட்ட பகுதிகளில் தட்டுமர கிளைகள் அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின் தளவாடங்கள் மாற்றும் பணிகள் வருகிற 30-ந்தேதி வரை நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கீழ் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட இடங்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கும் மின்விநியேகம் இருக்காது.

    நாளை (28-ந்தேதி ) கொடுவனம்தோட்டம், விளாத்திகுளம், முள்ள ஞ்சேரி, குமட்டிவிளை, நெடு விளை, மெதுகும்மல், குளப்புறம். நாளை மறுநாள் (29-ந்தேதி) கல்பவிளை, மேலவிளை, சரல்கோட்டை, ஓலவிளை, காட்டுவிளை, கலிங்கராஐபுரம், சமத்துவ புரம், செறுகோல், கிள்ளியூர், இலவுவிளை, கல்லுக்கூட்டம், முருங்கவிளை.

    30-ந்தேதி காஞ்சிநகர், பேப்பிலாவிளை, சேரி, ஆலப்பாடு, மானான்விளை, கருக்கு பனை, வடக்குமாங்கரை, கொல்லன் விளை, இளம்பாலமுக்கு, வள்ளவிளை, கம்பிளார், தாமரைகுளம், ஆப்பிகோடு, இடவார், வளனூர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புகையிலை பொருட்கள், பள்ளி கல்லூரிகள் அருகில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன
    • பறிமுதல் செய்த போலீசார், சிவகுமாரை கைது செய்தனர்.

    அருமனை :

    அருமனை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பள்ளி கல்லூரிகள் அருகில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் மஞ்சாலுமூடு முக்கூட்டுக்கல் பகுதியில் பள்ளிக்கூடம் அருகே சிவகுமார் (வயது 49) என்பவர் நடத்தும் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா விற்பனை செய்யப்படுவதாக தனிப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் அந்த கடையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு ஏராளமான குட்கா பாக்ெகட்டுகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், சிவகுமாரை கைது செய்தனர்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பங்கேற்பு
    • அம்மனின் கால் பாதத்துக்கு விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு தீபாராதனை நடந்தது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் கார்த்திகை தீபத்திரு விழாவையொட்டி நேற்று மாலை மகாதீபம் ஏற்றப் பட்டது. இதையொட்டி நேற்று மாலை பகவதி அம்மன் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். இந்த ஊர்வலம் சன்னதி தெரு வழியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுதுறையை சென்ற டைந்தது. பின்னர் அங்கு இருந்து தனி படகு மூலம் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு சென்றனர். அங்குள்ள ஸ்ரீபாதமண்டபத்தில் உள்ள பாறையில் இயற்கையாகவே அமைந்துள்ள பகவதி அம்மனின் கால் பாதம் பதிந்து இருந்த இடத்தில் எண்ணெய், மஞ்சள் பொடி, பால், பன்னீர், தயிர், இளநீர், களபம், சந்தனம், குங்குமம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பின்னர் அம்மனின் கால் பாதத்துக்கு விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு தீபாராதனை நடந்தது.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீபாத மண்டபத்தில் இருந்து கோவில் மேல்சாந்தி சீனிவாசன் போற்றி கார்த்திகை தீபத்தினை ஏற்றி மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து ஸ்ரீபாதமண்டபத்தின் மேற்குப்பக்கம் உள்ள வெளிபிரகாரத்தில் வைத்தார். இந்த கார்த்திகை தீபம் கடற்கரையில் உள்ள பகவதி அம்மன் கோவில் கிழக்குவாசலை நோக்கி வைக்கப்பட்டது. கன்னியா குமரி கடற்கரையில் நின்ற வாறு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கார்த்திகை தீபத்தை பார்த்து வணங்கி வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரு மான தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., குமரி மாவட்ட திருக்கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரை தினேஷ், கன்னியா குமரி விவேகானந்த கேந்திர நிர்வாக அதிகாரி ஆனந்த ஸ்ரீ பத்மநாபன், விவே கானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் ஆர்.சி. தாணு, பாறை நினைவாலய மக்கள் தொடர்பு அதிகாரி அவினாஷ், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் அக்சயா கண்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • கட்டிட தொழிலாளி மீது வழக்கு
    • மண்டைக்காடு அருகே பரபரப்பு

    மணவாளக்குறிச்சி :

    கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள பரப்பற்று மணக்காட்டுவிளையை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவரது மகன்கள் சதீஸ்(வயது 31), வினேஷ் (28). கட்டிட தொழிலாளர்களான இவர்களுக்கிடையே பணத் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று சதீஸ், தனது தம்பி வினேசை சந்தித்து தான் கொடுத்த கடன் தொகையை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வினேஷ் தகாத வார்த்தையால் திட்டி பைக் சாவியால் சதீஸின் வலது கழுத்து, பின்னந்தலை ஆகிய பகுதியில் குத்தி காயப்படுத்தினாராம்.

    மேலும் அப்பகுதியில் நின்று பொதுமக்களுக்கு இடையூறாக வாக்குவா தத்திலும் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அந்தப் பகுதி யினர் மண்டைக்காடு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் டைட்டஸ், சம்பவ இடம் விரைந்து சென்றார். அவர் வினேஸை கண்டித்து வீட்டுக்கு செல்லுமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த வினேஸ், தான் மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தியால் சப்-இன்ஸ்பெக்டர் டைட்டஸை வெட்டினார்.

    இதில்அவருக்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் டைட்டஸ், குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து அவர் மண்டைக்காடு போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் அரசு பணி செய்யாவிடாமல் தடுத்தது, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வினேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் சதீசும் ஒரு புகார் கொடுத்துள்ளார்.இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 7 கோவில்க ளில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நேற்று இரவு 9 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
    • காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும், அன்னதானமும் நடந்தது.

    கன்னியாகுமரி :

    கார்த்திகை தீபத்திரு விழாவையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள 7 கோவில்களில் நேற்று இரவு சொக்கப்பனை கொளு த்தப்பட்டது. கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டா டப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், கிருஷ்ணன்கோ வில் கிருஷ்ணசுவாமி கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், களியல் மகாதேவர் கோவில் ஆகிய 7 கோவில்க ளில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நேற்று இரவு 9 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

    திருக்கார்த்திகையை யொட்டி அந்தந்த கோவில் அர்ச்சகர் அந்தப்பனை மரத்தின் உச்சியில் ஏறி பூஜை செய்து தீபம் ஏற்றி விட்டு கீழே இறங்கி வந்துவிட்டார். அதன்பிறகு அந்த பனை மரத்தை சுற்றி வேயப்பட்டிருக்கும் பனை ஓலை முழுவதும் தீயில் எரிந்து சாம்பலாகி விழுந்தது. அந்த சாம்பலை பக்தர்கள் அள்ளிசென்று தங்களது வீடுகளிலும். விளைநிலங்களிலும். தொழில்நிறுவனங்களிலும் வைத்தனர். இவ்வாறாக இந்த சொக்கப்பனையில் எரிந்த சாம்பலை வைப்பதால் அந்த இடத்தில் அந்த ஆண்டு முழுவதும் செல்வச்செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம். இந்த சொக்கப்பனை கொளு த்தும் நிகழ்ச்சியில் ஏராள மான பக்தர்கள் பங்கே ற்றனர். சொக்க ப்பனை கொளுத்தும் இடங்களில் தீயணைக்கும் படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். பறக்கை அருகே உள்ள புல்லுவிளை பெருமாள் சுவாமி திருக்கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா வினை முன்னிட்டு இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொக்கப்பனை கொளு த்தும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் ஊர் தலைவர் நாகராஜன், துணைத்தலைவர் சுரேஷ், செயலாளர் அய்யப்பன், துணை செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் பாஸ்கர், முன்னாள் ஊர் செயலாளர் கனகராஜ் மற்றும் ஊர் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி வைகுண்ட பகுதியில் அமைந்துள்ள 1800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் "மகாதீபம்" ஏற்றப்பட்டது. முன்னதாக மருந்துவாழ் மலையில் உள்ள பரமார்த்தலிங்க சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும், அன்னதானமும் நடந்தது.

    மருந்துவாழ் மலை உச்சியில் ஏற்றப்பபட்ட இந்த மகா தீபம் கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதியில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம்வரை தெரிந்தது. 3 நாட்கள் இரவு-பகலாக தொடர்ந்து இந்த மகா தீபம் எரிந்து கொண்டே இருக்கும். மருந்துவாழ் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டபிறகு வீடுகளில் உள்ள வாசல் முன்பு பெண்கள் வண்ண கோலமிட்டு அகல் விளக்குகள் ஏற்றி கார்த்திகை தீபத் திருவிழாவை கொண்டாடினார்கள். வீடுகள் தோறும் கொழு க்கட்டை, அப்பம், திரளி, போன்றவைகளை தயார் செய்து இறைவனுக்கு படைத்து வழிபட்டு பின்னர் உண்டு மகிழ்ந்தா ர்கள். கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களி லும் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. சிறுவர்கள் இரவு நேர ங்களில் சுக்குநாரி புல், டயர், தீப்பந்தங்கள் போன்ற வைகளை கொளுத்தி விளையாடினார்கள்.

    • மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • கன்னியாகுமரி மாவட்ட மொத்த மருந்து வணிகர் சங்க தலைவராகவும் அவர் செயலாற்றி வருகிறார்.

    என்.ஜி.ஓ. காலனி :

    நாகர்கோவில் நாகராஜா கோவில் தெற்குரத வீதியில் ராஜன் மெடிக்கல் ஏஜென்சி நடத்தி வருபவர் சி. ராஜன். அ.தி.மு.க.வில் 1988 முதல் 35 வருட காலமாக பணியாற்றி வரும் இவரை, குமரி மாவட்ட செயலா ளரும், எம்.எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் பரிந்துரை யின் பெயரில் வர்த்தக அணி மாநில இணைச் செயலாளராக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்தார். இதைத் தொடர்ந்து சி.ராஜன், எடப்பாடி பழனிச்சாமியை சென்னை யில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் வாழ்த்து பெற்றார். தொடர்ந்து அவர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.வை சந்தித்து மாலை அணிவித்து நன்றி தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க மாநில நிர்வாகி சந்துரு, நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் அக்ஷய கண்ணன், தோ வாளை யூனியன் தலைவரும் கிழக்கு மாவட்ட இணைச் செயலாளருமான சாந்தினி பகவதியப்பன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வர்த்தக அணி மாநில இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சி.ராஜன், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி செயலாளர் மற்றும் பிள்ளை யார்புரம் சிவந்தி ஆதித்த னார் கல்லூரி செயலாளர் ஆகிய பொறுப்புகளையும் நிர்வகித்து வருகிறார். கன்னியாகுமரி மாவட்ட மொத்த மருந்து வணிகர் சங்க தலைவராகவும் அவர் செயலாற்றி வருகிறார்.

    அ.தி.மு.க வர்த்தக அணி மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சி.ராஜ னுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • . 17 வயதிற்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் மாணவி ஹேசல் மெர்சியா முதல் பரிசு
    • 19 வயதிற்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் அஸ்மின் லிஜா, 2-வது பரிசையும் பெற்றுள்ளனர்.

    மார்த்தாண்டம் :

    தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களுக்குட்பட்ட சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கிடையேயான கேரம் போட்டி குலசேகரத்தில் நடைபெற்றது.

    இதில் மார்த்தாண்டம் மாமூட்டுக்கடை ஆர்.பி.ஏ. சென்ட்ரல் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் 12 வயதிற்குட்பட்ட பெண்கள் இரட்டையர் பிரிவில் பியோனா, ஓவியா முதல் பரிசையும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் பிரணா, அர்சித் ரிஸ்வான் இரண்டாம் பரிசையும், 14 வயதிற்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் மாணவி ஸ்டெனி முதல் பரிசையும் வென்றனர். 17 வயதிற்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் மாணவி ஹேசல் மெர்சியா முதல் பரிசையும், இரட்டையர் பிரிவில் ஹேசல் மெர்சியா-விஸ்மிகா முதல் பரிசையும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மாணவன் ரிஜோ முதல் பரிசையும், 19 வயதிற்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் அஸ்மின் லிஜா, 2-வது பரிசையும் பெற்றுள்ளனர். புள்ளிகள் அடிப்படையில் 2-ம் இடத்தை பெற்று சுழற்கேடயத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் கலாசன், இணை தாளாளர் பிரான்ஸிஸ், பள்ளி முதல்வர் ஷீலா குமரி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினார்கள்.

    • வாய் புற்றுநோய் பரிசோதனை மற்றும் பெண்களுக்கு மார்பகம், கர்ப்பபை மற்றும் வாய்களுக்கும் பரிசோதனை
    • புற்றுநோய் பரிசோதனை பதிவு செய்யும் படிவத்தை வழங்கினார்.

    பூதப்பாண்டி :

    தோவாளை வட்டாரத்தில் அனைத்து அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையங்களில் புற்றுநோய் சோதனை நடத்தப்படுகிறது. இதில் 18 வயதுக்குமேற்பட்ட ஆண்களுக்கு வாய் புற்றுநோய் பரிசோதனை மற்றும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பகம், கர்ப்பபை மற்றும் வாய்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. இதனை விளக்கும் வகையில் இறச்சகுளம் ஊராட்சி அலுவலகத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமில் மருத்துவ இடைநிலை சுகாதார பணியாளர் விஜிலா புற்றுநோய் பரிசோதனை குறித்து விளக்கி பேசினார். பின்னர் இறச்சகுளம் ஊராட்சி மன்ற தலைவரிடம் புற்றுநோய் பரிசோதனை பதிவு செய்யும் படிவத்தை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் தோவாளை ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயலெட்சுமி, ஊராட்சி செயலர் ராஜா, சுகாதார ஆய்வாளர் அய்யாக்குட்டி, கிராம சுகாதார செவிலியர் பிரேமகுமாரி மற்றும் தன்னார்வல பணியாளர் ஷோபா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார்.
    • குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்

    திருவட்டார் :

    குலசேகரம் அருகே உள்ள குளச்சவிளாகம் பொன்மனை பகுதியை சேர்ந்தவர் ராதாகுமாரி (வயது 77). கணவர் இறந்துவிட்ட நிலையில் மகள் அஜிதாகுமாரி பரா மரிப்பில் வாழ்ந்து வந்தார்.

    இவர்களுடன் ராதா குமாரியின் தங்கை மகன் பிரபாத் குமார் (48) என்பவரும் வசித்து வந்தார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இந்த சம்பவம் ராதாகுமாரியை மிகவும் பாதித்தது.

    இதுபற்றி உறவினர்க ளிடம் அடிக்கடி கூறி வேதனைப்பட்டு வந்துள் ளார். இந்த நிலையில் சம்ப வத்தன்று வீட்டில் இருந்த ரப்பர் பால் ஊற வைக்கும் ஆசிட்டை குடித்துவிட்டு ராதாகுமாரி மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அஜிதா குமாரி குல சேகரம் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக நாகர் கோவில் ஆசாரிப் பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்துவிட்டு, ராதாகுமாரி இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது தொடர்பாக அஜிதாகுமாரி கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து ராதா குமாரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும் நடந்தது
    • பனை ஓலைகளால் வேயப்பட்ட 23 அடி உயரத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று சிறப்பு வழிபாடுகள், அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், பின்னர் அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி மேளதாளம் முழங்க வீதி உலா வந்த நிகழ்ச்சியும் நடந்தது.

    கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் அம்மன் வாகனம் வரும்போது அங்குள்ள முத்தாரம்மன் கோவில் முன்பு வைத்து வாகனத்தில் எழுந்தருளி இருந்த பகவதி அம்ம னுக்கும், முத்தாரம்மனுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் படைத்து திருக்கணம் சாத்தி வழிபட்ட னர்.

    அதன்பிறகு 10.30 மணிக்கு கன்னியாகுமரி சன்னதி தெருவில் பனை ஓலைகளால் வேயப்பட்ட 23 அடி உயரத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் நள்ளிரவு 11.30 மணிக்கு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசித்த நிகழ்ச்சி நடந்தது. பின்னர் வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், திருக்கார்த்திகை மண்ட கப்படி கட்டளைதாரர்கள் பாலன், மோகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    ×